Tag: இனப்படுகொலை
இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை
இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை
செனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம். என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை
ஏப்ரல் 21 தாக்குதல் விடயத்திற்கு சர்வதேச விசாரணை கோரிக்கையை வரவேற்கிறோம். அதனை தொடர்ந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியதும் வரவேற்கதக்கது.
சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம்.
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு ஒரு சர்வதேச விசாரணையை முன் வைக்கும் போது எங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு ஏன் இன்று வரை ஒரு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள முன் வரவில்லை என தெரிவித்தார்.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்by நிருபர் காவலன்
- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைதுby நிருபர் காவலன்
- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுby நிருபர் காவலன்
- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதுby நிருபர் காவலன்
- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவுby நிருபர் காவலன்
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு
இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை ,இலங்கை ஒருபோதும் ஏற்காது என ,இலங்கை தெரிவித்துள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளுடன் இடம்பெற்ற போரின் பொழுது ,அங்கு தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர் , என்ற குற்றச்சாட்டையும் ,அதற்கான ஆதாரங்களையும் நாம் ஏற்க மாட்டோம் என இலங்கை தெரிவித்துள்ளது .
அப்பவி தமிழ் மக்கள், இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்க முடியாது என ,தற்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துளளார் .
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு
இவர் தமிழ் பேசும் முஸ்லீம் என்பது குறிப்பிட தக்கது .
தமிழரை வெளிவிவகார அமைச்சராக நியமித்து ,தமிழர் கொலைகளை உலகில் மறைக்கும் நரி விளையாட்டை இலங்கை தொடுத்துள்ளது .
ஆனால் ,புலம் பெயர் அமைப்பு மற்றும் ,தனி நபர்களிடம் ,இலங்கை அரசு புரிந்த போர் குற்ற ஆதாரங்கள் ,மற்றும் இலங்கை இராணுவத்தின் படுகொலை ,காட்சிகள் என்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவைக்கு வழங்க பட்டுள்ளது .
அவ்வாறு இருந்தும் 13 வருடங்கள் கழியும் நிலையிலும் ,இலங்கை ராஜபக்ச
அரசு புரிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது.
உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் கொலை
உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போருக்கு
எதிராக உக்கிரேனிய இராணுவம் கடும் சமராடி வருகிறது
முன்னேறி வரும் எதிரி படைகளை திணறடித்த வண்ணம் உக்கிரேனிய இராணுவம் போரிட்ட வண்ணம் உள்ளது ,உக்கிரேன் மீதான எதிரிகளின் படையெடுப்பு
மேற்கொள்ள பட்டு நூறு நாட்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை முப்பத்தி ஓராயிரம் எதிரி படைகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது
மேற்குலக நாடுகளின் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு தொடர்ந்து வல்லரசாக வலம் வரும் ரஷியா இராணுவத்திற்கு எதிராக நூறு நாட்கள் உக்கிரேன் இராணுவம் கடும் எதிர் சமர் புரிந்துள்ளது
இதுவரையில் உக்கிரேன் பகுதியில் எதிரி இராணுவத்தால் ஐந்தாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
மேலும் எட்டாயிரம் பேர் வரை படு காயமடைந்துள்ளனர் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளது ,
இழப்புக்களை எதிர் கொண்டவாறு ரசியா இராணுவம் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளது
,தமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமது தாய் மண்ணை விட்டு கொடுக்க மாட்டோம் என உக்கிரேன் இராணுவம் எதிரி படைகளுடன் சமராடி வருகிறது
உக்கிரேனில் இடம்பெறுவது இனப்படுகொலை என உக்கிரேன் உரத்து கூறி வருகிறது ,சர்வதேச நீதிமன்றில் ரசியா நிறுத்த பட்டு தண்டிக்க படும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது
உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படும் நாடுகளுக்கு ரசியா எச்சரித்திருந்தது
,ஆனால் அத்தனையும் மீறி பிரிட்டன்,அமெரிக்கா எண்பது கிலோ மீட்டர் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை பல மில்லியன் டொலருக்கு வழங்கியுள்ளது
மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளுடன் வல்லரசாக விளங்கி வரும் எதிரி இராணுவத்தை வீழ்த்தி உக்கிரேன் இராணுவம் வெற்றி கொள்ளுமா என்பது சந்தேகமே
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை நம்பிய இராணுவ குழுக்கள் ,அதே
இராணுவத்தால் கைவிட பட்டு அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதை மத்திய கிழக்கு அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கான போர் பாடம் புகட்டுகிறது

அவ்விதம் உக்கிரேனும் சம காலத்தில் கைவிட பட்டு ,எதிரியிடம் மண்டியிடும் நிலைக்கு உக்கிரேன் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்
தனது பலத்தில் உள்ளவன் மட்டுமே, எதிரி முன்னேற்றம் குறித்தும்,அவன் பலம் குறித்தும் ஆழ்ந்து யோசித்து
போராடுவான் என்பது போரியல் நிலையாக உள்ளது ,
உக்கிரேன் ரசியா போர் கோடை காலத்தில் முடிவுக்கு வரும் என கூறும் எதிரியாக உள்ள ரசியாவின் கூற்று சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்தது பார்க்கலாம்
உக்கிரேன் கூறும் எதிரி இராணுவத்தின் ஆயுத தளபாட மற்றும் ஆளணி அழிப்பு என்பது ரசியாவுக்கு நெருக்கடி தரும் ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது ,
வரும் எதிர்ப்புக்களை உடைத்து எதிரி நாட்டை தம் வசப்படுத்துவோம் என்கின்ற ரசியாவின் கனவு பலிக்குமா ..?
உக்கிரேன் ரசியா போர் எது வரை நீளும் ..?
அது சொல்ல போகும் செய்தி என்ன ..?
- வன்னி மைந்தன் –
தமிழன் அழிந்த நாள் ….!
தமிழன் அழிந்த நாள் ….!
நந்தி கடலே நந்தி கடலே
நீயும் அழுவதா
நித்தம் குமுறி மடிவதா – நீயும்
நித்தம் குமுறி மடிவதா
ஆண்டு பல ஆகிப் போச்சு
ஆனாலும் என்ன ஆச்சு
உலகம் எல்லாம் பொய்யா போச்சு – எங்கள்
உணர்வுகளும் செத்து போச்சு
வல்லரசு ஆதிக்கம் தான்
வாலாட்டுது எங்கும் தான்
பலம் இழந்தால் இழிவாச்சு
பாதணியாய் கிழிவதாச்சு
படு கொலையை புரிந்தாரை
பாடையிலே ஏற்றலையே
தீர்ப்பெழுத மறந்தவரே
தீர்வென்ன கூறாயோ
ஆதிக்க இன வெறியான்
அரசாண்டு மகிழ்வதுவோ
இனம் அழித்தான் இனவெறியன்
இன்றாழ விடுவதுவோ
முள்ளிவாய்க்கால் முடிவிற்கு
முன் தீர்ப்பு எழுதிவிடு
நாம் வாழும் நாடொன்றை
நலமுடனே தந்து விடு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-05-2022
இறுதிக்கட்ட மோதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘தமிழ் இனப்படுகொலை’ குற்றஞ்சாட்டு மறுப்பு
இலங்கையில் இறுதிக்கட்ட மோதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘தமிழ் இனப்படுகொலை’ குற்றஞ்சாட்டு மறுப்பு
மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்களை உள்ளடக்கியது. எனவே, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் இறுதிக்கட்ட மோதலை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான ‘இனப்படுகொலை’யாக சித்தரிக்க கனடாவில் உள்ள சில தரப்பினர் முயற்சிப்பதை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கவலையுடன் குறிப்பிடுகின்றது.
கனடாவில் உள்ள இலங்கை சமூகம் பல இனங்கள் மற்றும் பல மதங்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம்’ தொடர்பான தனியார் உறுப்பினர் சட்டமூலம் 104, ஒரு சமூகத்திற்கு எதிரான தவறான கதையைச் சித்தரிப்பதன் மூலம் இலங்கை சமூகத்தினரிடையே சமூக உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கனேடிய அரசாங்கத்தின் இலங்கைத் தமிழ் கனேடியர்களுக்கான பல்வேறு திட்டங்களைப் பாராட்டும் அதே வேளையில், 2022 ஜனவரி 31ஆந் திகதி இடம்பெற்ற மனநலம் மற்றும் ஆரோக்கியத் திட்டங்கள் மற்றும் வளங்களைக் கொண்ட தமிழ் மாணவர்களுக்கான நிதியுதவியை அறிவிக்கும் நிகழ்வில், ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் திரு. ஸ்டீபன் லெஸ் ‘அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு இனப்படுகொலையை நாங்கள் அங்கீகரிக்கின்றோம்’ மற்றும் ‘கொழும்பில் ஆட்சியின் கைகளில் 140,000 அப்பாவிகள் கொல்லப்பட்ட ஒரு இனப்படுகொலை’ என்பன உள்ளிட்ட கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் நாங்கள் ஏமாற்றம் அடைகின்றோம். இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்கார்பரோ – ரூஜ் பார்க் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய்தணிகாசலம் அவர்களும் தனது கருத்துக்களில் ‘தமிழ் இனப்படுகொலை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
2021 ஏப்ரல் 07ஆந் திகதியிட்ட இராஜதந்திரக் குறிப்பில், கனடாவின் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம் ‘இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கனடாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிவிவகார, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனடா அரசாங்கம் கண்டறியவில்லை என்பதை திணைக்களம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியும்’ எனக் குறிப்பிட்டுள்ள தெளிவுபடுத்தலை நாங்கள் பாராட்டுகின்றோம். மேலும், கனடா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்துள்ளது.
இந்தப் பின்னணியில், ‘தமிழ் இனப்படுகொலை’ என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது, ஒன்ராறியோவில் வசிக்கும் இலங்கைக் கனேடியர்களின் பிள்ளைகள் மற்றும் சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடுகளையும் தப்பான அபிப்பிராயத்தையும் உருவாக்குகின்றது. எனவே, சமூக நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு சர்வதேச சமூகத்தில் இலங்கை பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்க வேண்டும்.
இலங்கையில் இறுதிக்கட்ட மோதலின் போது, உலகம் கண்ட மிகக் கொடூரமான பயங்கரவாதக் குழுக்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவை அரசாங்கப் படைகள் எதிர்கொண்டன. இலங்கையை இன ரீதியாகப் பிரித்து தனிநாடு அமைப்பதே விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்துடன், அவர்கள் மூன்று தசாப்த கால பயங்கரவாதப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்ததுடன், அது அனைத்து சமூகங்களுக்கும் மிகுந்த துன்பத்தையும் அழிவையும் ஏற்படுத்தியிருந்தது.
2009 இல் இராணுவ மோதலின் இறுதிக் கட்டங்களில், விடுதலைப் புலிகள் தவிர்க்க முடியாத தோல்வியை எதிர்கொண்ட போது, தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததுடன், மோதல் பிரதேசங்களிலிருந்து பொதுமக்களை நகர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மறுத்திருந்தனர். பொதுமக்கள் உயிரிழப்புக்கள் குறித்த குற்றச்சாட்டு மற்றும் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறுவதானது, அரசாங்கத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக வெளிநாட்டுத் தலையீட்டை வலுக்கட்டாயப்படுத்த புலிகள் முயன்ற வழிமுறையாகும்.
இருந்தபோதிலும், அரசாங்கப் படைகள் சுமார் 290,000 தமிழ் பொதுமக்களை விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்டு, அவர்களைக் பராமரித்து, அவர்களை மீள் குடியேற்றியிருந்தது. மேலும், 12,000 க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன், இதன் மூலம் எதிரிப் போராளிகள் மத்தியிலும் தேவையற்ற மரணங்களை ஏற்படுத்துவதை இலங்கை அரசாங்கம் தவிர்த்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, விடுதலைப் புலிகளுடனான இராணுவ ஈடுபாட்டின் போது ‘இனப்படுகொலை’ என்ற போலியான குற்றச்சாட்டுக்களின் செயல் மற்றும் / அல்லது உள்நோக்கம் இருந்ததாகக் கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ‘இனப்படுகொலையை’ பரிந்துரைக்கும் நிகழ்வுகளின் வடிவமும் இல்லை. இராணுவ மோதலின் கடைசிக் கட்டத்தில் நிலைமையைக் கருத்தில் கொண்டு, தந்திரோபாயத் தெரிவுகள் நியாயமானவையும், விகிதாசாரமானவையுமாகும் என இராணுவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய குழுக்கள் மற்றும் அனுதாபிகள் உட்பட சில தரப்பினர், இறுதிக்கட்ட இராணுவ மோதலின் போது இலங்கையில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுவதற்கு, ஐ.நா. வினால் நியமிக்கப்பட்ட சில குறைபாடுள்ள அறிக்கைகளில் உள்ள குடிமக்கள் உயிரிழப்புக்களின் கற்பனையான புள்ளிவிவரங்களை பின்பற்றுகின்றனர். எவ்வாறாயினும், மிகவும் சர்ச்சைக்குரிய ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு அறிக்கை கூட இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ‘இனப்படுகொலை’ குற்றச்சாட்டைக் கொண்டிருக்கவில்லை. 2015இல் இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முக்கிய கண்டுபிடிப்புக்கள் இலங்கையின் ‘போர்க்குற்றங்கள்’, ‘இனப்படுகொலை’ என்று கூட பரிந்துரைக்கவில்லை. இனப்படுகொலையின் கூற்றை ஆதரிக்கும் குழுக்கள், மோதலின் இறுதி மாதங்களில் ‘40,000 பொதுமக்கள் இறந்திருக்கலாம்’ என நிபுணர்கள் குழு அறிக்கையில் எந்த ஆதாரமும் இல்லாமல் செய்யப்பட்ட கூற்றை பின்பற்றுகின்றனர். இலங்கை இராணுவத்தால் இறுதியாக மீட்கப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கையை வைத்து 40,000 பொதுமக்கள் மரணங்கள் இடம்பெற்றன என்ற கற்பனையான புள்ளிவிவரத்துடன் நிபுணர்கள் குழு அறிக்கை வெளிவந்ததுடன், 330,000 என்ற அனுமான எண்ணிக்கைக்கு எதிராக இது அண்ணளவாக 290,000 ஆகும். இது அந்தப் பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னர் (வன்னி) இருந்த பொதுமக்களின் எண்ணிக்கையாக அவர்கள் கருதினர். நிபுணர்கள் குழுவால் பயன்படுத்தப்படும் 330,000 பொதுமக்கள் என்ற கற்பனையான எண்ணிக்கை முற்றிலும் தன்னிச்சையான கட்டமைப்பாகும். 2009ஆம் ஆண்டு குறித்த மாதங்களில் விடுதலைப் புலிகள் எத்தனை பொதுமக்களை சிறைபிடித்து வைத்திருந்தார்கள் என்பது இலங்கையிலோ அல்லது வெளியிலோ எவருக்கும் சரியாகத் தெரியாது.
மேலும், நிபுணர்கள் குழு அறிக்கை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் நாட்டுக் குழுவால் அறிவிக்கப்பட்ட 7,721 இறப்புக்கள் (13 மே 2009 வரை) என்று குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும், 40,000 என்ற எண்ணிக்கை சரியானதாகவும், துல்லியமானதாகவும் இருந்தால், மோதல் முடிவுக்கு வரும் 2009 மே 18 வரை இறுதி நாட்களில் 30,000 க்கும் அதிகமானோர் எப்படி கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை விளக்காமல் இந்த எண்ணிக்கை பின்னர் நிபுணர்கள் குழு அறிக்கையால் மறுக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம், வடக்கு மாகாணத்தில் இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் வடமாகாணத்தில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, இயற்கை காரணங்கள் தவிர மற்ற காரணங்களால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது கண்டறியப்பட்டது 9,283 என்பது குறிப்பிடத்தக்கது. 1981ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் பின்னர் நாட்டின் அந்தப் பகுதியில் இது போன்ற முதல் கணக்கெடுப்புத் திட்டத்திற்குத் தேவையான களத் தரவு சேகரிப்பானது, வட மாகாணத்தில் பணியாற்றும் பெரும்பான்மை இனமான தமிழ் அரசாங்க ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 2006 முதல் மே 2009 வரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது இலங்கை ராணுவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,876 ஆகும். 2008 மற்றும் 2009 இல் இயற்கை அல்லாத காரணங்களால் வடக்கு மாகாணத்தில் இறந்ததாகக் கூறப்படும் (9,283) இலங்கையின் ஆயுதப் படைகளை விட விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைச் சந்தித்திருப்பார்கள் என்று கருதுவது தர்க்க ரீதியானதாக இருக்கும் என்பதுடன், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் விடுதலைப் புலிகள் அல்லது நேரடியாகப் போரில் ஈடுபட்டவர்களாக இருந்திருப்பார்கள்.
நிபுணர்கள் குழு அறிக்கையின் பலவீனமான சர்ச்சைக்குரிய நபரின் பயன்பாடு, அது ஏற்றுக்கொண்டதாகக் கூறும் ஆதாரத்தின் தரத்தால் மோசமாகின்றது என்பதை சட்ட வல்லுநர்கள் அடையாளம் கண்டுள்ளனர். சட்டப்பூர்வமற்ற பகுப்பாய்வு (‘நான் உறுதியாக உணர்ந்தேன்’, நான் நியாயமான நம்பிக்கையுடன் உணர்ந்தேன்’, நான் முற்றிலும் உறுதியாக இருந்தேன்’, ‘எனக்கு சந்தேகம் இருந்தது’ போன்றவை) ஒரு பெரிய அளவிலான குற்றச் செயல்களைக் கையாளும் ஆவணத்தில் பயன்படுத்தப்படுவதுடன், இது பொறுப்பானவர்கள் மற்றும் மேலும் நீதித்துறை மற்றும் ஏனைய செயன்முறைகளுக்குத் தகுதியானவர்களைப் பெயரிடுகின்றது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக சர்வதேச நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் இந்த வகையான அறிக்கைகளின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
2009 இல் மோதல் முடிவுக்கு வந்ததில் இருந்து, இலங்கை மறுசீரமைப்பு, இழப்பீடு, மறு ஒருங்கிணைப்பு, புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் கொள்கையை மறுசீரமைப்பு நீதியின் ஒட்டுமொத்த கருத்தாக்கத்தில் பின்பற்றி வருகின்றது. இலங்கை இந்த செயன்முறைகளை முன்னெடுத்துச் செல்லும் நேரத்தில், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் எச்சங்கள் உட்பட சில குழுக்கள், ‘தமிழ் இனப்படுகொலை’ போன்ற நிகழ்ச்சி நிரல்களை முன்வைத்து, இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை மதிப்பிழக்கச் செய்யவும், சீர்குலைக்கவும் முயற்சித்து வருகின்றன.
140,000 இறப்புக்களை மேற்கோள் காட்டிய திரு. ஸ்டீபன் லெஸ்ஸின் கருத்துக்களில் காணப்படுவது போல், சரிபார்க்கப்படாத அறிக்கைகளின் உள்ளடக்கங்கள் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்துவதிலும், கருத்தை உருவாக்குவோர் மற்றும் முடிவெடுப்பவர்களிடம் செல்வாக்குச் செலுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளன. காலப்போக்கில், ஐ.நா. அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஆதாரங்களின் சந்தேகத்திற்கிடமான தன்மை மறக்கப்பட்டால், உண்மையில் நிரூபிக்கப்படாத அவர்களது குற்றச்சாட்டுக்கள், மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் வலிமையானக மாறலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது அர்ப்பணிப்பை வழங்கும் நேரத்தில், இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் உறவுகளை பாதிக்கின்றது.
எனவே, இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகர் இந்த விடயம் தொடர்பில் தன்னைப் பார்வையிடவும், சந்திக்கவும், உரையாடவும் ஒரு திறந்த அழைப்பை விடுக்கின்றார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
ஒட்டாவா
இனப்படுகொலைக்கான நீதி வேண்டி பிரிட்டனிடம் கோரிக்கை முன்வைப்பு.PHOTO IN
இனப்படுகொலைக்கான நீதி வேண்டி பிரிட்டனிடம் கோரிக்கை முன்வைப்பு.
18/05/2021
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்புடன் இனைந்து 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக தமிழ் சங்கங்கள் Rt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு.
ஐக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர் (UK) தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் விதமாகவும் முள்ளிவாயக்காலில்
படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கொள்ளவும் மத்திய இலண்டனில் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை மே18 அன்று நடத்தியுள்ளார்கள்.
மே 2009 சிறிலங்கா அரசின்இனவெறித் தாண்டவத்தின்உச்ச கட்டம் எனபது உலகறிந்த உண்மை. பன்னாட்டு அமைப்புகள் மற்றும் ஈழத்திலுள்ள சமூக அமைப்புகளும் மே 2009 இல் காணாமல்
ஆக்கப்பட்ட 146,679 தமிழ் மக்கள் இன்றும் கணக்கிடப்படாமல் உள்ளார்கள் என வருத்தம் தெரிவிக்கிறார்கள். அவர்கள் இறந்திருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறார்கள்.
முள்ளிவாய்க்கால் படுகொலையில் இருந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்று அப்பாவித் தமிழ் மக்கள் இனவெறி அரசாங்கத்தால் ‘பாதுகாப்பு வலையத்துக்குள்’ திட்டமிட்டு தள்ளப்பட்டு
சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட இரசான ஆயுதங்களாலும் கொத்துக் குண்டுகளாலும் கொல்லப் பட்டார்கள்.
பசி என ஒரு வேளை உணராது தம் உழைப்பால் உணவருந்தி இயற்கையோடு செறிந்து வாழ்ந்த மக்கள் தங்கள் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் உண்ண உணவின்றி இறுதியில் கஞ்சிக்கு
வரிசையில் கையேந்தி நின்றார்கள். ஆனால் சர்வதேசங்கள் நடப்பவற்றை நன்கு அறிந்தும் இனப்படுகொலையை நிறுத்தத் தவறியது. தொடர்ந்தும் அதற்கான நீதியை நாம் பெற பல வழிகளில் சதிகள் செய்து நீதி மறுக்கப்படுகின்றது.
போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் 20க்கும் மேற்பட்ட பிரித்தானிய பல்கலைக்கழக தமிழ் சங்கங்களும் இணைந்து
மதிப்பிற்குரிய Rt Hon Dominic Raab MP அவர்களுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளார்கள்.
கோரிக்கைகள் பின்வருமாறு :
1. இன்றும் இலங்கை அரசாங்கத்தால் தமிழருக்கு எதிராக நடாத்தப்படும் செயல்களை இனவழிப்பு என இனங்காணப்பட வேண்டும்.
2. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த பரிந்துரை செய்ய வேண்டும் அல்லது இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு தற்காலிக தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டும்.
3. தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்களின் நியாயமான அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் ஒரு அரசியல் தீர்வை ஆதரிக்க வேண்டும்.
ஐக்கிய இராச்சியத் தமிழ் இளையோர்கள் ஆகிய நாம் இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் எதை இழந்தோமென்றும் எதற்காக போராடுகின்றோமென்றும் உலகத்திற்கு
எடுத்துக்கூறினார்கள். உலகெங்கிலும் சிதறிக் கிடக்கும் தமிழ் இளையோர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் நடத்தப்படும் இனப்படுகொலையையும், இன அழிப்பையும், அடக்குமுறையையும் தொடர்ந்து எதிர்ப்பார்கள்.
தமிழீழம் அடையும் வரை இந்த எழுச்சி தொடரும்!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”


இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
இலங்கையில் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயா அரசு நாள்தோறும் அதிரடி அறிவிப்புக்களை ,புதிய
நடைமுறைகளையும் புதிதாக அமூல் படுத்தி வரும் நிலையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது .
இதன் அடிப்படையில் சமீப நாட்களில் இலங்கையில் சொத்துக்கள் வாங்குபவர்கள் அதனை ஐந்து வருடத்திற்கு
முன்னர் விற்பனை புரிந்தால் ,ஐம்பது வீதம் வரிசெலுத்த வேண்டும் என
கோட்டா அரசு அறிவித்துள்ள நிலையில் புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கையில் அசையா
சொத்துக்களை வாங்கி குவிப்பதில் பின் நகரத்து செல்கின்றனர் .
இங்கிருந்து வந்து இலங்கையில் பல வணிக வளாகங்கள் ,மற்றும் கல்யாண மண்டபங்கள் ,விவசாய காணிகள்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
,பண்ணைகள் என பல் துறை சார் விடயங்களை மேற்கொண்ட தமிழர்கள்
அச்சத்தின் பிரதி காரணமாக பின்வாங்கி செல்வதுடன் ,அவர் தாம் வாழும் வெளிநாடுகளில் அசையாத
சொத்துக்களை வாங்கி குவிப்பதில் தீவிர கவனம் செலுத்து வருகின்றனர் .
கோட்டபாய அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்கள் ,மற்றும் கட்சிகளுக்கு பேரம்பேசி லஞ்சம் வாங்கி கொடுக்கும் முகவர்கள்,தரகர்கள் ,ஐடியா மணிக்கல் கூட இந்த
விடயத்தை அவருக்கு எடுத்து விளக்கி அதனை மாற்றம் செய்திட முனைய வில்லை என்பது கவனிக்க தக்கது .
இலங்கையின் வடக்கு ப்குதியில் அசையாத சொத்துக்கள் வாங்கிய தமிழர்களில் சிலர் நம்முடன் உரையாடும் பொழுதே மேற்படி விடயத்தினை தெரிவித்தனர் .
செல்வந்தர்களாக விளங்கும் இவர்களது எண்ணங்களில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளவர் , ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மாற்றம் பிடித்துள்ளார்
புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கையில் முதலீடு புரியுமாறு அழைப்பு விடுத்துள்ள கோட்டா அரசு ,இவ்விதம் திடீர் சட்ட மாற்றங்களை ஏற்படுத்துவதால் இவர்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது .
தொலை நோக்கு சிந்தனை அற்ற நிலையிலும் ,தமிழர் ,அல்லது இலங்கையர் மன நிலைகளை அறிந்து கொள்ள மறந்து இயல் படும் கொள்கை அற்ற
இனவாத சிந்தனை செயல் திட்டத்தின் செயல் வழி கதாநாயகனாக ஆளும் அதிபர் கோட்டபாய விளங்கி வருவதை, இவர்கள் என்ன மாற்றத்தின் புரிதல் ஊடாக அவதானிக்க முடிகிறது
- வன்னி மைந்தன் –













