மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்

மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்

மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம் ,மஹியங்கனை – திஸ்ஸபுர சந்தியில் இன்று (25) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஜப்பானுக்கு அப்பால் கடலில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
Posted in உலக செய்திகள்

ஜப்பானுக்கு அப்பால் கடலில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

ஜப்பானுக்கு அப்பால் கடலில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

ஜப்பானுக்கு அப்பால் கடலில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது ,தென்மேற்கு ஜப்பானில் ஒரு மருத்துவ போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நோயாளி மற்றும் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

விமானி ஹிரோஷி ஹமாடா (66), ஹெலிகாப்டர் மெக்கானிக் கசுடோ யோஷிடகே (Kazuto Yoshitake) மற்றும் 28 வயது செவிலியர் சகுரா குனிடகே (Sakura Kunitake) ஆகியோர் நீரில் ஊதப்பட்ட உயிர்காக்கும் கருவிகளில்

ஒட்டிக்கொண்டிருந்ததைக் கண்டறிந்த பின்னர் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டனர்.

மூவரும் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டனர், ஆனால் சுயநினைவுடன் இருந்தனர் என்று கடலோர காவல்படையின் அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார், விதிமுறைகளின்படி பெயர் தெரியாத நிலையில் பேசினார்.

யோஷிடகேவின் முதல் பெயர் ஆரம்பத்தில் வேறு எழுத்துப்பிழையுடன் வழங்கப்பட்டது, ஆனால் கடலோர காவல்படை பின்னர் அதை சரிசெய்தது.

மருத்துவ மருத்துவர் கெய் அரகாவா (34), நோயாளி மிட்சுகி மோட்டோஷி (86) மற்றும் அவரது பராமரிப்பாளர் கசுயோஷி மோட்டோஷி (68) ஆகியோரின்

உடல்கள் பின்னர் ஜப்பான் விமான சுய பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டன.

மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடலோர காவல்படை இரண்டு விமானங்களையும் மூன்று கப்பல்களையும் அந்தப் பகுதிக்கு அனுப்பியது.

நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று கடலோர காவல்படை திங்களன்று தெரிவித்துள்ளது

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ,வவுனியா, பூந்தோட்டம் வீதியில் நேற்று கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும் பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகி இருக்கின்றது.

இதனை அடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு காரில் வந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில் வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பேருந்து விபத்து பலர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்து பலர் படுகாயம்

பேருந்து விபத்து பலர் படுகாயம்

பேருந்து விபத்து பலர் படுகாயம் ,பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 4 மணியளவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

திருகோணமலையில் கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலையில் கோர விபத்து

 திருகோணமலையில் கோர விபத்து

திருகோணமலையில் கோர விபத்து ,திருகோணமலை கபர்ண வீதியில் கல்மலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்பொழுது 32 அதிகரித்துள்ளது,இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .இந்த விபத்தில் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுபோன்று பலபல வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பலர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வீதி விதிமுறைகளை மதித்து வாகனங்களை செலுத்தி செல்ல மறந்தமையால் சாரதிகள் அயர்ந்து உடல் அசைவில் நித்திரை கொள்வதால் ,இந்த விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

 வாகன ஓட்டிகள் நான்கு மணி நேரத்திற்கு பின்னர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது .

வீடியோ

ஆனால் அதனை கடைபிடிக்காமல் வாகனங்களை செலுத்தி செல்வதாலேயே இந்த விபத்து ஏற்படுவதாகவும் பல அப்பாவி உயிர்கள் ஆவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை போலீசார் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறாத எனவும் அவற்றை தடுத்திருக்க முடியும் என்பது மக்கள் குற்றச்சாட்டாக காணப்படுகிறது.

ஜனாதிபதி வாகனம் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வாகனம் விபத்து

ஜனாதிபதியின் வாகனம் விபத்து

ஜனாதிபதி வாகனம் விபத்து வந்து சிக்கி சம்பவத்தில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

தலைவா பகுதியில் இன்று அதிகாலை ஒரு பணியாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிப்பர் இரண்டாம் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சாரதி நித்திரை தூக்கம் காரணமாக இந்த வாகனம் விபத்தில் சிக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

 கடந்த தினம் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி வாகன பாதுகாப்பு பிரிவினரே திருப்பி தற்பொழுது தமது இருப்பிட நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது இந்த வாகனம் விபத்து சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 விபத்தில் சிக்கிய வாகனத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவாக விளங்கிய போலீஸ் அதிகாரிகள் இருந்ததாகவும் அவர்களே இதற்கு காயப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த விபத்து குறித்து விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

 இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட வருகின்ற நிலையில் அபரண பேச்சுக்கள் அடிபட்டு வருகின்ற நிலையில் அமெரிக்காவின் இலங்கை தூதர் இலங்கை உடைய பாராளுமன்ற சபாநாயகரை சந்தித்த சில நாட்களில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது எங்கே காவடிக்கத்தக்கது.

 இந்த சம்பவம் ஆனது தற்பொழுது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வல்களையும் வியப்பையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மவுஸ்ஸாக்கலை குடியிருப்பில் தீ விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மவுஸ்ஸாக்கலை குடியிருப்பில் தீ விபத்து

மவுஸ்ஸாக்கலை குடியிருப்பில் தீ விபத்து

மவுஸ்ஸாக்கலை குடியிருப்பில் தீ விபத்து ,மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் பரவிய தீயை, தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மவுஸ்ஸாக்கலை இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடமைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.

video

தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஸ்கெலியா பொலிஸார், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இடம்பெயர்ந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 21 உறுப்பினர்களை பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து ,நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக

வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான போது லொறியினுள் 9 மாடுகள் இருந்துள்ளதாகவும் அவற்றில் 2 மாடுகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் அருகில் உள்ள மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்

இரண்டு மாடுகள் மாயமாகியுள்ளதாகவும் அவற்றை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஐந்து தொன்களுக்கும் குறைவான வாகனங்கள் மாத்திரம் சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிஸாரும் இணைந்து இந்த

வீதியின் போக்குவரத்து தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் ஏராளமான பதாதைகள் வீதியில் இருபுறமும் காட்சிப்படுத்தப்பட்டள்ள போதிலும் சட்டங்களை மீரும் சாரதிகள் இந்த வீதியில் ஐந்து தொன்களுக்கும்

அதிக எடையுள்ள வாகனங்களைச் செலுத்துவதன் காரணமாகவே அதிக விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக

வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அம்பியூலன்ஸ் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

அம்பியூலன்ஸ் விபத்து

அம்பியூலன்ஸ் விபத்து

அம்பியூலன்ஸ் விபத்து வனாத்தவில்லுவ பிரதேச மருத்துவமனைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த அம்பியூலன்ஸ் சாரதி புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிலாபம் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

புத்தளம் – வனாத்தவில்லுவ வீதியில் 10ஆவது தூண் பகுதியில் நேற்று (13) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

video

வனாத்தவில்லுவ மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையிலிருந்து மருத்துவர் ஒருவரை அழைத்துச் சென்றுவிட்டு, மீண்டும் சிகிச்சை முடிந்து

மருத்துவரை புத்தளம் மருத்துவமனையில் விட்டுவிட்டு வனாத்தவில்லுவ மருத்துவமனைக்கு திருப்பிக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்

சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்

சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம் கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக எங்கள் செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (11) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, கொடிகாமம் – மீசாலை பகுதிகளுக்கு இடையே ஏ9 வீதியில் வைத்து லாண்ட் மாஸ்டரை மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்த சம்பவம் புதன்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

நோய் காவு வண்டி பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

நோய் காவு வண்டி பேருந்து விபத்து

நோய் காவு வண்டி பேருந்து விபத்து

நோய் காவு வண்டி பேருந்து விபத்து மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நோய் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) அதே திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில்

மோதி மூவர் காயமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், நோய் காவு வண்டியில் பயணித்த சாரதி உட்பட

மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நோய் காவு வண்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து புறப்பட்டு, களுவாஞ்சிகுடியில் நடைபெறவுள்ள

கூட்டம் ஒன்றுக்காக சென்றவேளையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் நோய் காவு வண்டியின் முன் பகுதிக்கும் பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நெல்லியடியில் கோர விபத்து video
Posted in இலங்கை செய்திகள்

நெல்லியடியில் கோர விபத்து video

நெல்லியடியில் கோர விபத்து video

நெல்லியடியில் கோர விபத்து video -இன்று யாழ்ப்பாணம் நெல்லியடி வீதியில் ஆட்டோ மற்றும் வான் நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியது .

இதன் போது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன ,.காயமடைந்தவர்கள மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

மேற்படி விபத்து video தற்போது வைரலாகி வருகிறது

video

லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து

லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து

லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து ,கொழும்பு லேக்ஹவுஸ் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சீமெந்து சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி தூங்கியதால் கார் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தில் சாரதி காயமின்றி உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கொழும்பு – கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம்

லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம்

லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம் இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை – கொங்கொடியா பகுதியில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மர்க்கறி சேகரித்து ஏற்றச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து இராகலை பொலிஸா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Posted in இலங்கை செய்திகள்

நானுஓயா விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

நானுஓயா விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

நானுஓயா விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல் ,நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்

உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர்

காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். .

இந்த விபத்து நேற்று (01) இரவு 7 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சமர்செட் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனிதா மொஹமட் அல்சார் (வயது 53) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கல்முனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சிலர் நுவரெலியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

5 தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள வாகனங்களை அதிகளவு மேம்பாலங்கள் கொண்ட அந்த வீதியில் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த

போதும் லொறி சாரதி லொறியை ஓட்டிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்தில் வேனும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும்

விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை விபத்து இடம்பெறுவதற்கு முன் பதிவான
Posted in இலங்கை செய்திகள்

பதுளை விபத்து இடம்பெறுவதற்கு முன் பதிவான

பதுளை விபத்து இடம்பெறுவதற்கு முன் பதிவான

பதுளை விபத்து இடம்பெறுவதற்கு முன் பதிவான ,பதுளையில் நேற்று (1) இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளும் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

23 வயதுடைய மாணவிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அதில் ஒருவர், நிவிதிகல, தொலபுகமுவ, பஹலகந்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இசுரி உமயங்கனா என்ற மாணவியாவார்.

என்.எம்.பி.டி. ஹெட்டிமுல்ல என்ற உயிரிழந்த மறைய மாணவி, குருநாகல் உனகொலகெதர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (1) இரவு சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பதுளை போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கயான் குரே தெரிவித்தார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையுடன் உயிரிழந்த இரு மாணவிகளினதும் இறுதிக் கிரியைகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற

விபத்துக்குள்ளான பேருந்து அதிவேகமாக பயணிக்கும் காட்சி கார் ஒன்றின் டேஷ் கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

ஓட்டமாவடியில் ஓட்டோ விபத்து மாணவி காயம்
Posted in இலங்கை செய்திகள்

ஓட்டமாவடியில் ஓட்டோ விபத்து மாணவி காயம்

ஓட்டமாவடியில் ஓட்டோ விபத்து மாணவி காயம்

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. பாடசாலை விட்டு மாணவி வீடு செல்லும் போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பிரதான வீதியால் வேகமாக பயணித்த ஓட்டோ வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ் விபத்தில் காயமடைந்தை பாடசாலை மாணவி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு ம்,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை பாலத்திற்கு அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிய ரக லொறி ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகிறது.

விபத்தில் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து ,இன்று (11) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான.

விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

பாணந்துறையில் இருந்து வந்த பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.