ஐவர் படுகொலை - இரண்டு பெண்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது

விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது

20 விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு உதவி செய்த சந்தேகிக்கப்படும் 10 பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று (07) வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மது விருந்து நடாத்திய மாணவ மாணவிகள் கைது

மது விருந்து நடாத்திய மாணவ மாணவிகள் கைது

வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்து நடத்திய பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிமடை பொலிஸார் குறித்த கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

பழைய கட்டிடத்தில் விருந்து வைத்து கொண்டிருந்த 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு பாடசாலை மாணவிகளை பொலிஸார் கைது செய்தனர்.

அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுவை இந்த மாணவர்கள் அருந்தியதாக கூறப்படுகிறது.

மேலும் விசாரணையில், அவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி கைவிடப்பட்ட கட்டிடத்தில் கூடி மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல் பூட்டை உடைத்து கட்டிடத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது அடி கொடுத்த நாடு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது அடி கொடுத்த நாடு


இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது அடி கொடுத்த நாடு

இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது ,அடி கொடுத்த நாடு ,
தக்குதல் முறியடிப்பு என தகவல்

வீடியோ

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை இன்று (29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜே.சமீரா (38 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கஞ்சா போதை பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

இதே நேரம் தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேநேரம் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நாகத்தன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சந்ரசிறி உட்பட அவரின் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது 52,160 மில்லிகிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை மோசடி டொக்டர் கைது

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை மோசடி டொக்டர் கைது

சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த நபர் கொழும்பு 07, விஜேராம மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் அவர் வைத்தியராகவும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை மோசடி டொக்டர் கைது

சந்தேக நபர் நாரஹேன்பிட்டியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மக்களை அழைத்துள்ளார்.

சந்தேகநபர் 9 பேரிடம் இருந்து 7 லட்சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், அவருக்கு பணம் வழங்கிய நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கொழும்பு இல 5 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த மோசடிக்கு உதவிய அவரது மனைவி, விசாரணை அதிகாரிகளை தவிர்த்து தலைமறைவாகி இருப்பதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கேரள கஞ்சாவுடன் கடற்படையினர் கைது

கேரள கஞ்சாவுடன் கடற்படையினர் கைது

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது

பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது

குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை ஒடுக்கும் விசேட நடவடிக்கைக்கு அமைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பொரளை பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழு உறுப்பினர் கெசல்வத்த தினுகவின் நெருங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கஞ்சிபானை இம்ரானின் குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கோடா ரிஸ்வான்’ என அழைக்கப்படும் அஹமட் ஜிப்ரி அஹமட் றிஸ்வான் என்ற சந்தேக நபர் 6,400 மில்லிகிராம் ஹெரோயினுடன் மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், காஜிமா வத்தை மைதானத்திற்கு அருகில் 6,620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குற்ற கும்பலைச் சேர்ந்த புகுடு கண்ணாவின் உதவியாளரான முனவீர ஆராச்சிலகே சுசந்த என்ற சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
Posted in இலங்கை செய்திகள்

உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது

உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது

உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் விசாரணை பிரிவில் இன்று சரணடைந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய தம்பதியினர் கடவத்தை பிரதேசத்தில் வசித்து வருவதுடன், கணவர் தொழில் ரீதியாக பொருளியல் ஆசிரியர் ஆவார்.

உக்ரைன் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள், இந்த நாட்டை விட்டு அனுப்பியவர்களின் எண்ணிக்கை 55 ஆகும்.

இவர்களில் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு குழுவும் உள்ளடங்கியதுடன், சந்தேகநபர்கள் உக்ரைன் இராணுவத்தில் கெப்டனாக கடமையாற்றி தற்போது உயிரிழந்துள்ள ரனிஷ் ஹெவெகேவின் ஒருங்கிணைப்புடன் குறித்த தரப்பினரை உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. .

இலங்கையில் இருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வழியாக போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது

இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து சந்தேகநபர்கள் 02 முதல் 05 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறியவர்களில் சிலர் உக்ரைனுக்கு சென்றுள்ள போதும் மேலும் சிலர் போலந்துக்குள் செல்ல முடியாமல் நாடு திரும்பியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு குழு அஜர்பைஜானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றச் சென்றவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் தலைமையில், ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்தப்பட்ட கப்பல் மீட்பு 35 ஆயுத தாரிகள் கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கடத்தப்பட்ட கப்பல் மீட்பு 35 ஆயுத தாரிகள் கைது


கடத்தப்பட்ட கப்பல் மீட்பு 35 ஆயுத தாரிகள் கைது

கடத்தப்பட்ட சரக்கு கப்பல் மீட்பு ,35 ஆயுத தாரிகள் கைது .


இந்தியா கடற்படை அதிரடி நடவடிக்கை ,சோமாலியா கடல் கொள்ளையர்கள் சிக்கினர்

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு இருவர் கைது

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு இருவர் கைது

எல்பிட்டிய – பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் கடை ஒன்றின் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (16) தல்கஸ்வல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றத்தை திட்டமிட்ட சந்தேகநபரும், அதற்கு உதவிய சந்தேக நபருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தல்கஸ்வல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இருவர் என தெரியவந்துள்ளது.

குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 03 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 11ஆம் திகதி பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவல சந்தி பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் T-56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மலேசியாவில் இலங்கையர்கள் உள்ளிட்ட 158 பேர் கைது

மலேசியாவில் இலங்கையர்கள் உள்ளிட்ட 158 பேர் கைது

மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் அந்நாட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் 158 பேருக்கு மலேசியாவில் தங்குவதற்கு உரிய விசா இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சுற்றிவளைப்பில் 83 ஆண்கள், 54 பெண்கள், 08 சிறுவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கைது செய்யப்பட்டதாக மலேசிய மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில், இலங்கையர்களைத் தவிர, இந்தோனேசியா, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் மலேசியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவது மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முறையான அனுமதியின்றி வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்குமிடம் வழங்கியமை குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் மலேசிய மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இஸ்லாம் மதத்திற்கு மாறிய குற்றவாளி 14 வருடங்களின் பின் கைது

இஸ்லாம் மதத்திற்கு மாறிய குற்றவாளி 14 வருடங்களின் பின் கைது

மட்டக்களப்பில் இரு சிறுமிகளை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த நிலையில் மேல் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்பளித்து திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, 14 வருடங்களாக மதம் மாறி பெயரை மாற்றி பொலன்னறுவையில் தலைமறைவாகி இருந்து வந்த குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (11) இவர் கைது செய்யப்பட்டதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நபர் நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய் ஒருவரை திருமணம் முடித்த நிலையில் மனைவியின் இரு பெண் பிள்ளைகளை அடித்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 2009 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி வந்துள்ள அவரை, மட்டு மேல் நீதிமன்றிம் கடந்த 2016-2-25 ம் திகதி குற்றவாளி என இனங்கண்டு அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் அதனை 3 மாதத்தில் செலுத்த

தவறின் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 2 இலட்சம் ரூபாவை செலுத்துமாறும் அதனை செலுத்த தவறின் 2 வருட சிறைத்தண்டனையும் வழங்கி அவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது .

இஸ்லாம் மதத்திற்கு மாறிய குற்றவாளி 14 வருடங்களின் பின் கைது

இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் பாதிக்கப்பட் சிறுமிகள் உட்பட குடும்பத்துடன் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறி அங்கு ஹூசையன் என பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்து வந்துள்தை கண்டறிந்தனர்.

இதனையடுத்து பொலிஸ் சார்ஜன் அரசரட்டணம் கோகுலன் குறித்த குற்றவாளியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சாமர்த்தியமாக பேசி இன்று பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் உதவி

யுக்திய நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் உதவி

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துாவ தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொலிஸ் அதிகாரிகளின் குறைபாடுகள் இருந்தால், அந்த சோதனைகளுக்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றால், குறிப்பாக வீதி மறியல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் என்றால், கடுமையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியிருந்தால், அந்த மாகாணத்திற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் ஊடாக இராணுவத்தினரை தொடர்பு கொள்ள முடியும்” என அவர் தெரிவித்தார்

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தங்கம் போன்ற வாளுடன் ஒருவர் கைது

தங்கம் போன்ற வாளுடன் ஒருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தங்கம் போன்ற வாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று (07) மாலை லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கெப் வாகனத்தில் குறித்த தங்க வாள் கடத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது..

வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தார்.

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

மீகஹகிவுல, களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை பூஜா நகரைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி இன்று (06) பதுளை சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அதேநேரம் சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது

கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இரணைமடு குளம் அருகில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவினை வானில் பறக்கவிட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொரளை துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது

பொரளை துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது


பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கிராண்ட்பாஸ் சேதவத்த பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குற்றச் செயலுக்கு சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் 22 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது

வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது

காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான நேற்று (29) இரவு சட்டவிரோதமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி

வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது

எனப்படும் சஹ்ரான் ஹசீமின் சாகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017-3-10 திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த சஹ்ரானின்

ழுவைச் சேர்ந்த 3 பேர் உட்பட 30 பேர் ஒன்று கூடிய நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் சஹ்ரானின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார்

விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது

கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி ஒருவர் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனை செய்த போது அதனுள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது

அதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் குறித்த பெண், களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பயாகல முலட்டியன பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான பெண் தனது 6 வயது மகளுடன் அங்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 550 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் ரஷ்யா உளவாளிகள் ஆறு பேர் கைது

லண்டனில் ரஷ்யா உளவாளிகள் ஆறு பேர் கைது

லண்டனில் ரஷ்யா உளவாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது .

பால்கெரியா நாட்டை சேர்ந்த ஆறு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கைதானவர்கள் சிலர் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளனர் .

பிரிட்டன் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது .

வீடியோ