தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்

தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்

தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

மேலும் அனுரா ஆட்சியின் வருகையின் பின்னர் மீளவும் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் மீளவும் ஓங்கி ஒழிக்க ஆரம்பித்துள்ளது .

பாதாள உலக குழுக்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுவதாக தோற்ற பாடு ஒன்று காண்பிக்க படுகிறது .

எனினும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களு பின்புலத்தில் இராணுவ புலனாய்வு குழு மற்றும் அதன் தொடர்பு பட்ட அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றன .

உச்ச நீதிமன்றம் முதல் ,சாதாரண தெரு வரையும் இந்த துப்பாக்கி தோட்டாக்கள் துளையிட்டு வருகின்றன .

இது மக்களுக்கு விடுக்க படும் மிக பெரும் மிரட்டலாக பார்க்க படுகிறது .

இதன் எதிரொலி விரைவில் சிங்கள தேசத்தில் மீளவும் ஆட்சி கவிழிப்புக்கான போராட்டங்கள் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு இருவர் கைது

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு இருவர் கைது

எல்பிட்டிய – பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் கடை ஒன்றின் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (16) தல்கஸ்வல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றத்தை திட்டமிட்ட சந்தேகநபரும், அதற்கு உதவிய சந்தேக நபருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தல்கஸ்வல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இருவர் என தெரியவந்துள்ளது.

குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 03 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 11ஆம் திகதி பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவல சந்தி பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் T-56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.