Posted in இலங்கை செய்திகள்

கல்முனையில் மயக்கமருந்து தெளித்து கொள்ளை

கல்முனையில் மயக்கமருந்து தெளித்து கொள்ளை

கல்முனையில் வீடொன்றுக்குள் நேற்றிரவு (27) புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்துக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயக்கம் வருவதற்கான திராவகம் தெளிக்கப்பட்டே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் வீட்டில் இருந்த நால்வரே பாதிக்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை போன்ற காரணங்களால் பல பிரதேசங்களிலும்
அதிகமான திருட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Posted in Uncategorized

சீனாவில் வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமான கறுப்பு பெட்டி கண்டு பிடிப்பு

சீனாவில் வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமான கறுப்பு பெட்டி கண்டு பிடிப்பு

சீனாவில் 135 பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது

குறித்த விமானத்தில் பயணித்த அணைவரும் பலியாகியுள்ளனர்

இந்த விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

மீட்க பட்டுள்ள இரண்டாவது கறுப்பு பெட்டியில் இருந்து விடயங்கள் தெரிய வரலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in Uncategorized

    . இரண்டாக உடையும் உக்கிரேன் – களத்தை மாற்றும் ரஷியா

    . இரண்டாக உடையும் உக்கிரேன் – களத்தை மாற்றும் ரஷியா

    உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷியா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.

    உக்ரைனின் எதிர்ப்பு கொரில்லா போராக மாறும் -ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தகவல்
    உக்ரைன் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ்

    உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 32வது நாளாக நீடிக்கிறது. முதலில் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷிய படைகள் தற்போது ராணுவத்திற்கு எரிபொருள் சப்ளை செய்யும் எரிபொருள் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.

    ரஷியாவின் தாக்குதல்களில் உக்ரைன் வீரர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ரஷிய படையினர் நடத்தி வரும் தாக்குதல்களால் உக்ரைன் குடிமக்கள் உணவு மற்றும் குடிநீருக்கு அல்லப்படுவதாகவும், மக்கள் மத்தியில் ரஷியா கடும் வெறுப்பை விதைத்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    உக்ரைனில் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடங்கள்

    மேலும், ரஷியப் படைகளைத் தடுக்க டாங்கிகள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை கூடுதலாக வழங்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்நிலையில், உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷியா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.

    ‘ரஷிய அதிபர் புதின், முழு நாட்டையும் ஆக்கிரமிக்க முடியாது என்று உணர்ந்துள்ளார். அத்துடன், கொரிய முறையில் நாட்டைப் பிரிக்க முயற்சிப்பார். ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை ஒன்றுசேர்த்து சுதந்திர உக்ரைனுக்கு எதிராக நிறுத்த முயற்சிப்பார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களில், அரசுக்கு இணையான கட்டமைப்புகளை அமைப்பதற்கும், உக்ரேனிய நாணயமான ஹிரிவ்னியாவைப் பயன்படுத்துவதை தடுப்பதற்கும் ரஷியா முயற்சி செய்கிறது. ஆனால், உக்ரைனின் எதிர்ப்பு ஒட்டுமொத்த கொரில்லா
    போராக வளர்ந்து, ரஷியாவின் முயற்சிகளை தடம்புரளச் செய்யும்’என்றார் கைரிலோ புடானோவ்.

    Posted in Uncategorized

    ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்

    ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்

    வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை ஹாலிவுட் பட பாணியில் வீடியோவாக வடகொரியா ராணுவம் வெளியிட்டுள்ளது.

    அதிநவீன ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்
    ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்

    வடகொரியா கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் அதிநவீன ஏவுகணையை கடந்த 24-ந்தேதி சோதித்தது. அமெரிக்கா

    வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த ‘ஹவாசோங் 17’ என்கிற இந்த ஏவுகணை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

    வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை ஹாலிவுட் பட பாணியில் வீடியோவாக வடகொரியா ராணுவம் வெளியிட்டுள்ளது.

    வீடியோவில் கிம் ஜாங் அன் கருப்பு நிற உடை மற்றும் கருப்பு நிற கண்ணாடியை அணிந்து நடந்துவர, அவருக்கு பின்னால் பிரமாண்ட ஏவுகணை ராணுவ வாகனத்தில்

    எடுத்து வரப்படுகிறது. பின்னர் கிம் ஜாங் அன் தனது கைக்கடிகாரத்தை பார்த்து, கவுண்டன் சொல்கிறார். அதை தொடர்ந்து ஏவுகணை நெருப்பை கக்கியப்படி விண்ணை நோக்கி சீறிப்பாய்கிறது.

    ஏவுகணை சோதனை வெற்றியடைந்த பிறகு கிம் ஜாங் அன் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் சிரித்தபடியே நடந்து வருவதுபோல் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

      Posted in சினிமா

      பீஸ்ட் – கே.ஜி.எப் மோதல் – யாஷ் விளக்கம்

      .பீஸ்ட் – கே.ஜி.எப் மோதல் – யாஷ் விளக்கம்

      கே.ஜி.எப்-2′ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்களுக்கு என் படம் பிடிக்கும் என்று நடிகர் யாஷ் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

      பீஸ்ட் – கே.ஜி.எப் மோதல் – யாஷ் விளக்கம்
      யாஷ்


      கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.

      பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

      இப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘கே.ஜி.எப்-2’ திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. டிரைலர் வெளியீட்டிற்காக

      பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடித்தி டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர். அந்த டிரைலர் வெளியீடு நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு படக்குழு பதில் அளிக்கும் நிகழ்வு நடந்தது.

      இதில் பத்திரிக்கையாளர் ஒருவர் பீஸ்ட் படத்தையும் கே.ஜி.எப் படத்தையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு நடிகர் யாஷ் அவர்கள் அளித்த பதில், இது எலக்‌ஷன் கிடையாது, கே.ஜி.எப் vs பீஸ்ட் என்று முடிவு செய்ய. எலக்‌ஷனில் ஒரு வாக்கு

      தான் இருக்கு அது யார்கிட்ட செல்ல வேண்டும் என்று சண்டை போட வேண்டும். இது சினிமா ரசிகர்கள் பீஸ்ட் படத்தையும் பார்க்கலாம் என்னுடைய படத்தையும்

      பார்க்கலாம். பீஸ்ட் படம் வெளியாவது அவர் ரசிகர்களுக்கும் பண்டிகை தான். நான் நிறைய பார்க்கிறேன் பீஸ்ட் vs கே.ஜி.எப் என்று பேசுகிறார்கள், அது சரியானது இல்லை.

      நான் நம்புகிறேன் இந்த உலகம் சினிமாவுக்காக இயங்குகிறது. அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் என் படம் பிடிக்கும்.


      எல்லோரும் என் படத்தை பார்க்கட்டும் நானும் பீஸ்ட் படத்தை பார்க்கிறேன் என்று பதிலளித்தார்.

        Posted in சினிமா

        புதிய தோற்றத்தில் இந்துஜா.. வைரலாகும் புகைப்படங்கள்

        புதிய தோற்றத்தில் இந்துஜா.. வைரலாகும் புகைப்படங்கள்

        தீவிர உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை இந்துஜா கடைப்பிடித்து மெலிந்த தேகம் கொண்ட நடிகையாக மாறியிருக்கிறார்.

        புதிய தோற்றத்தில் இந்துஜா.. வைரலாகும் புகைப்படங்கள்
        இந்துஜா


        ‘மேயாத மான்’ படத்தில் அடாவடி தங்கையாக நடித்து கவனம் ஈர்த்தவர் இந்துஜா. ‘மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லாபாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில், மூக்குத்தி அம்மன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் வாட்ட சாட்டமான

        உடல்வாகு கொண்டவர். அவரது உடல் எடை அதிகமாக இருப்பதாகவும், எடையை குறைத்தால் இன்னும் அழகாக தெரியலாம் என்றும் அவரது நண்பர்கள் ஆலோசனை

        வழங்கினர். இதையடுத்து, தீவிர உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை இந்துஜா கடைப்பிடிக்க தொடங்கினார். இதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.

        தற்போது மெலிந்த தேகம் கொண்ட நடிகையாக இந்துஜா மாறியிருக்கிறார். உடல் எடை குறைந்த தனது புகைப்படங்களையும் சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்துஜா

        பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். ‘என்ன அழகு… எத்தனை அழகு…’ என்றும், ‘அடுத்த கீர்த்தி சுரேஷ்’ என்றும் கருத்துகளை

        பதிவிடுகிறார்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் குளிர்ந்து போன இந்துஜா, முகமலர்ச்சியுடன் காணப்படுகிறார்

          Posted in Uncategorized

          132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்

          132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்

          இலங்கையில் இருந்து தப்பி சென்ற 132 பேருக்கு இண்டர்போல் சிவப்பு பட்டியலில் சேர்க்க பட்டுள்ளனர்


          இவர்களை கண்ட இடத்தில கைது செய்யும் பிடிவிறாந்து பிறப்பிக்க பட்டுள்ளது

          இவர்கள் போதைவஸ்து உள்ளிட்ட மிக முக்கிய குற்ற செயல்களில் தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது

            Posted in இலங்கை செய்திகள்

            அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்- நாமல்

            அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்- நாமல்

            ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துப்படி அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள்

            முன்னுதாரணமாக செயற்பட்டால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

            ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும்

            தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையைய குறைக்குமாறு தெரிவித்திருந்தார்.

            அப்படியானல் அவர்கள் முன்னுதாரணமாக தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்தால் நான் பதவி விலகத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

              Posted in Uncategorized

              கோட்டா அரசாங்கத்துக்குள் மீண்டும் பிளவு

              கோட்டா அரசாங்கத்துக்குள் மீண்டும் பிளவு

              ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

              இதற்கு முன்னரும் ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு

              இடையில் கருத்து மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலையிட்டு அதனைத் தீர்த்து வைத்திருந்தனர்.

              இந்நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது நிலைப்பாடுகளை தெரிவித்து

              வருகின்றமை தொடர்பில் தற்போது மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

              இக்கருத்து மோதல் அரசாங்கத்தின் பின்வரிசை எம்.பிக்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

                Posted in இலங்கை செய்திகள்

                இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சர்வதேச விமான சேவைகள்

                இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சர்வதேச விமான சேவைகள் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 55 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

                மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று (27) காலை 08:47க்கு தரையிறங்கியது.


                தீயணைப்பு வாகனங்கள் இரண்டு, தண்ணீரை பீச்சியடித்து முதலாவது விமானத்தை வர​வேற்றன.

                  Posted in இலங்கை செய்திகள்

                  மகிந்த குடும்பத்தை எதிர்க்கும் எவருடனும் இணைய தயார் பாட்டாளி

                  ராஜபக்ஷக்களுக்கு எதிராகச் செயற்படக்கூடிய எந்தவொரு அரசியற் கட்சிகளுடனும் செயற்படத் தயார் என 43ஆவது படையணின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு விடுத்துள்ளார்.

                  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளவர்கள் அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என ராஜபக்ஷக்களை எதிர்க்கும் எவருடனும் இணைந்து செயற்படத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

                  தற்போது ஆட்சியில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்குப் பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது காலத்தின் தேவை. அதனால் பாரிய புதியக் கூட்டணி ஒன்றை

                  உருவாக்குவதற்கு நாம் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

                  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, எங்களின் அழைப்பை ஏற்று 43ஆவது படையணி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இதனாலேயே கடந்த

                  வெள்ளிக்கிழமை ஐ.தே.க.வினால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளோம். மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி


                  ஆகியக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்காலத்தில் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்தார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  மின்னல் தாக்குதலில் சிக்கிக் 25 பேர் காயம்

                  மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றில் பெண்ணின் சடலத்தை புதைக்கும் போதே மின்னல் தாக்கியுள்ளது

                  இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

                  மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளனர்.

                  மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றில் பெண்ணின் சடலத்தை புதைக்கும் போதே மின்னல் தாக்கியுள்ளது

                  இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

                    Posted in சினிமா

                    மன வலியோடு பிரிந்தோம் – சோனியா அகர்வால்

                    மன வலியோடு பிரிந்தோம் – சோனியா அகர்வால்

                    கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சோனியா அகர்வால் மன வலியோடு பிரிந்தோம் என்று கூறியிருக்கிறார்.

                    சோனியா அகர்வால்
                    செல்வராகவன் – சோனியா அகர்வால்


                    தமிழில் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தொடர்ந்து கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ

                    காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டு பயலே, வானம், சதுரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

                    சோனியா அகர்வாலுக்கும், இயக்குனர் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்து 2006-ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2010-ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு

                    ற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இத்தனை வருடமும் விவாகரத்து குறித்து கருத்து சொல்லாமல் இருந்த சோனியா அகர்வால் தற்போது முதல் தடவையாக செல்வராகவனை பிரிந்த காரணம் பற்றி பேசி இருக்கிறார்.

                    அவர் அளித்துள்ள பேட்டியில், “செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றியபோது அவரது கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. என்னையும் அவருக்கு

                    பிடித்தது. இதனால் காதலிக்க ஆரம்பித்தோம். பின்னர் திருமணமும் செய்து கொண்டோம்.

                    அதன்பிறகு சில விஷயங்களில் உடன்படாத மனநிலை உள்ளிட்ட சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

                    இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்தோம். திருமணம் செய்து கொள்ளும்போது மகிழ்ச்சியாக இருந்தோம்.
                    ஆனால் விவாகரத்து செய்யும்போது மன வலியோடு பிரிந்தோம்’’ என்றார்.

                    Posted in Uncategorized

                    உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்

                    உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்

                    உகாரனை தாம் நினைத்தது போன்று ஆக்கிரமித்து விட ரசியவினால் முடியாது போய்விட்டதாக அமெரிக்கா அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்

                    போலந்து நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் இந்த விடயத்தி தெரிவித்து ரசியாவை கேலி செய்துள்ளார்

                    நெட்டி இராணுவ படைகளுடன் கனடா ,அமெரிக்கா இணைந்து ரஷியா இராணுவத்தை தவறான கோணத்தில் கணிப்பீட்டு போலி பரப்புரைகளை புரிந்த வண்ணம் உள்ளனர்

                    இதுவரை ரஷியா தனது ஆயுத பலத்தை உக்கிரேனில் முழுமையாக பயன் படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை

                    ஆனால் வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பட்டது போன்றே இந்த உளவுத்துறைகளும் ,


                    அதன் அதிபர்களும் ரசியாவை கேலி புரிந்த வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது

                      Posted in சினிமா

                      தமிழே தாயே…. முதலிடம் பிடித்த ஏ.ஆர்.ரகுமானின் பாடல்

                      தமிழே தாயே…. முதலிடம் பிடித்த ஏ.ஆர்.ரகுமானின் பாடல்

                      பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்.ஏ.ஆர்.ரகுமான்பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும்

                      ஏ.ஆர்.ரகுமான், தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார். மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில்

                      வெளியிட்டு இருக்கிறார்கள்.
                      ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில்

                      எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால்

                      பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.
                      ‘மூப்பில்லா தமிழே தாயே’ இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை

                      முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.
                      ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ்

                      மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இவர்களுடன் ரக்‌ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோரின் கூடுதல் குரல்கள் தந்துள்ளனர்.

                      Posted in சினிமா

                      பிகினி உடையில் நடனமாடும் சன்னி லியோன்

                      பிகினி உடையில் நடனமாடும் சன்னி லியோன்

                      நடிகை சன்னி லியோன் மாலத்தீவில் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                      பிகினி உடையில் நடனமாடும் சன்னி லியோன்.. வைரலாகும் வீடியோ
                      சன்னி லியோன்


                      வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம்

                      ஆடினார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

                      சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ச ன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக

                      வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும்

                      வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.
                      இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் லைக்குகளை குவிந்து வருகின்றனர்.

                        Posted in சினிமா

                        விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்

                        விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்

                        முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஆபாச வார்த்தைகளால் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

                        சமூக வலைத்தளத்தில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்
                        விஜய் – அஜித்


                        விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வதும், பிறகு அமைதியாகி விடுவதும் வழக்கம். சில மாதங்களாக ரசிகர்களின் மோதல்கள்

                        இல்லாமல் இருந்தது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதலாக மாறி வருகிறது.

                        விஜய் – அஜித்

                        விஜய் ரசிகர்கள் #Aids_Patient_Ajith என்ற ஹேஷ்டேக்கில் அஜித் புகைப்படங்களை கேவலமாக சித்தரித்தும், அஜித் ரசிகர்கள் #RIPJosephVijay என்ற ஹேஷ்டேக்கில்

                        விஜய்யின் புகைப்படங்களை சித்தரித்தும், வெளியிட்டு வருகிறார்கள்.
                        மேலும் இருவரின் கண்ணீர் அஞ்சலி புகைப்படங்களை உருவாக்கி பதிவு செய்து வருகிறார்கள்.

                          தலிபான்கள்
                          Posted in Uncategorized

                          பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் – தாலிபான்களுடன் பேசிட அமெரிக்கா மறுப்பு

                          பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் – தாலிபான்களுடன் பேசிட அமெரிக்கா மறுப்பு

                          முஸ்லீம் மதவெறி பிடித்த தீவிரவாத இயக்கமாக வளர்ந்து தற்போது ஆப்கான் நாட்டை ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்


                          பெண்கள் பாடசாலைகளை மூடிய நிலையில் அவர்களுடன் பேசிட அமெரிக்கா மறுத்துள்ளது

                          தற்போது ஏற்பாடு செய்ய பட்டிருந்த பேச்சு மேசை இரத்து செய்ய பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

                            Posted in Uncategorized

                            ஏவுகணை தாக்குதல் -பற்றி எரியும் சவூதி எண்ணெய் வயல்கள்

                            ஏவுகணை தாக்குதல் -பற்றி எரியும் சவூதி எண்ணெய் வயல்கள்

                            சவூதி நடத்தின் எண்ணெய் வயல்கள் மீது எமன் கவுதிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில்
                            சிக்கி அந்த எண்ணெய் வயல்கள் எரிந்த வண்ணம் உள்ளன

                            ஈரானின் புல ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய இராணுவ படைகள் தொடராக சவூதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது

                            பதிலுக்கு சவுதியும் இவ்ரகள் பகுதிகள் மீது வான்வழி தாக்குதல்களை தொடுத்துள்ளமை குறிப்பிட தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              பலமிழக்கும் கோட்டா – கட்சி தாவிட தயராகும் கட்சிகள்

                              பலமிழக்கும் கோட்டா – கட்சி தாவிட தயராகும் கட்சிகள்

                              இலங்கையில் நிகழ்காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையே அடுத்து தற்போது ஆளும் அரசாங்கம்
                              ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது

                              மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது ,இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்


                              கட்சியும் அரசங்காத்தய் விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுளளதாக தெரிவித்துள்ளது

                              தொடர்ந்து நாடெங்கும் போராட்டங்களை எதிர்க்கட்சி நடத்திய வண்ணம் உள்ளது