Tag: இலங்கை
இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் கைது
இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் கைது
இலங்கை ஜேர்மன் நாடுகளுக்குச் செல்வதற்காக, போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஜேர்மனியை சேர்ந்தவர்கள். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி கடவுச்சீட்டில் பயணித்த இலங்கை பிரஜை மற்றும் ஜேர்மன் நாட்டவர் ஆகியோர் லண்டன் மற்றும் காத்மாண்டு செல்வதற்காக விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் தங்களுடைய போர்டிங் பாஸ்களை மாற்றிக்கொண்டனர்.
இதையடுத்து பொலிஸார் இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் மீதும் மோசடி, மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த குற்றத்தில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளனரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
3 மாதங்களில் இலங்கைக்கு 1,413 மில்லியன் டொலர்கள்
3 மாதங்களில் இலங்கைக்கு 1,413 மில்லியன் டொலர்கள்
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 1,413.2 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும்
இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும்
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்த்தல், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவுக்கும், இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இந்திய ரூபாவில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையை விட்டு ஓடும் மருத்துவர்கள் திணறும் இலங்கை |இலங்கை செய்திகள்
இலங்கையை விட்டு ஓடும் மருத்துவர்கள் திணறும் இலங்கை |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | இலங்கையை விட்டு மருத்துவர்கள் வெளி நாடுகளுக்கு ஓடுவதால் இலங்கை திணறிய வண்ணம் உள்ளது .
மாதம் தோறும் ஐம்பது முதல் 60 வரையான மருத்துவர்கள் ,
நாட்டை விட்டு செல்கின்றனர் .பலர் விடு முறைவிண்ணப்பம்
கோரியுள்ளனர் .
மேலும் 1000 மருத்துவர்கள் நடத்தி விட்டு சென்றுள்ளனர் என்கின்ற அதிர்ச்சிகர விடயத்தை அவர் தெரிவித்தார் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த
அவல நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவ அதிகாரிகள்
சங்கத்தின் (GMOA) பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் இலங்கை முக்கிய செய்திகள் பக்கத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது .
இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன்
இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன் .
இலங்கைக்கு வெளிநாட்டு தமிழன் வந்தால் என்ன எல்லாம்
செய்வார்கள் என்பதற்கு இவர் உதாரணம் .
இப்போ காசு எங்க இருக்கு இலங்கையில்.ஆனால் இலங்கையில் உள்ளவன் என்ன செய்கிறார்கள் வெளிநாட்டு பணத்தை எதிர்பார்த்தபடி காத்துள்ளார் .
லண்டனில் ஒரு மணித்தியாலம் 9 பவுண்டுகள் சம்பளம் ..
கோடியில் இலங்கையில் வீடுகள் வாங்கினால் அவர்
எத்தனை மணித்தியாலம் லண்டனில் வேலை செய்திருப்பார்
என்கின்ற கேள்வியை அவரிடம் கேளுங்கள்.
2 அறை கொண்ட வீட்டில் வாழும் ஒரு குடும்பத்திற்கு
மாதம் தோறும் வீடு வாடகை
மட்டும் 1390 காஸ் மின்சாரம் நாள் ஒன்றுக்கு 10 பவுண்டுகள் .மொத்தம் 1690 .
இப்போ யோசிங்க வீடு காணிகள் இலங்கையில்
வாங்குபவர்கள் செய்யும் சூத்து மாத்து மேலும்
சொல்ல போனால் தவறான தொழில் அல்லது அவ்வாறான
ஒன்றை செய்கிறார்கள் என்பதே வெளிப்படை .
வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்
வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்
இலங்கை வெலிபென்ன பகுதியில் 34 வயது வாலிபரை அடித்து கொன்ற குற்ற சாட்டில்16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான மூவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுளள்னர்.
இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்
இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்
இலங்கைக்கு அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகள் ,
தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் 38 மில்லியன்
அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .
இந்த பணம் விரைவில் இலங்கைக்கு வழங்க படவுள்ளது .
கடன் மேல் கடனை பெற்று
மீளவும் நாட்டை கேள் நிலைக்கு இலங்கை அழைத்து
செல்வதை இவை மீளவும் எடுத்து காண்பிக்கின்றன.
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்தார்.
இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா உறுதியாக
நடைமுறைப்படுத்த இந்தியா தீர்மானித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் முட்டைக்கு தீர்வு
இலங்கையில் முட்டைக்கு தீர்வு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கோழி முட்டை நெருக்கடிக்கு தீர்வு ,எதிர்வரும் யூன் மாதத்திற்குள் தீர்வு எட்ட படும் என ,
இலங்கை அறிவித்துள்ளது .
இலங்கையின் இந்த முட்டை தீர்வு அறிவிப்பு மக்கள் மதியில் குசியை ஏற்படுத்தியுள்ளது .
கோழி முட்டை இல்லாத நிலையில் சிறார்கள் போசாக்கு தொடர்பில் ,
கவலை வெளியிட பட்டுள்ளது
இலங்கையில் இந்தியா போர் கப்பல்
இலங்கையில் இந்தியா போர் கப்பல்
இந்தியா கடற்படைக் கப்பல் (INS) டில்லி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை வருகை தந்த கப்பலை,
இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இந்த கப்பலில் 390 கடல்படையுடன் வந்துள்ளது .
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில்,
இரு கடற்படைகளுக்கு இடையேயான போர் ஒத்துளைத்து மற்றும் பாதுகாப்பு ,
தீவிரவாத ஊடுருவல்கள் தடுக்கும் விடயங்கள் பயிற்சியாக பெறப்படவுள்ளன .
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
கடந்த 24ஆம் திகதி ரீயூனியன் தீவில் தரையிறங்கிய 46 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் 69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறங்கியுள்ளனர்.
இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் இன்று காலை தீவை சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பிலிருந்து சென்றவர்கள் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
43 ஆண்கள், பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 46 பேர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
13 முதல் 53 வயதிற்குட்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் , மட்டக்களப்பு, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறக்கம்
விமானம் மூலம் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 46 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே 69 பேருடன் சென்ற மற்றொரு படகு குறித்த தீவை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018 மார்ச் மற்றும் 2019 ஏப்ரலுக்கு இடையில், இலங்கையிலிருந்து 275 பேர் ரீயூனியனுக்கு சென்றுள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து நான்கு கப்பல்கள் மொத்தம் 122 பயணிகளுடன் தீவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புகலிடம் கோரி விண்ணப்பித்த 397 புலம்பெயர்ந்தவர்களில் 121 பேர் பிரான்ஸுக்கு சொந்தமான தீவில் இருக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகள்
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகள்
இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகளின் செயலினால் ,மக்கள் பெரிதும் அவல நிலைக்கு உட்படுகின்றனர் .
அவ்வாறு வழங்காது செல்பவர்களை ,யானைகள் தாக்கி வருகின்றன .இதனை தடுப்பதற்கு நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்க பட்டுள்ளது .
கதிர்காம பகுதியில் இவ்வாறான யானைகளில் கெடுபிடிகள் ,அதிகரித்து வருவதாக ,நெட்டிசன்கள் காட்சிகளுடன் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
இலங்கைக்கு இந்தியா அரசினால் 75 பேரூந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன .
இந்திய மத்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் ,இந்த பேரூந்துகள் ஒரு தொகுதி வழங்கி வைக்க பட்டுள்ளது .
500 பேரூந்துகள் இலங்கைக்கு வழங்கிட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது .அவை கட்டம் கட்டமாக வழங்க உத்தேசிக்க பட்டுள்ளது .
இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கை இந்த மாதத்தின் கடந்த இருபது நாட்களில் மட்டும் ,ஐம்பதாயிரம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது .
இலங்கை உல்லாச பயணிகளின் வருகையாலேயே அதிக வருமானத்தை பெற்று வந்தது .
தற்போது ஏற்பட்ட கொரனோ தாக்குதலை அடுத்து ,உல்லாச பயணிகள் வரவு வீழ்ச்சியடைந்த நிலையிழும் ,ராஜபக்ச குடும்பத்தின் லஞ்ச ஊழல் மூலம் நாடு மிக பெரும் வறுமைக்கு தள்ள பட்டது .
இதனால் இலங்கை வாழ் மக்கள் ,சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை
நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை
வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் நவம்பர் 8ம் திகதி முழுநாள் விவாதம்
மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை ஏற்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியினால், வாழ்வாதார துன்பங்களை மிக அதிகமாக எதிர்கொள்ளும் மிகவும் நலிந்த (Most Vulnerable) பிரிவினர் தொடர்பில், முழுநாள் விவாதம் ஒன்றை நடத்த தமிழ்
முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியும், தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திசாநாயக்க எம்பியும் முன்வைத்த
கோரிக்கையை இன்று, பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது.
நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை
இதன்படி வரவு செலவு திட்டத்துக்கு முன்னர் கூடும் பாராளுமன்ற வாரத்தின் முதலாம் நாளான நவம்பர் எட்டாம் திகதி செவ்வாய்கிழமையன்று இந்த
கருப்பொருளில் முழு நாள் விவாதம் நடத்த கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,
பெருந்தோட்ட துறை 51 விகிதம், நகர துறை 43 விகிதம், கிராமிய துறை 34 விகிதம், என்ற ஐநா நிறுவனங்களின் கணக்கெடுப்பின்படி, கடந்த வாரம், இந்நாட்டின் மிக மோசமான நெருக்கடியை சந்தித்துள்ள பெருந்தோட்ட துறை
மக்களின் வாழ்வாதார விவகாரங்கள் தொடர்பில், ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை, நான் கொண்டு வந்து விவாதத்துக்கு உள்ளாக்கி இருந்தேன்.
நாட்டில் வாழும் அனைத்து நலிந்த பிரிவினர்கள் தொடர்பில் கூட்டாக பிரேரணை கொண்டு வந்து முழுநாளும் விவாதிப்போம் என்ற யோசனையை ஜேவிபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்கவும், நானும் அதன்பின் பேசி முடி செய்தோம்.
அதன்படி இன்று அனுரகுமார திசாநாயக்க அதுபற்றி கருத்திட, அதை நான் ஆதரிக்க கட்சி தலைவர்கள் தற்போது எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி கணக்கெடுப்புகளின்படி மிக அதிகமாக துன்புறும் நலிந்த பிரிவு குடும்பங்கள் தொடர்பாக முழு தேசமும், உலகமும் அறிந்து கொள்ளும் வண்ணம் நமது பிரேரணை அமையும்.
பெருந்தோட்ட உழைக்கும் குடும்பங்கள், நாளாந்த வருமான நகர பாமர குடும்பங்கள், மீனவ குடும்பங்கள், விவசாய குடும்பங்கள், ஆடை தொழிற்சாலை தொழிலாள குடும்பங்கள்,
மத்திய கிழக்கு உழைப்பாளர் குடும்பங்கள், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் தொடர்பில் நாம் விவாதிக்க உள்ளோம்.
இந்த பிரிவினருக்கு விசேட ஒதுக்கீடு அடிப்படைகளில் நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்பதும், சமுர்த்தி வாழ்வாதார
உதவி பெருகின்றவர்களின் பட்டியல் அரசியல் தலையீடுகளினால், பாகுபாடு மிக்கதாக அமைத்துள்ளது என்றும்,
ஆகவே அந்த அப்பட்டியல் உண்மையிலேயே நலிந்த பிரிவினரை உள்வாங்கும் முகமாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும்,
நான் கோர விரும்புகிறேன்.
எனது இந்த நிலைபாட்டை ஆதரிக்கும்படி நாடு முழுக்க வாழும் மக்கள்,
தாம் வாக்களித்து தெரிவு செய்த தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூற வேண்டும் எனவும் கோருகிறேன்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை
பட்டினி நாடுகள் வரிசையில் இலங்கை 65 தாவது இடம் பிடித்து சாதனை
இலங்கை உலக நாடுகளின் பட்டினி நாடுகளின் வரிசையில் 65 தாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது .
இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியில் ,இலங்கை திவாலாகி , மக்களை படு பாதாளத்திற்கு தள்ளிய வரலாற்று சாதனையை புரிந்தனர் .
இலங்கை தனது வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு ,பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .
இவர்களின் இந்த லஞ்ச ஊழல் மோசடி காரணமாகவே ,நாடு பின்னோக்கி நகர்ந்து செல்கிறது .
தற்போது ,உலக அரங்களில் 65 தாவது பட்டினி நாடக இலங்கை பதிய பெற்று சாதனை படைத்துள்ளது .
இந்த சாதனைகள் யாவும் ராஜபக்ச குடும்பங்களை சாரும் .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

பிரிட்டன் அதிரடி இலங்கைக்கு நாடு கடத்த படும் இலங்கையர்கள்
பிரிட்டன் அதிரடி இலங்கைக்கு நாடு கடத்த படும் இலங்கையர்கள்
பிரிட்டன் அரசு அதிரடி நடவடிக்கையாக புலம் பெயர்ந்தவர்களை அவர் தம் நாடுகளுக்கு அனுப்பி வருகிறது .
அவ்விதம் இந்தியா பெரும் கடல் அண்மித்த பகுதியில் உள்ள மிக பெரும் இராணுவ முகாம் ஒன்றில் ,இலங்கை அகதிகள் தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
இவர்களை மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கையில் பிரிட்டன் ஈடுபட்டுள்ளது .
அவுஸ்ரேலியவை போன்று தனி தீவில் இலங்கை அகதிகள் அடைத்து வைக்க பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது .
கடந்த காலத்தில் குடிவரவு குடியகல்வு அமைச்சராக இந்திய பெண்மணி ஒருவர் அமைச்சராக அங்கம் வகித்தார் .
இவரது கடும்போக்கின் காரணமாக அகதிகள் பலமாக பாதிக்க பட் துடன் ,இலங்கை மக்களுக்கும் இவரது சீற்றத்திற்குள் சிக்கி கொண்டனர் .
புதிய பிரதமர் ஆட்சியை ஏற்றவுடன் பதவியை ராஜினாமா செய்துகுறித்த அம்மணி தப்பி ஓடி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

ஐநாவில் மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு
ஐநாவில் மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு
ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது .
இந்த பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையை பிரிட்டன் ,ஜெர்மனி ,கனடா ,மலாவி ,மொண்டெனேகுரே ,வடக்கு மாசிடோனியா போன்ற நாடுகள் இலங்கை தொடர் பான் தீர்மானத்தை தயாரித்துள்ளன .
இலங்கையில் நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் ,மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் என்ற தலைப்பின் கீழ், இந்த வாக்கெடுப்பு இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படுகிறது .
இந்தியா வழமை போன்று வாக்களிப்பில் கலந்து கொள்ளாது என எதிர் பார்க்க படுகிறது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு
இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது
எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.
அத்துடன், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டிருக்கும் மதிப்பீட்டு அறிக்கை இவ்வருட
இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்படுமென்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டதைப் பாராட்டி, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர்
திருமதி. எர்சூலா ஃவொன் டேயர் லைன் (Ursula von der Leyen) அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாழ்த்துச் செய்தியில்,
”இலங்கை மக்கள் எதிர்பாரா சவால்களைச் சந்தித்துள்ளனர். இந்த நெருக்கடியிலிருந்து மீள, இலங்கை இந்தக் காலகட்டத்தில் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்.
நாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும், நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தேவையான மறுசீரமைப்புகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமை, அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்துதல், அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்தல் என்பன இச்செயன்முறையின் மிக முக்கியமான அம்சங்களாகும்.
அதனடிப்படையில் இலங்கையின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெகு விரைவில் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளும்.
இலங்கையரின் குறுகிய மற்றும் நீண்டகால நலன்களை உறுதி செய்யும் வகையில், நிலையான கொள்கைகளை அறிமுகம் செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்.
எதிர்பாராத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களுடனும், கடன் வழங்குனர்களுடனும் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்க வேண்டுமென நான் வாழ்த்துகின்றேன்.
எமது உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பொதுவான விருப்புகளின் அடிப்படையில் தொடர்ந்தும் உங்களுடன் மிக நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகின்றேன்.”
என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் திருமதி. எர்சூலா ஃவொன் டேயர் லைன் தெரிவித்துள்ளார்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு ஐரோபிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் யூரோக்களை விடுவித்து தமது மனிதாபிமானத்தை காண்பித்துள்ளது.
இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் உணவு இன்றி வாடுவதாக கிடைக்க பெற்ற புள்ளி விபரங்களுக்கு அடிப்படையில் ,இந்த நிதி உதவிகள் வழங்கபட்டுள்ளது .
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு .இந்த நிதி உதவியினை வழங்கும் படி ஐரோப்பிய யூனியன் வேண்டுதல் விடுத்துள்ளது .
இவ்வாறு நிதிகள் வழங்க பட்டாலும் ,இலங்கையின் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீளவும்
கட்டியெழுப்பும் நடவடிக்கை முன்னெடுக்க படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்







































