கார் மீது துப்பாக்கிச் சூடு தம்பதி கைது
கார் மீது துப்பாக்கிச் சூடு தம்பதி கைது ,ஹோகந்தர பகுதியில் நேற்று இரவு வேகமாகச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
மாலபே பொலிஸ் நிலைய அதிகாரிகள் காரை நிறுத்துமாறு சமிஞ்சை காட்டியதாகவும் , ஆனால் ஓட்டுநர் மறுத்து வாகனத்தை திருப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் ஒரு அதிகாரி காரின் டயரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அது ஒரு லைட் கம்பத்தில் மோதியது.
வாகனத்தை சோதனை செய்தபோது, கார் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.8 கிலோ கஞ்சாவை பொலிஸார் கண்டுபிடித்தனர். சந்தேக நபர்களின் வீட்டை சோதனை செய்ததைத் தொடர்ந்து மேலும் 1 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்கொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுடைய அவரது மனைவி ஆகிய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர்.
மாலபே பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






