மாஸ்கோவில் குண்டு வெடிப்பு
Posted in உலக செய்திகள்

மாஸ்கோவில் குண்டு வெடிப்பு

மாஸ்கோவில் குண்டு வெடிப்பு

மாஸ்கோவில் குண்டு வெடிப்பு ,மாஸ்கோவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலின் வாகன நிறுத்துமிடத்தில் 3 வெடிச்சத்தங்கள் கேட்டன

நிலத்தடி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு கார் “வெடித்த” பின்னர் இன்று மத்திய மாஸ்கோவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் மூன்று சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன.

கார் வெடிப்பு தீயை ஏற்படுத்தியது, ரஷ்ய தலைநகரின் மீது கரும்புகையை அனுப்பியது – கிரெம்ளினில் இருந்து வெறும் 15 நிமிடங்கள் தொலைவில், டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது

வெடிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் நாசவேலை அல்லது பயங்கரவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிராகரிக்கப்படவில்லை என்று ஆரம்ப அறிக்கைகள் கூறுகின்றன.

தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அவசரகால குழுவினர் ரஷ்ய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

2022 ஆம் ஆண்டில் விளாடிமிர் புடின் ஐரோப்பிய நாட்டின் மீது படையெடுக்க உத்தரவிட்டதிலிருந்து மாஸ்கோ உக்ரேனியர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது.

2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மாஸ்கோவின் புறநகரில் வைக்கப்பட்ட ஒரு குண்டு, புடினின் நண்பரும் கூட்டாளியுமானவரின் மகள் தர்யா டுகினாவைக் கொன்றது.

ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்

ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்

ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம் ,கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவையை நாளை (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு ,மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்

குறித்த குடும்பஸ்தர் திடீர் உடல்நல குறைவு காரணமாக நேற்று புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

பிரதேச பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

52 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

52 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவு

52 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவு

52 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவு ,நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் புதன்கிழமை (23) வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக

யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (23) அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது

மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது

மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது ,வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர், சில

வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மேலும் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 16 ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக சக பாடசாலை மாணவனை இளைஞர்கள் குழு ஒன்று உடல் ரீதியாக தாக்கியது.

பலத்த காயமடைந்த சிறுவன் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் திகதி உயிரிழந்தார்.

தாக்குதல் நடந்த நாளில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால்,

சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள எட்டு சந்தேக நபர்களும் நேற்று பிலேஸ்ச நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அதன் பின் இரண்டு சந்தேக நபர்கள் ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள ஆறு சந்தேக நபர்கள் வயது குறைந்தவர்கள் என்பதால், அவர்களை சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

எட்டு சந்தேக நபர்களும் ஏப்ரல் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட உள்ளனர். மாவத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பது எப்படி
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பது எப்படி

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பது எப்படி

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பது எப்படி ,எதிர்வரும்  மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்த விளக்கத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பது எப்படி
உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பது எப்படி
பாக்கிஸ்தான்-இந்தியா எல்லைகள் மூடப்பட்டன
Posted in உலக செய்திகள்

பாக்கிஸ்தான்-இந்தியா எல்லைகள் மூடப்பட்டன

பாக்கிஸ்தான்-இந்தியா எல்லைகள் மூடப்பட்டன

பாக்கிஸ்தான்-இந்தியா எல்லைகள் மூடப்பட்டன ,பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான அட்டாரி-வாகா எல்லையை உடனடியாக மூடுவது எனப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை தீா்மானித்தது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்; புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் செயல்படும்

பாதுகாப்பு ஆலோசனை அதிகாரிகள் ஒரு வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். பிரபல சுற்றுலாத் தலத்தில் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து நடந்த இத்தாக்குதல் நாட்டில் பெரும்

அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

மூத்த மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, எஸ்.ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு:

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளா்களுக்கு வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி அளித்த பேட்டி: எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நம்பத்தகுந்த வகையில் கைவிடும் வரை ‘1960-ஆம் ஆண்டு சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம்’ நிறுத்திவைக்கப்படுகிறது.

அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது. இந்த எல்லை வழியாக உரிய அனுமதியுடன் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியா்கள் வரும் மே 1-ஆம் திகதிக்குள் இதே எல்லை வழியாகத் திரும்பலாம்.

‘சார்க்’ கூட்டமைப்பு நாடுகளுக்கான நுழைவு இசைவுத் திட்டத்தின்கீழ் (எஸ்விஇஎஸ்) பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பாகிஸ்தானியா்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து எஸ்விஇஎஸ் விசாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியா்கள் 48 மணி நேரத்தில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.

புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை சோ்ந்த பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளும் அடுத்த ஒரு வாரத்துக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளும் திரும்ப அழைக்கப்படுகின்றனர்.

பரஸ்பர உயர் தூதரகங்களில் உள்ள இந்த ஆலோசகர்பதவிகள் ரத்து செய்யப்படுகின்றன. இவர்களுக்கான உதவியாளர் பணியிடங்களும் திரும்பப் பெறப்படுகின்றன.

இரு நாட்டில் உள்ள பரஸ்பர உயர் தூதரகங்களிலும் அதிகாரிகள் மற்றும் பிற பணியாளா்களின் எண்ணிக்கை தற்போதைய 55-லிருந்து 30-ஆக

குறைக்கப்படுகிறது. வரும் மே 1-ஆம் திகதிமுதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

கூட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்த பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, அனைத்துப் படைகளும் அதிக விழிப்புடன் இருக்குமாறு உத்தரவிட்டது’ என்று தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகே அடா்ந்த பைன் மரங்கள் சூழ்ந்த பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை(22) பிற்பகலில்

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 போ் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனா்.

பஹல்காமில் தாக்குதல் நடந்த நேரத்தில் சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமா் மோடி, அமைச்சர் அமித் ஷாவை

தொடா்புகொண்டு, நிலைமையைக் கேட்டறிந்தார்.இதையடுத்து சில மணிநேரங்களில் அமைச்சா் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் விரைந்தார்.

பாதியில் திரும்பிய பிரதமர் நாட்டையே உலுக்கிய தாக்குதலைத் தொடர்ந்து சவூதி அரேபிய பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு பிரதமா் மோடி புதன்கிழமை காலை தில்லி திரும்பினாா். விமான நிலையத்திலேயே

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

உயிரிழந்தவா்களுக்கு இரங்கல்

பஹல்காம் தாக்குதலை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கடுமையாகக் கண்டித்தது. தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் பிராா்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், பஹல்காம் தாக்குதலையடுத்து பல உலக நாடுகளிடம் இருந்து ஆறுதல் செய்திகள் பெறப்பட்டுள்ளன. தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள அந்த நாடுகள், பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை பிரதிபலிப்பதாக அமைச்சரவைக் குழு பாராட்டு தெரிவித்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (24) அதிகாலை தில்லி திரும்பினார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா்.

இந்தத் தாக்குதல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு வியாழக்கிழமை(24) கூடுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பாஸ்டனுக்கு கடந்த சனிக்கிழமை(19) பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு புதுடில்லி திரும்பியுள்ளார்.

காலை 10 மணிக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் செயற்க்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்துகொள்ளவிருக்கிறார்.

ஏற்கெனவே, பஹல்காம் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோருடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியிருந்தார்.

முன்னதாக, செளதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை பாதியில் முடித்துவிட்டு புதுடில்லி திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தலைக்கவசத்துடன் நடமாடினால் அதிரடி சோதனை
Posted in இலங்கை செய்திகள்

தலைக்கவசத்துடன் நடமாடினால் அதிரடி சோதனை

தலைக்கவசத்துடன் நடமாடினால் அதிரடி சோதனை

தலைக்கவசத்துடன் நடமாடினால் அதிரடி சோதனை ,பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும்

நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே.

எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு

செய்யுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் மரணம் ரிதீகம – வெலெகெதர – ஷகரலிய வத்த பகுதியில் பாடசாலை உயர் வகுப்பு மாணவர்களால் தாக்குதலுக்கு இலக்காகி, குருணாகல் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவன் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், குருணாகலை – புலுவல மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற திலிண விராஜ் ஆவார்.

கடந்த 16ஆம் திகதி, ரிதீகம – வெலெகெதர – அங்ஹந்திய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக, குறித்த மாணவன் சென்றிருந்தான்.

இதன்போது, அதே பாடசாலையில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குழுவொன்றும், மற்றொரு வெளியாட்கள் குழுவும், தனிப்பட்ட பகைமையை காரணமாக அவனைத் தாக்கியுள்ளனர்.

இதன்போது, தலைக்கவசங்களால் மாணவனின் தலையில் தாக்கப்பட்டதால், அவர் மயக்கமடைந்து, முதலில் மாவத்தகம முதன்மை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், குருணாகலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தெரியவந்ததும், வெளிநாட்டில் இருந்த திலிணவின் தாய் தற்போது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மாணவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, குருணாகலை – வெலெகெதர பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஷகரலிய தோட்ட பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்

டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சி வழிமறித்த பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சி வழிமறித்த பொலிஸார்

டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சி வழிமறித்த பொலிஸார்

டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சி வழிமறித்த பொலிஸார் ,யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் காரில் வவுனியா நோக்கி, செவ்வாய்க்கிழமை (22) இரவு பயணித்தனர். இதன்போது மாங்குளம் பொலிஸார் அவர்களை வழிமறித்தனர்.

வழி மறிக்கும் போது டோர்ச் லைட்டின் வெளிச்சத்தை கண்களுக்கு பாய்ச்சினர். இதனால் காரில் பயணித்த இளைஞர்கள் நிலை குலைந்தனர்.

இந்நிலையில், காரில் இருந்து இறங்கிய இளைஞர்கள் இப்படி வெளிச்சத்தினை கண்களில் பாய்ச்சி வாகனங்களை மறிக்கக் கூடாது என எடுத்துரைத்தனர்.

இதன்போது குறிக்கிட்ட பொலிஸார் இளைஞர்களை மிரட்டும் வகையில், அப்படித்தான் செய்வோம், என்ன செய்ய முடியும் என கேட்டுள்ளனர்.

இதன்போது இளைஞர்கள் “பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இவ்வாறு வாகனங்களை டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சி மறிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்” என கூறினர்.

இதன்போது பொலிஸார், அவரது அறிவிப்பு குறித்து எமக்கு தெரியாது என்று கூறிவிட்டு சிங்களத்தில் பேச ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இளைஞர்கள், எமக்கு சிங்களம் தெரியாது, தமிழில் பேசுங்கள் என கூறிய வேளை, “இது ஸ்ரீ லங்கா, நீங்கள் சிங்களம் பேசத்தான் வேண்டும், தமிழில் எல்லாம் பேச முடியாது” என்று மிரட்டினர்.

குறித்த பொலிஸார் மேல் அங்கியை அணிந்திருந்த நிலையில் அவர்களது தகட்டு இலக்கம் மறைக்கப்பட்டு இருந்தது.

உங்களது தகட்டு இலக்கத்தை கூறுங்கள், நாங்கள் இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால அவர்களிடம் முறையிடுகின்றோம் என இளைஞர்கள் கேட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸார் “நீங்கள் அவரிடம் கூறி எதுவும் செய்யப் போவது இல்லை. அவராலும் எதுவும் செய்ய முடியாது.

தகட்டு இரக்கமும் வழங்க முடியாது என மிரட்டி அனுப்பினர். WP – BIK – 3102 என்ற மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸாரே இவ்வாறு அராஜகத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் வந்த வாகனங்களையும் பொலிஸார் டோர்ச் லைட் ஒளி பாய்ச்சியே வழி மறித்தனர்.

மரம் முறிந்து விழுந்து வாகனங்களுக்கு சேதம்
Posted in இலங்கை செய்திகள்

மரம் முறிந்து விழுந்து வாகனங்களுக்கு சேதம்

மரம் முறிந்து விழுந்து வாகனங்களுக்கு சேதம்

மரம் முறிந்து விழுந்து வாகனங்களுக்கு சேதம் ,பொரள்ளை பகுதியில் புதன்கிழமை (23) அதிகாலை பெரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து விழுந்த்தில் அவ்வழியாக சென்ற 7 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாகவே குறித்த மரம் சரிந்து விழுந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், கொழும்பு வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் கொழும்பு மாநகர சபையும் தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 8 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சுமார் 8 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது

சுமார் 8 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது

சுமார் 8 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது ,தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது.

இதன்போது சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தயாராக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 8 கிலோ 960 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமன்னார், உறுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட தங்கம் மற்றும் படகுடன் சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல் ,இலங்கையில் மலேரியா மீண்டும் அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களிடம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார

அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் புபுது சூலசிறி கூறினார்.

மலேரியா மீண்டும் வருவதைத் தடுக்க இலங்கை ஒரு வலுவான திட்டத்தை பராமரித்து வருகிறது, பயணிகள் இந்த நோயுடன் திரும்புவதற்கான தொடர்ச்சியான ஆபத்தை அங்கீகரித்துள்ளது.

இலங்கையில், 2023 இல் 62 மலேரியா நோயாளிகள் இருந்தனர், ஒரு மரணம் ஏற்பட்டது, அதே நேரத்தில் 2024 இல் 38 வழக்குகள் மற்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. 2025 இல் இதுவரை 14 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO) செப்டெம்பர் 2016 இல் இலங்கையை மலேரியா இல்லாததாக சான்றளித்தது, உள்நாட்டு பரவலை நீக்குவதில் அதன் வெற்றியை ஒப்புக்கொண்டது,” என்று டாக்டர் சூலசிறி மேலும் கூறினார்.

7 மில்லியன் பேர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை
Posted in இலங்கை செய்திகள்

7 மில்லியன் பேர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை

7 மில்லியன் பேர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை

7 மில்லியன் பேர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை வரி செலுத்துவோர் அடையாள எண்களை (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மொத்தம் 10 மில்லியன் மக்கள் பதிவு செய்துள்ளனர், அதே நேரத்தில் குறைந்தது 7 மில்லியன் மக்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதிப் பணிப்பளார் நாயகம் பி.கே.எஸ். சாந்த தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், 1 கோடி மக்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் அடங்குவர் என்றார்.

“மே 2023 இல் ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது, இதன் மூலம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும், டிசம்பர் 31, 2023 க்குள் 18 வயதை அடைபவர்களும், ஜனவரி 1, 2024 க்குப் பிறகு 18 வயதை எட்டுபவர்களும் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பதிவைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.

அந்த நேரத்தில் TIN பெறுவது சட்டப்பூர்வ தேவையாக மாறியது, ஆனால் ஆரம்பத்தில் பலருக்கு அவர்களின் எண்கள் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து, உள்நாட்டு

இறைவரித் திணைக்களம் (IRD) அவர்களுக்கான TIN-களை செயலாக்கி வழங்கியது, இதனால் பதிவுசெய்யப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 10 மில்லியனாக உயர்ந்தது,” என்று சாந்த கூறினார்.

வரி குறிப்புகளை எளிதாக்குவதற்காக மக்கள் தங்கள் TIN-களைப் பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நோக்கத்திற்காக, IRD தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களுக்குச் செல்லாமல் மக்கள் தங்கள் TIN-களைப் பெற நிகழ்நிலை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், வங்கி வைப்புத்தொகை, வாகனப் பதிவுகள் மற்றும் உரிமை பரிமாற்றங்கள், நிலப் பதிவுகள், வர்த்தக பதிவுகள், கடனட்டைகளைப் பெறுதல் மற்றும்

பல நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு TIN கட்டாயமாகிவிடும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சார்பான அதிகாரிகள், பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்கு ரூ.98 மில்லியன் செலவிடப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்துடன் தொடர்புடைய டினுக் கொலம்பகே கூறுகையில், முந்தைய ஜனாதிபதிகளிடமிருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் இலவசமாக அனுப்பப்பட்டன.

“இது தொலைத்தொடர்பு விநியோகத்தர்களால் வழங்கப்படும் சேவை” என்று அவர் தனது ‘X’ பக்க பதிவு ஒன்றில் கூறினார்.

கடந்த ஆண்டு மட்டும், இலங்கை ஜனாதிபதியின் வருடாந்திர சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தி செய்தியை அனுப்புவதற்கு ரூ. 98 மில்லியன்

செலவிடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்
Posted in விசேட செய்திகள்

முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்

முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்

முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்,இறுதி போர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற கோர போரில் இறந்த தாயின் மார்ப்பில் பால் குடித்த படி கிடந்த காட்சி மக்களை உலுப்பியது .

அந்த குழந்தை இதோ இதில் இருக்கின்ற ராகினி தான் .இன்று 17 வயதாகியுள்ள இந்த சிறுமி ஒற்றை கையை இழந்த நிலையில் காணப்படுகின்றார் .

அவர் தனது கல்வி ,மற்றும் உணவு தேவைக்கு உதவும் படி உலக தமிழர்களிடம் உதவி கோரியுளளார் .

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக இந்த உதவி கோரப்பட்ட நிலையில் தற்போது பல மக்கள் உதவ முன் வந்துள்ளனர் .

மக்கள் இந்த சிறுமியை கண்ணுற்ற நிலையில் பெரும் மகிழ்வில் உறைந்துள்ளனர் .

மக்கள் பலர் உதவிட முன்வந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது

இதில் அழுத்தி காணொளி பார்க்க

சிரியாவில் தெஹ்ரானின் பங்கு பற்றிய அமெரிக்காவின் இஸ்ரேலின் கூற்றை ஈரான் நிராகரித்தது
Posted in உலக செய்திகள்

சிரியாவில் தெஹ்ரானின் பங்கு பற்றிய அமெரிக்காவின் இஸ்ரேலின் கூற்றை ஈரான் நிராகரித்தது

சிரியாவில் தெஹ்ரானின் பங்கு பற்றிய அமெரிக்காவின் இஸ்ரேலின் கூற்றை ஈரான் நிராகரித்தது

சிரியாவில் தெஹ்ரானின் பங்கு பற்றிய அமெரிக்காவின் இஸ்ரேலின் கூற்றை ஈரான் நிராகரித்தது ,சிரியா தொடர்பான பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் சியோனிச ஆட்சியின் பிரதிநிதிகள் கூறிய

பொய்யான குற்றச்சாட்டுகளை ஐநாவுக்கான ஈரானின் தூதர் மற்றும் நிரந்தர பிரதிநிதி நிராகரித்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அமீர் சயீத் இரவானி, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், ஏப்ரல் 9, 209625 அன்று பாதுகாப்புச்

சபையின் அவசரக் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆட்சிப் பிரதிநிதிகளின் பொய்யான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரித்தார்.

ஈரான் இஸ்லாமிய குடியரசு சிரியாவில் ஸ்திரமின்மை கொள்கையை ஒருபோதும் பின்பற்றவில்லை என்றும், இந்த நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய இறையாண்மையை எப்போதும் ஆதரிப்பதாகவும் இராவானி கூறினார்.

இரவாணியின் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

கடவுளின் பெயரால், மிகவும் இரக்கமுள்ளவர், மிகவும் இரக்கமுள்ளவர்

எண். 2459748 21 ஏப்ரல் 2025

மாண்புமிகு,

9 ஏப்ரல் 2025 அன்று சிரியா மீதான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தின் போது (9896வது கூட்டம்) ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் பிரதிநிதிகளால்

சுமத்தப்பட்ட மற்றொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க நான் எழுதுகிறேன், இது இஸ்ரேலிய குடியரசின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்திற்கு எதிராக இஸ்ரேலிய ஆட்சியின் தொடர்ச்சியான

ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டது. சந்திப்பின் போது, ​​அமெரிக்காவின் பிரதிநிதியும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஆட்சியின் பிரதிநிதியும் மீண்டும் ஒரு முறை பொய்யான மற்றும் ஆதாரமற்ற

கூற்றுக்களை முன்வைத்து, ஈரான் சிரியாவை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்குவதாக குற்றம் சாட்டினர். இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஈரான் இஸ்லாமிய குடியரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒருபோதும் சிரியாவில் ஸ்திரமின்மை கொள்கையை பின்பற்றவில்லை. சிரியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ஈரான் தொடர்ந்து வாதிடுகிறது.

மாறாக, பல ஆண்டுகளாக, பயங்கரவாத எதிர்ப்பு என்ற பொய்யான சாக்குப்போக்கின் கீழ், சிரியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறி, பயங்கரவாத குழுக்களை செயல்படுத்துவதன்

மூலமும், ஆயுதம் ஏந்துவதன் மூலமும், இஸ்ரேலிய ஆட்சியின் ஆக்கிரமிப்பை ஆதரிப்பதன் மூலமும் நாட்டை ஸ்திரமின்மைக்குள்ளாக்கியது அமெரிக்காதான். இந்த நன்கு ஆவணப்படுத்தப்பட்ட செயல்கள் தவறான

தகவல்களைப் பயன்படுத்துவதன் மூலமோ, உண்மைகளைத் திரித்து சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்துவதன் மூலமோ அல்லது ஈரானைக் குற்றம் சாட்டுவதன் மூலமோ வெள்ளையடிக்க முடியாது.

அமெரிக்க போர் விமானங்கள் ஏமன் முழுவதும் 40க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்க போர் விமானங்கள் ஏமன் முழுவதும் 40க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்

அமெரிக்க போர் விமானங்கள் ஏமன் முழுவதும் 40க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்

அமெரிக்க போர் விமானங்கள் ஏமன் முழுவதும் 40க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தின

அமெரிக்க போர் விமானங்கள் ஏமன் முழுவதும் பல மாகாணங்களில் குறைந்தது 40 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

அல் ஜசீராவின் கூற்றுப்படி, திங்கள் இரவு முதல் செவ்வாய் அதிகாலை வரை யேமனின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க போர் விமானங்கள் பரந்த அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

சனா மற்றும் மாரிப் மற்றும் அல்-ஹுதைதா மாகாணங்களுக்கு எதிரான மொத்த வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை 40ஐ எட்டியுள்ளது.

இதற்கிடையில், திங்கள்கிழமை காலை முதல் திங்கள் இரவு வரை, அல்-ஹுதைதா மாகாணத்தில் உள்ள அல்-துஹைதா மாவட்டத்தில் மொத்தம் 25 வான்வழித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன

கள்ளக்காதலி கதவை திறக்காததால் தீயில் கருகிய கான்ஸ்டபிள்
Posted in இலங்கை செய்திகள்

கள்ளக்காதலி கதவை திறக்காததால் தீயில் கருகிய கான்ஸ்டபிள்

கள்ளக்காதலி கதவை திறக்காததால் தீயில் கருகிய கான்ஸ்டபிள்

கள்ளக்காதலி கதவை திறக்காததால் தீயில் கருகிய கான்ஸ்டபிள் ,தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக்

கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இறந்தவர் சமன் என்ற பொலிஸ் சார்ஜென்ட் ஆவார், அவர் புலஸ்திபுர பொலிஸில் இணைக்கப்பட்டு பொலன்னறுவை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றினார்.

உயிரிழந்த சார்ஜென்ட் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த விவகாரம் முறிந்த பின்னர் சனிக்கிழமை (19) இரவு அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளார்.

அந்தப் பெண் கதவை திறக்காமையால், அவர், தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல் கேனை ஏந்தியவாறு வந்த சார்ஜென்ட், பெண்ணின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டி பின்னர் அதை உதைப்பதை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால், அந்தப் பெண் கதவைத் திறக்காததால், சார்ஜென்ட் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு முன்பாக தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

பின்னர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளான சார்ஜன்ட், ஆபத்தான நிலையில் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று

வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்ததாக தெரிவித்த பொலன்னறுவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5000 பொலிஸ் அதிகாரிகளை பணியில் சேர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

5000 பொலிஸ் அதிகாரிகளை பணியில் சேர்க்க நடவடிக்கை

5000 பொலிஸ் அதிகாரிகளை பணியில் சேர்க்க நடவடிக்கை

5000 பொலிஸ் அதிகாரிகளை பணியில் சேர்க்க நடவடிக்கை ,இந்த ஆண்டு (2025) இலங்கை பொலிஸ் சேவையில் 5,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2,000 அதிகாரிகளை மிக விரைவாக பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 3,000 பேர் டிசெம்பரில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளிடையே திங்கட்கிழமை (21) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்கமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் சேவையை மிகவும் திறமையாகவும், திறம்படவும் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை பொலிஸ் சேவைக்கு தனி சம்பள அமைப்பை தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.