Tag: இலங்கை
தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
தமிழ் தேசிய மக்கள் முன்னனியைத் தேடி பொலிசார் யாழில் விசே கைது வேட்டையை ஆரம்பித்துள்ளதுடன், அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கைது செய்யப்படலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ் வடமராட்சி, மருதங்கேணி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பொலிஸ் புலனாய்வு துறையினர் தாக்குதல் நடத்தியமை மற்றும்
பொலிசார் சுட முற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையளில் பொலிசார் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
கட்சியின் மகளிர் அணித் தலைவி மற்றும் ஒரு நபர் இன்று மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஜேந்திரகுமார் எம்.பியையும் பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு வைத்து கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இது குறித்து கஜேந்திரகுமார் எம்.பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு
வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணை பிரிவுக்கு வருமாறு இன்று (05.06) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணனணையே நாளை 07 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு
அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பிரிவு 01 இன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை தருவதற்கு, 2023 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 7 ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா கிளைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி மக்களுக்கு தண்ணீர் வழங்க கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிரதேச வாதமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை வன்னி மாவட்ட ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் முன்வைத்துள்ளார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையோரமாகவுள்ள புளிக்குளம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டது.
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்நகர் மக்களின் நீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த குளத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளது.
தற்போது, குறித்த குளத்து நீரை கிளிநொச்சி மக்களுக்கு வழங்கக் கூடாது எனவும் அந்நீரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கே வழக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்துள்ளார்.
குறித்த குளத்தை புனரமைத்து நீர் விநியோகிப்பதற்கான அனுமதிகள் அனைத்தும் பெற்று வேலைகள் ஆரம்பிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு, தற்போது பிரதேச வாதம் பேசி செயற்படுவதை ஏற்க முடியாது.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் போன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் தமிழ் மக்கள் தான் வாழ்கிறார்கள் எனபதை தேசியம் பேசி பிரதேச வாதத்துடன்
செயற்படும் சாள்ஸ் எம்.பி புரிந்து கொள்ள வேண்டும் எனவும், கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்னகர் மக்கள் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தின் எல்லையோர குளமான குறித்த புளிக்குளத்தை புனரமைத்து அதில் இருந்து அந்த மக்களுக்கு நீர் கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பதை சாள்ஸ் எம்.பி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திலீபன் எம்.பி கோரியுள்ளார்.
குறித்த குளத்தின் கீழ் முல்லைத்தீவில் வயல் நிலங்கள் இல்லை என்பதுடன் இவ் நீரை முல்லைத்தீவு மக்கள் பயன்படுத்தக்கூடிய ஏது நிலையும் இல்லை.
இதனால் வீணாக போகும் நீரை கிளிநொச்சி மக்கள் பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கின்றது.
அதை விடுத்து இனவாதம், பிரதேசவாதம் பேசி தமிழ் மக்களை கூறுபோட்டு சுயநல அரசியல் லாபங்களுக்காக செயற்பட்டு அபிவிருத்தியை குழப்பக் கூடாது எனவும் திலீபன் எம்.பி தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!
ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!
ஐ.நா பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி 2023 செப்டெம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சார்பாக இலங்கை முக்கியமான பதவியை ஏற்றுக்கொள்கின்றது.
இதன்போது ஆபிரிக்கா சார்பாக காங்கோ, காம்பியா, மொராக்கோ, செனகல், உகாண்டா, சாம்பியாவும் ஆசியா பசிபிக் நாடுகளுக்கு ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!
கிழக்கு ஐரோப்பியாவிற்கு எஸ்டோனியாவும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தீவுகளுக்கு பொலிவியாவின் ப்ளூரினேஷனல் ஸ்டேட், சுரினாம் போன்ற நாடுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
ஐ.ந. பொதுச் சபையின் 78வது அமர்விற்கு துணைத் தலைவர்களாக மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற மாநிலங்களுக்கு ஐஸ்லாந்து, நெதர்லாந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைமை நாடுகள், ஐ.நா.பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பு சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் கைது
இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் கைது
இலங்கை ஜேர்மன் நாடுகளுக்குச் செல்வதற்காக, போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஜேர்மனியை சேர்ந்தவர்கள். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி கடவுச்சீட்டில் பயணித்த இலங்கை பிரஜை மற்றும் ஜேர்மன் நாட்டவர் ஆகியோர் லண்டன் மற்றும் காத்மாண்டு செல்வதற்காக விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் தங்களுடைய போர்டிங் பாஸ்களை மாற்றிக்கொண்டனர்.
இதையடுத்து பொலிஸார் இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் மீதும் மோசடி, மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த குற்றத்தில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளனரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
3 மாதங்களில் இலங்கைக்கு 1,413 மில்லியன் டொலர்கள்
3 மாதங்களில் இலங்கைக்கு 1,413 மில்லியன் டொலர்கள்
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 1,413.2 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும்
இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும்
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்த்தல், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவுக்கும், இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இந்திய ரூபாவில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையை விட்டு ஓடும் மருத்துவர்கள் திணறும் இலங்கை |இலங்கை செய்திகள்
இலங்கையை விட்டு ஓடும் மருத்துவர்கள் திணறும் இலங்கை |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | இலங்கையை விட்டு மருத்துவர்கள் வெளி நாடுகளுக்கு ஓடுவதால் இலங்கை திணறிய வண்ணம் உள்ளது .
மாதம் தோறும் ஐம்பது முதல் 60 வரையான மருத்துவர்கள் ,
நாட்டை விட்டு செல்கின்றனர் .பலர் விடு முறைவிண்ணப்பம்
கோரியுள்ளனர் .
மேலும் 1000 மருத்துவர்கள் நடத்தி விட்டு சென்றுள்ளனர் என்கின்ற அதிர்ச்சிகர விடயத்தை அவர் தெரிவித்தார் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த
அவல நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவ அதிகாரிகள்
சங்கத்தின் (GMOA) பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் இலங்கை முக்கிய செய்திகள் பக்கத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது .
இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன்
இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன் .
இலங்கைக்கு வெளிநாட்டு தமிழன் வந்தால் என்ன எல்லாம்
செய்வார்கள் என்பதற்கு இவர் உதாரணம் .
இப்போ காசு எங்க இருக்கு இலங்கையில்.ஆனால் இலங்கையில் உள்ளவன் என்ன செய்கிறார்கள் வெளிநாட்டு பணத்தை எதிர்பார்த்தபடி காத்துள்ளார் .
லண்டனில் ஒரு மணித்தியாலம் 9 பவுண்டுகள் சம்பளம் ..
கோடியில் இலங்கையில் வீடுகள் வாங்கினால் அவர்
எத்தனை மணித்தியாலம் லண்டனில் வேலை செய்திருப்பார்
என்கின்ற கேள்வியை அவரிடம் கேளுங்கள்.
2 அறை கொண்ட வீட்டில் வாழும் ஒரு குடும்பத்திற்கு
மாதம் தோறும் வீடு வாடகை
மட்டும் 1390 காஸ் மின்சாரம் நாள் ஒன்றுக்கு 10 பவுண்டுகள் .மொத்தம் 1690 .
இப்போ யோசிங்க வீடு காணிகள் இலங்கையில்
வாங்குபவர்கள் செய்யும் சூத்து மாத்து மேலும்
சொல்ல போனால் தவறான தொழில் அல்லது அவ்வாறான
ஒன்றை செய்கிறார்கள் என்பதே வெளிப்படை .
வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்
வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்
இலங்கை வெலிபென்ன பகுதியில் 34 வயது வாலிபரை அடித்து கொன்ற குற்ற சாட்டில்16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான மூவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுளள்னர்.
இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்
இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்
இலங்கைக்கு அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகள் ,
தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் 38 மில்லியன்
அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .
இந்த பணம் விரைவில் இலங்கைக்கு வழங்க படவுள்ளது .
கடன் மேல் கடனை பெற்று
மீளவும் நாட்டை கேள் நிலைக்கு இலங்கை அழைத்து
செல்வதை இவை மீளவும் எடுத்து காண்பிக்கின்றன.
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்தார்.
இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா உறுதியாக
நடைமுறைப்படுத்த இந்தியா தீர்மானித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் முட்டைக்கு தீர்வு
இலங்கையில் முட்டைக்கு தீர்வு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கோழி முட்டை நெருக்கடிக்கு தீர்வு ,எதிர்வரும் யூன் மாதத்திற்குள் தீர்வு எட்ட படும் என ,
இலங்கை அறிவித்துள்ளது .
இலங்கையின் இந்த முட்டை தீர்வு அறிவிப்பு மக்கள் மதியில் குசியை ஏற்படுத்தியுள்ளது .
கோழி முட்டை இல்லாத நிலையில் சிறார்கள் போசாக்கு தொடர்பில் ,
கவலை வெளியிட பட்டுள்ளது
இலங்கையில் இந்தியா போர் கப்பல்
இலங்கையில் இந்தியா போர் கப்பல்
இந்தியா கடற்படைக் கப்பல் (INS) டில்லி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை வருகை தந்த கப்பலை,
இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இந்த கப்பலில் 390 கடல்படையுடன் வந்துள்ளது .
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில்,
இரு கடற்படைகளுக்கு இடையேயான போர் ஒத்துளைத்து மற்றும் பாதுகாப்பு ,
தீவிரவாத ஊடுருவல்கள் தடுக்கும் விடயங்கள் பயிற்சியாக பெறப்படவுள்ளன .
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
கடந்த 24ஆம் திகதி ரீயூனியன் தீவில் தரையிறங்கிய 46 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் 69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறங்கியுள்ளனர்.
இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் இன்று காலை தீவை சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பிலிருந்து சென்றவர்கள் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
43 ஆண்கள், பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 46 பேர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
13 முதல் 53 வயதிற்குட்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் , மட்டக்களப்பு, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
விமானம் மூலம் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 46 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே 69 பேருடன் சென்ற மற்றொரு படகு குறித்த தீவை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018 மார்ச் மற்றும் 2019 ஏப்ரலுக்கு இடையில், இலங்கையிலிருந்து 275 பேர் ரீயூனியனுக்கு சென்றுள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து நான்கு கப்பல்கள் மொத்தம் 122 பயணிகளுடன் தீவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புகலிடம் கோரி விண்ணப்பித்த 397 புலம்பெயர்ந்தவர்களில் 121 பேர் பிரான்ஸுக்கு சொந்தமான தீவில் இருக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகள்
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகள்
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகளின் செயலினால் ,மக்கள் பெரிதும் அவல நிலைக்கு உட்படுகின்றனர் .
அவ்வாறு வழங்காது செல்பவர்களை ,யானைகள் தாக்கி வருகின்றன .இதனை தடுப்பதற்கு நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்க பட்டுள்ளது .
கதிர்காம பகுதியில் இவ்வாறான யானைகளில் கெடுபிடிகள் ,அதிகரித்து வருவதாக ,நெட்டிசன்கள் காட்சிகளுடன் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
இலங்கைக்கு இந்தியா அரசினால் 75 பேரூந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன .
இந்திய மத்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் ,இந்த பேரூந்துகள் ஒரு தொகுதி வழங்கி வைக்க பட்டுள்ளது .
500 பேரூந்துகள் இலங்கைக்கு வழங்கிட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது .அவை கட்டம் கட்டமாக வழங்க உத்தேசிக்க பட்டுள்ளது .
இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கை இந்த மாதத்தின் கடந்த இருபது நாட்களில் மட்டும் ,ஐம்பதாயிரம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது .
இலங்கை உல்லாச பயணிகளின் வருகையாலேயே அதிக வருமானத்தை பெற்று வந்தது .
தற்போது ஏற்பட்ட கொரனோ தாக்குதலை அடுத்து ,உல்லாச பயணிகள் வரவு வீழ்ச்சியடைந்த நிலையிழும் ,ராஜபக்ச குடும்பத்தின் லஞ்ச ஊழல் மூலம் நாடு மிக பெரும் வறுமைக்கு தள்ள பட்டது .
இதனால் இலங்கை வாழ் மக்கள் ,சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை
நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை
வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் நவம்பர் 8ம் திகதி முழுநாள் விவாதம்
மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை ஏற்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியினால், வாழ்வாதார துன்பங்களை மிக அதிகமாக எதிர்கொள்ளும் மிகவும் நலிந்த (Most Vulnerable) பிரிவினர் தொடர்பில், முழுநாள் விவாதம் ஒன்றை நடத்த தமிழ்
முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியும், தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திசாநாயக்க எம்பியும் முன்வைத்த
கோரிக்கையை இன்று, பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது.
நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை
இதன்படி வரவு செலவு திட்டத்துக்கு முன்னர் கூடும் பாராளுமன்ற வாரத்தின் முதலாம் நாளான நவம்பர் எட்டாம் திகதி செவ்வாய்கிழமையன்று இந்த
கருப்பொருளில் முழு நாள் விவாதம் நடத்த கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,
பெருந்தோட்ட துறை 51 விகிதம், நகர துறை 43 விகிதம், கிராமிய துறை 34 விகிதம், என்ற ஐநா நிறுவனங்களின் கணக்கெடுப்பின்படி, கடந்த வாரம், இந்நாட்டின் மிக மோசமான நெருக்கடியை சந்தித்துள்ள பெருந்தோட்ட துறை
மக்களின் வாழ்வாதார விவகாரங்கள் தொடர்பில், ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை, நான் கொண்டு வந்து விவாதத்துக்கு உள்ளாக்கி இருந்தேன்.
நாட்டில் வாழும் அனைத்து நலிந்த பிரிவினர்கள் தொடர்பில் கூட்டாக பிரேரணை கொண்டு வந்து முழுநாளும் விவாதிப்போம் என்ற யோசனையை ஜேவிபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்கவும், நானும் அதன்பின் பேசி முடி செய்தோம்.
அதன்படி இன்று அனுரகுமார திசாநாயக்க அதுபற்றி கருத்திட, அதை நான் ஆதரிக்க கட்சி தலைவர்கள் தற்போது எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி கணக்கெடுப்புகளின்படி மிக அதிகமாக துன்புறும் நலிந்த பிரிவு குடும்பங்கள் தொடர்பாக முழு தேசமும், உலகமும் அறிந்து கொள்ளும் வண்ணம் நமது பிரேரணை அமையும்.
பெருந்தோட்ட உழைக்கும் குடும்பங்கள், நாளாந்த வருமான நகர பாமர குடும்பங்கள், மீனவ குடும்பங்கள், விவசாய குடும்பங்கள், ஆடை தொழிற்சாலை தொழிலாள குடும்பங்கள்,
மத்திய கிழக்கு உழைப்பாளர் குடும்பங்கள், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் தொடர்பில் நாம் விவாதிக்க உள்ளோம்.
இந்த பிரிவினருக்கு விசேட ஒதுக்கீடு அடிப்படைகளில் நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்பதும், சமுர்த்தி வாழ்வாதார
உதவி பெருகின்றவர்களின் பட்டியல் அரசியல் தலையீடுகளினால், பாகுபாடு மிக்கதாக அமைத்துள்ளது என்றும்,
ஆகவே அந்த அப்பட்டியல் உண்மையிலேயே நலிந்த பிரிவினரை உள்வாங்கும் முகமாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும்,
நான் கோர விரும்புகிறேன்.
எனது இந்த நிலைபாட்டை ஆதரிக்கும்படி நாடு முழுக்க வாழும் மக்கள்,
தாம் வாக்களித்து தெரிவு செய்த தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூற வேண்டும் எனவும் கோருகிறேன்.
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை
பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை
இலங்கை உலக நாடுகளின் பட்டினி நாடுகளின் வரிசையில் 65 தாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது .
இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியில் ,இலங்கை திவாலாகி , மக்களை படு பாதாளத்திற்கு தள்ளிய வரலாற்று சாதனையை புரிந்தனர் .
இலங்கை தனது வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு ,பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .
இவர்களின் இந்த லஞ்ச ஊழல் மோசடி காரணமாகவே ,நாடு பின்னோக்கி நகர்ந்து செல்கிறது .
தற்போது ,உலக அரங்களில் 65 தாவது பட்டினி நாடக இலங்கை பதிய பெற்று சாதனை படைத்துள்ளது .
இந்த சாதனைகள் யாவும் ராஜபக்ச குடும்பங்களை சாரும் .
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு




































