Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை வேடமிட்டு கொள்ளையடித்த திருடர்கள்

காவல்துறை வேடமிட்டு கொள்ளையடித்த திருடர்கள்

இலங்கையில் சிங்கள காவல்துறை அதிகாரிகள் என கூறி வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்

போலீஸ் அதிகாரிகளாக வேடமிட்டு திடீர் சோதனை என்ற பெயரில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது

மேற்படி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

    Posted in Uncategorized

    வீதி விபத்தில் 10 பேர் மரணம்

    வீதி விபத்தில் 10 பேர் மரணம்

    இலங்கையில் கடந்த தினம் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கி பத்து பேர் பலியாகியுள்ளனர்


    ஏழுபேர் ஊந்துருளி விபத்தில் ,மூவர் பாதசாரிகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

    காவல்துறையினரின் அசமந்த போக்கின் காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன

      Posted in Uncategorized

      கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி

      கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி

      மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையை கடந்த கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

      மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இதுதொடர்பாக தெரிவிக்கையில், இந்த மாவட்டத்திற்கென மேலும் வழங்கப்பட்டுள்ள 22

      ஆயிரத்து 230 ‘பைஸர்’ தடுப்பூசிகள் புதன் கிழமை (14) முதல் 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தை நிறந்தர வதிவிடமாக கொண்டவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

      மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (13) செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

      அவர் மேலும் தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் சமூகத்தடுப்பூசி வழங்களினுடைய 2 ஆவது கட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 3 ஆவது கட்டம் இடம்பெற்று வருகின்றது.

      2 ஆவது கட்டத்தில் பாதுகாப்பு படையினரால் வநனியோகிக்கப்பட்ட 5 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.

      கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை கிடைக்கப்பெற்ற 20 ஆயிரம் ‘பைஸர்’ தடுப்பூசிகளில் 19 ஆயிரத்து 500 வரையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.

      செப்டெம்பர் மாதம் நாட்டை முழுமையாக திறக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்களுடன் தொடர்பு படுகின்ற மன்னார் மீனவர்களினால்

      ஏற்படக்கூடிய கொரோனா அச்ச நிலையை நீக்குவதற்காக மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக குறித்த தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது.

      மேலும் நேற்று திங்கட்கிழமை இரவு எமக்கு மேலும் 22 ஆயிரத்து 230 பைஸர் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு கிடைக்கப்பெற்றுள்ளது. இவற்றினுடைய விநியோகம் இன்று (14) முதல்

      ஆரம்பமாகும். குறித்த தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் 5 அல்லது 6 நிலையங்களில் ஒவ்வொரு நாளும் வழங்கப்படும்.

      இதன் போது 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நிறந்தர வதிவுரிமை பெற்ற அனைவரும் எந்த நிலையத்திலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

      கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்று

      தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தேவையில்லை.இவர்களுக்கு விசேட விதமாக வேறு நிலையங்களில் எதிர் வரும் வாரம் வழங்கப்படும்.

      இது வரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 899 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 882 பேர் இந்த வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த

      மாதத்தில் தற்போது வரை 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழ் மாவட்டத்தில் 10, 603 பேர் சுய தனிமைப்படுத்தலில்

      யாழ் மாவட்டத்தில் 10, 603 பேர் சுய தனிமைப்படுத்தலில்

      யாழ் மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 604 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 603 பேர் சுய

      தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

      தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர் யாழ் மாவட்டத்தில் இதுவரை 107 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.

      யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயங்களை குறிப்பிட்டார்

      Posted in சினிமா

      பிரபல நடிகர் படத்தில் இணைந்த பிக்பாஸ் சம்யுக்தா

      பிரபல நடிகர் படத்தில் இணைந்த பிக்பாஸ் சம்யுக்தா

      கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான சம்யுக்தா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

      பிரபல நடிகர் படத்தில் இணைந்த பிக்பாஸ் சம்யுக்தா
      சம்யுக்தா


      இயக்குநரும், நடிகருமான சசிகுமார், டி.இமான் இசையில், அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கான பாடல் பதிவுடன் இன்று பூஜை போடப்பட்டுள்ளது.

      பெயரிடப்படாத இந்த புதிய படத்தை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் புரொடக்சன் 5வது படைப்பாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.

      சம்யுக்தா
      சம்யுக்தா – சசிகுமார்

      கிராமத்து பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

        Posted in சினிமா

        சமூக வலைத்தளத்தில் மோதிக்கொள்ளும் அஜித் – விஜய்

        சமூக வலைத்தளத்தில் மோதிக்கொள்ளும் அஜித் – விஜய்

        முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளமான டுவிட்டரில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

        சமூக வலைத்தளத்தில் மோதிக்கொள்ளும் அஜித் – விஜய் ரசிகர்கள்
        அஜித் – விஜய்


        தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். இதை பலமுறை விஜய், அஜித் இருவரும் தெரிவித்துள்ளனர்.

        ஆனால் இருவரின் ரசிகர்களும் அவர்களின் படம் வெளியாகும் போதும், அப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும்போது ஒருவர் மற்றவரை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டு மோதிக் கொள்கிறார்கள்.

        அந்தவகையில், விஜய் வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்ய வரிச்சலுகை கேட்டிருந்தார். இதுகுறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமெனக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

        டுவிட்டர்

        இதுகுறித்து, இன்று அஜித் ரசிகர்கள் #வரிகட்டுங்கவிஜய் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்துள்ளனர். இதற்கு எதிராக #கடனைஅடைங்கஅஜித் என்ற பெயரிலும், #wesupportThalapathyvijay என்ற பெயரிலும் விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.

          Posted in சினிமா

          நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சின்னத்திரை நடிகர் வேதனை

          நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சின்னத்திரை நடிகர் வேதனை

          படத்தில் நடிக்க விடாமல் தடுத்து சிலர் அரசியல் செய்வதாக ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் பிரபலமான கார்த்திக் ராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

          நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சின்னத்திரை நடிகர் வேதனை
          கார்த்திக் ராஜ்


          தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் ராஜ். கடந்த ஆண்டு திடீரென ‘செம்பருத்தி’ தொடரிலிருந்து

          கார்த்திக் ராஜ் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு எந்தவொரு தொடரிலும் கார்த்திக் ராஜ் நடிக்கவில்லை.

          இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை கார்த்திக் ராஜ் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ”அனைவருக்கும் வணக்கம். இந்த வீடியோவில் நான் என்னுடைய அடுத்த ‘புராஜெக்ட்

          ‘ குறித்துப் பேச வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. காரணம் என்னைச் சிலர் எந்த புராஜெக்ட்டும் செய்ய விடாமல் தடுக்கின்றனர். அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

          சிலர் பின் வேலைகளைச் செய்து நான் படம் நடிக்க முடியாதபடி செய்துவிட்டனர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் ‘உன்னால் முடிந்தால் படம் நடித்துக் காட்டு’ என்று

          சவால் விடுகிறார்கள். உங்கள் ஆதரவு இருந்தால், கண்டிப்பாக நல்ல படத்தில் நடிக்க என்னால் முடியும். அந்த நம்பிக்கையில் கே ஸ்டுடியோஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். அடுத்த புராஜெக்ட்டை அதில்தான் பண்ண இருக்கிறேன்.

          கார்த்திக் ராஜ்

          பெரிதாக முதலீடு செய்து பெரிய படம் எடுக்கும் அளவுக்கு எனக்குப் பின்னணி இல்லை. என் வாழ்க்கையில் இதுவரை எல்லாச் சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது நீங்கள்

          மட்டும்தான். இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதில்லை. முதல் முறையாகக் கேட்கிறேன். சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, உங்களால் எவ்வளவு தொகை முடியுமோ

          அதை எனக்கு அனுப்புங்கள். நீங்கள் ஆதரவளித்தால்தான் இது முடியும்” என்று கார்த்திக் ராஜ் பேசியுள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

            சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

            கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

            இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய

            நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

            Posted in சினிமா

            வரி செலுத்தாது கார் இறக்கிய விஜய் -ஒரு லட்சம் அபராதம்

            வரி செலுத்தாது கார் இறக்கிய விஜய் -ஒரு லட்சம் அபராதம்

            பிரபல நடிகர் விஜய் லண்டனில் இருந்து றோஸ் பெரி கார் ஒன்றை இறக்குமதி செய்தார் ,இதற்கு நுழைவு வரி செலுத்தாது காரினை பதிவு செய்திட சென்றுள்ளார்

            2012 ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு தற் போது முடிவுக்கு வந்துள்ளது

            விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்க பட்டு வழக்கு முடிவுக்கு கொண்டுவர பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              16 பொலிஸ் அதிகாரிகள் – ஏஎஸ்பி யாக பதவி உயர்வு

              16 பொலிஸ் அதிகாரிகள் – ஏஎஸ்பி யாக பதவி உயர்வு

              இலங்கையில் எஸ் பியாக பதவி வகித்து வந்த பதினாறு காவல்துறை அதிகாரிகள் ஏஎஸ்பி யாக பதவி உயர்த்த பட்டுள்ளனர்

              உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இந்த பதவி உயர்வு வழங்க பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது

                Posted in Uncategorized

                கணவன் வெளிநாட்டில் – பிறந்த சிசுவை எரித்த மனைவி

                கணவன் வெளிநாட்டில் – பிறந்த சிசுவை எரித்த மனைவி

                இலங்கைகந்தளாய் பகுதியதில்க் 35 வயதுப் பெண் ஒருவர் குழந்தையை பெற்று அதனை எரித்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளநிலையில் கள்ள காதல் மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது ,இதில் இருந்து தான் தப்பித்து கொள்ளும் நோக்குடன் சிசுவை எரித்துள்ளது தெரிய வந்துள்ளது

                இப்பொழுது கணவணும் இல்லை ,கள்ள காதலானும் இல்லை ,அம்மணி சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

                உள்ளாடை அவிழ்க்கையில உன்னை நீ நினைக்கவில்லை ,வெள்ளாடை புகுந்த பின்ன வெருண்டு நின்று அழுததென்ன

                  Posted in Uncategorized

                  கொழும்பில் 14 வகையான கொரனோ வைரஸ் கண்டு பிடிப்பு

                  கொழும்பில் 14 வகையான கொரனோ வைரஸ் கண்டு பிடிப்பு

                  இலங்கை கொழும்பு பகுதியில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட நோய் தோற்று வைரஸ் சோதனையில்

                  கொரனோ மரபணு மமாற்ற பட 14 வகையான தொற்றுக்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

                  இது இலங்கையில் சீனா புதிய வகை உயிக்கொல்லி நோயினை பரப்புகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                    Posted in Uncategorized

                    புலிகளை மீள் உருவாக்கிய குற்ற சாட்டில் நபர் கைது

                    புலிகளை மீள் உருவாக்கிய குற்ற சாட்டில் நபர் கைது

                    முல்லைதீவில் புலிகளை மீள் உருவாக்கினார் என்ற குற்ற சாட்டில் 41 வயதுடைய தமிழர் ஒருவரை சிங்கள அரசு கைது செய்துள்ளது

                    2019 ஆண்டு இந்த செயலை இவர் புரிந்ததாக கூறி ,இராணுவம் தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இலங்கையில் இருந்து

                    தப்பி சென்று கட்டாரில் பதுங்கி இருந்த நிலையில் ,நீதி மன்ற உத்தரவின் பின்னர் இவர் இலங்கைக்கு நாடு கடத்த பட்டு கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      Posted in இலங்கை செய்திகள்

                      தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 224 பேர் கைது

                      தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 224 பேர் கைது

                      இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 224 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                      இவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை மற்றும் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது

                        Posted in Uncategorized

                        கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் தீவிர நடவடிக்கை

                        கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் தீவிர நடவடிக்கை

                        கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறாா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

                        தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஊரகப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுதொடா்பாக தொடா்ந்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

                        திமுகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.

                        தமிழக அரசு தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையத்தை தமிழக அரசே திறக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

                        திமுக ஆட்சியில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத் தேரை கடந்த அதிமுக அரசு முடக்கி வைத்திருந்தது. இந்த தங்கத் தேரின் சீரமைப்புப்

                        பணிகளை விரைந்து மேற்கொள்ள கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

                          Posted in சினிமா

                          மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான்

                          மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான்

                          மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு தனது இசையில் பாட வாய்ப்பளித்த இசையமைப்பாளர் டி.இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

                          மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான் – குவியும் பாராட்டு
                          ஆதித்யா சுரேஷ், டி.இமான்


                          தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் கைவசம் ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் 40-வது படம், விஜய் சேதுபதியின் லாபம், அரவிந்த் சாமியின் வணங்காமுடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், மை டியர் பூதம் போன்ற படங்கள் உள்ளன.

                          இந்நிலையில், இசையமைப்பாளர் இமான், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு, தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார்.

                          இவருடன் இணைந்து சஹானா என்ற சிறுமியும் அப்பாடலை பாடி உள்ளார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில், இவர்களை பாட வைத்துள்ளதாக இமான் தெரிவித்துள்ளார்.

                          மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே திருமூர்த்தி என்கிற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு தனது இசையில்

                          வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட இமான், வாய்ப்பு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                          Posted in சினிமா

                          பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த திரிஷா

                          பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த திரிஷா

                          தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, பெட்ரோல் விலையை கிண்டல் செய்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

                          பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த திரிஷா
                          திரிஷா


                          தென்னிந்திய சினிமாவில் 19 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி,

                          சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

                          இந்நிலையில் திரிஷா சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி

                          இருப்பதால் அதை கிண்டல் செய்யும் விதமாக சைக்கிள் புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

                          திரிஷா
                          சைக்கிள் ஓட்டும் திரிஷா

                          ஆனால் திரிஷா, இதுதான் என்னுடைய புதிய சைக்கிள். நல்ல மூடுக்கு ஒரு ரைட் போதும், என்று குறிப்பிட்டுள்ளார்.

                            Posted in சினிமா

                            ஒன்று கூடிய 80ஸ் நடிகைகள்

                            ஒன்று கூடிய 80ஸ் நடிகைகள்

                            தமிழ் சினிமாவில் கடந்த 80களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                            ஒன்று கூடிய 80ஸ் நடிகைகள்… வைரலாகும் புகைப்படம்
                            80ஸ் நடிகைகள்


                            80களில் தமிழ் சினிமாவில் நாயகிகளாக வலம் வந்து கொண்டிருந்த நடிகைகள் தற்போது ஒன்று

                            கூடி மகிழ்ச்சியாக வார இறுதியை கழித்ததாக நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

                            நடிகைகள்

                            இந்த வார இறுதியில் 80களின் தோழிகளுடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஏகப்பட்ட மலரும் நினைவுகள் மற்றும் சந்தோசங்கள் என்றும் ராதிகா சரத்குமார் அதில் குறிப்பிட்டுள்ளார்.

                            இந்த புகைப்படத்தில் அம்பிகா, ராதா, சுகாசினி, குஷ்பு, பூர்ணிமா ஜெயராமன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் உள்ளனர்.

                              Posted in சினிமா

                              25 ஆண்டுகள் நிறைவு செய்த காதல் கோட்டை

                              25 ஆண்டுகள் நிறைவு செய்த காதல் கோட்டை

                              நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்த காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

                              25 ஆண்டுகள் நிறைவு செய்த காதல் கோட்டை… கொண்டாடிய படக்குழுவினர்
                              காதல் கோட்டை படத்தில் அஜித் – தேவயானி


                              அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காதல் கோட்டை. இப்படத்தில் அஜித்துக்கு

                              ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை அகத்தியன் இயக்கி இருந்தார்.

                              250 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓட்டிய இப்படத்தின் திரைக்கதைக்காக இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருது கிடைத்தது.

                              இந்நிலையில் காதல் கோட்டை படம் 25 ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ளதை அடுத்து அஜித்தைத்

                              தவிர மற்ற கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

                                Posted in Uncategorized

                                கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

                                கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

                                சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை

                                அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பிரீஸ் தெரிவித்தார்.

                                இதன் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

                                இன்று (12) ஆரம்பமான ‘இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி’ என்ற திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்