யாழில் கோர விபத்து குழந்தை உட்பட இருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கோர விபத்து குழந்தை உட்பட இருவர் மரணம்

யாழில் கோர விபத்து குழந்தை உட்பட இருவர் மரணம்

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வானொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்

யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கூலர் வாகன சாரதி படு காயமடைந்துள்ள நிலையில் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்

வீடியோ

யாழில் கோர விபத்து சாரதி பலி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கோர விபத்து சாரதி பலி

யாழில் கோர விபத்து சாரதி பலி

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

No posts found.