Tag: துப்பாக்கி
துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயம்
துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயம்
களனிய திப்பிட்டிகொட பகுதியில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (25) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வெல்லம்பிட்டிய, அங்கொட, பேலியகொட மற்றும் தொம்பே பகுதிகளை சேர்ந்த 24, 34 மற்றும் 44 வயதுடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.
T-56 ரக துப்பாக்கியே இதன் போது துப்பாக்கிதாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
பொலிஸாா் துப்பாக்கிச் சூடு
பொலிஸாா் துப்பாக்கிச் சூடு
ஊரகஸ்மங்ஹந்தி பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் ஒருவா் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொருவரை தாக்கிய சம்பவம் தொடா்பில் சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது, அவர் கூரிய ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளார்.
அதனைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.
சந்தேக நபர் 26 வயதுடையவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
வயல்வெளியிலிருக்கும் குடிசையில் தனித்திருக்கும் போது குறித்த சிறுவன் துப்பாக்கியைக் கையாண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதையடுத்து, வயலில் அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிறுவனின் பெற்றோர், குடிசைக்கு விரைந்து வந்து பார்த்த போது சிறுவன் காயமடைந்து கிடந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.
துப்பாக்கிகளுடன் இருவர் கைது
துப்பாக்கிகளுடன் இருவர் கைது
பசறை – அமுனுமுல்ல பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான 3 துப்பாக்கிகளுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த 50 மற்றும் 38 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு முச்சக்கரவண்டி சாரதி பலி
துப்பாக்கிச் சூடு முச்சக்கரவண்டி சாரதி பலி
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (22) பிற்பகல் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த அடையாளந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்..
இதன்போது முச்சக்கரவண்டி சாரதியான 27 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பதவிய, புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
38 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 8.30 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு
இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு
காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தடல்ல பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் இரவு வேளையில் இடம்பெற்ற டீஜே இசையை பார்த்துக் கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இரண்டு சந்தேகநபர்கள் வந்துள்ளதாகவும், சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்தவரின் உறவினர் என்பதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்
கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்
கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்புபகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்பபடுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்
இதன் போது காயமடைந்த ஐந்து மாத கர்ப்பிணியான பெண் உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே
படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
கணவன் மது போதைக்கு அதிகம் பழக்கப்பட்டவர் என்பதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறும் எனவும் இதன் விளைவாகவே மனைவி மீதான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய நபர் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
பகிஸ்தானில் பாடசாலை அருகே துப்பாக்கி சண்டை 10 பேர் பலி 8 பேர் காயம்
பகிஸ்தானில் பாடசாலை அருகே துப்பாக்கி சண்டை 10 பேர் பலி 8 பேர் காயம்
பாகிஸ்தான் வடமேற்கு பொங்குதியில் உள்ள பாடசாலை அருகே
இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் பத்து
பேர் பலியாகியும் ,எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .
பலியானவர்களில் நான்கு காவல்துறையினர் என தெரிவிக்க படுகிறது .
பாகிஸ்தானில் தொடர்ந்து இவ்வாறான தாக்குதல்கள்
தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |அம்பலாங்கொடை, குளீகொட, மீட்டியகொட வீதியில் கொன்னதுவ பிரதேசத்தில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாதம்பாகம, உஸ்முதுல்லாவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுதத் சிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் தனது மனைவியை அவர் பணிபுரியும் அலுவலகத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பும் போதே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்தோ, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வந்த வாகனம் குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் இருவர் சுட்டு கொலை அதிகரிக்கும் ஆயுத கொலைகள்
இலங்கையில் இருவர் சுட்டு கொலை அதிகரிக்கும் ஆயுத கொலைகள்
இலங்கை அம்பலாங் கொடை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ,நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை,அடுத்து இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்.
மேலும் இருவர் துப்பாக்கி சூட்டு , தாக்குதலில் காயமடைந்துள்ளனர் .
இந்த உணவகத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கி சூட்டில், காயமடைந்த இருவர் மீட்க பட்டு மருத்துவமனையில் ,சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த தாக்குதலை நடத்தியவர்களை ,கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு
கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு
மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகில் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் அடையாளம் தெரியாத படகு ஒன்றும், ராய்காட் மாவட்டத்தில் உள்ள பரத்கோல் என்ற இடத்தில் ஒரு படகும் இருப்பதை பொலிசார் கண்டறிந்தனர்.
முன்னதாக ,மும்பையில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் படகு ஒன்று பணியாளர்கள் இல்லாமல் இருப்பதை சில உள்ளூர்வாசிகள் பார்த்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவம் தொடர்பில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:
எந்தவொரு பயங்கரவாத கோணமும் உறுதிப்படுத்தப்படவில்லை. நாங்கள் எதையும் நிராகரிக்கவில்லை. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்கிறோம். பொலிசார் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளனர். படகில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது.
படகு அவுஸ்திரேலிய பிரஜைக்கு சொந்தமானது. படகின் இயந்திரம் கடலில் உடைந்ததாகவும், அந்தப் படகில் இருந்தவர்கள் கொரிய படகு மூலம் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது என்றார் ஃபட்னவீஸ்.
முன்னதாக, ராய்காட் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் துதே மற்றும்
பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகை சோதனையிட்டனர்.
துப்பாக்கி சூடு ஒருவர் காயம் – ஆயுத தாரிகள் தப்பி ஓட்டம்
துப்பாக்கி சூடு ஒருவர் காயம் – ஆயுத தாரிகள் தப்பி ஓட்டம்
இலங்கை காலி பகுதியில் வீதியில் நின்றவர் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது.
ஊந்துருளியில் வருகை தந்த மூவர்,திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு ,அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் .
இவ்வாறு தப்பி சென்ற ஆயுத,தாரிகளை கைது செய்யும் ,நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் சமீப காலங்களாக, துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் ,அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நபர் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம், ஏன் மேற்கொள்ள பட்டது என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை.
தொடரும் விசாரணைகளில் , ஆயுத தாரிகள் கைது செய்ய, படுவார்கள் என காவல்த்துறை ,நம்பிக்கை வெளியிட்டுள்ளது .
துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது
துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது
இலங்கையில் பொலிஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைதுப்பாக்கியுடன் கைது செய்ய பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் அதிகாரியிடம் இருந்து சிறியரக துப்பாககி மற்றும் தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளன .
கைதானவர் பொலிஸ் அதிகாரி விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்.
துப்பாக்கி வைத்திருந்த குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது செய்ய பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன் படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அமெரிக்கா பீச்சில் துப்பாக்கி சூடு மூவர் மரணம்
அமெரிக்கா பீச்சில் துப்பாக்கி சூடு மூவர் மரணம்
அமெரிக்கா புளோரிடா Daytona Beach, பகுதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பாவத்தில் சிக்கி மூவர் மரணமாகியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உரிய காரணம் தெரியவில்லை
,இந்த துப்பாக்கி சூட்டு படுகொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
துப்பாக்கி சூடு ஏழு பேர் மரணம்
துப்பாக்கி சூடு ஏழு பேர் மரணம்
இலங்கை ,கொழும்பு ;நாடளாவிய ரீதியில் கடந்த 27ஆம் திகதி முதல் இன்று (31) வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை மற்றும் ரத்கம பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், சனிக்கிழமை (30) இரவு நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 51 வயதான நபரொருவர் பலியாகினார்.
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கம, கம்மத்தேகொட பிரதேசத்தில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடு ஏழு பேர் மரணம்
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ரி-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற நிலையில், படுகாயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ரத்கம, தெவெனிகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்கள் 47 மற்றும் 29 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கம்பஹா, அம்பலாங்கொடை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் கடந்த 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடத்தப்பட வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐவர் உயிரிழந்திருந்தனர்.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக 27ஆம் திகதி மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த பாதாள உலகக்
குழு உறுப்பினரான ‘பஸ் பொட்டா’ என்று அழைக்கப்படும் சமன் ரோஹித்த, அன்று மாலையும் இன்னொருவர் இரண்டு தினங்களிலும் மரணமடைந்திருந்தார்.
அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில், 27ஆம் திகதி மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலியாகினர்.
இந்நிலையில், இரத்மலானை, சில்வா மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் 28ஆம் திகதி அதிகாலை நுழைந்த இருவர் நடத்திய
துப்பாக்கிப் பிரயோகத்தில்
30 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
அமெரிக்காவில் கடந்த பத்து வாரங்களில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,.மேலும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பாவனை மக்கள் மத்தியில் தடுக்க படுவதற்குரிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு அதன் மூலம் ஆயுத பாவணை கட்டு படுத்தலை அமெரிக்கா அரசு தீவிரமாக்கியுள்ளது.
இந்த புதிய சட்டங்களின் பின்னர் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் நிறுத்த படுமா என்பதே நமது கேள்வியாகும்.
நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்
நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மக்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில இருவர் பலியாகினர் மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அவசர காவுவண்டிகள் மூலம் மருத்துவ மனைக்குஎடுத்து செல்ல பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .துப்பாக்கி கி சூடு நடத்தியதில் ஒருவர் மட்டுமே சம்பந்த பட்டுள்ளதாக
தெரிவிக்கும் நோர்வே பொலிஸார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
பாதகமான காலநிலைக்கு மத்தியில் இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவர் சுட்டுக்கொலை -பதட்டத்தில் கிராமம்
இருவர் சுட்டுக்கொலை -பதட்டத்தில் கிராமம்
அம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடந்த தினம் இருவர் சுட்டுக் கொலை செய்ய பட்டுள்ளனர்
மாட்டு உரிமையாளருக்கும் ,அந்த மாடுகளை எடுத்து செல்ல
வந்தவர்களுக்குமிடையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது
வாகன விபத்தில் இறந்தனர் என தெரிவிக்க பட்ட பொழுதும் போலீசார்
நடத்திய விசாரணைகளில் இவர்கள் சுட்டுக்கொலை செய்ய பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது
இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது



















