இலங்கையில் கொரோனா – மேலும் இருவர் மரணம்

Spread the love

இலங்கையில் கொரோனா – மேலும் இருவர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக இன்று மேலும் இருவர் மரணமாகியுள்ளனர் என்று சுகாதார சேவைகள்

பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவரகள்; என்ற ரீதியில் இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரிய வைத்தியசாலையில்

சிகிச்சை பெற்றுவந்த இரண்டு நோயாளிகள் அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன் அது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:

  1. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஆண் நபராவார். மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுடன் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானமை என
  2. தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. மீகொட பிரதேசத்தைச்சேர்ந்த 45 வயதான ஆண் நபராவார் மரணத்திற்கான காரணம் கொவிட்19 வைரசு தொற்று
  4. நிமோனியாயுடன் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுக்குள்ளானமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மரணமடைந்தோரின்

எண்ணிக்கை 48 ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன உறுதி செய்துள்ளார்.

Leave a Reply