Tag: யாழில் கோர விபத்து
யாழில் கோர விபத்து குழந்தை உட்பட இருவர் மரணம்
யாழில் கோர விபத்து குழந்தை உட்பட இருவர் மரணம்
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வானொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்
யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கூலர் வாகன சாரதி படு காயமடைந்துள்ள நிலையில் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
- குற்றவாளிக்கு மரண தண்டனை
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு
- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
யாழில் கோர விபத்து சாரதி பலி
யாழில் கோர விபத்து சாரதி பலி
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.



















