Tag: இலங்கையில் துப்பாக்கிப் பிரயோகம்
Posted in இலங்கை செய்திகள்
மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்
Author: நிருபர் காவலன் Published Date: 26/03/2023
மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்
மர்ம நபர்களால் திடீர் துப்பாக்கிப் பிரயோகம் வாகனம் பழுது பார்க்குமிடத்திற்கு முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மீது T56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றாலும் வாகனங்கள் இரண்டும் சேதம் அடைந்துள்ளன.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No posts found.







