Tag: கைது
தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது
தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது
வவுனியா நகர சபை மைதானத்தில் நடைப் பயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடைப் பயிற்சிக்காகக் கடந்த சில நாட்களாக வவுனியா நகர சபை மைதானத்துக்கு வந்து சென்றுள்ளார். வழமை போன்று நேற்றுமுன்தினம் மாலையும் நகர சபைக்கு அவர் வந்துள்ளார்.
தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது
இதன்போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்களை நகர சபை வளாகத்தில் உள்ள மோட்டடார் சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் இருக்கைக்குள் வைத்து பூட்டி விட்டு நடைப் பயிற்சிக்குச் சென்றுள்ளார்.
நடைப் பயிற்சி முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அந்தப் பெண் வந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
தப்பிச் சென்ற லொறி சாரதி கைது
தப்பிச் சென்ற லொறி சாரதி கைது
அரலகங்வில, அலுத்வெவ கெடேஹந்திய பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீதியில் நபரொருவர் விழுந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தலையில் பலத்த காயம் அடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற லொறி சாரதி கைது
உயிரிழந்தவர் அலுத்வெவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.
குறித்த பகுதியில் நெல் கொள்வனவு செய்யும் நபர் இவ்விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரது லொறியை சோதனையிட்ட போது அதில் உயிரிழந்தவரின் தலைமுடி மற்றும் ஆடைகளின் பாகங்கள் காணப்பட்டுள்ளன.
கடந்த 14ஆம் திகதி இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கடந்த 15ஆம் திகதி மாலை தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடு சலிந்து சகா கைது
குடு சலிந்து சகா கைது
குடு சலிந்து சகா கைது ,பாதாள உலக தலைவர்களில் ஒருவரான ‘குடு சலிந்து’ எனப்படும் சலிந்து மல்ஷிகவின் பிரதான சகா ஒருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குடு சலிந்துவின் பிரதான சகாவான பியும் ஹஸ்திக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினால் இன்று (15) அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பான தகவலை வௌியிட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்த போதைவஸ்து பாவனை
இலங்கையில் அதிகரித்த போதைவஸ்து பாவனையால் ,நாடெங்கும் குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
இந்த போதைவஸ்து பாவனையால் அதிகரிக்கும் குற்றங்கள் காரணமாகவே இலங்கையில் சட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது .
நாள்தோறும் போதைக்கு அடிமையாகி ,அந்த போஹியில் இளைக்க படும் குற்றங்கள் காரணமாக மக்கள் சொல்லேன்னா துயரை சந்தித்து வருகின்றனர் .
இந்த குற்றங்களை தடுக்க வேண்டும் என்றால் இவ்வாறான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த பட வேண்டும் என மக்கள் மன்றம் வேடனை நிற்கிறது .
அதற்கு அமைவாக சட்டம் ஒழுங்கை கடைபிடித்து மக்களை காப்பாற்ற இவ்வாறன குற்றாவளிகளை போலீசார் கைது செய்திட ஆரம்பித்துள்ளனர் .
ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் 7பேர் கைது
ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் 7பேர் கைது
ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் , கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுத்த சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள், கலஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் குழுவினரே, கலஹா, தெல்தோட்டை கிரேட்வெளி தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து, ஏழு பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில், ஐந்து ஆண்களும், பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்.
கொழும்பு, ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் 7பேர் கைது
பொலிஸ் நிலையத்தில் உள்ள கூண்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பால் பாக்கெட்டுகளில் சயனைட் விஷம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர், பால் பாக்கெட்டுகளை கொள்வனவு செய்வது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சிக்கியுள்ளன.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பால் பாக்கெட்டை வழங்கியதையடுத்து, அவற்றை குடித்த இருவரும் மயங்கிவிட்டனர். ஆபத்தான நிலையில்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கலஹா கிரேட்வேலி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர், மருதானையில் பணிபுரியும் போது, பிரதான சந்தேகநபருக்கு தங்குமிடத்தை வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டது. அங்கு வைத்தே இந்த கொலையை திட்டமிட்டதாக கூறப்படுகின்றது. அந்த குழுவினர், கலஹா, கிரேட்வலி தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஜிந்துபிட்டி பிரதேசத்தில் ஜனவரி 24 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது, அங்கு வந்திருந்த ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தக் கொலை சந்தேகநபர்களுக்கு, விஷம் கலந்த பால் பாக்கெட்டுகளை வழங்கியவர்களும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில்,கலஹா கிரேட்வேலி தோட்டத்திலுள்ள வீடொன்றில் புதிதாக வந்தவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். அதனையடுத்து ஆட்டுபட்டிதெரு வீதி பொலிஸ் குழுவொன்று, கலஹாவுக்கு விரைந்து அங்கிருந்த ஏழுபேரையும் கைது செய்து, ஆட்டுபட்டிதெரு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய சந்தேக நபர் கைது
அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை திருடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டார்.
அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய சந்தேக நபர் கைது
அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் நேற்று (13) அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
ஒரு மணி நேரத்தில் சந்தேக நபர் அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் களவாடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யுக்திய நடவடிக்கையின் கீழ் 625 சந்தேக நபர்கள் கைது
யுக்திய நடவடிக்கையின் கீழ் 625 சந்தேக நபர்கள் கைது
யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 80 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
160 கிராம் ஹெரோயின், 152 கிராம் ஐஸ், 10 கிலோகிராம், 745 கிராம் கஞ்சா மற்றும் 683 போதை மாத்திரைகள் சந்தேகநபர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 80 சந்தேக நபர்களில் 03 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்பில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், 74 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது
சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது
மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் சுடப்பட்டதாகவும், சந்தேக நபர் உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் தப்பிச் சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதாகவும் அவர் லுனுகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்கிரிய, பொலவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் சார்ஜன்டிற்கு சொந்தமான துப்பாக்கி, ரவைகள் மற்றும் சந்தேக நபர் வந்த முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சந்தேகநபரை மறைத்து வைப்பதற்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் 42 வயதுடைய வதுரகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேகநபர் உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கம்பஹா மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் சேறும் பூசம் வகையில் இந்த அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாணந்துறையில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் காலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் அந்த அரசியல்வாதியின் பெயரை வௌிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது
“சிஐடியினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கையில் 400,000 ரூபா பணம் இருந்தது. சமூக வலைதளத்தை பயன்படுத்தி எங்களை அவதூறாக பேசுபவர். அரசியல்வாதி ஒருவர் தான் பணத்தை கொடுத்துள்ளார்.
அவர் காரில் கொழும்பு சென்று டொலர்களை ரூபாயாக மாற்றிய போதே கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் எங்களை, அரசாங்கத்தை, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அனைவர் தொடர்பிலும் அவதூறு
பரப்புகின்றனர். அதனால் தான் இந்த ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். அரசாங்கங்களை கவிழ்க்க வேண்டுமானாலும் இந்த
சமூக ஊடகங்கள் ஊடாக சேறு பூசுகின்றன. இந்த சட்டம், சமூக ஊடகங்களை தவறாக கையாளுபவர்கள் மட்டுமே பிரச்சினையாக அமையும்” என்றார்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
திருமணம் செய்த பெண் கைது
திருமணம் செய்த பெண் கைது
இலங்கையில் ஆண்ணொருவரை திருமணம் செய்து கொண்டு விசா இன்றி தந்தையுடன் தங்கியிருந்த எத்தியோப்பிய பெண், கண்டி சுற்றுலாத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இலங்கையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அம்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பதாகவும், வெளிநாட்டு பெண், மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவாரோ என அஞ்சிய இலங்கையை சேர்ந்த கணவர் பெண்ணின் கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எத்தியோப்பிய பெண் தனது முந்தைய திருமணமான எத்தியோப்பியாவில் தனது இரண்டு குழந்தைகளுடன் இந்த நாட்டிற்கு வந்துள்ளார், மேலும் அவரது விசா ஜனவரி 17 ஆம் திகதி காலாவதியானது, சம்பவம் குறித்து கண்டி சுற்றுலாப் பொலிஸ் பிரிவு இந்தியாவிலுள்ள எத்தியோப்பிய தூதரகத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த பலர் கைது
பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த பலர் கைது
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை கண்டறியும் விசேட நடவடிக்கையில் நேற்று (07) மாத்திரம் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பொது போக்குவரத்து சேவையில் பாலியல் தொல்லை கொடுத்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தவிர திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் சிவில் உடையில் பல பொலிஸ் குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது
யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (05) அதிகாலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன
யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
யுக்திய சுற்றிவளைப்பில் இன்று (04) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களும் குற்றத் தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 108 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 152 கிராம் ஹெரோயின், 134 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களில் போதைக்கு அடிமையான ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
இதன்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 03 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 108 சந்தேக நபர்களில் 08 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் 95 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமறைவாகியிருந்த 02 சந்தேக நபர்களும் குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலயங்கில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 567 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 203 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 132 கிராம் ஹெராயின், 121 கிராம் ஐஸ், 15 கிலோ 900 கிராம் கஞ்சா, 5,416 கஞ்சா செடிகள்,16 கிராம் ஹேஷ்,
209 கிராம் மாவா, 128 கிராம் மதனமோதகம் மற்றும் 45 கிராம் தூள் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 567 சந்தேக நபர்களில் 06 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
மேலும், கைது செய்யப்பட்ட 203 சந்தேக நபர்களில், குற்றப் பிரிவினருக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 21 சந்தேக நபர்களும் மற்றும் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 160 பேரும் உள்ளனர்.
கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 11 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்னாள் அமைச்சரிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.
கணவரை கத்தியால் குத்திய மனைவி
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்
யுக்திய பொலிஸ் நடவடிக்கை 702 குற்றவாளிகள் கைது
யுக்திய பொலிஸ் நடவடிக்கை 702 குற்றவாளிகள் கைது
யுக்திய பொலிஸ் விசேட நடவடிக்கை மூலமாக 702 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாஹ்க யுக்திய நடவடிக்கை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார் .
கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற யுக்திய பொலிஸ் விசேட நடவடிக்கை மூலம் இந்த குற்றவாளிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது இன்று (31) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்களும் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 230 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
இந்த நடவடிக்கையின் போது 146 கிராம் ஹெரோயின் மற்றும் 119 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மூன்று சந்தேக நபர்களிடம் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குற்றத் தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட 230 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 19 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 204 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலியத்தை ஐவர் படுகொலை மேலும் மூவர் கைது
பெலியத்தை ஐவர் படுகொலை மேலும் மூவர் கைது
பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹூங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அன்றைய தினம் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலும் ஒரு சந்தேக நபரை மாத்தறையில் வைத்து கைது செய்தனர்.
நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் புஸ்ஸ ஆகிய பகுதிகளை சேர்ந்த 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலியத்தை ஐவர் படுகொலை மேலும் மூவர் கைது
இந்த சந்தேக நபர்கள், படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்தியதற்காகவும், குற்றச் செயல்களின் போது பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், கொலைகளுக்காக துப்பாக்கிகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக முன்னதாக இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கணவரை கத்தியால் குத்திய மனைவி
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்
ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது
ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது
பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) காலை ரத்கம பிரதேசத்தில் ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது
கைது செய்யப்பட்டவர்கள் புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் குறித்த இரு பெண்களில் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து புஸ்ஸ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது
மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது
.சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23, 24 மற்றும் 25 வயதுடைய மொரவக, ருக்கஹவில, அலுஹ்தாராம, இமதுவ மற்றும் கிடலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்,மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கலே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் .
மேலும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் மாலைத்தீவு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஒரு கப்பலில் 7 இலங்கை மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 இலங்கை மீனவர்களும் இருந்தனர் ,அனைவரும் மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








































