Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 551 பேருக்கு கொரோனா

இலங்கையில் 551 பேருக்கு கொரோனா

இலங்கையில் இன்றைய (25) தினம் 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 90 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர். இதற்கமைவாக பேலியகொடை மீன் சந்தை திவுலப்பிட்டிய

சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 099 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 771 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 31 ஆயிரத்து 339 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் எட்டாயிரத்து 251 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் (25) இடம்பெற்ற ஒருவரின் உயிரிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கை:

ஊடக அறிக்கை

கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவர் (01) உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளதுடன் இ இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 186 ஆகும்.

  1. அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது ஆண் நபர். அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர்
  2. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 2020 டிசம்பர் 24ஆம் திகதி அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
  3. காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட கடுமையான இதய நோய்த்தொற்று நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது
Posted in இலங்கை செய்திகள்

பேக்கரியில் 23 பேருக்கு கொரோனா

பேக்கரியில் 23 பேருக்கு கொரோனா

இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள பிரபல பேக்கரி உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய 23 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு பணியாற்றிய சகலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மரண வீட்டுக்கு சென்ற 10 பேருக்கு கொரோனா

மரண வீட்டுக்கு சென்ற 10 பேருக்கு கொரோனா

காலி மாவட்டத்தின் இந்துரவ-துன்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற மரணச்

சடங்கொன்றில் கலந்துகொண்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் 45 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி மரணச் சடங்கில் பேருவளை மற்றும் அளுத்கமை ஆகிய

பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனாவால் 147 பேர் பலி

இலங்கையில் கொரோனாவால் 147 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, கொழும்பு -13ஐச் சேர்ந்த 82 வயதான

பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இவருடன் சேர்த்து, கொரோனா

தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவி ஒருவருக்கு கொரோனா

பாடசாலை மாணவி ஒருவருக்கு கொரோனா

நாவலபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 ஆம் ஆண்டில்

கல்வி கற்று வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலபிட்டிய நகரில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில்

இருந்த ஒருவரின் மகளே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த மாணவி பெனிதெனிய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவியுடன் தொடர்பில் இருந்த 4 ஆசிரியர்கள் மற்றும் 16 மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in உலக செய்திகள்

5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை – இந்திய விஞ்ஞானி சாதனை

5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை – இந்திய விஞ்ஞானி சாதனை

இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை – இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு சாதனை

அமெரிக்காவில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை

கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தற்போதைய கொரோனா பரிசோதனை, ஆர்.என்.ஏ. அடிப்படையில்

மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு, காகித அடிப்படையிலானது.

கிராபினை கொண்டு, மின்வேதியியல் சென்சார் என்ற தொடுதிறன் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதை பயன்படுத்தி, கொரோனா மாதிரியையும், கொரோனா இல்லாத மாதிரியையும்

பரிசோதித்தனர். அதில், கொரோனா மாதிரியில் வைரஸ் மரபணு மூலக்கூறு இருப்பதை 5 நிமிடத்துக்குள் அக்கருவி கண்டுபிடித்தது.

இது, கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பரவி வந்த கொவிட் தொற்றினால் மேலும் நான்கு பேர்

உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து, இலங்கையில் கொவிட்

தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

டெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை

டெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை

டெல்லியில் மக்களின் வசதிக்காக கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.

டெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை

தலைநகர் டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பரிசோதனைகளும்

அதிகரிக்கப்படுகின்றன.நோய்த்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் அதிகம் செலவு ஆவதால் பரிசோதனை

செய்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள். இந்த நிலையில், நேற்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் வசதிக்காக

கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கு முன், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.2 ஆயிரத்து 400-க்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் முதல்-மந்திரி உத்தரவின்படி

இனிமேல் ரூ.800-க்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். குறைக்கப்பட்ட இந்த கட்டணம் குறித்து தனியார் ஆஸ்பத்திரிகள்

மற்றும் ஆய்வகங்களின் முன் விளம்பர பலகை வைக்கவும் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் – 81 பேர் கொழும்பில் மட்டும் மரணம்

கொரோனா வைரஸ் – 81 பேர் கொழும்பில் மட்டும் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் உயிரிழந்தோரில்

அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இதுவரை உயிரிழந்த 109 பேரில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தோரில் அதிகமானோர் 71 வயதைக்

கடந்தவர்கள் என்பதுடன், நடுத்தர வயதினர் பலரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் களுத்துறையில் 06 பேரும், குருநாகலில் 04 பேரும், புத்தளத்தில் 03 பேரும், நுவரெலியாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளன

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள்

இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள்

நேற்றைய தினம் 491 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை

அடுத்து இலங்கையில் 19,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றை தினம் இனங்காணப்பட்டவர்களுள் 487 பேர் மினுவங்கொட

மற்றும் பேலியகொட கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனையவர்களுள் இத்தாலியில் இருந்தும் மூவரும் துருக்கியில் இருந்து வந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழப்பு

நேற்றைய தினம் (19) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் 19 கொற்றுக்குள்ளான நோயாளர்களில் நான்கு பேர் (4) உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 73 என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

  1. கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் நபர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.மரணத்திற்கான காரணம் கொவிட்19
  2. தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. 27 வயதான, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரியா
  4. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால் கல்லீரல் நோய்
  5. நிலை அதிகரித்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  6. களுத்துறை மாவட்டத்தில் பொக்குணு விற்றவைச்சேர்ந்த 59 வயதான பெண்.. வீட்டில் உயிரிழந்துள்ளார். உயிர்
  7. இழந்தமைக்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமை மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  8. களுத்துறை மாவட்டதில் ஹல்தொட்ட பிரதேசத்தைச் சேர்த 86 வயதான ஆண் நபர்.வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
  9. காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளாதைத் தொடர்ந்து ஏற்பட்ட மார்பு தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69

இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் (18) சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மூவரின் மரணம் இடம்பெற்றுள்ளமை

உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 69 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமையுடன் நீரிழிவு நோயின்
  2. சிக்கல் நிலைமை ஏற்பட்டதாகும்
  3. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண் ஆவார். கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமை இனங்காணப்பட்டு ஹேமாகமை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்
  4. பெற்றுவந்த வேளையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் நிரிழிவுடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையினால் நுரையீரல்
  5. பலவீனப்பட்டமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  6. கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆண் நபர். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயின்
  7. சிக்கல் நிலை கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமையினால் அதிகரித்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in இலங்கை செய்திகள்

கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66

கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66

இலங்கையில் கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல்திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கீழ் குறிப்பிட்ட விபரங்களைக்கொண்ட கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர் ஐவரின் மரணத்தை உறுதி

செய்துள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆகும் என தெரிவித்துள்ளார்.

  1. கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண் நபர். கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டவர் புனானி(புனானை) சிகிச்சை மத்திய நிலையம்
  2. மற்றும் அதனைத் தொடர்ந்து வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
  3. காரணம் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் ஆவார்.
  5. வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயில் ஏற்பட்ட சிக்கலான நிலை மற்றும் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானமை என
  6. தெரிவிக்கப்பட்டுள்ளது.
  7. கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால்
  8. அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  9. கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
  10. காரணம் கொவிட் 19 தொற்றக்குள்ளானதுடன் நிமோனியா ஏற்பட்டமை ஆகும்.
  11. தொமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் நபர். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு
  12. நோயில் சிக்கலான நிலையுடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in இலங்கை செய்திகள்

வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய 19 ஊழியர்களுக்கு கொரோனா

வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய 19 ஊழியர்களுக்கு கொரோனா

குருநாகல் நகரிலுள்ள வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய,

19 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் 17 ஊழியர்களும் அவர்களுடன்

தொடர்புடைய இருவரும், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்களில் 14 பேர் அக்குரணை நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ்

ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ்

துறைமுகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று

உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தோர்

பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் , 7 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொம்பே பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த 10 குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா – மேலும் இருவர் மரணம்

இலங்கையில் கொரோனா – மேலும் இருவர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக இன்று மேலும் இருவர் மரணமாகியுள்ளனர் என்று சுகாதார சேவைகள்

பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவரகள்; என்ற ரீதியில் இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரிய வைத்தியசாலையில்

சிகிச்சை பெற்றுவந்த இரண்டு நோயாளிகள் அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன் அது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:

  1. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஆண் நபராவார். மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுடன் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானமை என
  2. தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. மீகொட பிரதேசத்தைச்சேர்ந்த 45 வயதான ஆண் நபராவார் மரணத்திற்கான காரணம் கொவிட்19 வைரசு தொற்று
  4. நிமோனியாயுடன் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுக்குள்ளானமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மரணமடைந்தோரின்

எண்ணிக்கை 48 ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன உறுதி செய்துள்ளார்.

Posted in உலக செய்திகள்

12 லட்சத்து 88 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா

12 லட்சத்து 88 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது.

12 லட்சத்து 88 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த

வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்துள்ளது.

குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 512 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த 24

மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,371 பேரும், இத்தாலியில் 623 பேரும், மெக்சிகோவில் 617 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 24 லட்சத்து 18 ஆயிரத்து 628 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரத்து 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 94 ஆயிரத்து 739 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 3 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 88 ஆயிரத்து 787 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 2,47,290
பிரேசில் – 1,63,406
இந்தியா – 1,27,571
மெக்சிகோ – 95,842
இங்கிலாந்து – 50,365
இத்தாலி – 42,953
ஸ்பெயின் – 40,105
ஈரான் – 39,664

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 46 ஆவது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மரணம்

இலங்கையில் 46 ஆவது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மரணம்

இலங்கையில் இன்று இரவு 46 ஆவது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மரணம் இடம்பெற்றுள்ளது.

இம்புல்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் நபர் ஒருவர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நோயாளி உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைக்குப் பின்னர் இவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

மரணத்திற்கான காரணம் வெள்ளணுப் புற்று நிலை அதிகரித்தல் மற்றும் மூச்சுமண்டலத்தில் ஏற்பட்ட பிரச்சினையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொவிட் தொற்றினால் எற்பட்ட மரணமட என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். அத்தோடு இதற்கமைவாக இது இலங்கையில் பதிவான 46 ஆவது கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளியின் மரணமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

612 பொலிஸாருக்கு கொரோனா

612 பொலிஸாருக்கு கொரோனா

இலங்கையில் இதுவரை 612 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இதில் பொலிஸ் விசேட படையினர்

145 பேர் அடங்குவதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினம் 91 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனரென்றும் இதில் கோட்டை பொலிஸ்

நிலையத்தில் 82 பொலிஸார், பொலிஸ் தலைமையகத்தில் 6 பேர், கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம்,1 பொலிஸ் விசேட பிரிவு-1,

பொலிஸ் விளையாட்டுப் பிரிவு-1 என 91 பொலிஸார் நேற்று

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென

கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா மரணங்களை மறைக்கிறது அரசாங்கம்

கொரோனா மரணங்களை மறைக்கிறது அரசாங்கம்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அரசாங்கம் மறைப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள் எம்.பி ஹரின் பெர்ணான்டோ, நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள்

முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு, ஒரு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.

நேற்று இரவு மாத்திரம், ராஜகிரிய, கம்பாஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில், 4 மரணங்கள் பதிவாகியிருந்தது என்றும் எனினும் இது

தொடர்பாக அறிவிக்கபடவோ, மொத்த இறந்தோரின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ், ஐக்கிய மக்கள் சக்தியிடம் உண்டு என்றும் அதில், இறப்புக்கு, கொரோனா வைரஸே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம், நாட்டை கொரோனா வைரஸில் இருந்து காப்பதற்கான முயற்சியை, அரசாங்கம் கைவிட்டுள்ளது என்பது

தென்படுவதாகவும் இது, நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் முதலாவது கொரோனா வைரஸ் நெருக்கடியின்போது, கொரோனாவைக் கட்டுப்படுத்திய வெற்றியாளர் கிண்ணத்தை, ஜனாதிபதி சுவீகரித்தார் என்றும்

எனினும், இந்த வைரஸ் தொடர்பாக உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில்,

இரண்டாவது அலை அபாயத்தின் போது, இலங்கை அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.