Tag: அதிகாரி
விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்
விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்
குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் கடந்த10 ஆம் திகதி மாலை நடைபெற்றது.
குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார் நிலையில் இருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர்.
இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து மூன்று கூரிய வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து 40 வயதான சந்தேக நபரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான 17 வயது இளைஞன் ஒருவர் கூரிய கத்தியால் விசேட அதிரடிப்படையினர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது காயத்திற்கு உள்ளான விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 17 வயதுடைய இளைஞன் பாடசாலை செல்லும் மாணவன் எனவும் தெரிய வந்துள்ளது
Featured
இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்
இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்
கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் இன்றைய தினம் (16) இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்
- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்
- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்
- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்
- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு
- டெங்கு பாதிப்புகள் 76000-ஐத் தாண்டியுள்ளது
- ரத்மலானா பொருளாதார மையம் அருகே தீ
- காட்டுத்தீயைத் தொடர்ந்து பாறைச்சரிவு அபாயம்
- 305 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
- லாரி மோட்டார் சைக்கிள் மோதல் இருவர் பலி
தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்
தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்
உக்ரைன் நாட்டில் இருந்து தப்பி ஓடிய இரண்டாயிடம் அதிகாரிகளை உக்ரைன் இராணுவம் கைது செய்துள்ளது .
தமது குடும்பங்களுடன் உயிர் காப்பை தேடி ஓடி சென்ற இவர்களே இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளதாக உக்ரைன் எல்லை படைகள் தெரிவித்துள்ளன .
தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்
ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உயிர் பாதுகாப்பது காரணமாக ,தம்மை பாதுகாத்து கொள்ள மக்கள் அயல் நாடுகளை தேடி ஓடி செல்கின்றனர் .
அவ்வாறு சென்ற இந்த அரச அதிகாரிகள் சிறைபிடிக்க பட்டுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .
- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது
- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்
- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி
- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்
- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு
- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்
- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது
போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது
இலங்கை சீனன்குடா பொலிஸ் பிரிவில் போதை மாத்திரை வைத்திருந்த பொலிஸ்
அதிகாரி ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்
போதை பொருளுடன் கைது செய்ய பட்ட உயர்நிலை பொலிஸ் அதிகாரி தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்
இலங்கை பாதுகாப்பு படைகள் போதைவஸ்த்திற்கு அடிமையாகி ,குறித்த போதை பொருட்களை கடத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்
தமது அரச வாகனத்தில் மறைத்து எடுத்து செல்லும் பொழுது சிலர் சிக்கியும் இருந்தனர் ,
இலங்கையில் போதை பொருளுடன் நாளாந்தம் பலர் கைதாகி வருகினறனர்
போதைக்கு அடிமையான பெண்கள் உள்ளிட்ட சிறார்கள் கடத்தி ,கற்பழித்து கொலை செய்யப் படுகின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது
மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி போதை பொருளுடன் கைது
செய்ய பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
அனர்த்த நிவாரணப் பணிகளை முடித்துக்கொண்டு இரத்தினபுரி குருவிட்டவில் உள்ள
தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் நேற்று (31) வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குருவிட்ட, கோனாபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கிரியெல்ல பிரதேச
செயலகத்தின் அனர்த்த நிவாரண அதிகாரி புன்சிறி கருணாரத்ன இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வெள்ளம் சூழ்ந்த வீதியில் சுமார் 200 மீற்றர் தூரம்
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அடித்து பாய்ந்த வெல்ல நீரில் சிக்கி அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார் ,
,சடலம் அடி காயங்களுக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுள்ளது ,தமக்கு உதவிய அதிகாரி இறந்த செய்தி கேட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
படுகொலை
முள்ளி வாய்க்கால் இனப் படு கொலையின் பின்னர் சிங்கள பகுதிகள் எங்கும் ஆண்டு தோறும் இவ்விதமான வெள்ளத்தில் சிக்கி பேரழிவை சிங்கள தேசம் சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கை வரும் அமெரிக்கா அதிகாரி
இலங்கை வரும் அமெரிக்கா அதிகாரி
அமெரிக்காவின் ஆசிய நாடுகளுக்கான முதன்மை துணை உதவி செயலர் இலங்கை வருகிறார் ,
இவர் இலங்கையில் இடம்பெறும் தை பொங்கல் தமிழர் விழாவை முன்னிட்டு இலங்கையில் தங்கி இருப்பார் .
இவ்வேளையில் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சில் ஈடுபடுவார் என தெரிவிக்க பட்டுள்ளது
,கோத்தபாய அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் இலங்கை வரும் முதல் அமெரிக்கா உயர் அதிகாரி இவர் என்பது குறிப்பிட தக்கது
காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் .
காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் .
இலங்கை -எல்பிட்டிய பகுதியில் கடை ஒன்றுக்கு பொருட்கள் வாங்கிட சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் மீது
அந்த கடையின் உரிமையாளர் மகன் கோரமாக தாக்கியுள்ளார் .
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலை நடத்திய நபரை கைது செய்துள்ளனர்





































