Posted in Uncategorized

வீழ்ந்து நொறுங்கிய இந்திய இராணுவம் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய இந்திய இராணுவம் விமானம்

இந்திய விமான படையின் மிக் ராக போர் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன்

போது அந்த விமானத்தை ஓட்டி சென்ற விமானி சம்பவ தின வைபத்தில் பலியாகியுள்ளார்

குறித்த விபத்து எவ்விதம் இடம்பெற்றது என்பது தொடபில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

தொடராக இந்திய படையின் வானூர்திகள் வீழ்ந்து நொறுங்கி வருவது இங்கே கவனிக்க தக்கது

    Posted in Uncategorized

    துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்

    துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்

    துருக்கியில் இருந்து பாகிஸ்தானும் நேரடியான ரயில்சேவை ஆரம்பிக்க பட்டுள்ளது ,இந்த

    தொடரூந்து ஈரான் ஊடாக பாகிஸ்தான் சென்றடையும் ,இதனால் மூன்று நாடுகள் கூட்டணிவோ

    டு இந்த சேவை இடம் பெறுவதால் மூன்று நாடுகளும் பயன அடைகின்றது எனலாம் .

      Posted in Uncategorized

      இலங்கை வரும் 6 எண்ணெய் கப்பல்

      இலங்கை வரும் 6 எண்ணெய் கப்பல்

      இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ,180 நாட்கள் கடன் அடிப்படையில் சிங்கப்பூர் விநியோக நிறுவனம் மூலம் மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ளவுள்ளது.

      இதற்மைய மசகு எண்ணெயுடனான ஆறு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளன. 30 நாள் கடன் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறவுள்ளது.

      இந்த உடன்டிக்கைக்கு அமைய எரிபொருள் கப்பல் இலங்கை வரவுள்ளது. இதில் முதலாவது தொகை அடுத்த மாதம் 23ஆம் திகதி அல்லது 24ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக

      இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அந்நிய செலவணி தொடர்பில் நெருக்டியை எதிர்கொண்டுள்ள வேளையில், எரிபொருள் இறக்குமதிக்கு பணத்தை தேடுவது பிரச்சனையாக உள்ளது.

      ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 36 கோடி டொலர்கள் செலவாகிறது. நாட்டின் அந்நியசெலாவணி இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை

      வீழ்ச்சியடைந்தள்ளது. இதற்கமைவாக அடுத்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் எரிபொருளை தொடர்ச்சியான விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன் சப்புகஸ்கந்த எரிபொருள்

      சுத்திகரிப்பு நிலையம் மூடப்படாமல் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

        Posted in Uncategorized

        போலீசில் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு 4 போலீசார் மரணம்

        போலீசில் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு 4 போலீசார் மரணம்

        மட்டு திருக்கோவில் காவல்துறை நிலையத்திற்குள் நுழைந்த போலீசார் ஒருவர் நடத்திய திறந்த வெளி
        துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் பலியாகியும் இருவர் படுகாயமாய்ந்துள்ளனர்
        காயமடைந்த இரு போலீசார் திருக்கோவில்,மற்றும் அக்கரைப்பற்று தீவிர சிசை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

        இந்த சம்பவத்திற்ககுரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          பெண் போலீசை கற்பழித்த போலீஸ் அதிகாரி கைது

          பெண் போலீசை கற்பழித்த போலீஸ் அதிகாரி கைது

          இலங்கை Gandara காவல்த்துறை நிலையத்தில் பணியாற்றி வரும் OIC தர அதிகாரி கான்ஸடபிள் தர


          பெண் போலீஸ் அதிகாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள நிலையில் தற்போது அவர் கைது
          செய்ய பட்டுள்ளார்

          குறித்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,குற்றம் நிரூபிக்க பட்டால்


          பல்லாண்டு சிறை வசம் அனுபவிக்க நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது

            Posted in Uncategorized

            சுடலைக்குள் அடித்து நொறுக்க பட்ட ஜேசு சிலை

            சுடலைக்குள் அடித்து நொறுக்க பட்ட ஜேசு சிலை

            கற்பிட்டி சவக்காலையில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

            கற்பிட்டி சென். மேரிஸ் வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் திருச் சிரூபம் நிலத்தில் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            அத்துடன், குறித்த சவக்காலையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் அடையாளத்திற்காக பெயருடன் புதைக்கப்பட்ட சுமார் 40 சிலுவைகள் (குருஸ்) இதன்போது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

            இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (23) இரவு தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, நேற்று (24) சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸாரும், புத்தளம் தடயவியல் பொலிஸாரும், கை ரேகை பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

            அத்துடன், மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு சவக்காலை உள்ள பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

            இன்று (25) புனித நத்தார் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாறு யோசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டு, சிலுவைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

            இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு சிலை மற்றும் சிலுவைகள் உடைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் ஆலோசனையில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              யாழுக்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்

              யாழுக்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்

              கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

              எஸ்13 Engine ஜக் கொண்ட இந்த ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

              New Train Jaffna, 23 ஆம் திகதி மருதானையில் இருந்து ரம்புக்கணை நோக்கி 550 பயணிகளுடன் இந்த ரயில் சென்றது.

              550 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த ரயில் போக்குவரத்து பரிசோதனைக்காக மருதானை புகையிரத நிலையத்திலிருந்து ரம்புக்கணை புகையிரத நிலையம் வரை பயணித்துள்ளது.

              இந்த ரயிலின் சில பெட்டிகள் குளிரூட்டப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

                Posted in இலங்கை செய்திகள்

                13 வயது சிறுமி கற்பம் – பிணம் மீட்பு

                13 வயது சிறுமி கற்பம் – பிணம் மீட்பு

                போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

                இது தொடர்பில் நாம் வினவியபோது கேகாலை பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

                தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

                இந்நிலையில், சந்தேகநபர் கேகாலை நிதஹஸ் மாவத்தையில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட போது பொலிஸாரால் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

                குறித்த வயோதிப பெண் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படும் நிலையில், ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

                கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  நபரை வீதியில் போட்டு தககிய போலீஸ்

                  நபரை வீதியில் போட்டு தககிய போலீஸ்

                  போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

                  இது தொடர்பில் நாம் வினவியபோது கேகாலை பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

                  தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

                  இந்நிலையில், சந்தேகநபர் கேகாலை நிதஹஸ் மாவத்தையில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட போது பொலிஸாரால் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

                  குறித்த வயோதிப பெண் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                  குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படும் நிலையில், ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

                  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்

                    ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்

                    கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிகல, மீயாங்கொல்ல காட்டு பகுதியிலிருந்து

                    அதிசக்தி வாய்ந்த 130 மில்லி மீற்றர் பீரங்கி குண்டு மற்றும் நாட்டுத்துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளன.

                    வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்

                    தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து காகித ஆலை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இவை மீட்கப்பட்டுள்ளன.

                    மீட்கப்பட்டுள்ளவற்றை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை குண்டு செயலிழக்கச்

                    செய்யும் பிரிவினர் மேற்கொண்டுள்ளதுடன், கடந்த சில தினங்களாக இவ்வாறான கைவிடப்பட்ட

                    வெடி பொருட்களை வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் மீட்டு செயலிழக்கச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      திருப்பதியில் மகிந்த வழிபாடு

                      திருப்பதியில் மகிந்த வழிபாடு

                      இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ​

                      வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு திருப்பதி

                      தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, சாமி படம் மற்றும் பிரசாதங்கள் வழங்குகின்றனர்.

                      பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த

                      பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

                        Posted in இலங்கை செய்திகள்

                        தீயில் எரிந்து கருகிய 3000 கோழிகள்

                        தீயில் எரிந்து கருகிய 3000 கோழிகள்

                        இலங்கை கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வளர்க்க பட்ட மூவாயிரம் கோழிகள் தீயில் எரிந்து கருகின

                        மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                          Posted in இலங்கை செய்திகள்

                          குண்டு வெடிக்கலாம் என்பதால் நாட்டு முழுவதும் இராணுவம் குவிப்பு

                          குண்டு வெடிக்கலாம் என்பதால் நாட்டு முழுவதும் இராணுவம் குவிப்பு

                          கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

                          சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

                          இந்த வேலைத்திட்டத்தை தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

                          இது தொடர்பாக கத்தோலிக்க மதகுருக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்புத் திட்டத்தை வகுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

                          இதேவேளை, வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துமாறும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உளவுத் தகவல்களை சேகரித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            எப்படி கொலை செய்தேன் -போலீசாரை அலற விட்ட கொள்ளையன்

                            எப்படி கொலை செய்தேன் -போலீசாரை அலற விட்ட கொள்ளையன்

                            எஜமானியின் அணிந்துவரும் தங்க நகையை நீண்ட காலமாக தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன் என மட்டக்களப்பு நகர்

                            பார் வீதியில் எஜமானியை வெட்டி கொலை செய்த வேலைக்காரியான பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

                            கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் நேற்று (21) உத்தரவிட்டார்.

                            மட்டக்களப்பு நகரில் நகைக்கடை வர்த்தகரின் மனைவியை வேலைக்காரி பணத்துக்காக படுகொலை செய்து 46 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் மக்களிடையே பயத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                            இது தொடர்பாக வேலைக்காரியிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மைகள் தெரியவந்துள்ளது.

                            நகரின் நடுப்பதியில் அரசடி பகுதியில் உள்ள பார்வீதியில் அதிக சனநடாட்டம் உள்ள பகுதியில் மாடிக்கட்டிம் கொண்ட வீட்டில் களுவாஞ்சிக்குடியில் தங்க ஆபரண விற்பனை கடை நடாத்திவரும்

                            செவ்வராசா செல்வி என்றழைக்கப்படும் தயாவதி ஆகிய தம்பதிகளுக்கு 23 வயதுடைய பெண், 26 வயதுடைய ஆண் பிள்ளைகளான இரு பிள்ளைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர்.

                            இந்த நிலையில் வர்த்தகர் செல்வராசாவின் வீட்டிற்கு மட்டக்களப்பு கருவப்பங்கேணி ஒம்பிறோஸ் வீதியில் வசித்துவரும் 27 வயதுடைய ரவிகார்த்திகா என்ற பெண் ஒருவர் தினமும் காலையில்

                            வந்து மாலை வரை வீட்டில் மனைவிக்கு ஒத்துழைப்பாக சமையல் மற்றும் ஏனைய வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு வேலைக்கான சம்பளத்தையும் வழங்கி வந்துள்ளனர்.

                            குறித்த வேலைக்காரி பின்னர் மலேசியாவுக்கு வீட்டு வேலை வாய்ப்பு பெற்று அங்கு சென்று வேலை செய்துவந்த நிலையில் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகிதால் அங்கிருந்து அவரை பொலிஸார் பிடித்து நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

                            இந்நிலையில் இலங்கைக்கு வந்த அவர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து கொண்டு பெற்றோருடன் அங்கு சென்று குடியிருந்து 8 மாதங்களாக வாழ்ந்து வந்த இவர் அடிக்கடி முன்னர் வேலை செய்த தனது எஜமானியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

                            இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை (20) வேலைக்காரி எஜமானியின் தங்க நகையை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் காரணமாக தனது கணவரிடம் கல்லாற்றுக்கு

                            தனது 48 வயதுடைய ஏரம்பு ரவி என்ற தந்தையுடன் செல்வதாக தெரிவித்து தந்தையிடம் தனக்கு எஜமானியம்மா 85 ஆயிரம் ரூபா பணம் தரவேண்டும் அதனை வாங்கிவரவேண்டும் என

                            தந்தையிடம் பொய்கூறி 48 வயதுடைய தந்தையாரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தந்தையுடன் பஸ்வண்டியில் ஏறி மட்டக்களப்பு சினன் ஆஸ்பத்திரி சந்தியில் இறங்கியுள்ளனர்.

                            இதனை தொடர்ந்து அங்கிருந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் உள்ள கடை ஒன்றில் கோழிவெட்ட கத்தி ஒன்று தேவை என கோரி கத்தி ஒன்றை வாங்கி தனது தோல்பையில் வைத்துக்கொண்டு பார் வீதியிலுள்ள எஜமானியம்மாவின் வீட்டுக்கு இருவரும் சென்றனர்.

                            அங்கு முதலாளியின் கார் நிற்பதை கண்டு வீட்டுக்கு செல்லாமல் அங்கிருந்து கருவப்பங்கேணியிலுள்ள தந்தை தொழில் புரிந்துவரும் ஹோட்டல் முதலாளியை சந்திப்பதற்காக அங்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு வந்துள்ளனர்.

                            அப்போது வர்த்தகர் செல்வராசா அருகிலுள்ள கோவில் திருவிழா காரணமாக கடைக்கு மகனாரை அனுப்பிவிட்டு மனைவியான 48 வயதுடைய தயாவதி மற்றும் மகளுடன் கோவிக்கு சென்று

                            வழிபட்டுவிட்டு சுமார் 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்து மனைவியார் கோவிலுக்கு செல்லும் போது முழு தங்க ஆபரணங்களை அணிந்து சென்ற நிலையில் அதோடு சமையலில் ஈடுபட்டுக்

                            கொண்டிருந்துள்ள நிலையில் வேலைக்காரியும் அவரது தந்தையும் அங்கு சென்றதையடுத்து அவர்களை வரவேற்று கலந்துரையாடிய நிலையில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு வேலைக்காரி அவரது தந்தையிடம் கூறினார்.

                            இதன் பின்னர் வர்த்தகர் செல்வராசா அவரது மகள் ஆகியோர் சாப்பிட்டு விட்டு வீட்டின் முதலாம் மாடியிலுள்ள அறையில் தூங்க சென்ற நிலையில் மகளும் சாப்பிட்டுவிட்டு வீட்டு மண்டபத்தில்

                            குசன் சோபாவில் அமர்ந்து கொண்டு கையடக்க தொலைபேசியில் இருந்த நிலையில் நித்திரை போயுள்ளார்.

                            அப்போது எஜமானியம்மா தனது கையால் வேலைக்காரி மற்றும் அவளின் தந்தை ஆகிய இருவருக்கும் உணவு வழங்கி அவர்கள் சாப்பிட்ட பின்னர் எஜமானியம்மாவுடன் கதைத்துக்

                            கொண்டிருந்த போது நேரம் மாலை சுமார் 4 மணியை நெருங்கி கொண்டிருந்த வேளை எஜமானியம்மாவும் வேலைக்காரியும் கதைத்துக் கொண்டிருந்ததையடுத்து அங்கிருந்து வேலைக்காரியின் தந்தையர் வீட்டின் வெளியிலுள்ள பகுதிக்கு சென்றுள்ளார்.

                            இந்த நிலையில் வீட்டின் முன்பதியில் இருந்த களஞ்சிய அறைக்கு எஜமானியம்மா சென்றுள்ளபோது அவரை வேலைக்காரி பின் தொடர்ந்து சென்று அறையினுள்

                            எஜமானியம்மாவை வெட்ட தனது தோல் பையில் வைத்திருந்த கைத்தியை எடுத்தபோது எஜமானியம்மா அதனை கண்டு வேலைக்காரியை தள்ளிய போது வேலைக்காரியின் கையில் கத்திபட்டதில் அவளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

                            எஜமானியம்மாவை பிடித்து தள்ளிவிட்டபோது அவர் கீழே தலைகுப்பற வீழ்ந்தபோது அங்கு இருந்த தேங்காயில் தலைஅடிப்பட்டு கீழேகிடந்த எஜமானியம்மா சத்தம் போடதவாறு கழுத்தை சுற்று மின்னல் வேகத்தில் கழுத்தை கத்தியால்; சுமார் 10 தடவை படபடவென வெட்டியுள்ளார்.

                            பின்னர் அவர் ஓடமுடியாதாவாறு முழங்கால்கள் இரண்டையும் வெட்டியதுடன் அவரின் கழுத்தில் இருந்த சுமார் 25 பவுண்தாலிக் கொடியை கழற்றியபோது தலைமுடி தாலியில் சிக்கியதையடுத்து

                            தலைமுடியை வெட்டி தாலிக் கொடியை எடுத்துக்கொண்ட பின்னர் கையில் அணிந்திருந்த காப்புக்களை கழற்ற அங்கிருந்த பலககட்டையில் கையை வைத்து கையின் மணிகட்டு பகுதியை கத்தியால் வெட்டி துண்டாக்கிவிட்டு காப்புக்களை கழற்றியுள்ளார்.

                            கைவிரலில் இருந்த மோதிரங்களையும் கழற்றிவிட்டு காதில் இருந்த தோட்டை கழற்ற காதை தோட்டுன் கத்தியால் அறுத்து எடுத்து கொண்டு 46 பவுண் தங்க ஆபரணங்களையும்

                            கொள்ளையிட்டு அதனை தோல்பையில் பையில் எடுத்து வைத்துகொண்டு கொண்டு கத்தியை அங்கு விட்டுவிட்டு அறையில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளார்.

                            இந்த நிலையில் வீட்டின் வெளியே சென்ற வேலைக்காரியின் தந்தையர் அங்கு சென்ற போது மகள் செய்த கொடூரத்தை கண்டு மகள்மீது தாக்கி என்ன செய்துள்ளாய் என இருவரும்

                            சண்டிபிடித்துக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தையடுத்து சோபாவில் நித்திரை யில் இருந்த எஜமானியின் மகள் விழித்தொழுந்து வந்தபோது அங்கு தாயார் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைகண்டு அதிர்ந்து கத்தியுள்ளார்.

                            இந்த கத்தல் சத்தம் கேட்டு முதல் மாடியில் படுத்திருந்த கணவர் பதற்றத்துடன் கீழ் இறங்கி வந்தபோது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டார்.

                            இதன்போது கொள்ளையடித்த நகைகளுடன் வேலைக்காரியும் அவளது தந்தையும் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடி வீதிக்கு சென்றபோது வீதியில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர்

                            அவர்களை பின்தொடர்ந்துடன் அங்கு கடைகளில் இருந்தவர்களும் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிபிடித்தனர் என பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முகமட் ஜெஸ்லி தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வேலைக்காரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                            இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திங்கட்கிழமை இரவு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் சம்பவ இடத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட தடயப் பொருட்களை சேகரித்து கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

                            கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட 46 பவுண் தங்க ஆபரணங்கள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான சிசிரிவி ஒளித் தொகுப்புக்கள் அடங்கிய விசிடி எனப்படும் வண்தட்டு போன்ற தடயப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

                            கைது செய்யப்பட்ட வேலைக்காரி மற்றும் அவளது தந்தை ஆகிய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் நேற்று (21) ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இது எப்படி நடந்தது சந்திரிக்கா சொல்லுறாங்க

                            இது எப்படி நடந்தது சந்திரிக்கா சொல்லுறாங்க

                            17ஆம் திகதி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் செயற்பட்ட விதமானது சிறப்பாக அமைந்ததாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,

                            மிகவும் அமைதியான முறையில் இந்த மாணவர்கள் தமது உணர்வுகளை வெளிபடுத்தியிருந்தனர் எனத் தெரிவித்தார்.

                            இது தொடர்பில் பலரும் பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தாலும் அன்று எமது நாட்டின் ஜனநாயகம் வெற்றிகொள்ளப்பட்டது என சுட்டிக்காட்டினார்.

                            அந்த இளைஞர், யுவதிகள் சிறந்த ஜனநாயக பண்புடன் அவர்களதும் இந்த நாட்டு மக்களினதும் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க துப்பாக்கியில்லாமல் குண்டு இல்லாமல், தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் மிகவும் கௌரவமான முறையில் செயற்பட்டுள்ளார்கள் என்றார்.

                            அரசாங்கம், அரசாங்கத்தின் பிரதானிகள் இது போன்ற தீர்மானங்களை எடுக்கும் போது, தம்மிடம் கேட்காமல் தம்மை இணைத்துக் கொள்ளாமல் எவரினதும் ஆலோசனையைப் பெறாமல் தவறான

                            தீர்மானத்தை எடுத்து அதனைச் செயற்படுத்தும் போது, விசேடமாக அத்தீர்மானத்தால் பாதிப்பை எதிர்நோக்குபவர்கள் தமது கருத்துகளை வெளியிட சுதந்திரம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

                            எனவே, இந்த மாணவர்கள் அன்றைய தினம் ஜனநாயகத்தின் உயரிய நிலையை எடுத்துக்காட்டினர். தமது எதிர்ப்பை ஆங்காங்கே சென்று, பைத்தியகாரத்தனமாகக் காட்டாமல்

                            மிகவும் அமைதியாக பலமான எதிர்ப்பை வெளியிட்டனர். இதையே ஜனநாயகம் என கூறுகிறோம் என்று குறிப்பிட்டார்.

                            அந்த மாணவர்கள் யார் என தனக்கு தெரியாது. ஆனால் சிரேஷ்ட தலைவர் என்ற ரீதியில் தனது

                            கௌரவத்தை செலுத்துவதாகவும் யார் என்ன சொன்னாலும் அன்று அந்த மாணவர்கள் செயற்பட்ட விதம், 100 சதவீதம் சரியென்றார்.

                            இந்த மாணவர்களைப் போன்று, நாட்டை நேசிக்கும் ஏனைய இளைஞர்கள், முதியவர்கள் எந்த அரசாங்கத்தில் இவ்வாறு தவறு ஏற்படும் போதும், மாணவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுங்கள் என்றார்

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கைக்கு 150 உல்லாச பயணிகள் வருகை – அடித்து விடும் இலங்கை

                              இலங்கைக்கு 150 உல்லாச பயணிகள் வருகை – அடித்து விடும் இலங்கை

                              இலங்கையில் பரவி வரும் கொரானா காலத்திலில் ஒரு வருடத்தில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்


                              பயணிகள் வந்திருப்பதாக இலங்கை உல்லாசத்துறை தெரிவித்துள்ளது

                                Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                                இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்

                                இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்

                                இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாத அரசினால் தமிழர்கள் தொடர்ந்து அடக்க பட்டு ,அந்த

                                இனம் சொல்லெண்ணா துயரில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை சீனாவின் ஆக்கிரமிப்பும் ,அதிகாரமும் அந்த மண்ணில் மேலோங்கி நிற்கிறது

                                தமிழர் பகுதிகளை ஏப்பம் இட்டு உலக வல்லாதிக்க நாடாக தன்னை உருமாற்றி பயணிக்கும் சீனா ,தமிழர் மண்ணை நாசம் செய்து அதன் ஊடாக தமிழர்களை கொத்தடிமையாக்கி சரணாகதியாக்கும் நிலைக்கு சென்றுள்ளது

                                சீனாவின் இந்த ஆக்கிரமிப்பும் ,வள சுரண்டலும் ,பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும்

                                நிலையை இந்தியா மாற்றிட தவறினால் ,அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையான நிகழ்வு அரசியலாக மாற்றம் பெற்றுள்ளது

                                இவ்வேளை ஆளும் சிங்கள அரச பயங்கரவாத அரசு புரிந்த தமிழ் இனப் படு கொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது

                                அதற்கு ஏற்ப தமிழர்கள் தமது ஆளும் பலத்துடன் வாழ கூடிய தீர்வு ஒன்று வழங்க படும் என்பதும் ,அந்த ஆட்சியை சிறந்த நபர் ஒருவர் தலைமையில் வழிநடத்த கூடிய நிகழ்வு ஒன்று இடம்பெற போகிறது ,

                                அது யார் அந்த நபர் ..? இவர் இப்பொழுது இந்தியா அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக மாற்றம் பெற்றுள்ளாரா
                                அப்டி என்றால் அவரை சீனா ,இலங்கை உயிரோடு விட்டு வைக்குமா ..?

                                அவர் கொலை செய்ய பட்டால் யார் அடுத்து வருவது என்ற தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளதக கணிக்க தோன்றுகிறது

                                நாம் முன்னே கூறியது போன்று 2025 ஆம் ஆண்டு நேர்மறை மாற்றத்தை இலங்கை அரசியல்

                                நடத்தி முடிக்க போகிறது ,தற்போது அதற்கு ஏற்ப ஆளும் கோட்டா அரசை ஆடவிட்டு உலகம்

                                வேடிக்கை பார்க்கிறது ,விரைவில் பல்லு புடுங்க படும் நாட்கள்
                                ஆரம்பிக்க பட போகின்றது என்பதனை நிகழ்கால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

                                • வன்னி மைந்தன் –
                                Posted in Uncategorized

                                தமிழ் தெரியாத வடக்கு ஆளுநர் – காணி பிடிக்க வந்தார்- கிழித்து போட்ட ஸ்ரீ எம்பி

                                தமிழ் தெரியாத வடக்கு ஆளுநர் – காணி பிடிக்க வந்தார்- கிழித்து போட்ட ஸ்ரீ எம்பி

                                வடக்கு மாகாணத்தில் ஆளுநராக உள்ள தமிழர் என கூறி கொள்ளும் ஆளுனருக்கு தமிழ் மொழி

                                தெரியாது என்பதனை அதே மக்கள் சமுகம் வாழும் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக

                                மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஸ்ரீதரன் எம்பி கிழித்து தொங்க விட்டுள்ளார்

                                இவர் தன்னுடன் ஆங்கிலத்தில் உரையாடினார் எனவும் ,அங்கு உள்ள அவருக்கு தமிழ் எழுதி படிக்

                                தெரியவில்லை என்பதான குற்ற சாட்டு வைக்க படுவதுடன், இவர் சிங்கள அரசுக்கு காணி

                                பிடிக்கும் காணி பிடிகாரனாக பணிபுரிந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

                                மேற்படி விடயம் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                  Posted in சினிமா

                                  ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்

                                  ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்

                                  முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.

                                  ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்
                                  விக்னேஷ் சிவன் – நயன்தாரா


                                  நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இந்தியா

                                  சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஆஸ்கார் பட்டியலில்

                                  இடம்பெற்றுள்ள படங்கள் பட்டியல் ஆஸ்கார் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்று இருந்தது.

                                  ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் 27-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்

                                  நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு 15 படங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒரு படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்படும்.

                                  இந்த நிலையில், ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதி பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை.

                                  இதன் மூலம் ஆஸ்கார் போட்டியிலிருந்து கூழாங்கல் திரைப்படம் வெளியேறி உள்ளது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,

                                  ‘இந்த பட்டியலில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இருப்பினும் இவ்வளவு தூய்மையான சினிமாவை கொடுத்ததற்காக பி.எஸ்.வினோத்ராஜ்-க்கு நான் நன்றி கூறுகிறேன்.

                                    Posted in சினிமா

                                    மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

                                    மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

                                    மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

                                    மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை?
                                    மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ


                                    சீனா நிறுவனமான சியோமி (xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில்

                                    வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

                                    இந்நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில் மாஸ்டர் பட

                                    தயாரிப்பாளர் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அடையாறில்

                                    உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.