Author: நலன் விரும்பி
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 147 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 147 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில்
19 பொலிஸ் வலையங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை
நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று காலை 8.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையில் திறந்திருக்கும்.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல்
ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர்
மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன். 60 வாகனங்கள் பொறுப்பேற்க்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவற்றுள் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளாகும்.
லண்டனில் -மக்கள் பார்க்க வாலிபன் மீது கத்தி வெட்டு
லண்டனில் -மக்கள் பார்க்க வாலிபன் மீது கத்தி வெட்டு
இன்று மதியம் 12.15 மணியளவில் Surrey Quays Shopping Centre
,பகுதியில் பதினெட்டு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .
இதில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் அம்புலன்ஸ்
உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டார்
காயமடைந்த வாலிபர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ,போலீசார்
இது தொடர்பான விசாரணைகளை தீவிர படுத்தி விசாரித்து வருகின்றனர்
இந்த படுகொலை தாக்குதலுக்கு உரிய காரணம் உடனடியாக தெரிய வரவில்லை

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 28,000 பேர் கொரனோவால் பாதிப்பு-138 பேர் பலி
பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 28,000 பேர் கொரனோவால் பாதிப்பு-138 பேர் பலி
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி நாள் தோறும் இருபத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டு வருகின்றனர்
ஐப்பசி மாதத்தின் முதல் வாரத்தில் நாள் ஒன்றுக்கு 28,000 என்ற விகிதத்தில் இந்த தொற்று கண்டறிய பட்டு வருகிறது
இதுவே இம் மாதம் இறுதியில் நாற்பது ஆயிரத்தி கடக்கும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது
நாள் ஒன்றுக்கு மரணம் நூறுக்கு மேல் ஏற்பட்டுள்ளது,கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 138 பேர் பலியாகியுள்ளனர்
இதுவே எதிர்வரும் நான்கு வாரத்திற்குள் பலநூறு மக்கள் பலியாக
கூடும் என்ற அபாய எச்சரிக்கை மீள் விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது
போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது
போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவை விட்டு தப்ப முயன்ற அமெரிக்க தமிழரை அதிகாரிகள் கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது
கைது
அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர் துரைகந்தன் முருகன் (வயது 41). சிறுமியை
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அவர் மீது நியூ ஜெர்சி மாகாணத்தில் வழக்கு இருக்கிறது.
இதற்கிடையே, அமெரிக்காவை விட்டு தப்புவதற்காக, சிகாகோ சர்வதேச விமான நிலையத்துக்கு முருகன் வந்தார்.
வழக்கமான விசாரணைக்காக, எல்விஸ் டயாஸ் என்பவர் பெயரிலான இந்திய பாஸ்போர்ட்டையும், பயண அனுமதி
அட்டையையும் அதிகாரிகளிடம் அளித்தார். ஆனால், அவரது உடைமைகளை பரிசோதித்தபோது, முருகன் பெயருக்குரிய ஆவணங்கள் இருந்தன.
உடற்கூறு பரிசோதனையின்போது, அவர் பெயரில் பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பதை காட்டியது.
இதையடுத்து, அவரிடம் விசாரித்தபோது, தன் பெயர் முருகன் என்றும்,
உடல்நலமின்றி இருக்கும் தனது தந்தையை பார்ப்பதற்காக, நண்பரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அமெரிக்காவை விட்டு
செல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டு, நியூ ஜெர்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு
உயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு
சேலத்தில் உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு
உயிரிழந்த முதியவர் பாலசுப்பிரமணிய குமார்
சேலம்:
சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார் (வயது 74).
இவருடைய தம்பி சரவணன் (70). இவர்களின் தங்கை மகள்கள் ஜெயப்பிரியா, கீதா. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து
வருகின்றனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை பாதித்தது.
இதையடுத்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் இருந்து
பாலசுப்பிரமணிய குமாரை அவரது தம்பி சரவணன் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அண்ணன் இறந்துவிட்டார் என்று
கூறிக்கொண்டு உயிருடன் உள்ளவரை இறந்தவர்களின் உடலை வைக்க கூடிய குளிர் பதன பெட்டியில் (பிரீசர் பாக்ஸ்) வைத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் போலீசார் வந்து குளிர்பதன பெட்டியில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த
முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதைத்தொடர்ந்து மிகவும் அஜாக்கிரதையாக எந்திரத்தை கையாண்டதாகவும், முரட்டுத்தனமாக செயல்பட்டு உயிருடன் உள்ள அண்ணனை குளிர்பதன பெட்டியில் வைத்ததற்காகவும் 2
பிரிவுகளின் கீழ் சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சரவணன் சற்று மனநலம் பாதித்தவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணிய குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரதமர் மகிந்தா அலுவலகத்தின் பிரதானியாக மகன் யோஷித நியமனம்
பிரதமர் மகிந்தா அலுவலகத்தின் பிரதானியாக மகன் யோஷித நியமனம்
பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக யோஷித ராஜபக்ஷ
நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான
பதில் சீன தூதுவர் ஹுவெய், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர்
உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர்
டுவிட்டர் சிறிது நேரம் முடங்கியதில் பாதுகாப்பு மீறலோ அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை என டுவிட்டர் நிறுவனம் கூறி உள்ளது.
உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர் -நெட்டிசன்கள் டென்ஷன்
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நேற்று பிற்பகல் முடங்கியது. பயனர்கள் டுவிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே வந்த தகவல்களையும் பார்க்க முடியவில்லை. திரும்பத் திரும்ப டுவிட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும் பலன் அளிக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் டென்ஷன் அடைந்தனர்.
ஹேக்கர்கள் டுவிட்டரை முடக்கியிருக்கலாம் என பலரும் கருத்து பதிவிட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு டுவிட்டர் செயல்பட தொடங்கியது.
இதுபற்றி டுவிட்டர் நிறுவனம் கூறுகையில், ‘பயனர்களில் பலருக்கு டுவிட்டர் செயல் இழந்திருக்கும். எங்கள் உள் அமைப்புகளில்
நாங்கள் செய்த கவனக்குறைவான மாற்றம் காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டது.
இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது. பாதுகாப்பு மீறல் அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதமும் டுவிட்டர் சில மணி நேரம் முடங்கி, பின்னர் செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் முதல்
சாமானிய மக்கள் வரை அனைத்து தரப்பினரும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அரசியல் தலைவர்கள தங்கள்
கருத்துக்களை இப்போது பெரும்பாலும் டுவிட்டர் மூலமாகவே கூறுகின்றனர். தகவல் வேகமாக உலகம் முழுவதும்
சென்றடைவதால் பலரும் டுவிட்டரை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்ற CID
சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்ற CID
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வாக்குமூலம்
பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் தொலைபேசி
உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் திறப்பு
தனிமைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் திறப்பு
தற்பொழுது தனிமைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள
அனைத்து பிரதேசங்களிலும் உணவுப் பொருட்களை விற்பனை
செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் (16) காலை 8 மணி தொடக்கம் இரவு
10 மணி வரை திறந்திருக்கும் என்று COVID 19 வைரசு பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
காணி அபகரிப்புகளை தடுக்க சட்ட நடவடிக்கை
காணி அபகரிப்புகளை தடுக்க சட்ட நடவடிக்கை
எதிர்காலத்தில் நாட்டில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும், சட்டவிரோத நடவடிக்கைகளில்
ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்களுக்கு வாய்ப்பு உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் தொடர்பில் மாவட்ட
செயலாளர்கள் ஃ அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல், ‘நில விவகாரத்தில், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பாதுகாப்பு செயலர் வலியுறுத்தினார்.
எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொய்யான பரப்புரைகளை
பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக எமது பணிகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லவுள்ளோம் என மேஜர் ஜெனரல் குணரத்ன மீண்டும் வலியுறுத்தினார்.
நாரெஹென்பிட்டவில் உள்ள உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நேற்று (ஒக்,15) நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள்,
அரசாங்க அதிபர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக கருத்துவெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், ‘கம்பஹா மாவட்டத்தில் கொரோனா
வைரஸ் பரவும் நிலைமை தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வந்ததன் விளைவாக, உரிய அதிகாரிகளுடன் எங்களால்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக ஒருங்கிணைக்க முடிந்தது’ என தெரிவித்தார்.
பாதுகாப்பு படைகள், சுகாதாரத் திணைக்களம் மற்றும் அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில்
காணப்பட்ட முன்னைய கொரோனா வைரஸ் மூன்று அலைகளையும் எம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்குறித்து விளக்கம்
முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்குறித்து விளக்கம்
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முகக்கவசத்தை அணிவதன் மூலம் சுமார் 70 சதவீதத்தைக்
கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயரூபன் பண்டார கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக
சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இந்த தொற்று சமூகத்தின் மத்தியில் பரவில்லை என்றும் கூறினார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகிரிக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட
தானியங்கி பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களில் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்படவுள்ளது. இது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.
நாட்டில் இம்முறை கொரோனா வைரஸ் பரவல் முன்னரிலும் பார்க்க
அதிகமாக காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜயரூபன் பண்டார மேலும் தெரிவித்தார்.
மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய பேரூந்து – படம் உள்ளே
மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய பேரூந்து – படம் உள்ளே
இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் மீசாலை புதூர் சாந்தி பகுதியில்
மிதிவண்டியில் பயணித்த பெண் ஒருவரை அவ்வழியே பயணித்த அரச பேரூந்து மோதி தள்ளியது
அதில் அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார் ,உயிருக்கு ஆபத்தான
நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,சாரதிகள் அலட்சிய போக்கே
இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து
போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு- இராணுவம் பொலிஸ் குவிப்பு
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு- இராணுவம் பொலிஸ் குவிப்பு
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்குச் சட்டம் காலை 5.00 மணிக்கு அமுலுக்கு வந்ததாக
கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தலைவரும்
இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலானபோதிலும்,
கட்டுநாயக்க சுதந்திர வலயத்திலுள்ள தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கும்.
இவற்றின் பணியாளர்கள் தமது நிறுவன அடையாள அட்டையை
ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
40 இந்து ஆலயங்களுக்கு பிரதமர் நிதி உதவி
40 இந்து ஆலயங்களுக்கு பிரதமர் நிதி உதவி
நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட
40 இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (2020.10.15) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
கொவிட்-19 கொடிய தொற்றினால் முழு உலகமும் பெரும் அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்துள்ள போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில் இந்து மதத்தின்
விழுமியங்களையும் காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகும் என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் குறியீட்டு ரீதியாக 10 ஆலய பரிபாலன சபைத் தலைவர்களுக்கான நிதியுதவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.
இதன்போது அங்கு உரையாற்றிய பிரதமர், இவ்வாறானதொரு நெருக்கடியான காலப்பகுதியில் நாம் இந்து ஆலயங்களுக்கு தலா
50,000 ரூபாய் நிதியை பெற்றுக் கொடுத்து சமய விழுமியங்களை பாதுகாப்பதுடன், நாட்டின் நலத்திற்காக பிரார்த்திப்பதற்கும் இச்சந்தர்ப்பத்தை வாய்ப்பாக்கிக் கொள்கிறேன்.
சமய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் இந்து மதத்தையும், இந்து மதத்தின் விழுமியங்களையும் காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகும்.
ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் நற்காரியங்களைத் தொடங்கும் இந்த நவராத்திரி காலப்பகுதியில் இந்த புண்ணிய நிகழ்வை ஆரம்பித்திருக்கின்றோம்.
கொவிட்-19 தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலயங்களில் இடம்பெறும் திருவிழாக்களின் போது அனைவரும் சுகாதார
அமைச்சின் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என பிரதமர் குறிப்பிட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு
வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,பிரதமரின் பதுளை மாவட்ட இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன்,
பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்த சாசன,மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கொரனோ எதிரொலி -அனைத்து திரையரங்குகளும் 31 ஆம் திகதி வரை அடித்து பூட்டு
கொரனோ எதிரொலி -அனைத்து திரையரங்குகளும் 31 ஆம் திகதி வரை அடித்து பூட்டு
அனைத்து திரையரங்குகளும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில்
தற்காலிகமாக மூடப்படும் என்று இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது நிலவும் கொவிட் – 19 வைரஸ் தொற்று நிலைமையின்
காரணமாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு
அமைய 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் அனைத்து
திரையரங்குகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை தேசிய
திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஷ அவர்கள்
அறிவித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் £127,000 நகை கொள்ளையடித்த திருடன் சிக்கினான்
லண்டனில் £127,000 நகை கொள்ளையடித்த திருடன் சிக்கினான்
பிரிட்டனில் ,லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தங்க ,நகை
கொள்ளையில் ஈடுபட்ட ஐரோப்பிய நாட்டை சேர்ந்த வெள்ளை இன திருடன் ஒருவர் சிக்கியுள்ளார்
ஆடம்பரமாக வாழ்வதற்காக இந்த கொள்ளையில் தான் ஈடுபட்டதாக
அவன் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்
இவர் கொள்ளையடித்த நகைகளின் பெறுமதி சுமார் £127,000
பவுண்டுகளாகும் ,இலங்கை பணத்தில் 12 மில்லியன் ரூபாவுக்கு மேலாகும்
தற்பொழுது கைதான இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணைகளை
மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
தமிழர்கள் பரந்து வாழும் லாண்டம் பகுதியில் பரவலாக தங்க நகை கொள்ளை இடம்பெற்று வந்தது
இந்த திருடனுக்கு அதில் தொடர்பு இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது ,
அவ்வாறு எனின் தமிழ் கொள்ளையர்களும் சிக்கும் அபாயம் உள்ளது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவில்லை- திடீர் அறிவிப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவில்லை- திடீர் அறிவிப்பு
மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலையில் கடமைபுரிந்தத தாதி உத்தியோகத்தர் ஒருவருக்கு கம்பஹா மாவட்டத்தில் வைத்து
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் கடமைபுரிந்த வைத்தியசாலை பிரிவு மூடப்பட்டதாக
ஊடகங்களில்வந்த செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என போதனா
வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் ஊடகங்களுக்குக் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் 13 ஆம் திகதி குறித்த தாதியருக்கு
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவரினால் இவ்வைத்தியசாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை கொவிட் செயலணிக் குழுமம், தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின்
நிபுணர்களுடன் ஆலோசித்தபோது நோய்த் தொற்றுக்கான ஆபத்து மதிப்பீடு சாத்தியம் மிகக்குறைவாக இருந்த போதிலும் மக்கள்
நலன்கருதி குறித் தாதிய உத்தியோகத்தர் கடமைபுரிந்த பிரிவில் பணியாற்றும், பணியாற்றச் செல்லும் அனைத்து
உத்தியோகத்தர்களுக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து இவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென உத்தியோக பூர்வ பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மேலும் எந்தவெரு வைத்தியசாலை உத்தியோகத்தரும் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும், மக்கள் வதந்திகளை நம்பி அச்சங்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அனைத்து வைத்திய சேவைகளும் எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், பொதுமக்கள் சுகாதார
அமைச்சின் அறிவுறுத்தல்களைப் தொடர்ச்சியாகப் பின்பற்றி நடப்பதுடன் நோயளர்களைப் பார்வையிட வைத்தியசாலைக்கு
வருபவர்கள் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், அத்தியவசிய மருத்துவத்
தேவைகளுக்கு தமது வதிவிடத்திற்கு அண்மையிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் கேட்டுக் கொண்டார்.
கற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் – பிரிட்டனில் வெடித்த சர்ச்சை
கற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் – பிரிட்டனில் வெடித்த சர்ச்சை
பிரிட்டனில் கடந்த ஒருவருடத்திற்குள் ,அதாவது பங்குனி மதம் வரையிலாக
இடம்பெற்ற பாலியல் குற்றவியல் குற்ற விசாரணை தொடர்பாக போலீசார்
உரிய முறையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவே இல்லை எனவும் ,
குற்றாவளிகள் மீது கடும் தண்டனைகள் விதிக்கப்படவில்லை என்ற
குற்ற சட்டு தற்பொழுது பூதாகரமாக வைக்க பட்டுள்ளது
இது தொடர்பான ஆவண காட்சிகள் அடங்கிய திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகியுள்ளது ,மேற்படி சம்பவம் பிரிட்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ,
பாதிக்க பட்டவர்களை தொடர்பு கொண்டு மேற்படி ஆவண காட்சி தொகுப்பு வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது
Rape has always been a difficult crime to prove, but the criminal justice system has now reached crisis point.
In the year ending March 2020, 99% of rapes reported to police in England and Wales resulted in no legal proceedings against alleged attackers.
With convictions at the lowest level on record, we face an uncomfortable question: has rape become the perfect crime?
8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் – அதிர்ச்சியில் மக்கள்
8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் – அதிர்ச்சியில் மக்கள்
அமெரிக்கா New Haven பகுதியில் 24 வயதுடைய இளம் பெண் ஒருவர்
தான் பெற்ற எட்டு மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசியுள்ளார் .அவ்வேளை
குப்பை எடுக்க வந்த சுத்திகரிப்பு தொழிலாளி சிசுவின் அலறல் சத்தம்
கேட்டு ஓடி வந்து பார்த்தனர் . பலத்த காயங்களுடன் பெண் சிசு குப்பை தொட்டியில் கிடந்துள்ளது .
உடனே போலிஸுக்கு தகவல் வழங்க விரைந்து வந்த போலீசார் சிசுவை
மீட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டது
தொடர்ந்து சிசு சிகிச்சை பெற்று வருகிறது .தற்போது தயார் கைது
செய்ய பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்த பட்டுள்ளார்

80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால் குத்திய நபர் – பிரிட்டனில் பயங்கரம்
80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால் குத்திய நபர் – பிரிட்டனில் பயங்கரம்
பிரிட்டன் Belfast, Northern Ireland பகுதியில் மிதி வண்டியில் பயணித்த
நபர் ஒருவர் என்பது நிமிடத்தில் ஐந்து பெண்களை மிக கோரமாக கத்தியால் குத்தியுள்ளார்
19 முதல் 22 வயதுடைய பெண்களை இலக்கு வைத்தே மேற்படி கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார்
இவரது கத்தி குத்து தாக்குதல் தொடர்பான காணொளிகள் வெளியிட பட்டுள்ளன
கழுத்து ,கால், கை ,மார்பு ,மற்றும் தோள்பட்டை ,வயிறு என்பனவற்றை
இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது
.பிரிட்டனில்
சமீப காலமாக கத்தி குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளது ,இதனை
கட்டு படுத்த இரகசிய காமராக்களை வீதிகள் மற்றும் வீடுகள் முன்பாக பொருத்த பட்டுள்ளது
இதுவரை 26 ஆயிரத்திற்கு மேற்பட்ட இரகசிய கமராக்கள் வீதிகள் மற்றும்
வீடுகள் முன்பாக பொருத்த பட்டுள்ளதான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிட தக்கது








