சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை

சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை

சீனாவின் Qinghai  பகுதியில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 111 மக்கள் பலியாகியுள்ளனர் .250 மக்கள் காயமடைந்தும் 100 பேர் காணாமல் போயுள்ளனர் .

இந்த நிலநடுக்கமானது 6.2 புள்ளி அளவில் பதிவாகியுள்ளது .சக்தி வாய்ந்த நில நடுக்கம் காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் என்பன இடிந்து அழிந்துள்ளன .

பாதிக்க பட்ட பகுதியில் மீட்பு பணிகள் வேக படுத்த பட்டுள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

வீடியோ

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

கந்தளாயில் நில அதிர்வு

கந்தளாயில் நில அதிர்வு

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் இன்று (12) மதியம் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக கந்தளாய் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்

கந்தளாய் குளத்திற்கு அருகேயுள்ள கோயில் கிராமம்,முள்ளிப்பொத்தானை அண்டிய பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டபோதிலும் சேதங்கள் இல்லை என்று அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர் என்றாலும் அப்பிரதேச மக்களிடையே அச்ச உணர்வு காணப்படுவது குறிப்பிடத்தக்கது

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

புதுடெல்லியில் நிலநடுக்கம்

புதுடெல்லியில் நிலநடுக்கம்

இந்திய தலைநகர் புதுடெல்லியில் சிறிய அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று (11) பிற்பகல் 3.36 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வு வடக்கில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

மொராக்கோ நிலநடுக்கம் பலியானோர் 1 037 ஆக அதிகரிப்பு

மொராக்கோ நிலநடுக்கம் பலியானோர் 1 037 ஆக அதிகரிப்பு

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 37ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஆயிரத்து 204 பேர் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 19 நிமிடங்களுக்கு பின்னர் 4.9 மெக்னிட்யூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பாரிய கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் - பலர் பலி
Posted in உலக செய்திகள்

மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி, நேற்று நள்ளிரவு 11.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி 296 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

வடக்கு அட்லாண்டிக் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு அட்லாண்டிக் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலநடுக்கம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலநடுக்கம்

இலங்கையின் தென்கிழக்கு கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து சுமார் 1,260 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு கடலின் ஆழ் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

கதிர்காமத்தில் நிலநடுக்கம்

கதிர்காமத்தில் நிலநடுக்கம்

கதிர்காமம் லுனுகம்வெஹர பகுதியில் சிறியளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் 300 வீடுகள் அழிவு
Posted in உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் 300 வீடுகள் அழிவு

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் 300 வீடுகள் அழிவு

வடக்கு பப்புவா நியூ கினியாவின் தொலைதூரப் பகுதியில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .

பப்புவா நியூ கினியாவின் தேசிய பேரிடர் மையத்தின் குழுக்கள்,
கிழக்கு செபிக் மாகாணத்தின் தொலைதூர மற்றும் சதுப்பு நிலப்பகுதியான ,
சாம்ப்ரி ஏரிகளுக்கு அருகே ,நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருப்பதாக ,
போர்ட் மோர்ஸ்பி புவி இயற்பியல் ஆய்வகத்தின் நில அதிர்வு நிபுணர் ,
பெலிக்ஸ் தெரிவித்துள்ளார் .

செபிக் நதிப் பகுதியில் 4 பேர் இறந்துள்ளதாகவும், 300 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் பல நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்

இலங்கை பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No posts found.
வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெல்லவாய நகரின் கிழக்கில் இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட வேண்டாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் (10) புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் 3.5
மற்றும் 3 ரிக்டர் அளவுகோலில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
வங்காள விரி குடா கடலில் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

வங்காள விரி குடா கடலில் நிலநடுக்கம்

வங்காள விரி குடா கடலில் நிலநடுக்கம்

வங்காள விரி குடா கடலில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்று (05) காலை 8.32 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சியை வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ளவர்களும்
உணர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 162 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 162 பேர் காயம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 162 பேர் காயம்

இந்தியனோசியா யாவ பகுதி மலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி 1262 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .

வீடுகள் ,வாகனங்கள் என்பன பலமாக தகர்ந்த நிலையில் காட்சி அலிகின்னா .

இந்த அந்தரத்தினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை .

சேதங்கள் இழப்புகள் மேலும் அதிகரிக்க படலாமா என அஞ்ச படுகிறது .

Posted in உலக செய்திகள்

ஈரானில் பாரிய நிலநடுக்கம் – பேரழிவு

சற்று முன்னர் ஈரானில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இதன் அதிர்வு 4,5 ஆக பதிவாகியுள்ளது

இந்த அதிர்வின் சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை ,எனினும் சுயாதீன தகவல்களின்

படி பலநூறு மக்கள் பலியாகி இருக்க கூடும் எதிர்பார்க்க படுகிறது

    Posted in உலக செய்திகள்

    இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் -7 பேர் மரணம்

    இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் -7 பேர் மரணம்

    இந்தோனேசியாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி ஏழுபேர் மரணமாகியுள்ளனர்

    ,மேலும் பல வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது


    இந்த நில அதிர்வு 6.0 ஒன்றாக பதிய பெற்றுள்ளது , இதே நாட்டில் தொடராக நில நடுக்கம் ஏற்பட்டு

    வருகின்றமை அந்த மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

    நிலநடுக்கம்
    நிலநடுக்கம்
      Posted in Uncategorized

      இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை

      இலங்கையில் எதிர் காலத்தில் நில நடுக்கம் தொடராக ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக காலநிலை ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்

      நில நடுக்கம்

      உலகம் மாறி வரும் பருவ நிலையின் காரணமாக ஏற்பட்ட மாறுதலே இந்த நில நடுக்கம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது
      என சுட்டி காட்டப்பட்டுள்ளது ,

      ஈரான் ,பனாமா துருக்கி ,இந்தோனேசிய போன்ற நாடுகளில் அதிக கூடிய நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

      எச்சரிக்கை

      எனவே இதனை கருத்தில் கொண்டு மலை பகுதியில்வளை மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்

      குறிப்பிடும் இவர்கள் சமீப நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட தொடர் நிலஅதிர்வுகள் இதனாலே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      பதுளையில் நிலநடுக்கம் – கதறி ஓடிய மக்கள்

      இலங்கை பதுளையில் காலை வேளை குலுங்கிய வீடுகள் ,கதறி ஓடிய மக்கள் ,
      இந்த அதிர்வு ஏன் ஏற்படுகிறது – தொடர்ந்து அங்கு குடியிருக்க அஞ்சும் மக்கள்

      இலங்கை பதுளையில் காலை வேளை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த

      அதிர்வு சில நொடிகள் மட்டுமே நீடித்ததாகவும் மக்களுக்கு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது

      இலங்கையில் தொடர்ந்து இது போன்ற அதிர்வுகள் சமீப காலங்களாக

      அதிகரித்துள்ளது ,இறுதி போரின் பின்னர் தமிழர் ,கண்ணீர் ஆவிகள்

      இலங்கையில் வைகாசி மாதத்தில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது ,

      காதலனை காட்டிய நடிகை

      இவ்வாறான கால பகுதியில் நில நடுக்கத்தை ஏற்படுத்துவதாக தெய்வ

      ஆராதனை நம்பிக்கையுள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் video

      தொடர்ந்து இவ்வாறு நீடித்தால் இலங்கை பெரும் இயற்கை அழிவில் சிக்கும் அபாயம் உள்ளதான எச்சரிக்கையும் விடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

      வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

      வடகொரியாவில் இன்று அதிகாலை வேளை இரண்டு நில நடுக்க

      சம்பவங்கள் பதிவாகியுள்ளன ,இவை 3.2 க்கு அதிகமான அதிர்வுகளில் பதிவாகியுள்ளது

      வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது ,

      அவ்விதம் கடலுக்கடியிலோ அல்லது நிலத்தடிக்குள்ளோ புதிய வகை ஏவுகணை

      சோதனையை நடத்தி இருக்க கூடும் என்றே சந்தேகம் வெளியிட பட்டுள்ளது


      கரணம் இதனால் ஏற்பட்ட சேத விபரங்களை அந்த நாடு கூறாமையே .

        Posted in உலக செய்திகள்

        பாரிய நிலநடுக்கம் 34 பேர் பலி – 600 பேர் காயம் பலரை காணவில்லை

        பாரிய நிலநடுக்கம் 34 பேர் பலி – 600 பேர் காயம் பலரை காணவில்லை

        இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தில் சிக்கி

        இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர்

        மேலும அறுநூறு பேர் படு காயமடைந்துள்ளனர்

        பலரை காணவில்லை ,வீடுகள் மருத்துவமனைகள் உள்ளிட்டவை

        இதனால் பலத்த சேதமடைந்துள்ளது

        மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது ,மரண

        எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

        நிலநடுக்கம்
        நிலநடுக்கம்
        Posted in உலக செய்திகள்

        நோர்வேயில் நிலநடுக்கம் – நால்வர் சடலமாக மீட்பு

        நோர்வேயில் நிலநடுக்கம் – நால்வர் சடலமாக மீட்பு

        வடகிழக்கு நோர்வே பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி

        வீடுகள் இடிந்து வீழ்ந்தன ,இந்த
        விபத்தில் சிக்கி நல்லவர் பலியாகியுள்ளனர் ,அவர்களது சடலங்கள் மீட்க பட்டுள்ளன

        மேலும் பல டசின் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

        நிலநடுக்கம்
        நிலநடுக்கம்