Author: நலன் விரும்பி
இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்
இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்
உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், இந்திய நடிகர் ஒருவருடன் சண்டை போட தயாராகி இருக்கிறார்.
இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்… ஹீரோ யார் தெரியுமா?
மைக் டைசன்
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு
ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.
இந்த படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.
இப்படத்தில் அயர்ன் மைக் என்ற வேடத்தில் மைக் டைசன் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷனாக உருவாகும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.
இதுகுறித்து விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நாங்கள் கொடுத்த வாக்கை, நிறைவேற்ற துவங்கியுள்ளோம்”. இந்திய திரையுலகில் முதன்முறையாக, லிகர் படத்தில்
இணையும் முக்கிய பிரபலம். இந்த பிரபஞ்சத்தின் சக்திமிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள், லெஜண்ட், பீஸ்ட், காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன், மைக் டைசனை இந்திய
திரையுலகிற்கு வரவேற்கிறோம். இன்னும் சில நாட்களுக்கு, உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி வைத்துகொள்ளுங்கள். இந்த படம் தியேட்டர்களில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
பளையில் மிளகாய் கன்றுகளை பிடுங்கி எறிந்த தெரு பொறுக்கிகள் – கதறும் விவசாயிகள்
பளையில் மிளகாய் கன்றுகளை பிடுங்கி எறிந்த தெரு பொறுக்கிகள் – கதறும் விவசாயிகள்
பளையில் மாற்றுத் திறனாளி குடும்பத்தின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் முற்று முழுதாக அழிக்கப்பட்டதை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பார்வையிட்டார்!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரசர் கேணிபகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றினால் தங்களது வாழ்வாதாரதொழிலாக பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவு(25) விசமிகளால் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.
விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் குறித்த குடும்பம் முறை 800 கன்றுகள் மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர். விவசாய உள்ளீடுகள் பற்றாக்குறை,
விலைவாசிகளின் ஏற்றம் என பல நெருக்கடிகளுக்குள் மத்தியில்கடன் பெற்றும் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இன்று(27) குறித்த பகுதிக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிடுங்கி எறியப்பட்ட மிளகாய் கன்றுகளை பார்வையிட்டும் மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்தார்.
தொடரச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுக்க தாம் உயர் மட்டம் வரை சென்று இதற்கான தீர்வை பெற்று தருவதாக தெரிவித்திருந்தார்.



இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்
இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்
இலங்கையில் உள்ள முஸ்லீம் தீவிரவாத போக்குடையவர்கள் உலக மகா கொடிய பயங்கரவாத இயக்கமாக விளங்கி வரும்
ஐ எஸ் குழுவுடன் இணைந்து செயல் பட்டு வந்த நிலையில் அவர்களை மடக்கி பிடிக்கும் நகர்வில் இலங்கை உளவுத்துறை ஈடுபட்டுள்ளது
இவர்கள் இயக்கி வந்த வாட்சாப் குழுவை தேடி தற்போது வேட்டை ஆரம்பமாகியுள்ளது ,விரைவில் இவர்கள் அனைவரும் கைது செய்ய படுவார்கள் என நம்ப படுகிறது
யாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – வீடுகள் தீவைத்து எரிப்பு
யாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – வீடுகள் தீவைத்து எரிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று திடீரென வீடொன்றுக்குள்
புகுந்து அங்குள்ள உடமைகளை அடித்து சேத படுத்தியதுடன் ,அந்த வீட்டுக்கு தீவைத்து தப்பி சென்றுள்ளது
இதில் வெட்டுகுமார் என்ற தெரு ரவுடி கைது செய்ய பட்டுள்ளான்
மேலும் அவனது கூட்டாளிகள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் ,விரைவில் அவர்களு கைது செய்ய படுவார்கள் என சிங்கள கூலி காவல்துறை தெரிவித்துள்ளது
அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை
அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை
இலங்கையின் சிறைச்சாலை அமைச்சர் ரோகன் ரத்வத்த அனுராதபுரம் சிறை சாலைக்கு சென்ற
பொழுது அங்கு தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகள் மூலம் அவரது கால் சப்பாத்து நக்கி சுத்த படுத்த பட்டது
இவ்வாறான கீழ்த்தரமான செயலில் செயல் பட்ட அவருக்கு எதிராக மக்கள் ,மற்றும் தமிழ் எம்பிக்கள் சிலர் கடும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்
மேற்படி சம்பவம் சர்வதேச அரங்கிற்கும் எடுத்து செல்ல பட்டுள்ளது
இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்
இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் 35 வயதுடைய இளம் மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ,கொலையில் முடிவடைந்துள்ளது ,கணவர் கொலை
குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
காவல்துறை அதிகாரிகள் கையை கடித்த குற்றவாளி
காவல்துறை அதிகாரிகள் கையை கடித்த குற்றவாளி
இலங்கை மாத்தறை பகுதியில் காவல்துறை அதிகாரி இருவரது கைகளை கடித்து விட்டு தப்பி ஒட
முயன்ற குற்றவாளி கைது செய்ய பட்டு நீதவான் நீதிமன்றில் ஆயராக்க பட்டார்
இவரை தடுத்து வைத்து விசாரிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ,இவர் புரிந்த மேற்படி
குற்றத்திற்கு பல்லாண்டு சிறை தண்டனை வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கை வந்தடைந்த ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள்
இலங்கை வந்தடைந்த ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து அதனை தடுத்திட பைசர் தடுப்பூசிகள் ஒரு தொடுத்தி வந்தடைந்துள்ளன
இந்த ஊசிகள் கட்டம் கட்டமாக மக்களுக்கு செலுத்த படும் என அறிவிக்க பட்டுள்ளது
தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா
தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?
அனுஷ்கா
ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம்
குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த
பிரபாசை மணக்க இருப்பதாக பேசப்பட்டது. பின்னர் ஐதராபாத் தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போவதாக செய்திகள் வெளியானது.
தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவரை
காதலிப்பதாகவும் தகவல் பரவியது. இதையெல்லாம் அனுஷ்கா மறுத்தார். “எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன்” என்றார்.
அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கு
இயக்குனர் ஒருவரை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக புதிய தகவல் தற்போது பரவி வருகிறது.
பிகினி உடையில் அமலாபால்
பிகினி உடையில் அமலாபால் – வைரலாகும் புகைப்படங்கள்
அமலாபால்
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை
அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர்
விவாகரத்து பெற்றார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்கள் உள்ளன.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் பிகினி உடையில்
போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹீரோயினாக அறிமுகமாகும் ராஜீவ் மேனன் மகள்.
ஹீரோயினாக அறிமுகமாகும் ராஜீவ் மேனன் மகள்.
நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ’சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார்.
ஹீரோயினாக அறிமுகமாகும் ராஜீவ் மேனன் மகள்
சரஸ்வதி, ராஜீவ் மேனன்
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்ஷரா ஹாசன், நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், நடிகை லிசி மகள் கல்யாணி, நடிகை ராதாவின்
மகள்கள் கார்த்திகா, துளசி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, நடிகை ஜீவிதாவின் மகள் சிவாத்மிகா, இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஆகியோர் கதாநாயகிகளாகி உள்ளனர்.
இந்த வரிசையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதியும் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார்.
தரமணி பட நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ்
மேனன் இயக்கத்தில் வெளியான ’சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு
அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு
வம்சி பைடி பல்லி, தில் ராஜு, விஜய்
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத்
இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார்.
‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.
வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் முன் அறிவிப்போடு தான் வெளியிடப்படும். ஆனால் சமீப காலமாக அந்த டிரெண்ட் மாறி உள்ளது. அஜித்தின் வலிமை
குறித்த அறிவிப்புகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டன. அதேபோல் தற்போது விஜய்யின் ‘தளபதி 66’ அப்டேட்டும் அவ்வாறே வெளியிடப்பட்டு உள்ளது
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது ,நாடு முழுதாக முடக்க
பட்டுள்ள நிலையில் மக்கள் தொழில் வாய்ப்பு இன்றி உள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விரைந்து வரும் நாட்களில் இந்த நிலைகளை அவதானிக்க முடியும் என எதிர்வு கூற பட்டுள்ளது ,ஆனால் அரசோ அவ்வாறு ஏற்படாது என அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட்ட தக்கது
இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு
இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு
இலங்கையில் ஆளும் அரசு தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் நிலையில்
ஆண்டு தோறும் இலங்கைக்கு வழங்க படும் ஜிஎஸ்பி+ வரி சலுகை நிறுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது
நாளை இலங்கை வரும் ஐரோப்பிய தூது குழுவினர் இது தொடர்பாக ஆராயவுள்ளனர்
இவர்கள் மேற்கொள்ளும் இந்த ஆய்வு நடவடிக்கையின் பின்னரே இலங்கைக்கு ஆப்பு வைக்க படும் ஆட்டம் ஆரம்பிக்க படுமா என்பதை அறிய முடியும் ,இதில் இலங்கைக்கு கடிவாளம் வழங்க
பட்டால் ,போர் குற்ற விசாரணைகள் துரித படுத்த படும் நிலை ஏற்படும் என்பதை அடித்து கூறலாம்
இலங்கையில் மீளவும் ஊரடங்கு – கொதிப்பில் மக்கள்
இலங்கையில் மீளவும் ஊரடங்கு – கொதிப்பில் மக்கள்
இலங்கையில் வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் இரவு பத்து மணி முதல்
அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்கு சட்டத்தை அமூல் படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது
எதிர்வரும் மதம் முதலாம் திகதி முதல் இவை நடைமுறைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது
யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு
யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் தொண்டமனாரு பகுதியில் கோயிலுக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் அந்த நீரேரியில் குளிக்க முயன்ற பொழுது நீரில் அடித்து செல்ல பட்டு இறந்துள்ளார்
மீன் பிடிக்க வந்தவர்கள் சடலத்தை கண்ணுற்று காவல்துறைக்கு தெரிவித்த நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது
மேற்படி சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?
ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?
மட்டக்களப்பட்டு ஏறாவூர் பகுதியில் உள்ள வாவி ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது
இவர் படுகொலை செய்ய பட்டு ஆற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இலங்கையில் சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள் மிதந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!
கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!
தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய
தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தியாகி திலீபன் அவர்கள் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
எமது உணர்வு! எமது உரிமை!



காமெடி நடிகருடன் நடிக்க மறுக்கும் நடிகை
காமெடி நடிகருடன் நடிக்க மறுக்கும் நடிகை
முன்னணி நடிகை ஒருவர், பிரபல காமெடி நடிகருடன் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்களாம்.
காமெடி நடிகருடன் நடிக்க மறுக்கும் நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வாரிசு நடிகை ஒருவர் வலம் வந்து கொண்டிருக்கிறாராம். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறதாம்.
இந்நிலையில் நடிகையிடம் தற்போது ரீ என்ட்ரி கொடுக்க இருக்கும் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க கேட்டார்களாம்.
நடிகை, கதை கேட்கிறேன் என்று சொல்லி, படக்குழுவினரை அலைய வைத்து வருகிறாராம். காமெடி நடிகருடன் ஜோடி என்பதால் நடிக்க மறுத்து வருவதாக பலரும் பேசி வருகிறார்களாம்
கவர்ச்சி ஆட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்ட நடிகை
கவர்ச்சி ஆட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்ட நடிகை
தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வரும் நடிகை ஒருவர், பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ரூ.1 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.
கவர்ச்சி ஆட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்ட நடிகை
பல மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகை ஒருவர், தற்போது தமிழ்
மொழி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். மேலும் தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காண்பித்து வருகிறார்களாம்.
தற்போது நடிகையிடம் ஒரு படக்குழுவினர் அணுகி தங்களுடைய படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் படி கேட்டார்களாம். நடிகை கதை கேட்டு பாடலுக்கு நடனம் ஆட ஓகே
சொல்லி விட்டாராம். மேலும் சம்பளமாக ஒரு கோடி கேட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறாராம்.







