பேருந்து விபத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த பேருந்து

பள்ளத்தில் பாய்ந்த பேருந்து

ஹட்டன், சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இன்று (08) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சலங்கந்தை பஸ் தரிப்பிடத்துக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இயந்திரகோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

    ஓய்வூதிய வயதெல்லை
    Posted in இலங்கை செய்திகள்

    அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வரை நீடிப்பு

    அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வரை நீடிப்பு

    அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65ஆக அதிகரித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்ற சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான

    வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக

    அதிகரிப்பதற்கான முன்மொழிவு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி

      12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி

      12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

      15 முதல்19 வயது வரையான சிறுவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 12 முதல் 15 வயது வரையான பல்வேறு சிக்கல்கள் காணப்பட்ட சிறுவர்களுக்கும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

      இதன் கீழ் சுமார் 30- ஆயிரம் சிறுவர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் செலுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

      பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு இணைவாக இதுவரை 3 ஆவது தடுப்பூசி செலுத்தப்படாத மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் இருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கு உயர்ந்த பட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

      எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை வழமைக்குக் கொண்டு வந்து அனைத்து மாணவர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் வகையில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        பெண்களை துரத்தி குற்றிய குளவிகள்

        பெண்களை துரத்தி குற்றிய குளவிகள்

        குளவிக் கொட்டியதில் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அறுவரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட

        வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

        டிக்கோயா ஒட்டரி தோட்டத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துகொண்டிருந்த போதே குளவிக் கூடு களைந்து கட்டியுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          30 அமைச்சர்களாக்கும் கோட்டா – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

          30 அமைச்சர்களாக்கும் கோட்டா – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

          அமைச்சரவை இப்படிதான் மாற்றப்படும்

          அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

          இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை

          ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

          மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் வேலைத்திட்டம், இன்று (07) முன்னெடுக்கப்பட்டது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

          பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வது கூட்டுப் பொறுப்பாகும்.

          குறைபாடுகளை மாத்திரம் விமர்சித்தால் அது குறித்த நபரின் திறமையின்மையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

          மேலும், மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்

            Posted in இலங்கை செய்திகள்

            வயலுக்குள் இராணுவத்தை இறக்கும் கோட்டா

            வயலுக்குள் இராணுவத்தை இறக்கும் கோட்டா

            சேதன பசளை பயன்பாடு தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இராணுவத்தை

            பெரும் போக பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடுத்த போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

            சியம்பலாண்வையில் விவசாயிகளை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

              மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
              Posted in இலங்கை செய்திகள்

              வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

              வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

              வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

              வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது.

              அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டதுடன்,

              வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்தார்.

              இந்நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

              அவருக்கு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்களால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் பணிக்குச் செல்ல வேண்டும்

                கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் பணிக்குச் செல்ல வேண்டும்

                கொரோனாத் தொற்று ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து பணிக்குச் செல்ல வேண்டும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

                இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பிரான்ஸில் ஒவ்வொரு நாளும் கொரோனோ பாதிப்பு

                அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

                எனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சுகாதார ஊழியர்கள் சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால்

                அவர்கள் வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க

                தேவையில்லை. மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                மேலும் இந்த நடவடிக்கையால் பிறருக்கு தொற்று பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. எனினும்

                அத்தியாவசிய மருந்து தேவைகள் தொடர்ந்து நடைபெற இந்த நடவடிக்கை

                மேற்கொள்ளப்படவுள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                  கோழிகள்
                  Posted in இலங்கை செய்திகள்

                  142 கோழிகள், வெள்ள அனர்தத்தினால் இறந்துள்ளன.

                  மட்டக்களப்பு, காத்தான்குடியில் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட 142 கோழிகள், வெள்ள அனர்தத்தினால் இறந்துள்ளன.

                  கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட

                  வௌ்ளத்தில், காத்தான்குடி முதலாம் குறிச்சி பகுதியிலுள்ள கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட

                  142 கோழிகள் வியாழக்கிழமை (06) இறந்துள்ளன.

                    Posted in இலங்கை செய்திகள்

                    மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

                    மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

                    முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்

                    பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

                    2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள

                    குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறே மைத்திரி கோரிநின்றார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்

                      இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்

                      கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

                      திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் திட்டம் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்தியாவும் வரவேற்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இந்த கடினமான காலங்களில்” இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றார்.

                      “இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸூக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஜெய்சங்கர், நம்பகமான நண்பரான இந்தியா இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும். நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்” என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

                      இதேவேளை, கருத்துரைத்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,

                      இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, ​​அந்த நாட்டு மக்களுக்கு அது எப்போதும் துணை நிற்கும் என்றார். மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் கடந்த மாதம் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாக்சி கூறினார்.

                      மொத்தம் 68 மீனவர்கள் மற்றும் 10 படகுகளை இலங்கை தடுத்து வைத்துள்ளது, இவர்களில் 12 மீனவர்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்களை விடுவிக்க இந்திய உயர் ஸ்தானிகராலயம் செயல்பட்டு வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

                      கடற்றொழில் தொடர்பான கூட்டு செயற்குழு கூட்டத்தை விரைவில் நடத்துவது குறித்து இரு தரப்பும் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று பாக்சி கூறினார்.

                      “திருகோணமலை எண்ணெய் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக செய்திகளை பார்த்தோம். இலங்கையுடனான எமது இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியப் பகுதி எரிசக்திப் பாதுகாப்பு” என்று அவர் கூறினார்.

                      “திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணைகளை நவீனமயமாக்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். இது எரிபொருளைச் சேமிப்பதை அனுமதிக்கும் மற்றும் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும்,” என்று பாக்சி மேலும் கூறினார்.

                      திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை (6) கைச்சாத்திடப்பட்டது.

                      லங்கா ஐ.ஓ.சி.யின் கீழ் இருந்த திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையில் உள்ள பெரும்பாலான தாங்கிகள் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் அபிவிருத்தித் திட்டமாக வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அலுவலகம் வியாழன் (6) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

                      இந்தியாவின் கடன் வரியை நீட்டிப்பது குறித்த கேள்விக்கு, கடந்த மாதம் இலங்கை நிதியமைச்சர் பெசில் ராஜபக்சே புதுடெல்லிக்கு சென்றதை பாக்சி குறிப்பிட்டார்.

                      “இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்த சவால்களை எதிர்கொள்வதில் தனது அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து அவர் இந்திய தரப்புக்கு விளக்கினார். இந்தியா எப்பொழுதும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் இலங்கை நமது அண்டை நாடுகளுக்கு முதன்மையான கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும்,” என்று அவர் கூறினார்.

                      ராஜபக்ஷவின் பயணத்தின் போது, ​​உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, செலுத்தும் நிலுவை பிரச்சினைகள் மற்றும் இலங்கையில் இந்திய முதலீடுகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து விவாதித்ததாக அவர் கூறினார். “மேலும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று பாக்சி கூறினார்.

                      காக்கை தீவு மீன் சந்தை
                      Posted in இலங்கை செய்திகள்

                      காக்கை தீவு மீன் சந்தை, இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை

                      காக்கை தீவு மீன் சந்தை, இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை

                      காக்கை தீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை போன்றவை, சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி

                      மன்றத்தினால் சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை, இதனை ஆராய்ந்து தனக்கு

                      அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

                      காக்கைதீவு மீன் சந்தை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய (06) தினம் விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

                      இந்த முறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

                      இதேவேளை மின்விளக்கு பொருத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதேச கடற்றொழில் செயற்பாட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்தனர்.

                      குறித்த கோரிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்ட கடற்றொழில் அமைச்சர், முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        எரிவாயு தட்டுப்பாடு – பல நூறு உணவகங்கள் அடித்து பூட்டு

                        எரிவாயு தட்டுப்பாடு – பல நூறு உணவகங்கள் அடித்து பூட்டு

                        இலங்கையில் சிலிண்டர் தட்டு பாடு மற்றும் வெடித்து சிதறி வந்த நிலையில் இருபது வீதமான

                        உணவகங்கள் தற்காலிகமா அடித்து மூட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        கோட்டா ஆட்சியில் மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          போலி சீன உர கப்பலுக்கு -6.7 மில்லியன் டொலர் செலுத்தும் இலங்கை

                          போலி சீன உர கப்பலுக்கு -6.7 மில்லியன் டொலர் செலுத்தும் இலங்கை

                          சீனாவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட உரம் போலியான ,தரமற்ற முறையில் உள்ளவை

                          என கோரி குறித்த கப்பல் சீனாவுக்கு திருப்பி அனுப்ப பட்டது

                          மேற்படி விடயம் தொடர்பில் சர்ச்சைகள் முறுகல் எழுந்து வந்த நிலையில் தற்போது குறித்த

                          கப்பலுக்குரிய 6,7 மில்லியன் டொலரினை இலங்கை நாளை செலுத்த உள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு

                          தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு

                          வாழ்க்கை சுமைக்காக அரச ஊழியர்களை போன்று தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் ஒரே மாதிரியாக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

                          நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் தனியார் துறைக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு அவசியம் கிடைக்க வேண்டும் என்று நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

                          இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர், இந்த விடயம் தொடர்பிலான முதலாவது சுற்று பேச்சுவார்த்தை இம்மாதம் 7 ஆம், 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

                          தனியார் துறையில் ஆடை தொழில்துறை, பெருந்தோட்ட தொழில்துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை நேரடியாக மற்றும் அலுவலக சேவை சட்டத்தில் உள்வாங்கும்

                          நிறுவனங்கள் அடங்கலாக அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிமார்களை அழைத்து அவர்களுடன் இந்த 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும்

                          நட்புறவுடனான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

                            பேருந்து ஒன்றை
                            Posted in இலங்கை செய்திகள்

                            பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.

                            பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.

                            குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

                            கைது செய்யப்பட்டவர்கள் 39, 46, 53 வயதுடைய கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

                            பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில்

                            மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கராஜ மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                            கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக

                            விசாரணைகளுக்காக மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்

                            ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்

                            ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்

                            தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                            அவருக்கு நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனையில், கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                            கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

                            இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுடன், கடந்த சில தினங்களாக

                            நெருங்கி பழகியவர்கள், தங்களை தாங்களாகவே சுய தனிமையில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது

                              யாழ் பஸ்மீது தாக்குதல்- பீதியில் பயணிகள்
                              Posted in இலங்கை செய்திகள்

                              யாழ் பஸ்மீது தாக்குதல்- பீதியில் பயணிகள்

                              யாழ் பஸ்மீது தாக்குதல்- பீதியில் பயணிகள்

                              யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து

                              சபைக்குச் சொந்தமான பஸ் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                              நெல்லியடி பஸ் நிலையத்தில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த பஸ்ஸை, இடைமறித்த

                              கும்பலொன்று பஸ்ஸின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், சாரதி மற்றும் நடத்துனர் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

                              அதில, காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                              சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

                              கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                              அதேவேளை , பருத்தித்துறை – திருகோணமலைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை

                              போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது , நெல்லியடி புறாப்பொறுக்கி சந்தி பகுதியில் வைத்து இனம் தெரியாத கும்பல் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

                              இன்று (04) புதன் கிழமை அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

                              சம்பவம் தொடர்பில் சாரதியால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                              முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு

                                தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு

                                ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா

                                மாளிகையில் இன்று (05) முற்பகல் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

                                ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை, தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

                                தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்காக வருகை தந்திருந்த பொதுமக்களும், ஜனாதிபதி அவர்களுக்கு அமோக வரவேற்பளித்தனர். இதன்போது அந்த மக்களுடன் சுமூகமாகக்

                                கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அவர்களின் நலன் விசாரித்தறிந்து கொண்டார்.

                                மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும்

                                புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  வீட்டுக்கு வந்த பெண்ணை கற்பழித்த நபர் கைது

                                  வீட்டுக்கு வந்த பெண்ணை கற்பழித்த நபர் கைது

                                  திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை

                                  விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் இன்று (4) உத்தரவிட்டார்.

                                  மூதூர், தோப்பூர், பங்களா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                                  சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

                                  சந்தேகநபர் அயல் வீட்டில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோர்களினால் மூதூர் பொலிஸ் நிலையத்தில்

                                  மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

                                  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.