Tag: நீரில்
லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர்
லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர்
லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர் லோக்கல் ஓயாவில் சுற்றுலா சென்றிருந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற இரட்டைப் படகு கவிழ்ந்ததில்,
ஹசலக்க காவல்துறை
அவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஹசலக்க உயிர்காப்புப் பிரிவு மற்றும் மதுரு ஓயா சிறப்பு அதிரடிப்படையினர், ஹசலக்க காவல்துறையின் உதவியுடன் நேற்று காலை அவர்களது உடல்களை மீட்டனர்.
ஆற்றில் உள்ள ஒரு தீவுக்கு அருகில் குளித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டனர்.
விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஆற்றுப் படுகையில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
உயிரிழந்தவர்கள் கண்டி, லெவெல்லாவைச் சேர்ந்த கே.எம்.எம்.டபிள்யூ.அசங்க இந்திக்க பண்டார (48) மற்றும் கட்டுகஸ்தோட்டா, கொண்டதெனியாவைச் சேர்ந்த சனக பண்டார ஏகநாயக்க (42) என அடையாளம் காணப்பட்டனர்.
கட்டுகஸ்தோட்டா பகுதியைச் சேர்ந்த
கட்டுகஸ்தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 ஆண்கள், 14 பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் அடங்கிய குழுவினர்,
மஹியங்கனாவில் உள்ள லோகல் ஓயாவில் உள்ள பிடெனிபிட்டியா இயற்கை பண்ணைக்குச் சென்றிருந்தனர். அப்பயணத்தின் போது லோகல் ஓயா தீவில் குளித்திருந்தனர்.
இருப்பினும், அவர்கள் குளித்த பிறகு தீவில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பலத்த காற்று வீசியதால், அவர்களில் பலர் மிதவைப்படகில் ஏறி பண்ணைக்கு விரைந்து திரும்பினர்.
நீரில் மூழ்கி உயிரிழந்த இரு ஆண்களைத் தவிர, மற்ற அனைவரும் உயிர் காக்கும் மேலங்கிகளை அணிந்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அரவா பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) சமன் குமார தலைமையிலான பொலிஸ் குழு,
உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) வெஹித்த தேசப்பிரியா, உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்கள் கே.எம்.ஏ.கே. பண்டார மற்றும் சமாஜ்வாடி
பொலிஸ் கண்காணிப்பாளர்கள் (SSP) ஜகத் ரோஹனா ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா
31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா
31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!!
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் நுவரெலியா

சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளமை தொடர்பாக தகவல்கள்
கிடைக்கப்பெற்றபோதும் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
போக்குவரத்து பாதிப்பு தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மின்சார தடை போன்ற
காரணங்களால் தகவல்களை உறுதிப்படுடுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா வலப்பனை கொத்மலை மதுரட்ட ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவம நிலையத்தால் மண்சரிவிற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நுவரெலியாவில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு பிரவேசிக்கும் பிரதான பாதை முற்றாக நீரிழ் மூழிகியுள்ளமை காரணமாக
வைத்தியசாலைக்கு நோயாளிகளை கொண்டு செல்வதிலும் வைத்தியர்கள் தமது கடமைக்கு திரும்புவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்திசாலையின் சேவைகள் பாதிப்பு
இருந்த போதிலும் வைத்திசாலையின் சேவைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல நகரங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நுவரெலயிh நகரம் 1994 ஆம் ஆண்டு நுவரெலியா நகரின் பிரதான வீதி பஸ்தரிப்பிடம் என்பன நீரிழ் மூழ்கியது.

அதனைத் தொடர்ந்து இன்று 27.11.2025 நுவரெலியா நகரின் பிரதான வீதி பஸ்தரிப்பு நிலையம் உட்பட நுவரெலியா நகரம் முற்றாக செயல் இழந்துள்ளதுடன் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இது தவிர ஆவெலியா வைத்தியசாலை பகுதி மகிந்த மாவத்தையின் ஒரு பகுதி எதிரிசிங்க மாவத்தையின் ஒரு பகுதி குதிரைப்பந்தய திடல் அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மாகாஸ்தோட்ட மூன்பிலேன் நேஸ்பி
பம்பரகலை போன்ற பகுதிகளிலும் பாரிய அளவில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடுகள் விவசாய நிலங்கள் விவசாய பயிர்கள் என்பன முற்றாக சேதமடைந்துள்ளது.
பிரதான பாதைகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை நுவரெலியா கண்டி பிரதான பாதையில் கெரன்டி எல்ல பகுதியில் முன்னெச்சரிக்கை காரணமாக பாதை மூடப்பட்டுள்ளதுடன் ஒரு சில இடங்களில் மண்சிரிவுகள்
ஏற்பட்டுள்ளன.இதன் காரணமாக நேற்று நுவரெலியா கொழும்பு நுவரெலியா கண்டி பகுதிகளுக்கான பேருந்துகள் மிக குறைந்த அளவிலேயே சேவையில் ஈடுபட்டன.
குறிப்பாக தனியார் சொகுசு பேருந்துகள் முற்றாக சேவையில் இடுபடவில்லை.அதே நேரம் இரயில் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு பதுளை இரயில் போக்குவரத்து நானுஒயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வலப்பனை ஹங்குரன்கெத்த உடபுஸ்ஸல்லாவ இராகலை கந்தப்பளை ஹபொரஸ்ட் போன்ற பகுதிகளிலும் பாதைகள் சேதமடைந்துள்ளமை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தேவையான ஏற்பாடுகளை செய்துவருவதுடன்
அரசசார்பற்ற நிறுவனங்களும் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.அதே நெரும் சேத விபரம் தொடர்பாக முழுமையான அறிக்கை
ஒன்றை தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலையில் வழங்க முடியாது எனவும் தகவல்கள் தற்பொழுது திரட்டப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த பாரிய அனர்த்தம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாய நிலங்களும் விவசாய பயிர்களும் முற்றாக நீரிழ் மூழ்கியுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலைகள்
பாரிய அளவில் அதிகரிக்கலாம் அல்லது மரக்கறிகளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விவசாய திணைக்களம் தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிப்பு தொடர்பாக உரிய முறையில மதிப்பீடு
செய்யப்பட்டு அதற்கான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை ஒன்றையும் முன்வைக்கின்றார்கள்.
ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம்
ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம்
ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம் முருதவெல நீர்த்தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் 3.30 மணியளவில்.
நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார்
நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் வரல்ல மொரவக்க, வரல்ல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஜே.கே.பி. சுரேஷ் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நண்பர்கள் குழுவுடன் சுற்றுலாவிற்கு வந்து முருதவெல நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
நீரில் மூழ்கிய நபர் பின்னர் சுவசெரிய ஆம்புலன்ஸில் வலஸ்முல்ல அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சடலம் வலஸ்முல்ல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மித்தெனிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி சிறுவன் மரணம்
நீரில் மூழ்கி சிறுவன் மரணம்
நீரில் மூழ்கி சிறுவன் மரணம் , ஹால வெல பகுதியில் நீர்த்தோக்கத்தில் நீராடிச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கிபலியாகியுள்ளார் .Boy dies after drowning ( இன்றைய இலங்கை செய்திகள் )
மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .It has caused shock among the people.
பரிதாபகரமாக பலியாகி உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஹலவெல பகுதியை சேர்ந்த சிறுவனே சம்பவ இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இவ்விதம் நீரில் மூழ்கிய சிறுவனை உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பொழுதும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
இலங்கையில் நீர் எரிகளில் Water fires in Sri Lanka
இலங்கையில் நீர் எரிகளில் இவ்வாறு நீராட செல்கின்ற மக்களில் வருடம் தோறும் 1800க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான புதிய புள்ளி விவரங்கள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
அவ்வாறு இருந்தும் இந்த விபத்துக்கள் நடப்பது தெரிந்தும் நீர் நிலைகளில் மக்கள் இறங்கி நீராடிச் செல்வது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் தெளிவின்மையும் இல்லாத காரணத்தினாலேயே இந்த இறப்புகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இல்லாத நீரேரிகளில் பாதுகாக்கப்பட்ட முறையில் நீராடச் செல்வதால் இந்த மரணங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு
காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு
காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த படகு ஒன்று இன்று (19) காலை நீர் கசிவு காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.
குறித்த படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் நடுவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், பின்னர் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்க அமைவாக நடத்தப்பட்ட பொது ஏலத்தில் ஒரு நிறுவனத்தால் இந்தப் படகு வாங்கப்பட்டது, மேலும் அது பழுதுபார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், படகு மூழ்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

கடல் நீரில் மூழ்கிய களுத்துறை
கடல் நீரில் மூழ்கிய களுத்துறை
கடல் நீரில் மூழ்கிய களுத்துறை ,வடக்கு களுத்துறை பிரதேசத்தில் புதன்கிழமை (16) காலை கடல் பெருக்கெடுத்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
களுத்துறை கெலிடோ கடற்கரை அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள 200 வீடுகள், சுற்றுலா
விடுதிகள், களுத்துறை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலக வளாகம் மற்றும் பல கறுக்கு வீதிகள் கடல் நீரில் மூழ்கி காணப்பட்டுள்ளது.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்
கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்
கிளிநொச்சி மருதநகர் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் நீர் பாசன கால்வாயில்
இருந்து ஒன்றரை வயது சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது
சிசு தவறி விழுந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
சடலம் இரண்டு கிலோ மீட்டர் தொலையில் இருந்து மீட்க பட்டுள்ளது
கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இந்த சிசு மரணம் அந்த கிராம பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்
இலங்கை அக்கரைப்பற்று வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராட சென்ற
இரு சிறுவர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளனர்
நீரில் அடித்து செல்ல பட்ட அவர்களை மக்கள் மீட்டு அதே பகுதி மருத்துவ மனையில்
சேர்க்க பட்ட பொழுதும் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்
இலங்கையில் ஆண்டு தோறும் 800 க்கு மேற்பட்டவர்கள் இவ்விதம் நீரில் மூழ்கி
மரணமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

















