Tag: சிசு
ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு
ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு
ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு ,20 நாள் பச்சிளம் குழந்தை ரூ. 100,000-க்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் தாய் மற்றும் பெண் கைது
20 நாள் பச்சிளம் குழந்தை
தனது 20 நாள் பச்சிளம் குழந்தையை ரூ. 100,000-க்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 வயது தாய் ஒருவரையும், அக்குழந்தையை வாங்கியதாகக்
கூறப்படும் ஒரு பெண்ணையும் புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்ததாக இலங்கை காவல்துறை தெரிவித்தது.
பல்லமவில் உள்ள கம்மண்டலு பகுதியில் பதிவான சம்பவம் குறித்த விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
மதுரங்குலியாவின் கடயமொட்டை பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டதாகவும், அப்பெண்ணின் கணவர் ரூ. 100,000-
க்கு இந்தப் பரிவர்த்தனையை மேற்கொண்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படும் ஒருவருடன் அந்த இளம் தாய் உறவில் இருந்ததாகவும், தம்பதியினர் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வந்ததாகவும் புலனாய்வாளர்கள் வெளிப்படுத்தினர்.
பச்சிளம் குழந்தையை அவர்களால் பராமரிக்க முடியாததால், பிறந்த சிறிது நேரத்திலேயே அக்குழந்தை விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணுக்கு 18 ஆண்டுகளுக்கு மேலாகத் திருமணமாகியும் குழந்தை இல்லை என்று காவல்துறை மேலும் தெரிவித்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், அப்பெண் குழந்தை பெற்றெடுத்தவுடன், ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையைச் செலுத்தி, குழந்தையைத் தத்தெடுக்க அந்தத் தம்பதியினர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
தத்தெடுப்பு நடைமுறை
இருப்பினும், இலங்கைச் சட்டத்தின் கீழ் தேவைப்படும், சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்தெடுப்பு நடைமுறைகளுக்கு வெளியே இந்தக் குழந்தை கைமாற்றப்பட்டதாக காவல்துறை சுட்டிக்காட்டியது.
இதன் விளைவாக, குழந்தையின் உயிரியல் தாய், குழந்தையை வாங்கிய பெண் மற்றும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய பலரும் காவலில் எடுக்கப்பட்டனர்.
புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு
காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு
காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு ,மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில், வீசப்பட்ட நிலையில், ஆண் சிசுவின் சடலம் சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண் சிசுவை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த சிசுவை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று, அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸார், நீதிமன்ற உத்தரவை பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், சிசுவை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் சிசுவை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு
கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு
கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு ,லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயர் ஒன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த தோட்டத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்தே கடந்த 10 ஆம் திகதி சிசுவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய ஆட்டோ சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது மாவனல்லை பகுதியில் இருந்து தமது தோட்டத்துக்கு வந்திருந்த பெண் ஒருவரின் பையே அது என அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய 24 வயதான பெண் கைது செய்யப்பட்ட, விசாரிக்கப்பட்டார். தனக்கும், குறித்த ஆட்டோ சாரதிக்கும் இடையில் இருந்த தகாத உறவு காரணமாகவே குழந்தை பிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாவனல்லை பகுதியில் தான் வேலை செய்யும் வீட்டில் வைத்து கடந்த 5 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளதாகவும், தனது சகோதரியின் உதவியுடன் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சடலத்தை புதைப்பதற்காகவே ஆட்டோவில் அதனை அக்கரபத்தனை பகுதிக்கு எடுத்து வந்ததாகவும் பொலிஸாரிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதிகாலைவேளையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் சடலத்தை தாய் கண்டு அக்கம், பக்கத்தினருக்கு தகவல் வழங்கியதால் அதனை செய்யமுடியாமல்போனதாக ஆட்டோ சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பெண் பொலிஸ் பாதுகாப்புடன் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இப்பெண்ணையும், ஆட்டோ சாரதியையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அத்துடன், குறித்த பெண்ணின் சகோதரியையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு
சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு
சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு ,அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டத்தில் கிளினிக்கல்ஸ் பிரிவில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து சிசுவொன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கர வண்டியில் சென்று பார்த்த போது கறுப்பு பொலித்தீன் உரையில் போடப்பட்டு துணி ஒன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேற்படி சிசுவின் சடலத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவல்களும் கண்டறியவில்லை.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக 28 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, நுவரெலியா மாவட்ட நீதவான் பார்வையிட்டு பின்னர் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்ததோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம்
சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம்
சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம் , சுவரொன்று இடிந்து விழுந்ததில் இரண்டு மாத குழந்தை என்று மரணமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை சின்ன குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வரவேற்பறை, திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு மாத சிசு ஒன்று பலியாகி உள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிக மழை காரணமாக சுவர்கள் விலகி விரிசல் காணப்பட்ட நிலையில், அந்த சுவர்கள் குழந்தையின் மேல் இடிந்து விழுந்ததில் இந்த குழந்தை பலியாகி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .
சின்னகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம்
சின்னகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம், அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தமது சிசுவை பறிகொடுத்து குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கி வருகின்றனர் .
மக்களுக்கு பல் வேறு பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும், மக்கள் அதை உரிய முறையில் செவி சாய்க்கவில்லையோ என்கிற ,கேள்வியை இந்த சுவர் இடிந்த விழுந்து சிசு மரணமான சம்பவத்தின் ஊடாக தெரிய வருகின்றது.
- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார் ,யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான
பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயாரும் மாணவிக;கு உதவியாக
நின்றுள்ளார். மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ்
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம்
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குழந்தையை பிரசவித்த மாணவியையும் , அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Featured
யாழில் மூன்று மாத குழந்தை பரிதாபமாக மரணம்
யாழில் மூன்று மாத குழந்தை பரிதாபமாக மரணம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையின் தாய் கடந்த 23ஆம் திகதி இரவு பாலூட்டும் போது புரைக்கேறிய நிலையில் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் மூன்று மாத குழந்தை பரிதாபமாக மரணம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஹரிஹரன் என்ற மூன்று மாதக் குழந்தையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனை நேற்று (24) யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரேத அறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நுரையீரலில் தாய் பால் சிக்கியமையினால் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை தகல்கள் மேலும் தெரிவித்தன
- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்புby நிருபர் காவலன்
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடுby நிருபர் காவலன்
- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடைby நிருபர் காவலன்
- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகைby நிருபர் காவலன்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்by நிருபர் காவலன்
யாழில் 11 மாத சிசுவை கற்பழித்த பெரியப்பா
யாழில் 11 மாத சிசுவை கற்பழித்த பெரியப்பா
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பிறந்து 11 மாதமான பெண் சிசுவை அவரது பெரியப்ப கற்பழித்துள்ளார் .
கற்பழிப்பு குற்ற சாட்டில் பெரியப்ப கைது செய்யப்பட்டு நீதிமன்றின் முன் நிறுத்த பட்டுள்ளார் .
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்குளம் குளம் காட்டு பகுதியில் சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்குளம் குளம் காட்டு பகுதியில் சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .
மாடு மேய்க்க சென்ற ஒருவர் துணியால் சுற்ற பட்டு கிடந்த, சிசு சடலம் ஒன்றை கண்டு காவல்துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து ,உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சிசு சடலம் மீட்க பட்டுள்ளது .
கள்ள தொடர்பு கிரணமாக பிறந்த சிசுவை, இங்கு பெற்று போட்டு தாய் தப்பித்து ஓடி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
இந்த சிசுவின் தாயை கண்டு பிடிக்கும் பணியில் ,காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
காய்ச்சலினால் யாழ் மருத்துவமனையில் சிசு மரணம்
காய்ச்சலினால் யாழ் மருத்துவமனையில் சிசு மரணம்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமாத சிசு ஒன்று கடும் காய்ச்சல் காரணமாக பலியாகியுள்ளது .
பலியான சிசுவுக்கு பல நாட்களாக சிகிச்சை வழங்க ப்பட்ட போதும் ,சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது .
கிளிநொச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்த சிசுவே காய்ச்சல் காரணமாக பலியாகியுள்ளது .
கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்
கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்
கிளிநொச்சி மருதநகர் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் நீர் பாசன கால்வாயில்
இருந்து ஒன்றரை வயது சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது
சிசு தவறி விழுந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
சடலம் இரண்டு கிலோ மீட்டர் தொலையில் இருந்து மீட்க பட்டுள்ளது
கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இந்த சிசு மரணம் அந்த கிராம பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
பால்மா இன்றி இறந்த சிசு – கொதிப்பில் மக்கள்
இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது.
உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காவில்லை.
குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல ஆட்டோ ஒன்றைத் தேட ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் கழிந்துவிட்டது. அவர்களின் வீட்டிலிருந்து
ஹல்தும்முல்லை வைத்தியசாலைக்கு செல்ல அரைமணிநேரம் தான் பயணிக்க வேண்டும். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று
குழந்தை அம்புலன்ஸ் ஊடாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும் இரத்தத்தில் சீனியின் அளவு கடுமையாக குறைவடைந்த காரணத்தினால் குழந்தை இறந்துவிட்டது.
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்-2 நாள் சிசுவுக்கு கொரோனா
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்-2 நாள் சிசுவுக்கு கொரோனா
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் சிசுவுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அச்சிசுவுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கணவன் வெளிநாட்டில் – பிறந்த சிசுவை எரித்த மனைவி
கணவன் வெளிநாட்டில் – பிறந்த சிசுவை எரித்த மனைவி
இலங்கைகந்தளாய் பகுதியதில்க் 35 வயதுப் பெண் ஒருவர் குழந்தையை பெற்று அதனை எரித்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளநிலையில் கள்ள காதல் மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது ,இதில் இருந்து தான் தப்பித்து கொள்ளும் நோக்குடன் சிசுவை எரித்துள்ளது தெரிய வந்துள்ளது
இப்பொழுது கணவணும் இல்லை ,கள்ள காதலானும் இல்லை ,அம்மணி சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
உள்ளாடை அவிழ்க்கையில உன்னை நீ நினைக்கவில்லை ,வெள்ளாடை புகுந்த பின்ன வெருண்டு நின்று அழுததென்ன
சிசுவை கொன்ற கொரனோ – பீதியில் கிராம மக்கள்
சிசுவை கொன்ற கொரனோ – பீதியில் கிராம மக்கள்
பிறந்து 18 நாள்களேயான சிசுவொன்று, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளது. இந்த சம்பவம்
மினுவங்கொட பீல்லவத்த பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது என மினுவங்கொட சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.
பிறக்கும் போதே அங்கவீனமுற்றிருந்த அந்த சிசு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளது.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட ரேபிட் அன்டிஜன் பரிசோதனையில், அச்சிசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
மரணமடைந்த சிசுவின் தாய், தந்தை ஆகிய இருவருக்கும் ரேபிட் அன்டிஜன் பரிசோதனைகள்
முன்னெடுக்கப்பட்டன. அவ்விருவருக்கும் எவ்விதமான அறிகுறிகளும் காண்பிக்கவில்லை என்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.
நம்பமுடியா அதிசயம் -22 வாரத்தில் பிறந்த சிசு – படம் உள்ளே
நம்பமுடியா அதிசயம் -22 வாரத்தில் பிறந்த சிசு – படம் உள்ளே
பிரிட்டன் University Wishaw மருத்துவ மனையில் இருபத்தி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் பெண் ஒருவர் சிசு ஒன்றை
பிரசவித்துளளார் ,இவ்வாறு பிறந்த சிசு சுமார் நான்கு மாதங்கள் மருத்துவ மனையின் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து சிகிச்சை
வழங்க பட்டு வந்தது ,அதன் பின்னர் தற்போது சிசு பெற்றோருடன் வீட்டுக்கு
அனுப்பி வைக்க பட்டுளளார் ,தாய் சேய் மிக நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மேற்படி சம்பவம் உலக அரங்கத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது


தீயில் கருகி 10 சிசுக்கள் பலி – அதிர்ச்சியில் குடும்பம்
தீயில் கருகி 10 சிசுக்கள் பலி – அதிர்ச்சியில் குடும்பம்
இந்தியா மகாராஸ்திர பகுதியில் உள்ள மருத்துவமனையின்
மகாப்பேறு பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி பிறந்த ஏழு
சிசுக்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,மேலும் ஆத்திரமுற்ற
மக்கள் மருத்துவமனை முன்பாக மாறியலிலுள் ஈடுபட்டுள்ளனர் ,இதனை அடுத்து போலீசார் குவிக்க பட்டுள்ளனர்
காருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்
காருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்
அமெரிக்கா northern Virginia பகுதியில் கார் ஒன்றுக்குள் 11 மாத சிசுவை பெண் ஒருவர் பூட்டி வைத்து விட்டு சென்று விட்டார்
இவர் மீள காருக்கு திரும்பி வர தாமதமானது
அவ்வேளை என்பது முதல் 90 செல்சியஸ் வெப்பம் நிலவியாதல் சிசு மூச்சு தினறி பலியாகியுள்ளது
அருகில் கார் ஒன்றை நிறுத்திய நபர் காரின் பின் ஆசனத்தில் சிசு ஒன்று
தனியாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தெரிவித்தார்
இவ்வேளை போலீசார் விரைந்து செயல் பட்டு சிசுவை காப்பாற்றிட முனைந்த பொழுதும் அது பயனளிக்கவில்லை
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
யாழில் கள்ள காதல் உறவில் பிறந்த சிசுவை – மலசலகூடக் குழிக்குள் வீசிய பெண் கைது
யாழில் கள்ள காதல் உறவில் பிறந்த சிசுவை – மலசலகூடக் குழிக்குள் வீசிய பெண் கைது
பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.
நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது.
சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார்.
நான்கு நாள்கள் ஆகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள
குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயாரைக் கைது செய்தனர்.
யாழில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த பெண்
யாழில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த பெண்
யாழ்ப்பாண போதனா வைசத்திய சாலையில் இளம் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார்
இவ்வாறு குழந்தைகளை பிரசவித்த பெண் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு
உள்ளாக்க பட்ட நிலையில் தற்போது தாயும் சேயும் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
ஒரே தடவையில் நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த சிசுக்களை
பார்வையிட குறித்த பெண்ணின் வீட்டை அந்த கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளதுடன் ,
அவர்களுக்கான அன்பளிப்புக்களும் குவிந்த வண்ணம் உள்ளது
ஒரு குடும்பத்தில் பிறந்த இந்த சிசுக்களினாலே அந்த கிராமமே மகிழ்ச்சியில் உறைந்துள்ளது
























