Tag: இலங்கை
நாடெங்கும் போலீசார் சுற்றிவளைப்பு தேடுதல்
நாடெங்கும் போலீசார் சுற்றிவளைப்பு தேடுதல்
இலங்கையில் நாடளாவிய ரீதியில் போலீசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தி வருகின்றனர்
குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இந்த
நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்
அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அதனை தடுக்கும்
முகமாக இந்த் சுற்றிவளைப்பு நடத்த படுகிறதாம்
எரிபொருள் விற்பனை நிலைய முதலாளி வீட்டுக்கு தீ வைத்த மக்கள்
எரிபொருள் விற்பனை நிலைய முதலாளி வீட்டுக்கு தீ வைத்த மக்கள்
இலங்கை கொக்கிராவ பகுதியில் எரி பொருள் நிலையம் வைத்து நடத்தி வந்த
உரிமையாளர் ஒருவரது வீட்டிற்கு சென்ற குழுவொன்று அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்
எரி பொருள் கிடைக்காத நிலையியல் சீற்றம் கொண்ட மக்களில் சிலர் இந்த தீ
வைத்தலை புரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பிரான்ஸ் நாடு
இலங்கைக்கு பதின் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது
தமது நாட்டின் தற்கால நிலை கருதி பல நாடுகளிடம்
இலங்கை பிச்சை கேட்டு வருகின்ற நிலையில் இந்த உதவிகள் வழங்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
தமிழக செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு
தமிழக செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தின் முக்கிய
செல்வந்தர்கள் இலங்கையில் பல கோடி ரூபாவுக்கு முதலீடு செய்துள்ளனர்
இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் முன்னோக்கி செல்லும் நிலை ஏற்படும் என எதிர்க்க படுகிறது
முதன் முதலாக வெளிப்படையான அறிவிப்புடன் தமிழக செல்வந்தர்கள் இலங்கையில்
முதலீடு செய்துள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,நலிந்துபோயுள்ள
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இலங்கையில் வரி வீதம் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு இலங்கை சென்றுள்ளது
இதனால் இலங்கை மத்திய வங்கி காஸ்,மற்றும் எரிபொருள்கள் விலையை அதிகரிக்கும் படி அரசிடம் பரிந்துரை செய்துள்ளது
இதனால் மக்கள் மேலும் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கை குடி மக்கள் தலைகள் ஒவ்வொன்றுக்கும் பல ஆயிரம் ரூபா நாள் தோறும்
வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளியுள்ளது என்ற குற்ற சாட்டு வலுத்து வருகிறது
இவை மேலும் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் நிறுத்தம்
அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் நிறுத்தம்
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்போர், அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை
பெற்றுக்கொள்ளாத வகையில் தீர்மானங்களை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று எரிபொருள் நெருக்கடி நிலைமை தொடர்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை அமைச்சர்கள் நியமனம் தொடர்பிலும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
அவர்கள் அமைச்சர்களுக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதேபோன்று அமைச்சர்களுக்கான சலுகைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு
மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் மாவின் விலை
கிலோவுக்கு நாப்பது ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது
இந்த விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கொந்தளிப்பில் உள்ளனர் ,நாள் தோறும் பொருட்களின் விலை
அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை
ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை
இந்தியா பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்க பட்ட பேரறிவாளன் நீதிமன்றினால் விடுதலை செய்ய பட்டுளளார் .
முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைத்து வைக்க பட்ட பேரறிவாளன் இந்தியா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விடுதலை செய்ய பட்டுள்ளார்.
இவரது விடுதலை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ராஜீவ் காந்தி ஆதரவு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
பேரறிவாளன் விடுதலை மகிழ்வையும் சர்ச்சையும் கிளப்பி செல்கிறது .
ஒருவர் வெட்டி கொலை – தொடரும் வன்முறைகள்
ஒருவர் வெட்டி கொலை – தொடரும் வன்முறைகள்
இலங்கை பலப்பிட்டிய பகுதியில் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி
ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
இந்த கொலையை புரிந்தவர் தற்போது தலை மறைவாகியுள்ளார்
இவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் கடனுதவி
இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் கடனுதவி
இலங்கையின் தற்கால நெருக்கடி நிலையினை தொடர்ந்து இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் அமெரிக்கா டொலர் கடனுதவி வழங்கியுள்ளது,
இந்த நிதி உதவி தற்கால நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்கும் முகமாக வழங்கி வைக்க பட்டுள்ளது .
தற்கால நிலையை கருத்தில் கொண்டு கடனை உலக வாங்கி மற்றும் நாடுகளிடம் இலங்கை வாங்கி குவித்து வருகிறது .
எதிர்காலத்தில் இந்த கடனை மீள செலுத்த
முடியா நிலையில் இலங்கை சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும் பேராபத்து காத்து கிடக்கிறது .
இலங்கை உலக வங்கியிடம் பெற்றுக்கொண்ட பணம் எதுவரைக்கும் போதுமானது என்ற கேள்வியும் அதனை மீள இலங்கை உலக வங்கிக்கு எவ்வாறு செலுத்த போகிறது என்ற அச்ச நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .
பிரித்தானியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல்
பிரித்தானியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல்
பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமவேளை,
புலம்பெயர் நாடுகளில் இவ்வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்வரிசையில், பிரித்தானியாவில் குருதிக்கொடை, முள்ளிவாய்க்கால் கஞ்சி, பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
‘உயிர்கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் Tooting Doner Centre,Croydon Doner Centre ஆகிய இடங்களல் 30 ற்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கியிருந்தனர்.
Aston Hall Hotel Aston, Sheffield பகுதியிலும் குருதிக்கொடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
2009ம் ஆண்டு தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனஅழிப்பு போர்க்காலம். கடும்யுத்த களம், உணவுத்தடை,
மருந்துக்களுக்கு தடை, போர் தவிர்ப்பு வலயம் என்ற பெயரில் மக்களை கொத்துக் கொத்தாக தனது கொடிய ஆயுதங்களால் இனப்படுக்கொலை செய்து கொண்டிருந்தது
. இந்த நெருக்கடியான பெருந்துயரான காலத்தில் மக்களின் வயிற்றுப் பசியினை நம்பிக்கையோடு கஞ்சி தீர்த்திருந்தது.
போராளிகள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த அரசியினை மக்களின் பசிபோக்க கஞ்சியாக சமைத்து வழங்கியிருந்தனர்.
இதுவே ‘முள்ளிவாய்கால் கஞ்சியாக’ மக்களின் அப்பெருந்துயரை நினைவேந்திக் கொள்ளப்படுகின்றது.
இதேவேளை பிரித்தானிவின் பல பாகங்களில் தமிழர் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி
எமது மக்கள் பட்ட துயரங்களை வேற்றின மக்களுக்கும், உலகநாடுகளுக்கும் உணர்த்த காட்சிப்படங்கள் மூலமாகவும், துண்டுப்பிரசுரம் மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள்.
மே18 தமிழீழ தேசிய துக்க நாள் என்பது நாம் துயரத்தில் துவண்டு போகும்
நாளல்ல மாறாக எமது மக்கள் அடைந்த துயரத்தையும் உயிர்ப்பாய் உள்வாங்கி
ஒருதேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுகந்திரமும்
இறைமையும் கொண்ட தமிழீழ அரசினை அமைப்பதே ஒரே வழி என உறுதிகொள்ளும் நாளாகும்.
எதிரி இராணுவத்தால் மேற்கொள்ள பட்ட தமிழர் மீதான இன அழிப்பில் பங்கெடுத்த உலக நாடுகள் இளநக்கிக்கு ஆதரவாக செயலாற்றிய வண்ணம் உள்ளன .
இதுவரை மாண்டு போன உயிர்களின் ஆத்துமா சாந்தியடைய எவ்வித தண்டனையும் எதிரி அரசுக்கு ஐநாவால் வழங்கப்படவில்லை .





பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்
பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்
எலிசபெத் போர்னி,முந்தைய அரசில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.
பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவிப்பு
எலிசபெத் போர்னி, இமானுவேல் மேக்ரான்
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களை கொண்டு வர அவர் முடிவு செய்தார். இதன் அடிப்படையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து முந்தைய அரசில் தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்து வந்த எலிசபெத் போர்னி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை
அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வெளியிட்டுள்ளார்.
61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இது 2-வது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் பேசிய எலிசபெத் போர்னி, இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்றும், உங்கள் கனவுகளுக்குப் பின் செல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.
புதிய பிரதமர், பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவார் என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்தார்.
அதிபரும், புதிய பிரதமரும் பிரான்ஸ் புதிய அரசில் பங்கேற்கும் அமைச்சரவை குறித்து
இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைசா வில்சன் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
ரைசா வில்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது நீச்சல்
உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை ரைசா பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
வன்முறையில் ஈடுபட்டார்கள் 664 பேர் கைது
வன்முறையில் ஈடுபட்டார்கள் 664 பேர் கைது
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 67 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
எவ்வாறாயினும், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 206 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 272 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களின் மேற்பார்வையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், தாக்குதல், காயம், சொத்துக்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.
இதேவேளை, சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 791 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் மேல் மாகாணத்தில் இருந்து 444 முறைப்பாடுகளும், தென் மாகாணத்தில் இருந்து 118 முறைப்பாடுகளும்
கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
காஸ் சுமந்த படி இலங்கை வந்தடைந்த இரு கப்பல்
காஸ் சுமந்த படி இலங்கை வந்தடைந்த இரு கப்பல்
இலங்கைக்கு காஸ் ஏற்றிய அப்டி இரு கப்பல்கள் வந்தடைந்துள்ளன
இவற்றுக்கு எலுமில்லியன் டொலர் செலுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த கப்பல்கள் வருகையால்நடத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என எதிர் பார்க்க படுகிறது
ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் சண்டை தீவிரம்
ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் சண்டை தீவிரம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே முதலாவது முரண்பாடு முதல் நாளன்றே தோற்றியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர், பாராளுமன்றம் இன்று (17) முதன்முறையாக கூடியது.
இந்நிலையில், நாளொன்றை வீணடிப்பதைத் தவிர்க்க, பெண் எம்.பி ஒருவரை பிரதி
சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார்.
எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆண் எம்.பி ஒருவரின் பெயரை பிரேரித்து முன்மொழிந்தது. இது, பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கு வழிவகுத்தது.
பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன.
அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.
நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் வாக்களிப்பு அழைக்கும் மணி,
பாராளுமன்றத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
நான் குடும்ப ஆட்சியை காப்பற்ற வரைவில்லை ரணில்
நான் குடும்ப ஆட்சியை காப்பற்ற வரைவில்லை ரணில்
ஒரு தனி மனிதன், ஒரு குடும்பம் அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பதற்காக நான் இந்த சவாலை பொறுப்பேற்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு இன்று மாலை விசேட உரையாற்றிய போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை.
என்னுடைய கால்களில் கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக
அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்.எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம்,
அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .உயிரை பணயம் வைத்து இந்த
சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள். நான் எனது
கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன்.
அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும்.
ஆர்மேனிய ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஆர்மேனிய ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான யுசஅநn ளுயசமளைளயைn ஆர்மென் சர்கிசியன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Armen Sarkissian ) ஒன்றினை வழங்க இருக்கின்றார்.
ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இம்முறை எட்டாவது அரங்கினை தொட்டுநிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை வழங்கும் அரசியல் பிரமுகரான ஆர்மென் சர்கிசியன்
அவர்கள், (2018-2022) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் 4வது அரசுத் தலைவராக இருந்துள்ளார். (1996-1997) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் பிரதமராகவும் பொறுப்பு
வகித்த இவர், (1998-2018) காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தில் நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய தூதராகவும் இருந்துள்ளார்.
(1995-1996) காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆர்மேனியாவின் தலைவராக இருந்துள்ளதோடு, மேற்குலகில் தொடங்கிய முதல் ஆர்மேனிய
தூதரகத்தினை லண்டனில் தொடங்கியவர் என்பதோடு, பெல்ஜியம, நெதர்லாந்து, லக்செம்பர்க் மற்றும் வற்றிக்கான் ஆகிய நாடுகளுக்கு ஆர்மேனியாவின் மூத்த தூதராக விளங்கியுள்ளார்.
பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது,
மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை
New York 2:00 PM / UK : 7:00 PM / EU : 8:00 PM
நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம்.
கொழும்பு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை
இலங்கை கொழும்பு ஆர்மர் வீதி பகுதி அடுக்குமாடியில் வசித்து வந்த 47வயதுடைய
நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவ்விதம் கொலை செய்ய பட்டதற்கான காரணம் தெரியவில்லை .
தற்போது காவல்துறை விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகின்றன.
விரைவில்கொலைக்கன காரணம் கண்டறிய படும் என நம்ப படுகிறது .







