இலங்கையில் 46 ஆவது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மரணம்
இலங்கையில் இன்று இரவு 46 ஆவது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மரணம் இடம்பெற்றுள்ளது.
இம்புல்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் நபர் ஒருவர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நோயாளி உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைக்குப் பின்னர் இவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் வெள்ளணுப் புற்று நிலை அதிகரித்தல் மற்றும் மூச்சுமண்டலத்தில் ஏற்பட்ட பிரச்சினையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொவிட் தொற்றினால் எற்பட்ட மரணமட என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். அத்தோடு இதற்கமைவாக இது இலங்கையில் பதிவான 46 ஆவது கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளியின் மரணமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.






