Posted in சினிமா

தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை

தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தனி நீதிபதி கூறிய கருத்துக்கள் தன்னை புண்படுத்தின என முறையிட்டுள்ள விஜய், அதனை நீக்கக்கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். என்றாலும், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு

விசாரணையின்போது, பொதுப்படையாக நடிகர்களுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்து தேவையற்றது.

உயர்நீதிமன்ற தனி நீதிபதி கருத்து தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளது. 32.30 லட்சம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டது. கஷ்டப்பட்ட உழைப்பில் கார்

வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என விஜய் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Posted in சினிமா

    என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்..

    என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்..

    தாதாசாகேப் பால்கே விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று பேசினார்.

    என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்
    ரஜினிகாந்த்


    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

    மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும்

    விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை

    ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

    ரஜினிகாந்த்

    விருதை பெற்ற பிறகு ரஜினிகாந்த் பேசும்போது, ‘எனக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி, இந்த விருதை என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர்

    கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும் என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூருக்கு நன்றி. ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ என்றார்.

      Posted in சினிமா

      சினேகனை வாழ்த்தி சிறப்பு பரிசு கொடுத்த இளையராஜா

      சினேகனை வாழ்த்தி சிறப்பு பரிசு கொடுத்த இளையராஜா

      சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட பாடலாசிரியர் சினேகனை அழைத்து பரிசு கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

      சினேகனை வாழ்த்தி சிறப்பு பரிசு கொடுத்த இளையராஜா
      இளையராஜா – சினேகன் – கன்னிகா


      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

      தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தனது நீண்ட நாள் காதலியான, நடிகை கன்னிகா ரவியை ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார்.

      சினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.

      இளையராஜா – சினேகன் – கன்னிகா

      சினேகன் – கன்னிகா திருமணத்திற்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்துகளை

      தெரிவித்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, சினேகனையும் அவரது மனைவி

      கன்னிகாவையும் தனது ஸ்டுடியோவிற்கு அழைத்து வாழ்த்தி இருக்கிறார். அதோடு சினேகனுக்கு சிறப்பு பரிசாக மோதிரம் ஒன்றை பரிசளித்து இருக்கிறார்

        Posted in சினிமா

        ஜான்வி கபூர் நடனத்தை பார்த்து பட வாய்ப்பு கொடுத்த பிரபல நடிகர்

        ஜான்வி கபூர் நடனத்தை பார்த்து பட வாய்ப்பு கொடுத்த பிரபல நடிகர்

        மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் நடனத்தை பார்த்து பிரபல நடிகர் ஒருவர் பட வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

        ஜான்வி கபூர் நடனத்தை பார்த்து பட வாய்ப்பு கொடுத்த பிரபல நடிகர்
        ஜான்வி கபூர்


        பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு உரியத் தொகையைப் பெற்றுக்

        கொள்கிறார்கள். தமிழில் மட்டும்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுப்பது என்பது கௌரவக் குறைச்சலாகவே பார்க்கப்படுகிறது.

        சமீபத்தில் ரன்வீர்சிங் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கலந்து கொண்டிருக்கிறார். இதில் ஜான்விக்கு வைத்த வினாடி வினா போட்டியில் ஜான்வி

        தோற்றுப் போனார். தோற்றாலும் அவர் ரன்வீர்சிங்கிற்கு அங்கேயே மேற்கத்திய நடனம் ஒன்றை

        ஆடிக் காட்டியிருக்கிறார். இந்த ஆட்டத்தினால் ஜான்வி கபூருக்குத் தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் ரன்வீர்சிங்

          Posted in சினிமா

          குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்

          குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்

          தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

          குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்
          கீர்த்தி சுரேஷ்


          தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது

          தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

          இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

          கீர்த்தி சுரேஷ்

          இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி

          சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், இறுதியில் ரூ.3 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களில் அவர் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடி வரை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

            Posted in சினிமா

            பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் மலையாள நடிகை

            பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் மலையாள நடிகை


            நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது.

            ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் மலையாள நடிகை
            விஜய்
            நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு, மற்றும் விடிவி கணேஷ் நடிக்கின்றனர்.

            இதுதவிர மலையாள நடிகை அபர்ணா தாஸும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பீஸ்ட் படத்தில் அவர், நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபு இப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளாராம்.

            அபர்ணா தாஸ், விஜய்
            அபர்ணா தாஸ், விஜய்

            அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் இப்படம் தயாராகிறது.

              Posted in சினிமா

              மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு

              மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு

              சினிமாவில் வில்லன் மற்றும் காமெடி நடிகராக வலம் வரும் மன்சூர் அலிகான் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

              மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு
              மன்சூர் அலிகான்
              இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

              தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். வில்லன், காமெடியனாக நடித்து வரும் மன்சூர் அலிகான், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

              இந்நிலையில், சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுரடியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதால் அவரது வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

              நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி மண்டலம் 8 அதிகாரிகள் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

                Posted in சினிமா

                ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்

                ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்

                முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

                ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்
                நயன்தாரா


                94-வது ஆஸ்கார் விருது அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு

                செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழில் 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.

                இதில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கூழாங்கல்’ திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூழாங்கல் படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.

                நயன்தாரா

                ஏற்கனவே இப்படம், இந்த ஆண்டு ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் “டைகர் விருது” பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

                Posted in சினிமா

                தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி

                தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி

                தாதாசாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

                ‘தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி
                ரஜினிகாந்த்
                சென்னை:

                இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது. தாதா சாகேப் பால்கே விருது ஆண்டு தோறும் மத்திய அரசால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

                இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

                இந்த ஆண்டுக்கான விருதுக்கு நடிகர் ரஜினி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.

                கொரோனா காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிக்கொண்டே போனது. இந்தநிலையில் நாளை (25-ந் தேதி) தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.

                நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது எடுத்த படம்.

                இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக ரஜினி டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முன்பு விருது கிடைத்து இருப்பது பற்றி ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது:-

                தாதாசாகேப் பால்கே விருது நான் எதிர்பாராதது. விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் பாலச்சந்தர் அருகில் இல்லாதது வேதனை அளிக்கிறது என்றார்.

                டைரக்டர் பாலச்சந்தர் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இதே விருதை பாலச்சந்தரும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இந்த விருதை பெற்றவர் ஆவார்.

                டெல்லியில் நடைபெறும் விழாவில் தங்கத்தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது.

                  Posted in சினிமா

                  விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி.

                  விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி.

                  மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

                  நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு
                  விவேக்
                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                  தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

                  மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

                  இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தார். இந்த புகாரை ஏற்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

                  விவேக்

                  இந்த விசாரணை முடிவில் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. அவர் உயர் ரத்த அழுத்தத்தால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விளக்கம் அளித்துள்ளது.

                    Posted in சினிமா

                    விமான நிலையத்தில் அவமதிப்பு- சுதா சந்திரனிடம் மன்னிப்பு கோரியது மத்திய பாதுகாப்பு படை

                    விமான நிலையத்தில் அவமதிப்பு- சுதா சந்திரனிடம் மன்னிப்பு கோரியது மத்திய பாதுகாப்பு படை

                    பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவது வேதனையாக உள்ளது என சுதா சந்திரன் கூறி உள்ளார்.

                    விமான நிலையத்தில் அவமதிப்பு- சுதா சந்திரனிடம் மன்னிப்பு கோரியது மத்திய பாதுகாப்பு படை
                    சுதா சந்திரன்

                    பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது காலை இழந்தார். இதனால் செயற்கைக் கால் பொருத்தி தனது கலைப் பயணத்தை தொடர்கிறார். தமிழ், இந்தி சீரியல்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.

                    இந்நிலையில், சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவதும், ஒவ்வொரு முறையும் செயற்கை காலை கழற்றி காட்டுவதும் வேதனையாக உள்ளது என கூறி உள்ளார்.

                    ‘நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு இது எனது தனிப்பட்ட கடிதம். மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. நான் சுதா சந்திரன், நான் ஒரு நடிகை, நாட்டியக் கலைஞர். செயற்கைக் கால்களைக் கொண்டு நடனமாடி வரலாறு படைத்திருக்கிறேன். எனது நாடு என்னை நினைத்துப் பெருமிதம் கொள்ளுமாறு செய்திருக்கிறேன்.

                    ஆனால், தொழில்முறைப் பயணமாக நான் ஒவ்வொரு முறை விமானம் ஏறுவதற்கு முன்பும், விமான நிலையத்தில் என்னைப் பாதுகாப்பு சோதனையில் தடுத்து நிறுத்தும்போது எனது செயற்கைக் காலை வெடிகுண்டு பரிசோதனைக் கருவியை வைத்துப் பரிசோதிக்கும்படி மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் கேட்கிறேன். ஆனால், அவர்கள் எனது செயற்கைக் காலை கழற்றி காட்டச் சொல்கின்றனர்.

                    மோடி அவர்களே, இது மனிதச் செயல்தானா? இதுதான் நமது தேசம் பேசுகிறதா? இந்தச் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்குத் தரும் மரியாதை இதுதானா? மோடி அவர்களே, மூத்த குடிமக்கள், அவர்கள் மூத்தவர்கள்தான் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.” என சுதா சந்திரன் கூறியிருந்தார்.

                    சுதா சந்திரனின் வீடியோ பதிவு வைரலான நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

                    “உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மிகவும் வருந்துகிறோம் சுதா சந்திரன். விதிமுறைகளின் படி, குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே செயற்கை உறுப்பு பாகங்களை நீக்கிப் பரிசோதிக்க வேண்டும். உங்களை ஏன் அப்படிச் செய்யச் சொன்னார் என்று, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை நாங்கள் விசாரிக்கிறோம். இதுபோன்று எந்தப் பயணிக்கும் அசவுகரியம் ஏற்படாது இருப்பதை உறுதி செய்வோம்” என மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

                      Posted in சினிமா

                      நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா

                      நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா

                      போதை பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் சஞ்சனா கல்ராணி, நண்பர் மீது மோசடி புகார் கூறியிருக்கிறார்.

                      நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா கல்ராணி
                      சஞ்சனா கல்ராணி


                      கடந்த ஆண்டு போதை பொருள் விற்பனை மற்றும் போதை பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் கன்னட நடிகை

                      சஞ்சனா கல்ராணி. தற்போது அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

                      சில நாட்களுக்கு முன்பு ஒரு கால் டாக்சி டிரைவர் சஞ்சனா மீது போலீசில் புகார் அளித்தார். கார் பயணத்தில் தன்னை ஆபாசமாக திட்டியதாக அவர் புகாரில் கூறியிருந்தார். இந்நிலையில், தனது

                      நண்பர் ராகுல் டான்சி என்பவர் மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவா மற்றும் கொழும்பில் இருக்கும் முதலீட்டு நிறுவனத்தின்

                      நிர்வாக இயக்குநராக பணியாற்றுவதாக என் நண்பர் ராகுல் டான்சி கூறியிருந்தார். அவரது பேச்சை நம்பி, கடந்த 3 ஆண்டுகளாக பணத்தை முதலீடு செய்தேன்.

                      சஞ்சனா கல்ராணி

                      ராகுல் டான்சி உள்பட 3 பேரின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினேன். ஆனால், முதலீட்டுக்கான எந்தவித வட்டியையும் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால்

                      மிரட்டுகின்றனர். ராகுல் டான்சி உள்ளிட்டோர் என் பணத்தை சட்டவிரோத செயல்களில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். என் கவுரவத்தை பாதிக்கும் வகையில் பொய்யான

                      குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

                        Posted in சினிமா

                        வைரலாகும் அமலாபாலின் புதிய புகைப்படங்கள்

                        வைரலாகும் அமலாபாலின் புதிய புகைப்படங்கள்

                        பிரபல நடிகையாக இருக்கும் அமலாபால், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

                        வைரலாகும் அமலாபாலின் புதிய புகைப்படங்கள்
                        அமலாபால்


                        தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

                        அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர்

                        விவாகரத்து பெற்றார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்கள் உள்ளன.

                        அமலாபால்

                        சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது புதிய புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

                          Posted in சினிமா

                          மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா

                          மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா

                          தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

                          மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா
                          சமந்தா


                          தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு, அண்மையில் முடிவுக்கு வந்தது.

                          இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதைத் தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.

                          சமந்தா

                          இந்நிலையில், விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட்

                          ராவ் என்கிற வழக்கறிஞர், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசியதால், அவர்மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா

                            Posted in சினிமா

                            ஷாருக்கான் ஜெயிலுக்கு சென்று மகனை நேரில் பார்த்து ஆறுதல்

                            ஷாருக்கான் ஜெயிலுக்கு சென்று மகனை நேரில் பார்த்து ஆறுதல்

                            போதைபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான் கானை, அவரது தந்தை ஷாருக்கான் இன்று நேரில் சந்தித்தார்.

                            நடிகர் ஷாருக்கான் ஜெயிலுக்கு சென்று மகனை நேரில் பார்த்து ஆறுதல்: தைரியமாக இருக்கும்படி கூறினார்
                            ஷாருக்கான்
                            இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                            பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த 3-ந்தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளிகள் 7 பேரும் பிடிபட்டனர். அவர்களை கைது செய்த போதை தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

                            சிறைக்குள் ஆர்யன்கான் மற்ற குற்றவாளிகளுடன் சேர்த்து அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவரது கை செலவுக்காக ரூ.4 ஆயிரத்து 500-ஐ நடிகர் ஷாருக்கான் அனுப்பி இருந்தார்.

                            ஆர்யன்கானை ஜாமீனில் எடுப்பதற்காக நடிகர் ஷாருக்கான் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது. வாட்ஸ்அப் தகவல்களில் ஆர்யன்கான் முதன்மை குற்றவாளி என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறி அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

                            இதையடுத்து ஆர்யன்கான் மும்பை ஐகோர்ட்டில் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது ஆர்யன்கான் விடுதலை ஆவாரா? என்பது தெரியவரும்.

                            ஆர்யன்கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவரை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேச அனுமதி வழங்கப்படுவதாக மும்பை ஆர்தர் ஜெயில் நிர்வாகம் நேற்று அறிவித்தது. ஆர்யன்கான் வெளியில் இருந்து சட்ட விதிக்கு உட்பட்டு உதவிகளை பெறலாம் என்றும் சிறைத்துறை கூறி இருந்தது.

                            இதன் காரணமாக நடிகர் ஷாருக்கான் இன்று காலை 9 மணிக்கு மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறைச்சாலைக்கு சென்றார். அங்கு அவர் அனுமதி பெற்று ஆர்யன்கானை சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் மகனுடன் ஷாருக்கான் பேசிக்கொண்டு இருந்தார்.

                            அப்போது அவர் கண்ணீர் மல்க தைரியமாக இருக்கும்படி ஆர்யன்கானிடம் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு மிகவும் உருக்கமானதாக இருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

                            9.35 மணிக்கு ஷாருக்கான் அங்கிருந்து விடைபெற்று காரில் புறப்பட்டு சென்றார். ஷாருக்கான் சிறைக்கு வந்திருக்கும் தகவல் அறிந்ததும் ஏராளமானோர் ஆர்தர் சாலையில் குவிந்தனர். இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

                              Posted in சினிமா

                              ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்

                              ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்

                              பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான பிரகாஷ் ராஜ், தற்போது மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார்.

                              ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்
                              பிரகாஷ் ராஜ்
                              தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.

                              தற்போது இவர் கைவசம் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

                              பிரகாஷ் ராஜ்

                              இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர் இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தமிழ்

                              திரையுலகை சேர்ந்த தனுஷ், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

                                Posted in Uncategorized

                                120 மொழிகளில் பாடி அசத்தும் சிறுமி

                                120 மொழிகளில் பாடி அசத்தும் சிறுமி

                                எத்தனையோ சாதனையாளர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தன் சாதனையைத் தானே முறித்து புதிய சாதனை படைக்க விரும்பும் பெண் சுசேதா சதிஷ். பதினோராம் வகுப்பு படிக்கும் பதினாறே வயது நிரம்பிய சிறு பெண் சாதனைப் பட்டியலோ மிகப்பெரியது. இதுவரை கின்னஸ் உலக சாதனை உட்பட மூன்று உலக சாதனைகள் படைத்தவர். சென்ற ஆண்டில் உலகின் சிறந்த சிறுமி (குளோபல் சைல்ட் ப்ராடிஜி அவார்டு) என்ற விருது பெற்றிருக்கிறார்.

                                படிப்பு, இசை இரண்டிலும் தன் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும் சுசேதா நடனமும் கற்றவர். தன் இசையால் உலகை நிறைத்துவிடத் துடிக்கும் வேகமும் விவேகமும் நிறைந்த சிறுமி. இறைவன் கருணையும், பெற்றோரின் ஒத்துழைப்பும் முயற்சியும் சுசேதாவின் கடின உழைப்போடு சேரும் பொழுது உலகம் வியக்கும் அற்புதங்கள் தொடர்கின்றன. தேசபக்தியோடு இந்தியாவை நேசிக்கும் துபாயில் வசிக்கும் பெண். தன் மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

                                என் தாத்தா சேலத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தார்கள். அப்பாவும் அங்கே படித்தவர்கள் தான். நான் பிறந்தது இந்தியாவில். வளர்ந்தது படிப்பது எல்லாம் துபாயில். ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு இந்தியா வந்துவிடுவோம். இந்தியாவில் எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் விட இந்தியா வர நான் விரும்புவதற்கு முக்கியக் காரணம் என் வழிகாட்டியாக ஆசானாக நினைக்கும் பின்னணி இசைப் பாடகி பி சுசிலா அம்மாவைப் பார்ப்பதற்குத் தான். சென்னை வந்தவுடன் அவர்களைத் தான் பார்ப்போம்.

                                இந்தியாவிலும் பாடியிருக்கிறேன். இந்தியாவுக்காகவும் பாடியிருக்கிறேன். இந்த கரோனா நோய்த்தொற்று காலத்தில் எங்கும் பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பதில் வருத்தம் தான். என்றாலும், இந்த நேரத்தை புதிய சாதனை படைப்பதற்கான பயிற்சி செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டதில் மகிழ்ச்சி.

                                மூன்று வயதில் எனக்குப் பாடுவதைக் கேட்டவுடன் திரும்பப் பாடவருகிறது என்று என் பெற்றோர் கர்நாடக இசை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். சில வருடங்களில் ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்வதற்கும் ஆரம்பித்தேன். ஹிந்துஸ்தானியில் என் குரு சுஜாதா ஹரிஷ்குமார் மற்றும் ஹரிப்ரசாத் ஆவர். தற்பொழுது, ஆஷா மேனன் அவர்களிடம் கர்நாடக இசை கற்றுக் கொண்டும் பயிற்சி பெற்றும் வருகிறேன்.

                                மூன்று வயதில் முதன்முதலில் மேடையேறிப் பாடினேன். ஒரு மெல்லிசைக் கச்சேரி. அந்த வயதில் பயமோ பாடியதன் முக்கியத்துவமோ எதுவும் பெரிதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. வாய்ப்புக் கிடைத்தது பாடினேன் அவ்வளவு தான். ஆனால், மறக்க முடியாத அனுபவம் முதன்முதலில் பி சுசீலா அம்மா பாடிய மேடையில் அவர்களோடு அவர்களுடன் பாடினேன் என்பது. அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கு நினைத்தாலும் எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். அப்போது எனக்கு ஒன்பது வயது. துபாயில் நடைபெற்ற மெல்லிசை நிகழ்ச்சிக்கு சுசிலா அம்மா வந்திருந்தார்கள். அன்றைக்குத்தான் அவர்களை நான் பார்த்தேன். அதே மேடையில் பாடுவதற்கு எனக்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறேன்.

                                இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய சாதனை முயற்சி ஒன்றை அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த ஆண்டில் புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறேன். ஒரே நேரத்தில் நூற்றி இருபது மொழிகளில் தொடர்ந்து பாடியதற்காக இந்த கின்னஸ் உலக சாதனை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதிலே முப்பது இந்திய மொழிகள், தொண்ணூறு வெளிநாட்டு மொழிகள். இதற்கு ஏழு மணி நேரம் இருபது நிமிடங்கள் ஆயிற்று. இந்தியத் துணைதூதரகத்தில் நடைபெற்ற என்னுடைய இந்த முயற்சியை இந்தியப் பிரதமர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பிரதமர் இருவருக்கும் சமர்பித்தேன்.

                                பாடுவதற்கு நிறைய பயிற்சி எடுத்துக் கொண்டேன். எந்த மொழியானாலும் அதிலே உச்சரிப்பு மிகச் சரியாக இருக்க வேண்டும். அதை ஆய்வு செய்வதற்கென்று தனி குழுவை நியமித்திருப்பார்கள். அவர்கள் நாம் அந்த மொழியில் சரியாகப் பாடியிருக்கிறோம் என்று நிபுணர்களைக் கொண்டு உறுதிப் படுத்திக் கொண்ட பிறகே நம்முடைய சாதனையை அங்கீகரிப்பார்கள். அப்படியான அங்கீகாரம் கிடைத்த நேரத்தில் என்னுடைய கடின உழைப்புக்கு வெகுமதி கிடைத்துவிட்டதாக நாம் சாதித்திருக்கிறோம் என்பதாக ஆனந்தம் ஏற்பட்டது.

                                2018-ஆம் வருடம் நூற்றி இரண்டு மொழிகளில் ஆறு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் பாடினேன். ஒரு நிகழ்ச்சியில் அதிக மொழிகளில் பாடியதற்காக மியாமியில் இயங்கும் அமெரிக்க அமைப்பு உலக சாதனை என்று அங்கீகாரம் தந்தது. அதோடு அதிக நேரம் பாடிய சிறுமி என்றும் மற்றொரு அமைப்பு ஏற்றுக் கொண்டது. இதனால் எனக்கு இரண்டு உலக சாதனை செய்ததற்கான மதிப்பு வழங்கப்பட்டது.

                                132 மொழிகளில் பாடுவதற்குப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எல்லா மொழிகளையும் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. பாடுவதற்கென்று ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் இசையை நாம் சரியாக உள்வாங்கி கொண்டால் போதும். நம்முடைய நாட்டில் பல மொழிகள் பேசுகிறோம் என்பதால் இதைப் புரிந்து கொள்வது சுலபம். மலையாளம் பேசுவதற்கும் தெலுங்கு பேசுவதற்கும் தமிழ் பேசுவதற்கும் வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறோமே. ஒவ்வொரு மொழிக்கும் உள்ள ரிதம் அந்த மொழி பேசும் பொழுது பிடிபடும் அது போலத் தான் பாட்டிலும். அதோடு இது எனக்கு இறைவன் கொடுத்த வரம் என்று என் பெற்றோர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது உண்மையும் கூட.

                                தொடர்ந்து இசை சார்ந்த பல பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். அவற்றுள் மூன்று முக்கியமானவை. இந்தியாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பின் பொழுது தேசிய ஒற்றுமைக்கான சின்னம் என்று பிரதமர் அறிவித்த பொழுது ஒற்றுமைக்கான கீதம் என்று இருபத்தியொன்பது இந்திய மொழிகளில் பாடி அதனை பிரதமருக்கு அனுப்பினேன். சென்ற ஆண்டில் கரோனா விழிப்புணர்வுப் பாடல் இருபத்திரண்டு இந்தியா மொழிகளில் பாடி வெளியிட்டோம். இந்த ஆண்டில் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு பாடல் நான்கு மொழிகளில் வெளியிட்டோம். இவையெல்லாம் இந்த கொள்ளை நோய் காலத்தில் எனக்கு மிகுந்த மனநிறைவு தந்த பணிகள்

                                ஆம். அப்பொழுது எனக்கு எட்டு வயது. கலாம் ஐயா துபாய்க்கு ஒரு புத்தக கண்காட்சிக்காக வந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் யாருக்குத் தான் இருக்காது? எங்களுக்கும் அந்த ஆவல் இருந்தது. அவர்களைப் பார்ப்பதற்காக இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். என்ன காரணத்தாலோ ஐயா வருவது தாமதமாகி விட்டது. மக்கள் கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டுவிட்டது.

                                பார்ப்பதற்காக விண்ணப்பம் செய்து காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு நேரமின்மையால் கிடைக்கவில்லை. எனக்கும் தான். ஐயா புறப்படும்பொழுது என்னுடைய அப்பா கலாம் ஐயா வணக்கம் என்று தமிழில் உரக்கச் சொன்னார்கள். ஐயா புயல் வேகத்தில் திரும்பிப் பார்த்து எங்களை அழைத்தார்கள். அப்பா என் குழந்தையை நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று சொன்னவுடன் ஐயா என்னை அருகில் அழைத்துப் பேசியதோடு என் தலையில் கை வைத்து சில நிமிடங்கள் அப்படியே கண்களை மூடி நின்றுவிட்டார்கள். மனதில் இன்னதென்று சொல்ல இயலாத மறக்க முடியாத அனுபவமாக அந்த நிகழ்வு இருந்தது. கலாம் அவர்களின் ஆசி எனக்குக் கிடைத்தது வரம் என்றே கருதுகிறேன்.

                                இன்னும் நிறைய மொழிகளில் பாடக் கற்றுக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் சென்று பாட வேண்டும். இசையின் நுட்பங்களை புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய கின்னஸ் சாதனையை நானே முறியடித்து உலகின் அத்தனை மொழிகளிலும் பாட வேண்டும்

                                  Posted in சினிமா

                                  எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் – சூர்யா

                                  எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் – சூர்யா

                                  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

                                  எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் – சூர்யா
                                  ஜெய் பீம் படத்தில் சூர்யா


                                  நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

                                  இப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வெளியாக இருக்கிறது.

                                  ஜெய் பீம்

                                  இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சூர்யா, எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.

                                    Posted in சினிமா

                                    நயன்தாரா, திரிஷா பாணியில் லட்சுமி மேனன்

                                    நயன்தாரா, திரிஷா பாணியில் லட்சுமி மேனன்

                                    தமிழில் விஷால், ஜெயம் ரவி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான லட்சுமி மேனன், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

                                    விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன்

                                    உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அதன்பிறகு சில வருடங்கள் படங்களில் நடிக்கவில்லை.

                                    பின்னர் புலிக்குத்தி பாண்டி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.

                                    இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்த லட்சுமி மேனன், தற்போது முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்க உள்ளார்.

                                    நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக உயர்ந்துள்ளதால், தற்போது லட்சுமி மேனனும் அந்த ரூட்டுக்கு மாறி உள்ளார்.

                                      Posted in சினிமா

                                      குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா

                                      குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா

                                      தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

                                      குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா
                                      கணவருடன் ஸ்ரேயா
                                      தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

                                      ரஜினிகாந்த்துடன் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, சிக்குபுக்கு, ரவுத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் சில இந்தி, ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

                                      கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.

                                      வழக்கமாக கணவருடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை பதிவிட்டு வந்த ஸ்ரேயா தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் தனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆனதாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

                                      கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனக்கு குழந்தை பிறந்ததாக ஸ்ரேயா கூறியுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படமும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.