Tag: லொறி
லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்
லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் லொறி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பிரவுன்ஸ்விக் தோட்ட புளும்பீல்ட் பகுதியில் இருந்து காசல்றி பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்று இருப்பதாக மஸ்கெலியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்
விபத்தில் சாரதி உட்பட 22 பேர் காயமடைந்துள்தோடு சாரதி மற்றும் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களில் மூவர் கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையில் நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிறு காயங்களுடன் ஒரு ஆண் நான்கு பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
சிரியாவில் இருந்து டாங்கர் மூலம் அமெரிக்கா, இராணுவத்தினர் ஒயில் திருடி சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது .
இந்த தொடர் ரோந்து அணியில் பலத்த பாதுகாப்புடன், இந்த டங்கர்கள் சிரியாவில் இருந்து ,வடக்கு ஈராக்கிற்கு எடுத்து செல்லப் பட்டுள்ளது .
பயங்கரவாதம் என்ற போர்வையில் படையெடுப்பை நடத்திய ,அமெரிக்கா அங்கிருந்து எண்ணெய் ,வளத்தை கொள்ளையடித்து செல்கிறது .
இந்த கொள்ளையை தடுக்க முடியாது சிரியா அரசு கை கட்டி வேடிக்கை பார்க்கிறது .
லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே
லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே
லண்டன் லூசியம் Verdant Lane in SE6 பகுதியில் உள்ள பாலம் ஒன்றுக்குள் டொயிலட்
றோலகளை ஏற்றி சென்ற லொறி ஒன்று சிக்கியுள்ளது இந்த லாரியின் உயரம் அதிகம்
என்பதால அதனை கவனிக்காது சாரதி அந்த பாலத்தின் உள்ளே செலுத்தி சென்றதால் அந்த லொறி பாலத்தில் சிக்கி சேதமானது
போலீசார் வரவழைக்க பட்டு லொறி மீட்க பட்டது ,இந்த விபத்தினால் அந்த
வழிச்சாலை பலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது

பற்றி எரிந்த லொறி – அடித்து மூடப்பட்ட வீதி
பற்றி எரிந்த லொறி – அடித்து மூடப்பட்ட வீதி
அவுஸ்ரேலியா மேற்கு சிட்னி பகுதியில் பயணித்த கொண்டிருந்த லொறி ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது .
இதனால் அவ்வழி சாலை முற்றாக பாதிக்க பட்டது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
எனினும் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி – சாரதி மரணம்
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி – சாரதி மரணம்
பிபிலவில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விக்டோரியா நீர்த்தேக்கத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மற்றும் தெல்தெணிய பொலிஸின் சுழியோடிகளின் உதவியுடன் சாரதியின் சடலம் மற்றும் லொறி மீட்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெறும் போது லொறியில் சுமார் 1,600 கோழிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாலிபனை இடித்து தள்ளிய லொறி – ஊசலாடும் உயிர்
வாலிபனை இடித்து தள்ளிய லொறி – ஊசலாடும் உயிர்
அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போன் வீதியில் டிராக் ஒன்று வாலிபன் ஒருவரை மோதி தள்ளியது
,இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .,தொடர்ந்து உயிர்
ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
சாரதி கைது செய்ய பட்டு விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளார்
பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கும் நுழையும் லொறி சாரதிகளுக்கு கொரனோ சோதனை
பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கும் நுழையும் லொறி சாரதிகளுக்கு கொரனோ சோதனை
பிரான்சின் கலை வழியாக பிரிட்டனுக்கும் நுழையும் லொறி சாரதிகளுக்கு தற்போது கொரனோ உள்ளதா என்ற
சோதனை நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது ,அதில் அவர்களுக்கு குறித்த நோயானது இல்லை
என அறிந்தால் மட்டும் அவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்க படுகிறது
இங்கிலாந்து அரசு மேற்கொள்ளும் இந்த நடைமுறை சாரதிகளுக்கு இடையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்
பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்
பளை பகுதியில் கடந்த தினம் இரவு 9.30 மணியளவில் நடந்த பாரிய விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்
கார்,மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது
காரில் பயணித்த தந்தை ,மற்றும் அவரது 11 மற்றும் 14 வயது மகன்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்
கார் பலத்த சேதமடைந்துள்ளது ,விபத்தினை ஏற்படுத்திய லொறி சாரதி அங்கிருந்து தப்பி
ஓடியுள்ளார் ,சாரதிகளின் அலட்சி போக்கின் காரணமாக நாள்தோறும் நாடு தழுவிய ரீதியில் நால்வர் இவ்விதம் விபத்துக்களில் பலியாகி வருகின்றனர்
இந்த உயிர்பலிகளை தடுக்க முடியாது சிங்கள காவல்துறை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா – ஹட்டன் பிரதான சோட்கட் வீதியில், ரதல்ல கார்லிபெக் பகுதியில் பார ஊர்தி
ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் அதில் காயமடைந்த இருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (06) காலை 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்நறுவையில் இருந்து நுவரெலியாவுக்கு அரிசி கொண்டு சென்று, மீண்டும் பொகவந்தலாவை பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தினால் பார ஊர்தி பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து பார ஊர்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார், மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி
கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி
கனடா Scarborough பகுதியில் பிரதான வீதி ஒன்றில் நடை பாதை வழியாக
நடந்து சென்ற சிறுவன் ஒருவரை அவ்வழியே வேகமாக வந்த லொறி ஒன்று மோதி விட்டு தப்பி சென்றது
தலையில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிறுவன் ஆபத்தான நிலையில்,தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்
தப்பி ஓடிய லொறி சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
அமெரிக்காவில் நேற்று முன்தினம், முன்னைய தினம் இடம்பெற்ற புயலின் கோர தாண்டவத்தில்
லொறிகளை தூக்கி பிரட்டியுள்ளதும் ,வீடுகளை அடித்து உடைத்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன
இந்த புயலின் தாக்குதலில் சிக்கி ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வந்தனர்
இந்த காட்சிகள் புயலின் வேகத்தை தெளிவாகவே சொல்லி செல்கின்றன
கொரனோ ஒரு புறம் மக்களை வாட்ட மறு புறம் புயல் இவ்வாறு
கதற வைத்துள்ளது குறிப்பிட தக்கது

கைதிகளுடன் கவிழ்ந்த சிறைச்சாலை பேரூந்து
கைதிகளுடன் கவிழ்ந்த சிறைச்சாலை பேரூந்து
இலங்கை அம்மன்பில பகுதியில் சிறைச்சாய் பேரூந்து ஒன்று கைதிகளை ஏற்றிய வண்ணம் நீதி மன்றுக்கு சென்றவேளை பேரூந்து லொறியுடன் மோதி விபத்தில்
சிக்கியதால் அதில் பயணித்த ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
லொறி சாரதி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
இந்த விபத்தில் ஒன்பது கைதிகள் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்
லொறியில் லண்டனுக்குள் புக முனைந்த 31 அகதிகள் சிக்கினார்
பிரான்சில் லாரியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகள் சிக்கினர்
இங்கிலாந்து நாட்டில் எஸ்ஸெக்ஸ் நகரில் குளிர்சாதன வசதி கொண்ட ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து வியட்நாமை
சேர்ந்த 39 பேர் உடல்கள் மீட்கப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் அகதிகள் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு
லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் பதுங்கி இருப்பதை
கண்டனர். லாரியின் டிரைவர் கைது செய்யப்பட்டார். அகதிகள் அனைவரும் இத்தாலி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


























