Tag: துப்பாக்கி
42 துப்பாக்கி சூட்டு சம்பவம்
42 துப்பாக்கி சூட்டு சம்பவம்
42 துப்பாக்கி சூட்டு சம்பவம் இலங்கையில் இடம் பெற்றுள்ளது எந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 28 பேர் பலியாகியும் ,23 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த ஐந்து மாதங்களில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் பொழுதே அதிகமான மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுட்டு சம்பம் தொடர்புடைய படுத்தக்கூடிய ஏறத்தாழ, 94க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் அனுரா ஆட்சியில் தொடரும் இடைவிடாத துப்பாக்கி சூட்டு சம்பவங்களினால் ,மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதட்டமும் காணப்படுகிறது.
நீதிமன்றங்கள், கடைகள், பொது இடங்கள், வளாகங்கள் ,வீதிகள் ,என்பவற்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது ,அனுரா அரசின் உடைய ஆட்சி அதிகாரத்தின் சீர்கேடாக பார்க்கப்படுகிறது.
இடைவிடாது தொடரும் இந்த வன்முறை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பின்புலத்தில் ,அனுரா ஆட்சியின் நிழல் பிரிவு ஈடுபடுகிறதா என்ற சந்தேகத்தை இது வலுப்படுத்தி இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு 5 மாத காலப்பகுதிக்கு உள்ளதாக, இத்தகைய மிகப்பெரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்து காணப்படுவது ஆலமரசிலும் கையாள தன்மையை காண்பிக்கிறது.
இந்த சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி அவர்களை மிரளவைத்து அடிபணிய வைக்கும் ஒரு நடவடிக்கையின் தந்துறவாய் நகர் இருக்கலாம் என நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது

- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி
சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி
சுவிடனில் துப்பாக்கிசூடு மூவர் பலி ,சற்றுமுன் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் சமூகத்தில் பலியாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சூட்டு சம்பவானது சுவிடன் தலைநகர் பகுதியில் இடம்பெற்று இருக்கிறது .
துப்பாக்கி சூட்டை நடத்திய துப்பாக்கி தாரி தற்பொழுதுமோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிக்கொண்டே இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு ஒரு மிகப்பெரும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது அந்த நிகழ்வு கூட்டத்துக்கு நுழைந்த ஆயுததாரி திடீரென மக்களை நோக்கி துப்பாக்கியால் சூட்டை நடத்தியுள்ளார் .
துப்பாக்கியால் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார் .
அவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் உளவுத்துறை ஈடுபட்டு வருகின்றனர்.
சற்று முன்னர் சுவிடனில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை என சுவிடனில் நாட்டு காவல் துறையினர் உளவுத்துறை அறிவித்து வருகின்றனர்.
இறந்தவர்கள் சுவர் என் நாட்டவர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் என்பது தொடர்பாகவும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவமான செய்திகள் வெளியாகும் வரை தெரிய வரவில்லை.
இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் என்பது உலக செய்திகளின் தலைப்பு செய்திகளாக இடம்பெற்றுள்ளது ..
இச்செயல் ஈரானுக்கு இடையில் அதி உசார் போர் மேகம் நிலையில் தற்போது சுவீடன் இலக்கு வைத்து தாக்க பாடுவதாக மக்கள் இப்படி ஒரு கருத்தை முன் வைத்து வருகின்றனர் ..
இந்த சூட்டு தாக்குதலை நடத்திய ஆயுத தாரி கைது செய்ய பட்டால் மட்டும் தான் இதன் சூத்திர மூலம் தெரிய வரும் என நம்ப படுகிறது .
உலக யுத்தம் மிக விரைவில் வெடிக்கும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் இந்த் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .
ஓடி கொண்டிருக்கும் ஆயுத தாரி கைது செய்யப்பட்டால் இந்த தாக்குதலின் பின்புலத்தில் உள்ள நாடு எது என தெரியவரும் என பேச படுகிறது
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை

- ஈரான் முழுதும் தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்
- பிரிட்டன் தளங்களிலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களைப் பறக்க ஈரான் எச்சரிக்கை

முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது
முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது
முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது ,ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு காரில் இருந்து 9 மிமீ துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அங்கொடை, புத்கமுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர்
துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர்
துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர் ,உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கி ஒன்றுடன் புதன்கிழமை (05) அன்று இருவர் கைது செய்யப்பட்டதாக பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்தார்.
குறித்த துப்பாக்கியை வைத்திருந்த மஹியங்கனை, 40 ஆம் இலக்க தொழில்துறை காலனியை சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் மற்றும் துப்பாக்கியை தயாரித்ததாக கூறப்படும் பதியதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மஹியங்கனை தொழில்துறை கொலனி பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேக நபரின் வீட்டிற்கு
அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த துப்பாக்கியை பதியதலாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தயாரித்தமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய துப்பாக்கியை தயாரித்த சந்தேக நபர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வேட்டையாடும் துப்பாக்கிகள் தான் தயாரிப்பதாகவும், யூடியூப் தளத்தில் இருந்த ஒரு காணொளியை பார்த்து குறித்த துப்பாக்கியை தயாரித்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, மேலதிக விசாரணைகளுக்காக மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்களும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கார் மீது துப்பாக்கிச் சூடு தம்பதி கைது
கார் மீது துப்பாக்கிச் சூடு தம்பதி கைது
கார் மீது துப்பாக்கிச் சூடு தம்பதி கைது ,ஹோகந்தர பகுதியில் நேற்று இரவு வேகமாகச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
மாலபே பொலிஸ் நிலைய அதிகாரிகள் காரை நிறுத்துமாறு சமிஞ்சை காட்டியதாகவும் , ஆனால் ஓட்டுநர் மறுத்து வாகனத்தை திருப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் ஒரு அதிகாரி காரின் டயரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அது ஒரு லைட் கம்பத்தில் மோதியது.
வாகனத்தை சோதனை செய்தபோது, கார் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.8 கிலோ கஞ்சாவை பொலிஸார் கண்டுபிடித்தனர். சந்தேக நபர்களின் வீட்டை சோதனை செய்ததைத் தொடர்ந்து மேலும் 1 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்கொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுடைய அவரது மனைவி ஆகிய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர்.
மாலபே பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ,கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் இன்று (10) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில், இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையே
நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு இன்று மாலை 7 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் செல்வது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 43 வயது நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கொழும்பு 13, ஜம்பட்டா வீதியை சேர்ந்த கெனிஸ்டன் நேட்டோ என்ற நபர் ஆவார்.
பழனி ஷிரான் குளோரியன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கும்பல் இதனைச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், உயிரிழந்தவர் புகுடு கண்ணா என அழைக்கப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின்
சீடராவார் எனவும், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது
துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது
துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது ,கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில், சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை, கல்கிஸ்ஸ பொலிஸை சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் தனது சேவை துப்பாக்கியுடன் காணாமல் போன சம்பவம் பதிவாகியிருந்தது.
முதற்கட்ட விசாரணையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் டுபாய்க்கு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வரும் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு, குறித்த கான்ஸ்டபிளின் பெற்றோரை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தாவின் மகன் வைத்திருந்த 7துப்பாக்கி
மஹிந்தாவின் மகன் வைத்திருந்த 7துப்பாக்கி
மஹிந்தாவின் மகன் வைத்திருந்த 7துப்பாக்கி தற்பொழுது பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்தாவின் மகன் யோசித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் எப்படி ஏழு துப்பாக்கிகளை இலங்கையில் வைத்திருக்க முடியும் என்கின்ற கேள்வி இதன் மூலம் எழுப்பப்பட்டுள்ளது.
சகோதரன் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்கின்ற காரணத்திற்கு அமைவாக வைத்து இவருக்கு எப்படி இந்த ஏழு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன எனவும் .
எப்படி அது வழங்க முடியும் என்று இந்த கேள்வியை இந்த விடயம் எழுப்பி இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்திருக்கிற சட்டம் இலங்கையில் இருக்கிறது .
அதன் அடிப்படையில் பாதுகாப்பு அமைக்க பதிவு செய்யப்பட்டு இவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அரசியல்வாதியின் மகன் என்கின்ற காரணத்தினால் ,எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொள்ளாத ஒருவர் 7 துப்பாக்கிகள் வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் கொதிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது .
நபர் மீது துப்பாக்கிச் சூடு
நபர் மீது துப்பாக்கிச் சூடு
நபர் மீது துப்பாக்கிச் சூடு ,கல்கிஸை, சிறிபால மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மற்ற சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் துப்பாக்கிச் சூடு
மன்னார் துப்பாக்கிச் சூடு
மன்னார் துப்பாக்கிச் சூடு ,மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும்
அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
‘மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாக கொண்டு முரண்பாடு காணப்பட்டது.
முதல் சம்பவத்தில் 2022 ஆம் ஆண்டு இருவர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு கொலை செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
இறுதியாக வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் முதலாவதாக இடம் பெற்ற இருவரின் மரணம் தொடர்பில் சந்தேக நபர்களாவர்.
எவ்வாறாக இருந்தாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். குறித்த சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார்.
அவருக்கு எதிராக நாம் சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளோம்’ என தெரிவித்தார்.
இதேவேளை மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு வீட்டின் மீது
துப்பாக்கி சூடு வீட்டின் மீது
துப்பாக்கி சூடு வீட்டின் மீது,களுத்துறை – தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
களுத்துறை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.
தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருவர் துப்பாக்கியுடன் கைது
ஒருவர் துப்பாக்கியுடன் கைது
ஒருவர் துப்பாக்கியுடன் கைது,பொல் திகமா காவல்துறை பகுதியில் நபர் ஓருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .
பொலிசாரேவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடத்த பட்ட சோதனை நடவடிக்கையின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நாட்டில் துப்பாக்கி சூடு காரணமாக பலர் பிழையாகி வருகின்றார் ,அவ்வாறன சூழல் இந்த துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
உள்ளத்தில் தயாரிக்க பட்ட துப்பாக்கியுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ,தற்போது இவர் நீதிமன்றில் பாற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அரசின் அனுமதி இன்றி ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் கைதுசெ செய்யப்படுவார்கள் என்ற நிலை காணப்படுகின்றது .
இவ்வாறன ன் நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது ,மக்கள் உயிர்பலிகள் தடுக்க பட இவ்வாறான சமூக விரோதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் நிலைப்பாடாக உள்ளமை குறிப்பிட தக்கது .
துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை
துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை
துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை, இலங்கை வெளிகமா தொட்ட வளவல வீதியில் மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்களால் வாலிபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றனர்.
வெளிகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மன் அவர்கள் 26 வயதுடைய வாலிபன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுது அவர் பலத்த காயப்படுத்த நிலையில் இரத்தப்போக்கு காரணமாக வருடமாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஏன் ஏற்பட்டது எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
என்னினும் துப்பாக்கிச்சூட்டு சம்பந்தமான விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வரும்போது இந்த படுகொலைக்கான காரணம் என்ன என்பதை தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் தீவிரப் பெற்று வருகின்றது .
இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துச் செல்கின்ற படுகொலை தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்ற நிலையில்,
தொடர்ந்து மக்களை மிரட்டுகின்ற வகையில் இவ்வாறான துப்பாக்கி சூடு படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது .
இது தனிநபர் தாக்குதலா அல்லது குழுக்களின் படுகொலைதாக்குதலா என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.
விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை
விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை
விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை , அமெரிக்காவின் ஸ்கே விமான தளத்தில் திடீரென ஆயுதங்களுடன் உட்புகுந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினார் .
அமெரிக்கா ஸ்கே விமான நிலையத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகி சிலர் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சூட்டு தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் .
பரபரப்பாக இயங்கி வந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
இந்த சமூக தொடர்பான மேலதிக விசாரணையில் இடம் பெற்று வருவதாகவும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அமெரிக்காவுடைய போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
எனினும் அமெரிக்காவில் ஆண்டு தோறும் அதிகரித்துவரும் துப்பாக்கி சூடு தாக்குதினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு
வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு
வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு ஹோமாகம பனாகொட பெலடகொட பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வியாபாரிக்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்றின் மீது புதன்கிழமை (18) காலை பல
துப்பாக்கிச் சூட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் வியாபாரியின் வழிகாட்டலின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படுவதாக மெகொட பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது
துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது
துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
நேற்றிரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலர், வீடொன்றில் இருந்த ஆண் ஒருவர் மீதும் அவரது மகளும் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்
துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்
துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார் ,சிகாகோவின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார் மற்றும் சந்தேக நபர் காயமடைந்தார்#
சிகாகோவின் புறநகர் பகுதியில் துப்பாக்கியுடன் வங்கியில் இருந்து ஒருவர் வெளியேறிய புகாரின் பேரில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வெள்ளியன்று புறநகர் சிகாகோவில் ஒரு நபர் துப்பாக்கியுடன் வங்கியிலிருந்து வெளியேறிய புகாருக்கு பதிலளித்த போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஓக் பார்க் டிடெக்டிவ் ஆலன் ரெடின்ஸ், 40, காலை 9:30 மணியளவில் ஒருமுறை சுடப்பட்டார், பின்னர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக போலீஸ் துறை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் காலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிகாகோவைச் சேர்ந்த ரெடின்ஸ், 2019 முதல் காவல் துறையில் பணியாற்றி வந்தார்.
ஓக் பார்க் சிகாகோவின் மேற்கே உள்ளது.
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது அம்பன்பொல-நெகுன்னேவ பிரதேசத்தில் உள்ளாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அம்பன்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபர் 63 வயதுடைய அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிசூட்டில் 42 பேர் பலி
துப்பாக்கிசூட்டில் 42 பேர் பலி
துப்பாக்கிசூட்டில் 42 பேர் பலி பாகிஸ்தானில், நேற்று (22), நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 42 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பகுதுவா மாகாணத்தை சேர்ந்த சிலர் நேற்று கார், பஸ்சில் பிரசினர் நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு சென்றுகொண்டிருந்தனர்.
குரம் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பஸ், காரை மற்றொரு காரில் வந்த கும்பல் இடைமறித்தது. மேலும், அந்த கும்பல் வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த அனைவரும் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் என்பது தெரியவந்துள்ளது.
தாக்குதலை நடத்தியது சன்னி பிரிவை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி
துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி
துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி ,காலி வீதி, அம்பலாங்கொடை – உரவத்த பிரதேசத்தில், இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இருவரும் அம்பலாங்கொடை – மாதம்பே, தேவகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அம்பலாங்கொடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, இனந்தெரியாத ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து
அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்







































