காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்
Posted in உலக செய்திகள்

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்

இஸ்ரேல் இராணுவம் காசா மீது தொடராக நடத்தி வரும்
தாக்குதலில் இதுவரை 9500 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 33000
அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர் .

பலியானவர்களில் 3900 சிறுவர்கள் மற்றும் 2900 பெண்கள் என காசா சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது .

கடந்த தினம் நடத்திய தாக்குதல் ஒன்றில் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்


அரேபிய நாடுகள் சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது ,உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த விடும் என கோரியது .

உணவு குடிநீர் ,மருந்து ,மின்சாரம் ,தொலை தொடர்பு துண்டிக்க பட்டு
மக்கள் முற்றுகையில் வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .

உணவு நீர் இன்றி மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
பசியால் சிறுவர்கள் அழுகின்ற காட்சிகள் பார்ப்பவர்களை உருக வைக்கிறது .

முடிவின்றி தொடரும் இஸ்ரேல் தாக்குதல் என்று நிறுத்த படும் என,
வீதிஇறங்கி போராட்டம் நடத்தும் மக்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றனர்

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் 12 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் 12 பேர் மரணம்

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் 12 பேர் மரணம்

பிரேசில் நாட்டில் இலகு ரக பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது ,
இதன் பொழுது அதில் பயணித்த 12 பேர் பலியாகியுள்ளனர் .

பலியானவர்களில் சிசு ஒன்றும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த விமான விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

வீடியோ

ரயில் பயணங்கள் திடீர் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்த நபர் மரணம்

புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்த நபர் மரணம்

புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து, காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் (வயது-69) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி இரவு 07.30 மணிக்கு தச்சன்தோப்பு புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதத்தில் ஏறிய போது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்த நபர் மரணம்

இதையடுத்து அவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (12) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரதேப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
Posted in உலக செய்திகள்

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்

இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே வேகசாலையில் பயணிகள்
பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் ,15
காயமடைந்துள்ளனர் .

வெனிஸ் மாகாண முதல்வர் வழங்கிய தகவலில் ,
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாகவும்,
15 பேர் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார் .

விபத்தில் பலியானவர்களில் அதிகமானவர்கள்
சுற்றுலாப் பயணிகள் என கண்டறிய பட்டுள்ளது .

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்

இறந்தவர்களில் அடையாள காணப்பட்டுள்ள நபர்கள் ,
எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற விடயம் வெளியாகவில்லை .

சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது .


பேரூந்து வீதி தடைகளை உடைத்து கவிழ்ந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியிட பட்டுள்ளது .

அதில் பேரூந்து சாலையின் ரக்கை மாற்றி செல்கின்ற பொழுது ,
அவ்வாறே சென்று விபத்தில் சிக்குவது
பதிவாகியுள்ளது .

மேற்படி பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நந்தி கடலில் ஒருவர் மரணம்

நந்தி கடலில் ஒருவர் மரணம்

முல்லைத்தீவு நந்தி கடல் பகுதித்தில் ஒருவர் மரணித்துள்ளார் .

இந்த கடலுக்குள் இவரை தவறி வீழ்ந்து பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நீரில் மூழ்கிய இவர் மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் பலியாகியுள்ளார் என தெரிவிக்க படுகிறது .

நந்தி கடல் பகுதியில் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட போராளிகள் வீரசாவடைந்தது பகுதி என்பது குறிப்பிடத்தக்கது .

வீடியோ

சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்
Posted in உலக செய்திகள்

சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்

சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்

சவுதியை படைகளை குறிவைத்து கவுதிய ஏமன் படைகள் நடத்திய தாக்குதலில் ,நான்கு சவூதி இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .

ஏமன் சவூதி அரேபியா நாட்டின் எல்லையில் நடத்த பட்ட ,உளவு விமான தாக்குதலில் இந்த உயிர்பலி இடம்பெற்றுள்ளது .

சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்

பாரிய வலிந்து தாக்குதலை சவூதி அரேபியா ஏமன் கவுதிய படைகள் மீது ,
நடத்தி வந்த நிலையில் ,அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதல்களை நடத்தியது .

அதிலே இந்த இழப்பு சவூதி இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

more video click here

3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி
Posted in இலங்கை செய்திகள்

3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி

3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி

இரண்டு ரயில்களில் இரண்டு வாகனங்கள் மோதுண்டதில் இருவரும், மற்றொரு ரயிலுடன் யானைகள் கூட்டமாக மோதியதில் 3 யானைகளும் மரணித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவமொன்றில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

புத்தளம் – ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் ரயிலுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இந்த சம்பவம் வியாழக்கிழமை (28) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறிப்பட்ட விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி

இதேவேளை, பெலியத்தவில் இருந்து மருதானையை நோக்கி பயணித்த சாகரிக்கா கடுகதி ரயிலில், குப்பைகளை ஏற்றிச்சென்ற சிறியரக லொறியொன்று மோதி விபத்துக்கு உள்ளானது.

கொடகம கஹவ எனுமிடத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அவ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும் பயணித்த இரவு தபால் ரயிலில், கல்கமுவ பிரதேசத்தில் வைத்து, புதன்கிழமை இரவு 11 மணியளவில் யானைக்கூட்டமொன்று மோதியதில், மூன்று யானைகள் மரணமடைந்துள்ளனர்.

கல்கமுவ ரயில் நிலையத்தில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதன் பின்னர் ஒரு மணிநேரத்துக்கு ரயில் பயணம் தாமதமாகியிருந்தது என்றும் ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பேரூந்து விபத்து 16 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ஈரான் மக்கள் 15 பேர் மரணம்

ஈரான் மக்கள் 15 பேர் மரணம்

ஈராக் நாட்டில் இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவத்தில் சிக்கி ஈரான் நாட்டை சேர்ந்த 15 யாத்திரைகள் பலியாகியுள்ளனர் .,மேலும் 29 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

ஈரானிய யாத்திரிகளை ஏற்றிச் சென்ற வேன் செவ்வாய்கிழமை பிற்பகல்,
ஈராக்கின் சுர்பாத்தியாவிலிருந்து பத்ராவிற்கு இடையிலான சாலையில் கவிழ்ந்து ,விபத்துக்குள்ளானது என ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஈரான் மக்கள் 15 பேர் மரணம்

காயமடைந்தவர்கள் யாவரும் ஈரானின் உள்நாட்டிற்கு மாற்றப்பட்டனர்.
,கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவும் ,இதே போன்ற விபத்தில் சிக்கி பலர் பலியாகி இருந்தனர் ,இவை திட்டமிடப்பட்டு ஏற்படுத்த படுகிறதா ,அல்லது விபத்தா என்பது தொடர்பில் ,பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன .

தமது மத வழிபாட்டு புனித பலனை நிறைவேற்ற செல்லு மக்கள் இவ்விதம் பலியாகியுள்ள சமப்வம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்

மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் கடந்த புதன்கிழமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் திகதி வந்தாறுமூலையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்

இந்த நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர் சுகயீனம் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 23 ம் திகதி புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த 74 வயதுடைய வீரக்குட்டி தவராசாவின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியா தலைநகர் அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் ,
6 பேர் பலியாகியும் ,12 பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .


குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,சுற்றிவளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

பிரான்சில் எரிந்த வீடு 11 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

பிரான்சில் எரிந்த வீடு 11 பேர் மரணம்

பிரான்சில் எரிந்த வீடு 11 பேர் மரணம்

கிழக்கு பிரான்சில் உள்ள அவையவங்கள் செயலாற்ற பாதுகாப்பபு மையமாக,
விளங்கிய வீடு ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்ததில் ,அவ்வேளை அதற்குள் ,
தங்கி இருந்த 11 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர் .

தீ பரவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,
தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்த பொழுது ,
பலர் சடலமாக மீட்க ப்பட்ட துயர இடம்பெற்றுள்ளது .

குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஈரானுக்குள் வீழ்ந்த விமானம் பலர் மரணம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானுக்குள் வீழ்ந்த விமானம் பலர் மரணம்


ஈரானுக்குள் வீழ்ந்த விமானம் பலர் மரணம்

ஈரானுக்கும் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்குங்கியது .
இது எதிரிகளின் சதி முயற்சியா..?நடந்தது என்ன விசாரணைகள் ஆரம்பம் .

https://youtu.be/p6v6ZCwc6TU
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று (29.07) காலை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த இடத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞருக்கு அருகே கட்டுத்துப்பாக்கியும் அவ் இளைஞரின் மோட்டார் சைக்கிலும் காணப்பட்ட நிலையில் இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

குறித்த இளைஞரின் சடலத்தின் அருகில் இடியன் துப்பாக்கி மற்றும் மோட்டர் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

அதே, கிராமத்தினை சேர்ந்த 21வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கொழும்பில் இருந்து வந்த பொலிசார் விசேட சோதனை

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கொழும்பில் இருந்து வந்த பொலிசார் விசேட சோதனை

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று சோதனை செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன், வீட்டிற்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர்.

இச் சம்பவத்தில் 21 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரில் குறித்த பெண்ணின் கணவரான 32 வயது இளம் குடும்பஸ்தர் இன்று (26.07) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கொழும்பில் இருந்து வந்த பொலிசார் விசேட சோதனை

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த வீடு எரியூட்டப்பட்டமை மற்றும் அங்கு எரிந்த பொருட்கள் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிசார் வருகை தந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு இரசாயன பகுப்பாய்வு செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு தரப்புக்களிடமும் வாக்கு மூலம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானில் மனித குண்டு தாக்குதல் 10 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் மனித குண்டு தாக்குதல் 10 பேர் மரணம்

பாகிஸ்தானில் மனித குண்டு தாக்குதல் 10 பேர் மரணம்

பாகிஸ்தானில் இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து,
மனித வெடிகுண்டு தாரி நடத்திய தாக்குதலில் பத்து பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பல பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றனர் ,
இராணுவ வண்டிகள் சேதமடைந்து தூக்கி வீச பட்டுள்ளன .
இந்து குண்டு தாக்குதலுக்கு ,இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை

மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி
Posted in இலங்கை செய்திகள்

உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி

உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலேவத்த பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் தன் உயிரை மாய்த்து உயிரிழந்து உள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (17) பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த மாணவி உயிரிழந்த நிலையில் தனது அறையில் கிடந்ததை அவருடைய தந்தையார் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாணவியின் மரணம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூந்து விபத்து ஒருவர் மரணம் 48 ஈரானியர் காயம்
Posted in உலக செய்திகள்

பேரூந்து விபத்து ஒருவர் மரணம் 48 ஈரானியர் காயம்

பேரூந்து விபத்து ஒருவர் மரணம் 48 ஈரானியர் காயம்

ஈராக்கில் பேருந்து விபத்தில் ஈரானிய யாத்ரீகர் ஒருவர் பலியாகியும் ,
மேலும் 48 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம்
தெரிவித்துள்ளது .

காதிமெய்ன்-சமரா சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

ஈரானிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில்,
டிரக் ஒன்று மோதியதால் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த சாலை விபத்தில் சிக்கி ஈரானிய பெண் ஒருவர் உயிரிழந்தார்,
மேலும் 48 ஈரானியர்களும் காயமடைந்துள்ளனர் .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

காயமடைந்தவர்கள்அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

வவுனியா, கல்மடு, ஈஸ்வரபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நண்பர்கள் இருவர் நேற்றைய தினம் (09.07) மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

தாக்குதல் நடந்த இடத்தை சோதனை செய்ததில், மதுப் போத்தல்கள், தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொலையின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தலைமறைவானவர் அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்

பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ,
சோதனைச் சாவடியைக் குறிவைத்து மனித குண்டு தாரி ,
வெடித்து சிதறியதால் 14 பேர் கொல்லப்பட்டனர்,
மேலும் டசின் பேர் காயமடைந்தனர்.

பகிஸ்தானில் வெடித்த மனித குண்டு 14 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய வடக்கு வஜிரிஸ்தான் ,
பழங்குடி மாவட்டத்தின் சோதனைச் சாவடியில்,
தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை .
குற்றவாளிகளை கைது செய்ய பாதுகாப்பு படையினர் ,
அப்பகுதியில் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .

கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மாரணம்
Posted in உலக செய்திகள்

கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மரணம்

கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மரணம்

தென்மேற்கு கென்யாவில் வாகனங்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ,
டிராக் ஒன்று விபத்தில் சிக்கியதால் ,48 மக்கள் பலியாகியுள்ளனர்

கென்யாவின் மூன்றாவது பெரிய நகரமான நகுருவை கெரிச்சோ நகரத்துடன்
இணைக்கும் நெடுஞ்சாலை பகுதியில் லண்டியானி டிரக் சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து. பல மினிபஸ்கள்,
தனியார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதியதில் இந்த் பெரும் துயரம் இடம்பெற்றுள்ளது .

கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மரணம்

இந்த விபத்தில் 48 பேர் பலியாகியும் ,மேலும்பலர் காயமடைந்துள்ளனர் .
10 க்கு மேற்பட்ட வாகனங்கள் ,மோட்டார் சைக்கிள்கள் என்பன ,
மோதி சிதறியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .

வாகன இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .
இந்த ஆண்டில் இடம்பெற்ற மிக பெரும் விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .