Tag: தனிமைப்படுத்தல் ஊரடங்கு
Posted in இலங்கை செய்திகள்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 147 பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 16/10/2020 Leave a Comment on தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 147 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 147 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில்
19 பொலிஸ் வலையங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை
நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று காலை 8.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையில் திறந்திருக்கும்.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல்
ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர்
மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன். 60 வாகனங்கள் பொறுப்பேற்க்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவற்றுள் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளாகும்.






