இராணுவ சிப்பாய் திடீர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ சிப்பாய் திடீர் மரணம்

இராணுவ சிப்பாய் திடீர் மரணம்

இராணுவ சிப்பாய் திடீர் மரணம் ,திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கப்புகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் கேகாலையில் வசிக்கும் இஷான் உதய குமார (38) என்ற சிப்பாய் ஆவார், அவர் வவுனியாவில் உள்ள பன்பேமடுவ இராணுவ முகாமில் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்த சிப்பாய், மேலும் மூன்று சிப்பாய்களுடன், அதே இராணுவ தளத்தில் பணியாற்றும் ஒரு சிப்பாயின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கீழ் திவுல்வேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறுதிச் சடங்குகளை வியாழக்கிழமை (27) முடித்துக்கொண்டு இராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​கீழ் திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்றிருந்தபோது, ​​குறித்த இராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் இருந்த சாரதிக்கு வாழ்நாள் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

மதுபோதையில் இருந்த சாரதிக்கு வாழ்நாள் ரத்து

மதுபோதையில் இருந்த சாரதிக்கு வாழ்நாள் ரத்து


மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ உத்தரவிட்டார். அதற்கு மேலதிகமாக ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

வேதநாகம் எட்வின் நிமல் என்ற பேருந்து ஓட்டுநருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

தனியார் நிறுவன ஊழியர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து, பாணந்துறை நல்லுருவப் பகுதியில் நிறுத்தப்பட்டு, சோதனை

செய்யப்பட்டபோது, ​​சாரதிக்கு மது வாசனை வந்தது. பொலிஸார் அவரைக் காவலில் எடுத்து, பரிசோதனையின் போது அவர் மது அருந்தியிருந்ததை உறுதிப்படுத்தினர்.

அதன்படி, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக அவர்களை கடுமையாக எச்சரித்த பின்னர் தலைமை நீதவான் தண்டனையை விதித்தார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஈரான் ஈராக், லெபனான் ஏமன் நாடுகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன
Posted in உலக செய்திகள்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஈரான் ஈராக், லெபனான் ஏமன் நாடுகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஈரான் ஈராக், லெபனான் ஏமன் நாடுகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஈரான் ஈராக், லெபனான் ஏமன் நாடுகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன ,இஸ்ரேலிய ஆட்சியின் குற்றப் போரை தாங்கி வரும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஈரான்,

லெபனான், ஈராக் மற்றும் ஏமன் ஆகியவை கூட்டு கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

இஸ்ரேலிய ஆட்சியின் குற்றப் போரை தாங்கி வரும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஈரான், லெபனான், ஈராக் மற்றும் ஏமன் ஆகியவை கூட்டு கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை ஈரானின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்திய நீரில் பாரசீக வளைகுடா, மக்ரான் கடலோரப் பகுதி மற்றும் காஸ்பியன் கடல் முழுவதும் கூட்டு அணிவகுப்பு தொடங்கியது.

IRGC கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலிரேசா டாங்சிரி கூறுகையில், 3,000 கனரக மற்றும் இலகுரக கப்பல்கள் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

எதிர்ப்பு முன்னணியின் கடல்சார் திறன்களைக் காண்பிப்பதையும், தீய மற்றும் அடக்குமுறை இஸ்ரேலிய ஆட்சிக்கு ஒரு செய்தியை தெரிவிப்பதையும் இந்த அணிவகுப்பு முக்கியமாக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

அணிவகுப்பின் போது, ​​பாலஸ்தீனத்தின் கொடி காட்டப்பட்டது, மேலும் இஸ்ரேலிய ஆட்சியின் கொடி பாரசீக வளைகுடாவில் தீயிட்டு கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

Posted in உலக செய்திகள்

பிரான்சில் வானில் மோதிய இரு போர் விமானங்கள்

பிரான்சில் வானில் மோதிய இரு போர் விமானங்கள்

பிரான்சில் வானில் மோதிய இரு போர் விமானங்கள் ,Saint-Dizier, northeastern France பறந்து கொண்டிருந்த Alpha Jets விமானங்கள் இரண்டு மோதியதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பிரான்ஸ் விமானத்துறை அறிவித்துள்ளது .

இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று அருகில் பறந்து கொண்டிருந்த பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

குறித்த போர் விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளன .

இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை

இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை

இஸ்ரேலை தாக்கும் ஹவுதி வெடிக்கும் ஏவுகணை .பலஸ்த்தீனம் காசா மீது இஸ்ரேல் மீளவும் இராணுவ படையெடுப்பை நடத்தியதை அடுத்து தற்போது அதற்கு பதிலடியாக தற்போது ஹவுதி வேக தாக்குதலை ஆரம்பித்துள்ளது .

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் மற்றும் இஸ்ரேல் விமான தளம் என்பனவற்றை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியது .

இதில் இரு தரப்புக்கும் பலமான பாதிப்புக்கள் ஏற்படுத்த பட்டதை அடுத்து தற்போது ஏமனுக்குள் நுழைந்து அமெரிக்கா அக்கூட்டு படைகள் தகத்தலை நடத்தி கொண்டுள்ளன .

ஆனால் இன்று நடத்த பட ஏவுகணைகள் யாவும் தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன .

தளபதி மல்லியின் சகோதரர் சிவாவின் இறுதி நிகழ்வு லண்டன்
Posted in இலங்கை செய்திகள்

தளபதி மல்லியின் சகோதரர் சிவாவின் இறுதி நிகழ்வு லண்டன்

தளபதி மல்லியின் சகோதரர் சிவாவின் இறுதி நிகழ்வு லண்டன்


தளபதி மல்லியின் சகோதரர் சிவாவின் இறுதி நிகழ்வு லண்டன் நகரத்தில் இடம்பெற்றது .

வீதி விபத்தில் அகால மரணமடைந்த அன்னாரின் இறுதி கிரியை நிகழ்வுகள் இவை .பல நூற்று கணக்கான மக்கள் திரண்டு தமது இறுதி அஞ்சலி வணக்கத்தை செலுத்தினர் .london news in tamil

இதில் அழுத்தி காணொளி பார்க்க

4அமெரிக்கா இராணுவத்தை காணவில்லை
Posted in உலக செய்திகள்

4அமெரிக்கா இராணுவத்தை காணவில்லை

4அமெரிக்கா இராணுவத்தை காணவில்லை

4அமெரிக்கா இராணுவத்தை காணவில்லை என லிதுவேனியாவில் தங்கியுள்ள அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது .

விசேட போர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பயணித்த வாகனம் நீரில் மூழ்கியது .

நீரில் மூழ்கிய வாகனம் தற்போது மீட்க பட்டுள்ளது .ஆனால் சிப்பாய்கள் சடலத்தை மீட்கும் தேடுதல் மீட்பு பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

எப்படி இந்த இராணுவத்தினர் சாவடைந்துள்ளனர் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு

ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு

ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு செய்துள்ளது .இஸ்ரேல் மிக பெரும் தாக்குதலை நடத்தலாம் என்கின்ற நிலையில் ஈரான் தனது நில கீழ் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது .

நிலத்தின் கீழ் வைக்க பட்டுள்ள ஏவுகணைகளை படம் பிடித்து காண்பித்து இஸ்ரேலுக்கு மிக அச்சுறுத்தலை ஈரான் விடுத்துள்ளது .

கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளாக இவை காண்படுகின்றன .

அவ்வாறான ஏவுகணைகள் எவ்வேளையும் இஸ்ரேலை தாக்கும் நிலையில் வைக்க பட்டுள்ளதாக செய்தியை இதன் மூலம் இஸ்ரேல் எடுத்து கூறியுள்ளது குறிப்பிட தக்கது .

ஹமாம்ஸ பேச்சாளர் வீரமரணம்
Posted in உலக செய்திகள்

ஹமாஸ் பேச்சாளர் வீரமரணம்

ஹமாஸ் பேச்சாளர் வீரமரணம்

ஹமாஸ் அமைப்பின் இராணுவவ பேச்சாளரான Abdel-Latif al-Qanoua ஜெபலியா பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்துள்ளார் .


இஸ்ரேல் போர் விமானம் இவர் தங்கி இருந்து மறைவிடம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது .

இதன் பொழுது அதற்குள் தங்கி இருந்த ஹமாஸ் பேச்சாளர் மற்றும் அவருடன் கூட தங்கி வசித்த எட்டு பேர் பலியாகியுள்ளதாக பலஸ்தீன செய்திகள் தெரிவிக்கின்றன .

இவர் ஹமாஸ் அமைப்பின் முக்கிய மூளையாக செயல் பட்டு வந்ததுடன் உலக ஊடகங்களுக்கு இவர் செவ்வி வழங்கி வந்தார் .

அவ்வாறான நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் ஈரான் இராணுவ தளபதி
Posted in உலக செய்திகள்

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் ஈரான் இராணுவ தளபதி

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் ஈரான் இராணுவ தளபதி

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் ஈரான் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

இஸ்ரேல் பலஸ்த்தீனம் மீது மீளவும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில் ,தற்போது ஈரான் இராணுவம் தமது கருத்துக்களை இவ்விதம் தொடராக அறிவித்து வருகிறது .

எவ்வேளையும் இஸ்ரேல் அமெரிக்கா என்பன ஈரான் மீது போரை தொடுக்கலாம் என்ற நிலையில் ,ஈரான் இராணுவம் உசார் நிலையில் வைக்க பட்டுள்ளது .

அவ்வாறான கால பகுதியில் ஈரான் இபப்டி தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

ஜீப் புரண்டதில் இருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

ஜீப் புரண்டதில் இருவர் காயம்

ஜீப் புரண்டதில் இருவர் காயம்

ஜீப் புரண்டதில் இருவர் காயம் ,கினிகத்தேனையில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற ஜீப் ஒன்று, வீதியை விட்டு விலகி, நுவரெலியாவிலிருந்து கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் பாயும் நானுஓயா, ஓயாவில் விழுந்ததில், ஜீப்பில்

பயணித்த இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா-பிளாக்பூல் சந்திக்கு அருகில் வியாழக்கிழமை (27) காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், ஜீப்பின் ஓட்டுநரின் நித்திரை கலக்கத்தால், ஜீப் வீதியை விட்டு விலகி, பிரதான

வீதியில்இருந்த பல கான்கிரீட் தூண்களை உடைத்து சுமார் 20 அடி பள்ளத்தில் நானுஓயா ஆற்றில் விழுந்ததாக தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் ஜீப்பில் மூன்று பேர் பயணித்ததாக விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஜீப்பும் பலத்த சேதமடைந்தது.

ஒருவர் பலி பவுசர் கவிழ்ந்ததில்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் பலி பவுசர் கவிழ்ந்ததில்

ஒருவர் பலி பவுசர் கவிழ்ந்ததில்

ஒருவர் பலி பவுசர் கவிழ்ந்ததில் ,கலவான-மதுகம வீதியில் அம்பலமஹேன பகுதியில் புதன்கிழமை (26) இரவு ரப்பர் லேடக்ஸ் பவுசர் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் உதவியாளர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் பால் லாரியின் ஓட்டுநராக இருந்த கல்னேவ ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த ஜனக பாதும் குமார ( வயது 27) மற்றும் சாரதியின் உதவியாளராக இருந்த புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த பதுடிகே பிரியந்த ( வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புளத்சிங்கள பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தொழிற்சாலையின் ரப்பர் லேடெக்ஸ் பவுசர் விபத்தில் சிக்கியுள்ளது. இரத்தினபுரி பகுதியில் ரப்பர் லேடெக்ஸை சேகரித்து திரும்பிக் கொண்டிருந்தபோது பவுசர் விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கோழிக்கு பெயின்ட் அடிச்சு கிளியென விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

கோழிக்கு பெயின்ட் அடிச்சு கிளியென விற்பனை

கோழிக்கு பெயின்ட் அடிச்சு கிளியென விற்பனை

கோழிக்கு பெயின்ட் அடிச்சு கிளியென விற்பனை ,கலப்படங்களை பற்றி கேள்விபட்டு இருக்கின்றோம். எனினும், கோழிக்கு பெயின்ட் அடிச்சி, அதனை கிளியெனக் கூறி, 6500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம்

பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

பழுதடைந்த உணவு விற்ற வர்த்தக நிலையங்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டம்
Posted in இலங்கை செய்திகள்

பழுதடைந்த உணவு விற்ற வர்த்தக நிலையங்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டம்

பழுதடைந்த உணவு விற்ற வர்த்தக நிலையங்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டம்

பழுதடைந்த உணவு விற்ற வர்த்தக நிலையங்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டம் ,மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்கள் உட்பட ஐஸ்கிரீம் உற்பத்தி விற்பனை

நிலையத்திற்கு எதிராக 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி

வைத்தியர் எம்.எம். நௌசாத் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன் போது பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள், துரித உணவுக் கடைகள், ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையம் போன்றவற்றில் சுகாதார நடை முறைகளை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு புதன்கிழமை(26) சம்மாந்துறை நீதவான்

நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஆஜர் படுத்திய போது அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக தலா 25,000 , 15,000, 20,000, 10,000 ரூபா உள்ளடங்கலாக 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டது.

மேலும் ஹோட்டல், ஐஸ்கிரீம் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறும் முன்னேற்றம் காணப்படாத

விடத்து மூடுவதற்கான இறுதி உத்தரவு வழங்க நீதிவானினால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பஸ் லொறி விபத்து 15பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பஸ் லொறி விபத்து 15பேர் காயம்

பஸ் லொறி விபத்து 15பேர் காயம்

பஸ் லொறி விபத்து 15பேர் காயம் ,ஹொரணை – ரத்னபுர வீதியில், இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் மற்றும் சிறிய ரக லொறி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில், மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல் ,கிரிஷ் வழக்கு தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன விலகினார்.

இந்த விடயம் தற்போது இலங்கை அரசியலில் பெரு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன்
Posted in இலங்கை செய்திகள்

தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன்

தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன்

தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன் ,லண்டனில் வீதி விபத்தில் பலியான விடுதலை தபதியாக விளங்கிய மல்லியின் சகோதரர் கருணாகரன் அல்லது சிவாவின் அவர்களில் இறுதி நிகழ்வு தற்போது இடம்பெற்று கொண்டுள்ளது .

வீதியை கடக்க முற்பட்ட பொழுது வேகமாக பயணித்த கார்கள் மோதியதில் உயிரிழந்தார் .

அன்னாரின் இறுதி நிகழ்வில் தமது வணக்கங்களை மக்கள் செலுத்திய வண்ணம் உள்ள காட்சிகள் இவை .

குடும்பத்தாரின் ஆறா துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்

CLICK HERE VIDEO

தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன்
தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன்
அதிகாரியை கட்டி வைத்து தீ வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

அதிகாரியை கட்டி வைத்து தீ வைப்பு

அதிகாரியை கட்டி வைத்து தீ வைப்பு

அதிகாரியை கட்டி வைத்து தீ வைப்பு ,தோட்டத்தில் ஒரு கள அதிகாரி தாக்கி, நாற்காலியில் கட்டிவைத்து, எரியக்கூடிய பொருட்களால் ஊற்றி தீ வைக்கப்பட்டதாகவும், இதனால் அந்த அதிகாரிக்கு பலத்த காயங்கள்

ஏற்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், இந்த சம்பவம், நாகொட, மாபலகம, குடமலானவில் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தனர்.

மாபலகா சென்ட்ரலில் உள்ள குடமலானா தேயிலை தொழிற்சாலையில் உள்ள பழைய பங்களாவின் அறையில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கள அதிகாரியின் அலறல் சத்தம் கேட்டு, தோட்டத்தில் வேலை செய்தவர்கள் அவரை மீட்டு, தீயை அணைத்து உடனடியாக எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதித்தனர். தீ விபத்தில் அந்த நபரின் உடல், தலை மற்றும் முகம் எரிந்து போயுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீ வைத்த நபரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள் ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.

மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று இரவு பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்.

மணல் அகழ்வு உரிமம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை

புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் எஸ்.வியாழேந்திரன் நேற்று கைது செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதிகள் மீதான தடை அரசாங்கம் பரிசீலனை
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத் தளபதிகள் மீதான தடை அரசாங்கம் பரிசீலனை

இராணுவத் தளபதிகள் மீதான தடை அரசாங்கம் பரிசீலனை

இராணுவத் தளபதிகள் மீதான தடை அரசாங்கம் பரிசீலனை ,இலங்கையின் மூன்று இராணுவத் தளபதிகளும், ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் கிழக்கில் இராணுவப் பிரிவின் தலைவராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான்

மீதும் தடைகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் எடுத்த முடிவுக்கு இலங்கை தனது பதிலை பரிசீலித்து வருவதாக டெய்லி மிரர் செய்திக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் பயங்கரவாத அமைப்பிலிருந்து விலகி அப்போதைய அரசாங்கத்துடன் கைகோர்த்தனர்.

முன்னாள் இராணுவத் தளபதிகள் சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூர்யா மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா ஆகியோர் அந்த மூன்று இராணுவத் தலைவர்களாவர்.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும்/அல்லது பாலியல் வன்முறை உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்றதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள், உள்நாட்டுப் போரின் போது சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போன்ற பல்வேறு மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நபர்களை குறிவைக்கின்றன.

வெளியுறவு, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாம்மி கூறுகையில், “இலங்கையில் மனித உரிமைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, அவை இன்று சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கு தேர்தல் பிரசாரத்தின் போது, நான் உறுதியளித்தேன். கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை இந்த முடிவு உறுதி செய்கிறது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பிரித்தானிய அரசாங்கம் எதிர்நோக்குகிறது, மேலும் தேசிய ஒற்றுமைக்கான அவர்களின் உறுதிமொழிகளை வரவேற்கிறது.

ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, இந்தோ-பசிபிக் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் எம்.பி., பிரதமர், வெளியுறவு அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கில் உள்ள அரசியல் தலைவர்களுடன் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தினார்,”

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) ஏற்றுக்கொண்ட இலங்கை மீதான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளின் முக்கிய குழுவில் பிரித்தானிய தலைமை தாங்குகிறது. இந்தக் குழுவில் உள்ள மற்ற நாடுகள் கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா.

இலங்கை அரசாங்கம் செவ்வ்வாய்கிழமை (25) பிரித்தானிய அரசாங்கத்திற்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

தேசிய நல்லிணக்கம் குறித்த அதன் கொள்கையுடன் அதை இணைக்க அரசாங்கம் அதன் அதிகாரப்பூர்வ பதிலின் உரையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தித்தாளுக்குத் தெரியவந்துள்ளது.

ஜெனரல் சில்வா மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைகள், 2020ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை அவருக்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து வந்தன.

2023ஆம் ஆண்டில், கனடா இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்தா மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோருக்கு அனுமதி அளித்தது. இரண்டு ராஜபக்‌ஷ சகோதரர்களும் இராணுவத்தை வழிநடத்தினர்.

பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து வருகிறது.

இலங்கை இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் தடை செய்யப்பட்ட முந்தைய சந்தர்ப்பங்களில், அப்போதைய அரசாங்கங்கள் இராஜதந்திர வழிகள் மூலம் மறுப்புகளை வெளியிடுவதில் விரைவாக இருந்தன.