துப்பாக்கி சூடு வீட்டின் மீது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு வீட்டின் மீது

துப்பாக்கி சூடு வீட்டின் மீது

துப்பாக்கி சூடு வீட்டின் மீது,களுத்துறை – தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

களுத்துறை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதல் கைபா துறைமுகம் மீது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தாக்குதல் கைபா துறைமுகம் மீது

தாக்குதல் கைபா துறைமுகம் மீது

தாக்குதல் கைபா துறைமுகம் மீது,இஸ்ரேல் கைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

ஈராக்கிய போர் படைகள் நடத்திய வெடிகுண்டு விமான தற்கொலை தாக்குதலில் ,பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வரும் நீண்ட யுத்தம் காரணமாக பலமுறை இந்த கைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது கடும் நடவடிக்கை photo

ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது
கடும் நடவடிக்கை photo

கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் – தற்போது நடைமுறையில்

உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும். இதன் ஒரு கட்டமாக இன்று காலையில் புஸ்ஸலாவ நகரம் இவ்வாறு

காட்சியளிக்கின்றது

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – மார்ச் இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு

மீண்டும் இன்றே பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை ஆகிய கிராமங்கள் முற்றாகத்

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளுக்குள் யாரும் உள் நுழையவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளைத் துஷ்பிரயோகம்

செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா கிருமி பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த

நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

ஊரடங்குச் சட்டம்
ஊரடங்குச் சட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நகர்வுகள் சூடு பிடித்துள்ள நிலையில் சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என மிரட்டல் விடுக்க பட்டுள்ளது .

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என அந்த கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது .

தமது கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என அடித்து கூற பட்டுள்ளது .