கொரனோ எதிரொலி -அனைத்து திரையரங்குகளும் 31 ஆம் திகதி வரை அடித்து பூட்டு
அனைத்து திரையரங்குகளும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில்
தற்காலிகமாக மூடப்படும் என்று இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது நிலவும் கொவிட் – 19 வைரஸ் தொற்று நிலைமையின்
காரணமாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு
அமைய 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் அனைத்து
திரையரங்குகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை தேசிய
திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஷ அவர்கள்
அறிவித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






