Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்குள் நுழைந்த மர்ம நபர் கைது

இலங்கைக்குள் நுழைந்த மர்ம நபர் கைது

பிரான்சில் இருந்து இலங்கைக்குள் அபுதாபிவழியாக போலி கடவுசீட்டில் நுழைந்த நபர் ஒருவர்


இலங்கை பண்டாரநாயக்க வான் தளத்தில் வைத்து கைது செய்ய பட்டுளளார்

இவ்விதம் நுழைந்தகவர் யார் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Posted in Uncategorized

    கொழும்பு வீதிகளில் மூன்று மர்ம மனித உடல்கள் – உடல் பாகங்கள் மாயம்

    கொழும்பு வீதிகளில் மூன்று மர்ம மனித உடல்கள் – உடல் பாகங்கள் மாயம்

    கொழும்பு மற்றும் வெள்ளவத்தை பீச் பகுதியில் அடையாளம் தெரியாத மூன்று அஆண்களுடைய சடலங்கள் மீட்க பட்டுள்ளன

    சமீப காலங்களாக கடல் நீரேரிகளை மையமாக வைத்து மனித உடல்கள் மீட்க பட்டு வருகிறது ,.

    இது ஆளும் கோத்தபாயவின் நிழல் டிவிஷன் படைகளினால் கொலை செய்ய பட்டு வீச படும்

    மனித உடல்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றது

    இவ்வாறு கொலை செய்ய பட்டுள்ள மனித உடல்களில் சில மனித பாகங்கள் காணாமல்

    போயுள்ளதாக திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

      கள்ள காதலி
      Posted in இலங்கை செய்திகள்

      கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்

      கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்

      முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்

      கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

      கடந்த 08 ஆம் திகதியன்று முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் தென்னந்தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 36 அகவையுடைய குடும்ப பெண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

      இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் கள்ளக்காதலனாக வாழ்ந்து வந்த நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற முள்ளியவளை பொலிசார் பின்னர் நேற்று (09) அவரை கைது செய்துள்ளனர்.

      பொலிசாரால் கைது செய்யப்பட்ட 33 அகவையுடைய கிளிநொச்சி ஜெயபுரத்தினை சேர்ந்த ஆணினை இன்று (10) முள்ளியவளை பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.

      முல்லைத்தீவு நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

      இதன்போது கொலைக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் 20.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

        சீனா வெளிநாட்டு அமைச்சர்
        Posted in இலங்கை செய்திகள்

        தமிழர் பகுதிகளில் அகல கால் பதிக்கும் சீன நிறுவனம் – வேலை வாய்ப்பாம்

        தமிழர் பகுதிகளில் அகல கால் பதிக்கும் சீன நிறுவனம் – வேலை வாய்ப்பாம்

        தமிழர் தாயாக பகுதிகளை இலக்கு வைத்து சீன நிறுவனம் நிறுவ படுகிறது ,இந்த நிறுவனம்

        தமிழர்கள் வாழ் வாதாரத்தை பெருக்குவதாக கூறி கொண்டு அங்கு தனது அகல கால் பாதிப்பை நிலை நாட்டை முயல்கிறது

        இதற்கு ,கோட்டா ,மகிந்தாவுக்கு பல கோடி லஞ்சமாக வழங்க பட்டுள்ளதாக செய்திகளும் கசிகிறது

        நாட்டில் விலைவாசிகளை உயர்த்தியும் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் ஊடக

        இந்த நிறுவனங்களை அங்கு அகல கால் ஊன்ற வைக்கும் நகர்வு முன்னெடுக்க பட்டுள்ளது

          Posted in Uncategorized

          தனது பிறந்த நாளில் மாணவர்களுக்கு உதவி புரிந்த சுவிஸ் தமிழச்சி -படங்கள் உள்ளே

          தனது பிறந்த நாளில் மாணவர்களுக்கு உதவி புரிந்த சுவிஸ் தமிழச்சி -படங்கள் உள்ளே

          இன்று திருமதி ச நவநீதமணி ஆசிரியை அவர்களால் ,சகானா திருச்செல்வம் (சுவிஸ்) அவர்களின் பிறந்தநாள் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது,

          நாடு கடந்து புலத்தில் வசித்தாலும் தமது தொப்பிள் கொடி உறவுகளை மறவாது இவ்விதம் இவர்களுக்கு உதவி புரிந்தமை நம்மை எல்லாம் நெகிழ வைக்கிறது

          இன்று போல் என்றும் நீடூழி வாழ வாழ்துகொறோம் ,மேலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

          மேற்படி தகவலை குறித்த கல்விசாலை அதிபர் அவர்கள் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,சகானாவுக்கு எதிரி இணையமும் நெஞ்சார வாழ்த்துகிறது .வீழ்க தமிழ்,வளர்க உன் புகழ் ,

            வீட்டுக்குள் புகுந்த கார்
            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்

            வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்

            லண்டன் Albany Road, Sittingbourne. பகுதியில் கார் ஒன்று வீட்டு மதிலை இடித்து உள்ளே ;புகுந்தது

            ,இதில் வீடு மதில் பலத்த சேதமடைந்துள்ளது

            வேகமாக பயணித்த அவுடி ரக கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து இவ்விதம் விபத்தில் சிக்கியது ,சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

            போதையில் காரை செலுத்தியதுடன் காருக்கு காப்புறுதியும் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              கணவனை அசிட் ஊற்றிக் கொன்ற மனைவி , மாமி கைது

              கணவனை அசிட் ஊற்றிக் கொன்ற மனைவி , மாமி கைது

              தினமும் மதுபோதையில் வந்து தகராறை ஏற்படுத்தும் இரண்டு பிள்ளைகளின் தந்தை மீது அசிட் வீச்சு தாக்குதலை நடத்தி, கோடரியால் வெட்டிக்​ கொன்ற சந்தேகநபர்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

              உயிரிழந்தவரின் மனைவியும் மாமியாருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

              இந்த மாதம் 20ஆம் திகதி வரை சந்தேகநப​ர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

              35 வயதுடைய நபரே இவ்வாறு அசிட் வீச்சுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன், 31 வயதுடைய அவருடைய மனைவியும் 52 வயதுடைய மாமியாரு​மே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

              இந்த மாதம் 8ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் உயிரிழந்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன், கையில் கத்தியை வைத்தக்கொண்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

              இதன்போது தனது தம்பியின் வீட்டுக்கு உயிரிழந்தவரின் மனைவி சென்ற நிலையில், அவர் அங்கேயும் சென்று தகராறு செய்துள்ளார்.

              இதன்போதே, ஆத்திரமடைந்த மனைவி தனது கணவன் மீது அசிட்டை ஊற்றியுள்ளதுடன், தம்பியின் வீட்டிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.

              இதன்போது காயமடைந்த நபர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

              இதனையடுத்து, சந்தேகநபர்களான தாயும் மகளும் குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு நேற்று (9) இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்

                Posted in Uncategorized

                குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

                குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

                இலங்கை குடா ஓயா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பூசகர் மற்றும் அவரது மனைவி

                பிள்ளைகளை வானில் கடத்தி சென்று எழுபத்தி ஐந்து லட்சம் கொள்ளையடித்த நல்லவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையின் விசேட வேட்டையில் சிக்கினார்

                இந்த கடத்தல் காரர்கள் பயன்படுத்திய வான் உள்ளிட்டவை மீட்க பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                  பேரூந்து டிப்பர் மோதல்
                  Posted in இலங்கை செய்திகள்

                  பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்

                  பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்

                  அம்பாறையில் இருந்து திருகோணமலை போக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து

                  ஒன்றுடன் டிப்பர் ரக வாகனம் மோதியதில் அதில் பயணித்த 26 பேர் படுகாயமாடைந்தனர்

                  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி

                  விபத்து தொடர்பில் மூதூர் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                    சீனா வெளிநாட்டு
                    Posted in இலங்கை செய்திகள்

                    சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு

                    சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு

                    இலங்கை வந்தடைந்துள்ள சீனாவின் வெளிநாட்டு அமைச்சருடன் இலங்கை அதிபர்

                    கோட்டாபாயாவும் சந்தித்து பேசியுள்ளார்

                    இந்த சந்திப்பின் பொழுது இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பபு அபிவிருத்தி தொட்ரபில்

                    கலந்துரையாட பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது

                      பொலிஸாரின் வலையில்
                      Posted in Uncategorized

                      பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்

                      பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்

                      தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடவத்தையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

                      களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                      சோதனையின் போது, ​​ஹோட்டலில் 33 பெண்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                      பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

                      கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                        Posted in Uncategorized

                        கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை

                        கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை

                        இலங்கை கொழும்பு கடல் பகுதியிகள் முதலைகள் உலவி வருவதால் மீனவர்கள் மற்றும்

                        மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க ப்ட்டுள்ளது


                        குறித்த கடல் பகுதியில் மக்கள் குளித்து வருகின்ற நிலையில் இந்த அவசர அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது

                          பலர் உயிரோடு எரிப்பு
                          Posted in Uncategorized உலக செய்திகள்

                          இராணுவ தாக்குதலில் 200 மக்கள் படுகொலை – பலர் உயிரோடு எரிப்பு

                          இராணுவ தாக்குதலில் 200 மக்கள் படுகொலை – பலர் உயிரோடு எரிப்பு

                          நையீரியாவில் காட்டுப்புற பகுதியில் அமைந்துள்ள கிராம புறங்களை இலக்கு வைத்து அரச

                          இராணுவம் நடத்திய ஈரூடக தாக்குதலில் சிக்கி இதுவரை 200 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்

                          தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுக்க பட்டுள்ளதாகஆளும் அரசு கூறி வருகிற பொழுதும்

                          அப்பாவி மக்கள் அங்கு பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு அரச இராணுவத்தின் மனித வெறி தாக்குதலை அம்பல படுத்துயுள்ளன

                          இங்கு பல கிராமங்களில் மக்கள் உயிருடன் எரியுண்டு மரணித்துள்ளதான காட்சிகளும்

                          வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                            கடலில் மிதக்கும்
                            Posted in இலங்கை செய்திகள்

                            முல்லை கடலில் மிதக்கும் புதைக்க பட்ட வாகனங்கள்

                            முல்லை கடலில் மிதக்கும் புதைக்க பட்ட வாகனங்கள்

                            முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது.

                            தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில்

                            கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

                            இந் நிலையில், நேற்று (08) காலை புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில்

                            புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

                            உழவு இயந்திரத்தின் பெரிய ரயர்கள் உள்ளிட்ட பாகங்கள் கடற் கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது.

                            2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

                            சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து

                            முல்லைத்தீவு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், உழவு

                            இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப்பார்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                              கணவனை வெட்டி கொன்ற மனைவி

                              கணவனை வெட்டி கொன்ற மனைவி

                              மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டதில் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                              குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.

                              உயிரிழந்தவர் கந்தலந்த குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                              உயிரிழந்த நபர் குடிபோதையில் தனது மனைவியை தினமும் தாக்குதவாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மனைவி மற்றும் குழந்தைகள் அயல் வீட்டில் தஞ்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

                              நேற்று இரவும் குடிபோதையில் கூரிய ஆயுதம் மற்றும் அமிலத்துடன் வீட்டுக்கு வந்த கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

                              இதன்போது, கோடரி ஒன்றினால் கணவனை மனைவி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                              தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் 31 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

                              குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் அரிசி விலை ஏற்றம் – மக்கள் அவதி

                                இலங்கையில் அரிசி விலை ஏற்றம் – மக்கள் அவதி

                                இலங்கை ஒரு கிலோ அசிசி தற்போது 160 முதல் 180 ரூபா வரை விற்க படுகிறது ,இதனால் மக்கள்

                                மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

                                அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை திடீரென அதிஅக்ரித நிலையில் ஆளும்

                                ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடு கோபத்தில் உறைந்துள்ளனர்

                                  லொறியை துரத்தி சென்ற எம்பி
                                  Posted in Uncategorized

                                  லொறியை துரத்தி சென்ற எம்பி

                                  லொறியை துரத்தி சென்ற எம்பி

                                  இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சியில் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து

                                  வ்ருகின்றனர் ,எரிவாயு ,மின்சார வெட்டு ,அத்தியாவசிய பொருட்களை விலை என தொடர்ந்த இன்னல்களை சநதித வண்ணம் உள்ளனர்

                                  இவ்வேளை எம்பி ஒருவர் டயனா க​மகே தமது வீட்டில் எரிவாயு தீர்ந்துள்ள நிலையில் எரிவாயு ஏற்றி சென்ற லொறி ஒன்றை துரத்தி சென்றுள்ளார்

                                  அந்த லொறி எரிவாயுவை இறக்கிய நிலையத்தில் வைத்து அதனை கொள்வனவு சையதுசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                                    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் கொரானாவுக்கு 13 பேர் மரணம்

                                    இலங்கையில் கொரானாவுக்கு 13 பேர் மரணம்

                                    இலங்கையில் கடந்த தினம் ஏற்பட்ட கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 13 பேர்

                                    பலியாகியுள்ளதக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                                    எனினும் இவர்கள் வெளியிடும் இழப்புக்களை விட அதிக மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக

                                    சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                                      Posted in Uncategorized

                                      இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்

                                      இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்

                                      இலங்கையில் நாள்தோறும் இடம் பெறுகின்ற பல்வேறு பட்ட விபத்துக்களில் சிக்கி முப்பத்தி ஐந்து

                                      பேர் பலியாகிய வண்ணம் உள்ளதுடன் ,35 ஆயிரம் பேர் படுகாயமடைந்து வைத்யசாலைகளில்

                                      அனுமதிக்க பட்டு வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                                      மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                      சீனா
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      சீனா வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகிறார்

                                      சீனா வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகிறார்

                                      இலங்கையில் இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை அடுத்து சீனாவின் வெளிநாட்டு அமைச்சர்


                                      Wang Yi began இலங்கை வரவுள்ளதுடன் ,

                                      இவர் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதுடன் ,இலங்கையின் பொருளாதார

                                      அபிவிருத்தி தொடர்பாகவும் பேச உள்ளார் என தெரிவிக்க படுகிறது