Posted in சினிமா

அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்ட கமல், ரஜினி

அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்ட கமல், ரஜினி

கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் அன்புசெழியனின் இல்ல திருமண விழா சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்ட கமல், ரஜினி
மணமக்களை வாழ்த்திய ரஜினி


தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர், கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர்

அன்புசெழியனின் இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

மணமக்கள் சுஷ்மிதா MBA – மணமகன் R.சரண் MBA , இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு

, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், வைபவ், சுப்பு பஞ்சு, அம்மா சிவா, மனோபாலா

, மயில்சாமி, இயக்குனர்கள் லிங்குசாமி, சுசிகணேசன், சரண், ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

கமல்

மேலும் அரசியல் பிரமுகர்களான தங்கம் தென்னரசு, சேகர் பாபு, டிடிவி.தினகரன், எஸ்.வி.சேகர், ராணிபெட் காந்தி, கு.பிச்சாண்டி, விவி.ராஜன் செல்லப்பா, R B

உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், எல்.கே.சுதீஷ், ஆகியோர் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

Posted in சினிமா

பிக்பாஸ் பிரியங்கா.. வாழ்த்திய திரிஷா

பிக்பாஸ் பிரியங்கா.. வாழ்த்திய திரிஷா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரியங்கா தேஷ்பாண்டே 96 ஜானுவாக களம் இறங்கியிருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

96 ஜானுவாக களம் இறங்கிய பிக்பாஸ் பிரியங்கா.. வாழ்த்திய திரிஷா
பிரியங்கா தேஷ்பாண்டே – திரிஷா


தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் அதன்பின் பிக் பாஸ் சீசன் 5

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில் கலந்து கொண்ட பிரியங்கா அவரின் தனித்துவத்தால் இப்போட்டியில் இரண்டாம் இடத்தை

பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் தொகுபாளினியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே – திரிஷா
திரிஷா – பிரியங்கா தேஷ்பாண்டே

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. 96 படத்தில் இடம்பெறும் திரிஷாவின் ஜானு

கதாப்பாத்திரத்தை போன்று உடை அணிந்து பதிவிட்டிருக்கிறார். இப்புகைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த

திரிஷா அவருக்கு பதிலளிக்கும் வகையில் “ஹா ஹா லவ்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    Posted in சினிமா

    அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை

    அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை

    தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர், தன்னை அவமானப்படுத்திய இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

    அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை

    தமிழில் முகமூடி அணிந்து வந்த நடிகை, தற்போது முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். ஒரு காலத்தில் நடிகை நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால்

    அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று இயக்குனர்கள் முத்திரை குத்தி ஒதுக்கினார்களாம். ஆனாலும் நம்பிக்கையோடு சில படங்களில் நடித்து தற்போது அதிர்ஷ்ட தேவதையாக மாறி விட்டாராம்.

    முன்னணி இந்தி இயக்குனர் ஒரு காலத்தில் நடிகையை தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று நீக்கிவிட்டு வேறு

    கதாநாயகியை வைத்து படம் எடுத்தாராம். அந்த சம்பவம் நடிகைக்கு வேதனையை

    ஏற்படுத்தியதாம். இப்போது அதே இயக்குனர் தனது படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுக்கும்படி கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம்.

    ஆனால் நடிகை ஆரம்ப காலத்தில் தன்னை அவமானப்படுத்திய அவரது படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்

      Posted in சினிமா

      சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை

      சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை

      தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சம்பளத்தை குறைக்க மறுத்து விட்டாராம்.

      சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை

      வரலாற்றுப் படங்களில் நடித்து பிரபலமான தமிழ், தெலுங்கு பட நடிகை, ஒரு படத்தில்

      நடிக்க ஒப்பந்தமானாராம். கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்பாக ஒத்துக் கொண்டதால் அதிக சம்பளம் பேசி இருந்தாராம்.

      இப்போது நடிகைகள் பலரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டதால் நீங்களும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அந்த நடிகையிடம் தயாரிப்பாளர் கூறினாராம்.

      இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை அந்த படத்திலிருந்தே விலகி விட்டாராம். நடிகையின்

      இந்த அதிரடி முடிவைப் பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம்

        Posted in Uncategorized

        பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா

        .பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா

        தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சினேகாவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

        பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா… வைரலாகும் புகைப்படங்கள்
        சினேகா
        நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு

        பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

        சினேகா

        இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து

        வருகின்றனர். இந்நிலையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாவாடை தாவணியில் இருக்கும் சினேகாவின்

        புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இளமையாகவே இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்

          Posted in சினிமா

          போலிகளிடம் ஏமாற வேண்டாம் – டிம்பிள் ஹயாதி எச்சரிக்கை

          போலிகளிடம் ஏமாற வேண்டாம் – டிம்பிள் ஹயாதி எச்சரிக்கை

          விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் படத்தில் கதாநாயகியாக நடித்த டிம்பிள் ஹயாதி போலிகளிடம் ஏமாற வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

          போலிகளிடம் ஏமாற வேண்டாம் – டிம்பிள் ஹயாதி எச்சரிக்கை
          டிம்பிள் ஹயாதி
          விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டிம்பிள் ஹயாதி. பிரபுதேவாவின் தேவி-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

          இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ரவிதேஜாவுடன் நடித்த கில்லாடி படம் திரைக்கு வந்துள்ளது. இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

          இந்த நிலையில் டிம்பிள் ஹயாதி பெயரை பயன்படுத்தி சிலர் திரையுலக முக்கிய பிரமுகர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

          டிம்பிள் ஹயாதி

          இதுகுறித்து டிம்பிள் ஹயாதி கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியான அவர் போலிகளிடம் ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். சமூக

          வலைத்தள பக்கத்தில் டிம்பிள் ஹயாதி வெளியிட்ட பதிவில், “குறிப்பிட்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை நம்பவேண்டாம். அந்த எண்ணில் இருந்து பேசுபவர்கள்

          எனது பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். எனவே அந்த நம்பரை பிளாக் செய்து விடுங்கள். புகாரும் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்

            Posted in சினிமா

            கலக்கும் நடிகைகளின் கவர்ச்சி படங்கள்

            கலக்கும் நடிகைகளின் கவர்ச்சி படங்கள்

            இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

            இணையத்தை கலக்கும் நடிகைகளின் கவர்ச்சி படங்கள்
            ஷாலு ஷம்மு


            தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் நடித்த காஞ்சனா,

            மங்கத்தா போன்ற படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 2021 ஆம் ஆண்டு தமிழில் ராய் லட்சுமி நடிப்பில் சிண்ட்ரில்லா படம் வெளியானது. தற்போது கேங்ஸ்டர் 21 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

            2019 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில்

            பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவர் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் படஙகள் நடித்து வருகிறார்.

            வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அனைவராலும் தெரியப்பட்டவர் நடிகை ஷாலு ஷம்மு. அதன் பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து போன்ற பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

            உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர்

            போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ‘கங்குபாய் கத்யாவாடி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

            இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

              Posted in சினிமா

              கோப்ரா பட இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறேன் – தயாரிப்பாளர் டி.சிவா காட்டம்

              கோப்ரா பட இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறேன் – தயாரிப்பாளர் டி.சிவா காட்டம்

              அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக பதிவிட்ட இயக்குனரை, தயாரிப்பாளர் டி.சிவா காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

              கோப்ரா பட இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறேன் – தயாரிப்பாளர் டி.சிவா காட்டம்
              டி.சிவா
              டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக

              நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர்.

              ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா,

              ரஷ்யா போன்ற இடங்களில் நடந்து வந்தது. விக்ரம் கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். 2019-இல் தொடங்கப்பட்ட கோப்ரா படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு போன்ற பல காரணங்களால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள்

              நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது முடிந்துள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு விக்ரம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்திருந்தார்.

              டி.சிவா

              இந்த பதிவில் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், தயாரிப்பாளர் டி.சிவா இந்த பதிவை காட்டமாக விமர்சித்து

              பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு, அதைத் தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

              அஜய் ஞானமுத்து
              அஜய் ஞானமுத்து

              தயாரிப்பாளர் டி.சிவாவின் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்து பதில் பதிவிட்டிருக்கிறார். அதில், “சார், கோப்ராவின் பட்ஜெட் அதிகமானதற்குக் காரணம் நான் இல்லை என்பதை எப்போது

              வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும். புரளிகளை விட ஆதாரங்கள் தெளிவாக, சத்தமாகப் பேசும். குழு என்றால் அது தயாரிப்பாளரும் சேர்ந்துதான். நான் என்றும் அவரை கைவிடவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

                Posted in Uncategorized

                நடிகர் தீப் சித்து கார் விபத்தில் மரணம்

                நடிகர் தீப் சித்து கார் விபத்தில் மரணம்

                இந்த விபத்தில் காயமடைந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

                நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதால் நடிகர் தீப் சித்து உயிரிழந்தார் – சோனிபட் காவல்துறை விளக்கம்
                பஞ்சாப் நடிகர் தீப் சித்து

                வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாய போராட்டங்களின் போது டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை சிலர் ஏற்றினர். இந்த

                போராட்டத்தை தூண்டியதாக பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலமான தீப் சித்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

                இந்நிலையில், அரியானா மாநிலம் சோனிபட் அருகே நேற்றிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தீப் சித்து உயிரிழந்தார்.

                குண்ட்லி-மனேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ் சாலையில் பிப்லி சுங்க சாவடி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது தீப் சித்து வந்த கார் வேகமாக மோதியது.இதில்

                படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

                இந்த விபத்து குறித்து சோனிபட் காவல்துறை எஸ்.பி.ராகுல் சர்மா, தெரிவிக்கையில்,

                சாலை விபத்தில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தீப் சித்து என்ற அடையாளம் காணப்பட்ட நபர் சிகிச்சையின்

                போது இறந்தார், மேலும் ஒரு பெண் சிகிச்சை பெற்று வருகிறார், அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

                சரண்ஜித் சிங் சன்னி, . தீப் சித்து

                இதனிடையே, தீப் சித்து உயிரிழப்புக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இரங்கல் தெரிவித்துள்ளார்.

                பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான தீப்சித்துவின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எண்ணங்களும்

                பிரார்த்தனைகளும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. இவ்வாறு தமது ட்விட்டர் பதிபில் சரண்ஜித் சிங் சன்னி பதிவிட்டுள்ளார்.

                  Posted in Uncategorized

                  பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

                  பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

                  பலராலும் அதிகம் பார்க்கப்படும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

                  பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?
                  பிக்பாஸ் அல்டிமேட்

                  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவித்து வந்தனர். அதன்படி சினேகன், ஜூலி, சுஜா வருணியும், ஷாரிக், தாடி பாலாஜி, அபிராமி, வனிதா, அனிதா,

                  பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தியும், நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

                  பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர்

                  வெளியேற்றப்படுவது வழக்கமாக பின்பற்றப்படுகிறது. இதே நடைமுறையை தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பின்பற்றப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த

                  வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் சுஜா

                  வருணி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

                    Posted in சினிமா

                    ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

                    ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

                    ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

                    ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
                    ஷில்பா ஷெட்டி


                    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் பாசிகர், பிர் மிலங்கெ, பர்தேசி பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில்

                    விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் மேக்கோரினா என்ற பாடலுக்கு தோன்றி அனைவரையும் கவர்ந்தார். இவருடைய தந்தை 2015-ஆம் ஆண்டு பர்ஹத் அம்ரா

                    என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார். 2017-ஆம் ஆண்டு திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்த அவர் இறந்துவிட்டார். அந்த கடனை அவரின்

                    குடுத்திடம் திருப்பி கொடுக்கும் படி கடன் வழங்கியவர் கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க முன்வராததால் ஷில்பா ஷெட்டி, அவர் தாயார் சுனந்தா மற்றும் சகோதரி

                    சமிந்தா ஷெட்டி ஆகியோர் மீது மும்பை ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

                    இதனை விசாரித்த நீதிபதி வரும் 28-ம் தேதி ஷில்பா ஷெட்டி, சகோதரி சமிந்தா ஷெட்டி, தாயார் சுனந்தா ஷெட்டி ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

                    நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பணமோசடி வழக்கு பதிவு செய்திருந்தார். ஷில்பா ஷெட்டியின் கணவர் மீதும் ஆபாச

                    வீடியோ தயாரித்து மொபைல் செயலி மூலம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                      Posted in சினிமா

                      திருமணம் செய்யும் எண்ணமில்லை – பிரேம்ஜி

                      திருமணம் செய்யும் எண்ணமில்லை – பிரேம்ஜி

                      நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி, தனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

                      திருமணம் செய்யும் எண்ணமில்லை – பிரேம்ஜி
                      பிரேம்ஜி


                      பிரபல இசை அமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். இவர் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில்

                      நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

                      இவருக்கும், ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி உட்பட பல படங்களில் பின்னணி பாடியுள்ள வினய்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள

                      முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதை நடிகர் பிரேம்ஜி அமரன் மறுத்துள்ளார்.

                      பிரேம்ஜி

                      இதுபற்றி அவர் கூறும்போது, “எனக்குத் திருமணம் செய்யும் எண்ணமில்லை. இருந்திருந்தால் 10 வருடத்துக்கு முன்பே திருமணம் செய்திருப்பேன். என் வாழ்வில்

                      திருமணம், குழந்தைகள் போன்ற விஷயங்கள் கிடையாது. அதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்றார்.

                        Posted in சினிமா

                        படப்பிடிப்பில் விஷால் காயம்

                        படப்பிடிப்பில் விஷால் காயம்

                        வீரமே வாகைச்சூடும் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், தற்போது லத்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

                        படப்பிடிப்பில் காயம்… சிகிச்சைக்கு சென்ற விஷால்
                        விஷால்


                        விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகைச்சூடும் திரைப்படம் வெளியானது. இப்படத்தை அடுத்து லத்தி படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                        படத்தில் இடம் பெறும் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத்தில் நடந்தது. கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார் பீட்டர் ஹெயின் மாஸ்டர். அடியாட்களுடன் மோதிக் கொண்டு குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் காங்ரீட் சுவற்றில் மோதி விஷாலுக்கு கையில் அடிப்பட்டது.

                        விஷால்

                        சில மணிநேரம் டிரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர்ந்தார் விஷால். கை வலியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு மேலும்

                        படப்பிடிப்பில் கலந்து கொள்ளமுடியாமல் போனது. இதனால், நடிகர் விஷால் சிகிச்சைக்காக கேரளா சென்றிருக்கிறார். லத்தி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் மார்ச் மாதம் தொடரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

                          Posted in சினிமா

                          ஆண்ட்ரியா செய்த காரியம்

                          ஆண்ட்ரியா செய்த காரியம்

                          நடிகை, பாடகி என பண்முகம் கொண்ட நடிகை ஆண்டியா செய்த காரியத்தால் அவருடைய ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

                          ஆண்ட்ரியா செய்த காரியம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்
                          ஆண்ட்ரியா


                          பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா,

                          விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல்

                          கொடுத்திருக்குறார். தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

                          தற்போது இவர் சமூக வலைத்தளம் மூலமாக தனது ரசிகர்களுக்கு உடல்நலன் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ரத்த

                          தானம் அளிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு சில வேண்டுகோளையும் விடுத்துள்ளார். அதில் “இன்று ஒரு நல்ல

                          செயலைச் செய்ய வேண்டுமா? அப்போ இரத்த தானம் செய்யுங்கள்! இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்ததால், நேற்று

                          இரத்த வங்கிக்குச் சென்று ரத்த தானம் செய்தேன் என்று நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

                          ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

                            Posted in சினிமா

                            விஜய் மகனுடன் இணைய தயார்.. பிரபல நடிகர்

                            விஜய் மகனுடன் இணைய தயார்.. பிரபல நடிகர்

                            தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், விஜய் மகனுடம் இணைய தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

                            விஜய் மகனுடன் இணைய தயார்.. பிரபல நடிகர் ஆர்வம்
                            சஞ்சய்


                            2019-இல் வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான இவர், முதல் படத்திலேயே

                            பல ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் படத்தில் அவருடைய தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்தார். இப்படத்தில் சிம்ரன், வாணி

                            போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ்

                            நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

                            இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் துருவ் விக்ரம் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, “சிறு வயதிலிருந்தே நானும் விஜய் சாருடைய மகன்

                            சஞ்சய்யும் நல்ல நண்பர்கள், அவர் நல்ல கதையுடன் வந்தால் அந்த படத்தில் நடிக்க

                            நான் தயாராக இருக்கிறேன். மேலும் அந்தப்படம் பாலிவுட் படங்களை போல இரண்டு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

                              Posted in Uncategorized

                              41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்

                              41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்

                              பிரபல பாலிவுட் நடிகர் பர்கான் அக்தர், 41 வயதாகும் நடிகையும் பாடகியுமான ஷிபானியை திருமணம் செய்ய இருக்கிறார்.

                              41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்
                              ஷிபானி தந்தேக்கர் – பர்கான் அக்தர்


                              பிரபல இந்தி நடிகர் பர்கான் அக்தர். இவர் 2008-ல் வெளியான ராக் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது பாக மில்கா சிங் படம் பெரிய வெற்றி

                              பெற்றது. பர்கான் அக்தர் நடிப்பில் கடந்த வருடம் டூபான் படம் வெளியானது. சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.

                              அமீர்கான் நடித்த தில் சத்தா ஹை படத்தை பர்கான் அக்தர் இயக்கி இருந்தார். இந்த படம் தேசிய விருது பெற்றது. 2000-ம் ஆண்டு அதுனா பாபானி என்பவரை பர்கான்

                              அக்தர் திருமணம் செய்து 17 ஆண்டுகளுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் இந்தி நடிகையும், பாடகியுமான ஷிபானி தந்தேக்கருடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

                              இந்த நிலையில் 41 வயதாகும் ஷிபானியை 48 வயதாகும் பர்கான் அக்தர் இரண்டாவது

                              திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இவர்கள் திருமணம் வருகிற 21-ந்தேதி எளிமையான முறையில் நடக்க உள்ளது.

                                Posted in Uncategorized

                                கிரணின் உச்ச கட்ட கவர்ச்சி… முகம் சுளிக்கும் ரசிகர்கள்

                                கிரணின் உச்ச கட்ட கவர்ச்சி… முகம் சுளிக்கும் ரசிகர்கள்

                                ஜெமினி, வின்னர், வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

                                கிரணின் உச்ச கட்ட கவர்ச்சி… முகம் சுளிக்கும் ரசிகர்கள்
                                கிரண்
                                ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

                                குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த ‘வின்னர்’ படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

                                கிரண்

                                இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் முகம் சுளிக்கும் அளவிற்கு இருப்பதால் ரசிகர்கள் பலர் ஆபாச கமெண்ட்டுகள் பதிவு செய்து வருகிறார்கள்.

                                  Posted in சினிமா

                                  பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ

                                  பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ

                                  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

                                  பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ… ரசிகர்கள் கொண்டாட்டம்
                                  விஜய்


                                  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு

                                  ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

                                  அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு

                                  முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                                  விஜய்

                                  இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட்

                                  சிங்கள் புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முழு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

                                    Posted in சினிமா

                                    திரும்பினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

                                    திரும்பினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

                                    காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதியில் காதல் ஆல்பத்தை வெளியிட இருந்த நிலையில், கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

                                    நலமுடன் திரும்பினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
                                    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


                                    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி காதல் ஆல்பம் ஒன்றை டைரக்ட் செய்து வந்தார்.

                                    காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதியில் அந்த ஆல்பத்தை வெளியிட இருந்த

                                    நிலையில், கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

                                    அங்கு அவரை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் படப்பிடிப்பு ஸ்தம்பித்தது.

                                    14-ந்தேதி ஆல்பம் வெளியாவது சந்தேகமானது. தற்போது அவர் பூரண குணமடைந்து ஐதராபாத்தில் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு திரும்பினார்.

                                    நாளை அவர் மீண்டும் காதல் ஆல்பம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பை

                                    தொடங்க இருக்கிறார். இதனால் 14-ந் தேதி ஐஸ்வர்யா இயக்கும் காதல் ஆல்பம் வெளியாவது உறுதியாகி உள்ளது.

                                      Posted in சினிமா

                                      இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து

                                      இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து

                                      லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

                                      இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து உருக்கம்
                                      வைரமுத்து


                                      பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை

                                      8.12 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவு நாடு முழுவதும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                                      ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், பல்வேறு இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்

                                      . அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

                                      அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

                                      “இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது. இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்துவிட்டது. லதா மங்கேஷ்கரின் பெருமை என்னவென்றால், தான் வாழ்ந்த

                                      காலத்தின் மீது தன்னுடைய இசை என்ற ஆதிக்கத்தைச் செலுத்தியது. அவர் பாடியது மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல, ரோட்டுக் குடிக்கும் தான். உழைக்கும் மக்கள் அவர் பாடிய பாடலைக் கேட்டு தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள், காதலை

                                      வளர்த்திருக்கிறார்கள், தங்கள் வியர்வையை சுண்டி எறிந்திருக்கிறார்கள், தங்கள் துக்கத்தை மறந்திருக்கிறார்கள், மகிழ்ச்சியில் ஆடியிருக்கிறார்கள். இந்தியர்களின்

                                      வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்ட அந்த மாபெரும் இசையரசியின் புகழ் வாழ்க, அவர் பாடல்கள் வெல்க!” என்று அவர் தெரிவித்துள்ளார்.