Tag: குறி
ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை
ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை
ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை இஸ்ரேல் குறியில் இருந்து ஈரான் மதத்தலைவர் தப்புவாரா ,ஆபத்து அருகில் நெருங்கி விட்டது .ஈரான் முக்கிய தலைகளை உருட்ட மொசாட் தீவிர நடவடிக்கை .
இஸ்ரேலை அழிப்பதற்காக ஈரானே பல தாக்குதல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது .
ஈரானின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல்
அதனை அடுத்து ஈரானின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு அங்கமாக விரைவில் ஈரானுடைய மதத் தலைவர், அவர்களை படு கொலை செய்ய இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை திட்டமிட்டுள்ளதாக, சர்வதேச குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஏமன் ஹவுதி நாட்டின் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்த விடயங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
நாமும் நீண்ட நாட்களாகவே கூறி வருகிறோம் விரைவில் அப்துல்லாஹ் ஹமானி அவர்களை இஸ்ரேல் இராணுவம் விமானங்கள் மூலம் போட்டு தள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேலின் இந்த மரண பொறியில் இருந்து ,ஈரான் மதத்தலைவர் தப்புவாரா ..?
இஸ்ரேலின் இந்த மரண பொறியில் இருந்து ,ஈரான் மதத்தலைவர் , ஏனைய முக்கிய பாதுகாப்பு பிரிவு தப்புமா என்பதை கேள்வியாக இருக்கிறது .
அப்படி என்றால் இஸ்ரேல் உளவாளிகள் இவரை அருகில் நெருங்கி விட்டார்கள் என்பதாகவே செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி
பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி
பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி பதவிய, போகஹவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நேற்று (5) இரவு வீடொன்றில் வைத்து 73 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் புல்மோட்டை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை
அதிகாரிகள் கைது செய்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் டுபாய் இராச்சியத்தில் மறைந்திருந்து இந்நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் குற்றச் செயல்களை வழிநடத்தும்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான வெலிஓய பிரியந்தவின் இரண்டு உதவியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவரும் கிரிஹிப்பன்வெவ, வெலிஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலை உட்பட 3 கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட T56 துப்பாக்கி மற்றும் அதன் மெகசின், 08 தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட
ரிவால்வர் மற்றும் அதன் 04 தோட்டாக்கள், 61 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 105 கிராம் ஹெரோயின் என்பன விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. .
டுபாயில் தலைமறைவாக உள்ள வெலிஓயா பிரியந்தவின் மனைவியுடன் தகாத தொடர்பு வைத்திருந்த ஒருவரைக் கொல்வதற்காகவே மேற்படி கொலைகளில் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் போகஹவெவ பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கொலையுண்ட
பெண்ணின் பேத்தியை சுடுவதற்காக வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அகதிகளுக்கு தலையில் பெயிண்ட் அடிக்கும் பொலிஸ் -ஆராயகம்
அகதிகளுக்கு தலையில் பெயிண்ட் அடிக்கும் பொலிஸ் -ஆராயகம்
ஐரோப்பவுக்குள் நுழையுமா சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நாள் தோறும் பல் வேறு வழியில் முயன்று வருகின்றனர்
அதற்குரிய தடுப்புமுறைகள் பலதை கையாண்டாலும் அவர்கள் உள்நுழைந்த வண்ணமே உள்ளனர்
இவ்வாறான நிலையில் குரேசிய காவல்துறையினர் அகதிகள் தலையில்
ஒரேஞ்சு நிறத்தில் பெயிண்ட் அடித்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன
மனித உரிமை தன்னார்வு நிறுவனம் இந்த போலீஸ் ஆராயகத்தை வெளியிட்டு
தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது,வீதியால் இவர்கள் தப்பித்து சென்றால்
கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும் நோக்குடன் இந்த குறியடிக்க படுகிறது











