Tag: விபத்தில்
விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
சந்திவெளி மற்றும் கடுவெல பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பெண்ணொருவரும் இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் பரங்கியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆகியோர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கடுவெல ஹன்வெல்ல – கொழும்பு வீதியில் கடுவெல நகருக்கு அருகில், பாதசாரி கடவையில் நடந்து சென்ற பெண் மீது லொறி ஒன்று மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
ரணால பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
விபத்தில் தந்தையும் மகளும் பலி
விபத்தில் தந்தையும் மகளும் பலி
வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் தந்தையும் மகளும் பலி
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 48 மற்றும் 16 வயதுடைய தந்தை மற்றும் மகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னர், லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
ருமேனியாவில் விபத்தில் சிக்கிய உக்ரைன் பயணிகள் பேரூந்து
ருமேனியாவில் விபத்தில் சிக்கிய உக்ரைன் பயணிகள் பேரூந்து
உக்ரைன் நாட்டு பயணிகள் நாற்பது பேரை ,
காவிய படி பயணித்த பேரூந்து ஒன்று, திடிரென விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது அதில் பயணித்த 12 பேர் பலத்த காயமடைந்தனர் .
வேகமாக பயணித்த வாகனம் ஒன்று பேரூந்துடன் மோதி சிதறியது ,
இதன் பொழுதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த பேரூந்தில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் உக்ரைன் இராணுவத்தினர் என, சுயாதீன தகவல்கள் சில குறிப்பிடுகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்
வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்
மொலகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மாவனல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (26) காலை விபத்துக்குள்ளானதுடன், மொலகொட பிரதேசத்தில் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்ததாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தனியார் பேருந்துகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்
கண்டியில் இருந்து பாணந்துறை நோக்கி அதிகாலை 05.35 மணியளவில் புறப்பட்ட தனியார் பேருந்து மாவனெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பேருந்துடன் வேகமாக முன்னோக்கி செல்ல முற்பட்ட வேளையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, பாணந்துறை பேரூந்து முன்னோக்கிச் சென்றதுடன், சிறிது தூரம் சென்ற பின், வீதியில் சென்றவர்கள் கைகளில் தடிகளுடன் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்க முற்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த எவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்காததால், விபத்து தொடர்பில் மற்றைய பஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிஸார் தெரிவித்தன
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த மூவரின் சடலங்களும் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
Featured
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த மூவரின் சடலங்களும் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் வெளிநாட்டவர்களுக்கும் காயம்
விபத்தில் வெளிநாட்டவர்களுக்கும் காயம்
விபத்தில் ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு ரஷ்ய பிரஜைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறை – கடவத்தை பகுதியில் இருந்து பயணித்த லொறி ஒன்றும், குறித்த குழுவினர் பயணித்த வேனும் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த வேன் சாரதி 25 வயதுடையவர் மற்றும் 59 வயதுடைய ரஷ்ய ஆண் ஒருவரும் ரஷ்ய பெண் ஒருவரும் விபத்தில் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
விபத்தில் மூன்று பெண்கள் பலி
விபத்தில் மூன்று பெண்கள் பலி
நாரம்மல – பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த சிற்றூர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக
குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய சமந்தா
விபத்தில் சிக்கிய சமந்தா
குஷி படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் காயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா
சமந்தா – விஜய் தேவரகொண்டா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவரை விவாகரத்து செய்த பிறகு மேலும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்
சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைக்கு வந்தது. அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு
தயாராக உள்ளன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டா – சமந்தா
நடிகையர் திலகம் படத்தை அடுத்து சமந்தா, விஜய் தேவரகொண்டா மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் குஷி. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது சண்டை காட்சி
ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம்
அடைந்தார்கள். இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலுதவி கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை
படப்பிடிப்பின்போது இருவருமே முதுகு பகுதி வலிப்பதாக தெரிவித்தனர். உடனே அருகில் உள்ள ஹோட்டலில் அவர்களை தங்க வைத்து பிசியோதெரபிஸ்ட்டை
வரவழைத்தோம். இருவருக்கும் பிசியோதெரபி போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றார். காஷ்மீரில்
படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திங்கட்கிழமை மதியம் படக்குழு ஹைதராபாத் கிளம்பி வந்தது. குஷி படம் வரும் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
விபத்தில் சிக்கி ஆறுபேர் மரணம்
விபத்தில் சிக்கி ஆறுபேர் மரணம்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்னல – கிரியுல்ல வீதியின் தலமெஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) கிரியுல்லயிலிருந்து பன்னல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த பஸ்ஸைக் கடக்கும்போது எதிர்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சந்தலங்காவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர் போபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிரியன்கல்லிய – அதியாகம வீதியில் அக்கரவெல்லிய கறுப்புப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 52 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) பிற்பகல் துவிச்சக்கர வண்டியுடன் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் முந்தலம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பத்துலுஓயா பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்று காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுங்கேணி நகரிலிருந்து புளியங்குளம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன் நாரம்மலயிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது மோதியதில் மஹவிலச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பெரகல – ஹாலிஎல வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கல்நேவ – தம்புத்தேகம வீதியில் புல்னேவ சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
விபத்தில் சிக்கிய பேரூந்து – 13 பேர் காயம்
விபத்தில் சிக்கிய பேரூந்து – 13 பேர் காயம்
இலங்கை மாத்தளை பகுதியில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த பயணிகள் பேரூந்து
சாலையை விட்டு விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்
,மேலும் பேரூந்து பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
விபத்தில் சிக்கி மூவர் மரணம்
விபத்தில் சிக்கி மூவர் மரணம்
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
நாள் தோறும் இலங்கையில் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர் என்ற புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிட தக்கது
வீதி விபத்தில் 10 பேர் மரணம்
வீதி விபத்தில் 10 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கி பத்து பேர் பலியாகியுள்ளனர்
ஏழுபேர் ஊந்துருளி விபத்தில் ,மூவர் பாதசாரிகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
காவல்துறையினரின் அசமந்த போக்கின் காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன
ஒரே நாளில் வீதி விபத்தில் 11 பேர் மரணம்
ஒரே நாளில் வீதி விபத்தில் 11 பேர் மரணம்
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் விபத்தில் சிக்கி 12 பேர் மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கோவிட் நோயானது மக்களை மிரட்டி கொன்று குவித்து வரும் நிலையில் இவ்வாறான
விபத்துக்களில் அதிக மக்கள் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் ஒருமாத வீதி விபத்தில் 205 பேர் மரணம்
இலங்கையில் ஒருமாத வீதி விபத்தில் 205 பேர் மரணம்
இலங்கையில் கடந்த சித்திரை மாதம் மட்டும் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கி 205 பேர் மரணமாகியுள்ளனர் ,
மேலும் இதே மாதத்தில் மாட்டு சுமார் 1,959 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன .மேலும் 1,254 பேர் படுகாயமடைந்துள்ளனர்
சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளதுடன் வீதி
விதிமுறைகளை பின்பற்றாது சென்றமையும் ஒரு காரணமாக உள்ளது
பெருக்கெடுக்கும் விபத்துக்களை தடுக்க முடியாது சிங்கள காவல்துறை திணறி வருகிறது






























