Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்

பிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

தாக்குதலை அடுத்து சட்டங்களில் மாறுதல் ஏற்பட்டு புதிய

நடைமுறை விதிமுறைகள் பிறப்பிக்க பட்டுள்ளன

சுமார் நூறு பேர் வரை பாட்டியின் கலந்து கொண்டனர் ,மேற்படி பாட்டியை

ஏற்பாடு செய்து நடத்திய வாலிபருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள்

தண்டம் அறவிட பட்டுள்ளது

இவ்வாறு சில தமிழர்களுக்கும் அறவிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

ஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்

ஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்

பிரிட்டன் புறநகர் பகுதியான Liverpool பகுதியில் இன்று மதியம் 12,15

மணியளவில் வீட்டின் பின்புறவழியாக ஆயுதங்கள் மற்றும் கத்தியுடன்

நுழைந்த திருடர்கள் அங்கிருந்த அமெரிக்கா இனத்தை சேர்ந்த விலை உயர்ந்த நாய்களை திருடி சென்றுள்ளனர்

மேற்படி சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து

பறந்து வந்த போலீசார் திருடர்களுடன் சண்டையிட்டனர்

எனினும் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்படி

சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளதுடன் ,போலீசார் குறித்த நபர்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலையும் நடத்தினர்

ஆயுத முனையில் பிரிட்டனில்
ஆயுத முனையில் பிரிட்டனில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு

இலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு

நேற்றைய தினம் மினுவாங்கொட கொத்தனியில் அடையாளம் காணப்பட்ட 115 தொற்றாளர்களும் நாட்டின் 13

பிரதேசங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனரென,

கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காண்பட்டவர்களுள் 32 பேர்

மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 30 பேர் கட்டுநாயக்க

பிரதேசத்தையும் 24 பேர் திவுலப்பிட்டிய, 11 பேர் பிங்கிரிய, 10 பேர் கம்பஹா

பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்தகம, ராகம, காலி, குளியாப்பிட்டிய, நிட்டம்புவ, கொடிகாவத்த,

கராப்பிட்டிய, கஹத்துட்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு

ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு

ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு

ரூ.5,000 கொடுப்பனவு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக, 400 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு

அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

“இந்த கொடுப்பனவை செவ்வாய்க்கிழமை முதல் வழங்குவதற்கு

நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

கண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி

கண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி

தலவாக்கலை நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள சில்லறை கடை

ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார்

ஒரு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள்

கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும்,

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில்

தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை

கொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை

கொழும்பு மாவட்ட மக்களை கொவிட் 19 வைரசு தொற்றின் பிடியில் இருந்து

மீட்டெடுப்பதற்காக பல வேலைத்திட்டங்கள் தற்சமயம்

முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரத்தில் குடிசைவாழ் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று

பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பலநடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய பஸ் தரிப்பு நிலையம், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் நபர்கள்

தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள்

செய்யப்படுவதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை – கனடாவுக்கு லட்டு கொடுத்த டக்ளஸ்!

20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை – கனடாவுக்கு லட்டு கொடுத்த டக்ளஸ்!

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின்

அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு (16.10.2020) வருகை தந்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட்

மைக்கினன் உடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் கடற்றொழிலாளர்களினால் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளில் சுமார் 35 வீதத்திற்கு

மேற்பட்டவை விற்பனைக்கு தரமற்றவை என்ற அடிப்படையில் வீசப்படுகின்றன.

ஆனால், கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் குறித்த இழப்பு வீதம் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.

இந்நிலையிலேயே கனேடிய உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனேடிய உயர் ஸ்தானிகர், அதுதொடர்பாக சாதகமாக பரசீலிப்பதாக தெரிவித்ததுடன்

இலங்கையின் சமுத்திர பல்கலைக் கழகத்துடன் இணைந்து கனேடிய கடல்சார் கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற

செயற்பாடுகளினால் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.

மேலும், இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கனேடிய உயர் ஸ்தானிருடன் கருத்துக்களை பகிர்ந்து

கொண்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி வருவதாகவும், உயர்

நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசியலமைப்பில் குறித்த திருத்தச் சட்டம் உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், 20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்

சட்டத்தினை சரியாக கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பம் என்பதை தான் நம்புவதாகவும் தெரிவிததார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கை மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட போதிலும், தற்போது முழுநாட்டு மக்களினதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும்

வகையில் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில்

நவராத்திரி விழாவை கொண்டாடுவதற்கு அண்மையில் அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்மையையும் கனேடிய உயர் ஸ்தானிகருக்கு சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Posted in உலக செய்திகள்

படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில்

படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில்

பயிற்சி மையத்துக்கு சென்று படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்து சென்னை மாணவி சாதனை படைத்துள்ளார்.

பயிற்சி மையத்துக்கு சென்று படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் சாதித்த சென்னை மாணவி

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த கணேஷ்குமார்-கலைச்செல்வி தம்பதியினரின் மகள் ஜி.ஸ்வேதா. இவர் சென்னை மேல

அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். இவர் கடந்த மாதம் நடந்த ‘நீட்’ தேர்வில் பங்கேற்று 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண்கள்

பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 62-வது இடமும், மாநில அளவில் 3-ம் இடமும் பிடித்து அவர் சாதனை படைத்துள்ளார்.

சாதனை மாணவி ஜி.ஸ்வேதாவுக்கு பாராட்டு விழா, சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேசன்

மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளியின் முதல்வர்கள் உமா மகேஸ்வரன், ஜெயந்தி ராஜகோபாலன் ஆகியோர் மாணவி

ஸ்வேதாவுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டினர். மாணவியின் பெற்றோர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

அதனைத்தொடர்ந்து மாணவி ஜி.ஸ்வேதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுவயதில் இருந்தே எனது கனவு டாக்டர் ஆவது தான். அதற்காகவே ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்தேன். இதற்காக எந்த

பயிற்சி மையத்துக்கும் செல்லவில்லை. பள்ளியில் வழங்கப்படும் ‘நீட்’ தேர்வுக்கான ஆன்-லைன் வழி பயிற்சியில் முழுமூச்சாக

ஈடுபட்டேன். தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை படிப்பேன். எனது முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் சாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு பெற்றோரும், பள்ளி ஆசிரியர்கள்

கொடுத்த உத்வேகமும், ஊக்கமுமே காரணம். பள்ளிகள் வழக்கம்போல செயல்பட்டு வகுப்புகள் நடைபெற்றிருந்தால் நிச்சயம் இன்னும் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்திருப்பேன்.

Posted in உலக செய்திகள்

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்

உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் வகிக்கிறது. இதற்காக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார்.

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் – மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையானது, உலகெங்கும் உள்ள பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது.

107 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு 102 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது. எனவே இந்தியா நடப்பு ஆண்டில் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது.

இருப்பினும் பாகிஸ்தான் (88-வது இடம்), வங்காளதேசம் (75-வது இடம்) ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருக்கிறது.

இந்தியாவை விட 13 நாடுகள் மோசமான நிலையில் உள்ளன. அந்த நாடுகளில் ருவாண்டா (97), நைஜீரியா (98), லிபியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) அடங்கும்.

107 நாடுகளில் இந்தியாவின் மொத்த புள்ளிகள் 27.2 ஆகும். இது இந்தியாவை தீவிரமான பட்டினி பிரிவில் வைத்துள்ளது.

இந்த அட்டவணையின்படி, இந்தியாவில் 14 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பட்டினி நிலை கண்டு மத்திய அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார். இது குறித்து அவர்

டுவிட்டரில் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில், “இந்தியாவில் ஏழை மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். ஏனென்றால் அரசு, தனது சிறப்பு

நண்பர்களில் சிலரது பைகளை நிரப்புவதில் தீவிரமாக உள்ளது” என கூறி உள்ளார்.

உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வரைபடத்தையும் டுவிட்டரில் ராகுல் காந்தி இணைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

110 பேருக்கு ஒரே நாளில் கொரனோ – இலங்கையில் கோர தாண்டவம்

110 பேருக்கு ஒரே நாளில் கொரனோ – இலங்கையில் கோர தாண்டவம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 110 பேர் பாதிக்க பட்டுள்ளதாக

இலங்கை சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன

மேலும் இதன் பாதிப்பு அதிகரித்து செல்கிறது ,இந்த நோயின்

தாக்குதலை தடுக்க பல நகரங்கள் தனிமை படுத்தல் சட்டத்திற்கு

உள்ளாக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

குண்டு வெடித்தது எப்படி – மைத்திரியிடம் இன்றும் விசாரணை

குண்டு வெடித்தது எப்படி – மைத்திரியிடம் இன்றும் விசாரணை

இலங்கையின் முன்னாள் நல்லாட்சி மைந்தர் என அழைக்க பட்ட

மைத்திரி ஆட்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில்

மைத்திரியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்துகிறது

இன்றும் அவர் மீது இந்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளனவாம்

Posted in இலங்கை செய்திகள்

யாழ். கோண்டாவில் பகுதியில் -மோட்டார் சைக்கிள்களில் வந்து வாள்வெட்டு தாக்குதல்

யாழ். கோண்டாவில் பகுதியில் -மோட்டார் சைக்கிள்களில் வந்து வாள்வெட்டு தாக்குதல்

யாழ். கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றின்

மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (16) இரவு 8.30 மணி அளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை

மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டு கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்

ஒன்றும், வீட்டின் கதவு, ஐன்னல்களும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாள்வெட்டு
வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த த சொய்சா

நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நெருக்கடி- பாதிக்கப்பட்ட வர்த்தகர்ளுக்கு 133 பில்லியன் ரூபா நிதி உதவி

கொரனோ நெருக்கடி- பாதிக்கப்பட்ட வர்த்தகர்ளுக்கு 133 பில்லியன் ரூபா நிதி உதவி

இலங்கை மத்திய வங்கி, சௌபாக்யா கொவிட் – 19 புத்துயிரளித்தல் வசதியினூடாக ரூ.178 பில்லியன் தொகையான 61,907 கடன்களுக்கு ஒப்புதலளித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியானது 2020 ஒத்தோபர் 15ஆம் திகதி வரையில் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற 61,907 கடன்

விண்ணப்பங்களுக்கு ஒப்புதலளித்தது. இந்த விண்ணப்பங்கள் மொத்தமாக ரூ.177,954 மில்லியனை வகைகூறுவதுடன் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் மூன்று

கட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது வரையில், உரிமம்பெற்ற வங்கிகள் நாடுமுழுவதும் பாதிக்கப்பட்ட 45,582

வியாபாரங்களுக்கிடையில் ரூ.133,192 மில்லியன் கடன்களை விடுவித்துள்ளது. (தகவல்களுக்கு அட்டவணை 01 இனைப் பார்க்கவும்)

கடன் திட்டத்தின் முதற்கட்டம் 2020 ஏப்பிறல் 01 இலிருந்து அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கடன் திட்டத்தின் கட்டம் II மற்றும் கட்டம் III ஆகிய இரண்டும் 2020 யூலை

01இல் இருந்து அமுலுக்குவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த திட்டங்களின் நோக்கமானது ஆண்டிற்கு 4 சதவீத வட்டிவீதத்தில் மொத்தமாக ரூ.150 பில்லியனை தொழிற்படு

மூலதனக் கடன்களாக வழங்குவதாகும். இந்த கடன்கள் 6 மாத சலுகைக்காலம் உள்ளடங்கலாக 24 மாதங்கள் மீளச்செலுத்தும்

காலத்தினை வழங்குகின்றது. கொவிட்-19 வெளித்தாக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சுயதொழில் மற்றும் தனிநபர்கள்

உள்ளடங்கலான வியாபாரங்கள் இதன் பயன்பெறுநர்களாகக் காணப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு,

இலங்கை மத்திய வங்கியானது முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட ரூ.150 பில்லியன் வரையறையினைக் கருத்திற்கொள்ளாது விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானித்தது.

அறிவிக்கப்பட்ட முடிவுத்திகதி வரையில் கிடைக்கப்பெற்ற பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் அனைத்து விண்ணப்பங்களும் இந்தக்கடன் திட்டத்தினூடாக சேவையாற்றப்படுகின்றது.

Posted in உலக செய்திகள்

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் 18-ஆம் திகதி (நாளை) அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 19 ஆம்

திகதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 20 ஆம் திகதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர

பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு

மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி,

நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் (இன்று) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். வரும் 19 ஆம் திகதி (நாளை மறுதினம்) மத்திய

கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது

மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரையை நோக்கி

நகரக்கூடும்.என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சில் ஆசியர் கழுத்து வெட்டி கொலை – தீவிரவாதிகள் வெறியாட்டம்

பிரான்சில் ஆசியர் கழுத்து வெட்டி கொலை – தீவிரவாதிகள் வெறியாட்டம்

பிரான்சில் மிக புகழ் பெற்ற பாடசாலை ஒன்றில் வரலாற்று ஆரியர் ஒருவர்

மாணவர்கள் முன்பாக மிக கொடூரமாக கழுத்துவெட்டி படுகொலை

செய்ய பட்டுள்ளார் ,இந்த தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

தற்போது குறித்த பகுதிகள் எங்கும் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

,மேலும் முக்கிய நகரங்கள் எங்கு இரகசிய போலீசார் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது

நத்தார் தினத்தை முன்னிட்டு பெரும் தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்த

கூடும் என்பதால் இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் =-அமெரிக்காவில் அம்புலன்ஸ் இன்றி மருத்துவமனைகள் திணறல்

கொரனோ வெறியாட்டம் =-அமெரிக்காவில் அம்புலன்ஸ் இன்றி மருத்துவமனைகள் திணறல்

அமெரிக்காவில் கொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்

Kansas City, Missouri, போன்ற மருத்துவமனைகளில் அம்புலன்ஸ்

அனுப்பிட அந்த அமருத்துவ மனைகள் மறுத்து வருகிறது

கரணம் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த திணறல் ஏற்பட்டுள்ளது

அவசர நோயாளர்கள் மட்டும் அம்புலன்ஸ் அழைக்க அனுமதிக்க படுகின்றனர்

,இதில் எது அவசர நோயாளர் என்ற வரையறை காணப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .

வல்லரசு அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடும் கொரனோ தாக்குதலினால்

அந்த நாடு சின்னா பின்னமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் எட்டு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

அமெரிக்காவில் எட்டு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

உலக மிரளவ வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி அமெரிக்காவில்

இதுவரை சுமார் எட்டு மில்லியன் பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

மேலும் எதிர் வரும் மாதங்களில் இதன் பாதகிப்பு விகிதம்

இரட்டிப்பாகும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடன்

மார்கழி மாதம் முடிவதற்குள் ஐந்து லட்சம் பேர் வரை பலியாக கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

பாங்கொக்கில் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள் போராட்டம்

பாங்கொக்கில் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள் போராட்டம்

பாங்கொக்கில் ஆளும் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள்

பெரும் எழுச்சியுடன் போராட்டத்தை நடத்தினர்

இதில் கலந்து கொண்ட மக்கள் மீது தடியடி ,கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டது

மேலும் வன்முறை ,கலவரத்தை தூண்டினார்கள் என்ற குற்ற சாட்டில்

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அரச பயங்கரவதை அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு கைது செய்ய பட்டுள்ளனர்

மேற்படி போராட்ட காரர்களின் பின்னால் சீனா உள்ளது என ஆளும்

அரச அதிபர் தெரிவித்து வருகின்றமை கவனிக்க தக்கது

பாங்கொக்கில் அரச அதிபரை
பாங்கொக்கில் அரச அதிபரை
Posted in இலங்கை செய்திகள்

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான விவாதம் குறித்து கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல்

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான விவாதம் குறித்து

கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல்

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள சரத்துக்கள் அரசியல் யாப்பிற்கு

அனுகூலமானதா இல்லையா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள

முடிவு சபாநாயகரினால் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து கட்சி தலைவர்களிடையே

கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கட்சி

தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெறவுள்ளது.