உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் கட்சிகள்
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் திலீபனின் நினைவுகூரலுக்கான
உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டம், சாவகச்சேரி சிவன் கோவிலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்போராட்டத்தில் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம்,
பா.கஜதீபன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.






