Posted in Uncategorized

இராஜினாமா செய்த எம்.பி மீண்டும் எம்.பியாகிறார்

இராஜினாமா செய்த எம்.பி மீண்டும் எம்.பியாகிறார்

தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவர், மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

தற்போதைய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்காக, தன்னுடைய தேசியப் பட்டியல் எம்.பி பதவியை, ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்தார்.

இந்நிலையில், மற்றுமொரு தேசியப் பட்டியல் எம்.பியான அஜிட் நிவாட் கப்ரால், தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

. அவர், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவி​யேற்கவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

அஜிட் நிவாட் கப்ராலின் வெற்றிடத்துக்கே, ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

ஆப்கான் இராணுவ கமாண்டர் பிரிட்டனில் கைது

ஆப்கான் இராணுவ கமாண்டர் பிரிட்டனில் கைது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் அரச இராணுவத்தின்

கமாண்டோ படைக்கு தளபதியா விளங்கிய ஒருவர் பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் தாக்கி இருந்த வேளை பிரிட்டன்


காவல்துறையினர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளார்


தொடந்து மூன்று நாடுகளாக தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இவர் சிறையில் அடைக்க படலாம் என சுயாதீன தகவல்கள் தெறிவிக்கின்றான்

    Posted in சினிமா

    திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை

    திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை

    தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை வித்யுலேகா திடீரென்று திருமணம் செய்துக் கொண்டார்.

    திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யுலேகா
    கணவருடன் வித்யுலேகா


    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

    கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா – சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா. கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    வித்யுலேகா

    குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டனர். வருங்கால கணவர் சஞ்சய் உடன் வித்யூலேகா எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள

    பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

    இந்நிலையில், திடீரென்று வித்யுலேகாவும் சஞ்சய்யும் திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

      Posted in சினிமா

      விளம்பரம் தேட வில்லை…. கனகா

      விளம்பரம் தேட வில்லை…. கனகா

      கரகாட்டக்காரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை கனகா, தான் விளம்பரத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

      விளம்பரம் தேட வில்லை…. கனகா காட்டம்
      கனகா
      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

      கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக

      நடித்து பிரபலமான கனகா முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், பிரபு, கார்த்திக் உள்ளிட்டோரின் படங்களில் நடித்து இருக்கிறார்.

      1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகிய அவர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் தனக்கு மீண்டும் நடிக்க ஆசை உள்ளது

      என்றும், இதற்காக சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கற்கப்போகிறேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

      அந்த வீடியோவை பார்த்த சிலர் மீண்டும் சினிமா வாய்ப்பை பிடிக்க விளம்பரம் தேடும் முயற்சியாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்று கனகாவை விமர்சித்தனர்.

      கனகா

      இதற்கு விளக்கம் அளித்து கனகா வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில், “நான் சினிமாவில் நடிக்க விளம்பரம் தேடி வீடியோ வெளியிடவில்லை. சினிமாவை பற்றி இதுவரை எதுவும்

      கற்றுக்கொள்ளாமல் இருந்த நான் புதிதாக கற்கலாமா என்று யோசிப்பதாக தெரிவித்து இருந்தேன். உடனே பலரும் நான் விளம்பரத்துக்காகவும், சினிமா வாய்ப்புக்காகவும் வீடியோவை

      வெளியிட்டு இருப்பதாக விமர்சிக்கிறார்கள். உங்களுடன் பேசவே வீடியோ வெளியிட்டேன்” என்று கூறி உள்ளார்.

        Posted in சினிமா

        ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்

        ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்


        விருமன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் அதிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

        நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்
        அதிதி ஷங்கர், ரஜினிகாந்த்


        இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் ‘விருமன்’. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம்

        மூலம் தயாரிக்கிறார். மருது, கொம்பன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான முத்தையா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகை அதிதி, கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.

        இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும்

        அதிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த், அதிதியை நேரில் அழைத்து வாழ்த்தி உள்ளார்.

        சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற நடிகை அதிதி,

        அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

          Posted in Uncategorized

          இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம்

          இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம்

          இலங்கை அரசுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் விதித்த தடைகள் நீக்க பட்டுள்ளன ,


          இந்த தடை நீக்கத்தை அடுத்து இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த பயணிகள்; குறித்த நாட்டுக்கு பயணிக்கலாம் என அறிவிக்க பட்டுள்ளது

            செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
            Posted in Uncategorized

            யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு

            யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு

            யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்..

            மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

            கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.

            சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.

            குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை

            முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான மருத்துவப்பீட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

            மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..

              Posted in Uncategorized

              இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை

              இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை

              கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலினால் உலக நாடுகளைப் போன்று இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

              இலங்கையும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த வருட இறுதியில் 4 தசம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக பிரதி நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

              பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், போதிய அளவிலான அத்தியாவசியப் பொருட்கள்

              களஞ்சியங்களில் காணப்படுகின்றன இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களை பதுக்கும்

              நடவடிக்கைகளில் சில வர்த்தகர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் இவ்வாறான முயற்சிகளை தடுக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.

              அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்

                Posted in Uncategorized

                மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

                மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதேச சபையில் நேற்று நடைபெற்றது!

                நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று

                பிற்பகல் வேளையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது

                குறித்த மயானத்தை அமைக்க 25 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாவை (10 மில்லியன்) கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார். புலம்பெயர் அமைப்பு ஒன்றும் உதவ முன்வந்துள்ளது.

                குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வைத்தியகலாநிதி மு. சிறீதர், அதிபர்கள் ஆசிரியர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .

                மின்மையானம் அமைப்பதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

                தலைவராக கிளிநொச்சி மாவட்ட முன்னாள் வர்த்தக சங்கத்தின் தலைவர் நவரட்ணராஜா செயலாளராக ஆசிரியரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சத்தியானந்தன்

                பொருளாளராக அதிபர் விக்கினராஜா உபதலைவராக வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ஆனந்த வடிவேல் உபசெயலாளராக ரவி அவர்களும் உறுப்பினர்களாக வைத்தியகலாநிதி மு. சிறீதர்

                கிளிநொச்சி சேவைச் சந்தையின் தலைவர் இரத்தினமணி மற்றும் ரவீந்திரன் ஆகியோரும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

                சிவஞானம் சிறீதரன்
                சிவஞானம் சிறீதரன்
                Posted in Uncategorized

                கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது

                கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது

                நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

                குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

                அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.

                இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

                மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411,233 ஆக அதிகரித்துள்ளது.

                  Posted in Uncategorized

                  ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது

                  ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது

                  இலங்கையில் பரவி வரும் கொரனோ நிகழ்வை அடுத்து பலத்த தடைகள் நடைமுறை படுத்த பட்டுள்ளன

                  அத தடைகளை மீறி செயல்பட்ட 669 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                  தொடந்து தடைகள் விதிக்க பட்டுள்ளது

                    Posted in Uncategorized

                    யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்-2 நாள் சிசுவுக்கு கொரோனா

                    யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்-2 நாள் சிசுவுக்கு கொரோனா

                    யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

                    பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் சிசுவுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                    யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அச்சிசுவுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்: உலக நாடுகளில் இலங்கை முன்னணியில்

                    தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்: உலக நாடுகளில் இலங்கை முன்னணியில்

                    கொவிட் 19 வைரசு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை முன்னணியில் இருப்பதாக மூத்த சரவ்தேச ஆய்வாளர் விஜித்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

                    அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது

                    பொதுமக்களின் கடமையாகும். கட்சி பேதமின்றி இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

                    Posted in Uncategorized

                    கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

                    கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

                    வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் (06) யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

                    கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு, 5 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                    இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

                    Posted in Uncategorized

                    மண்வெட்டியால் வெட்டி ஆண் , பெண் படுகொலை

                    மண்வெட்டியால் வெட்டி ஆண் , பெண் படுகொலை


                    நீர்கொழும்பு மற்றும் கொட்டவெஹர ஆகிய பகுதிகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    கொட்டவெஹர, திகென்னேவ பகுதியில் இரு குழுக்களுக்கு இடையிலான காணிப் பிரச்சினை காரணமான 44 வயதுடைய ஒருவர் மண் வெட்டியால் தாக்கப்பட்டுள்ள கொலை செய்யப்பட்டுள்ளார்.

                    கொலை சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    இதேவேளை நீர்கொழும்பு, தளுபன பகுதியில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

                    தீக்காயங்களுடன் வீடொன்றின் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு

                    கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 89 வயதுடைய குறித்த பெண்ணை மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

                    சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பறக்கும் படை வேட்டை – 375 பேர் கைது

                      பறக்கும் படை வேட்டை – 375 பேர் கைது

                      நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியோர் தொடர்பிலான விபரங்களுடன் பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளது.

                      அதில்,

                      தனிமைப்படுது்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ், இதுவரையிலும் 67,342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      24 மணிநேரத்தில்

                      செப்டெம்பர் 7 ஆம் திகதி காலை 6 மணிமுதல் செப்டெம்பர் 8 ஆம் திகதி காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ்.

                      கைதானவர்களின் எண்ணிக்கை -675

                      கைப்பற்றப்பட்ட வாகனங்கள்- 42

                      சோதனைச் சாவடிகளில்

                      மேல் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணங்களுக்குள் நுழையும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

                      மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிபோது சோதனை செய்யப்பட்ட விவரம்

                      வாகனங்கள் -812

                      நபர்கள்- 1,206

                        Posted in சினிமா

                        200 கோடி ரூபாய் மோசடி -நடிகை கைது

                        200 கோடி ரூபாய் மோசடி -நடிகை கைது

                        நடிகை லீனா மரியாவை டெல்லியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                        200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ‘பிரியாணி’ பட நடிகை கைது
                        லீனா மரியா பால்
                        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                        கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘பிரியாணி’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லீனா.

                        கொச்சியில் வசித்து வரும் லீனா, அங்கு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இவரை, டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

                        பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலியான நடிகை லீனா மரியா, மருந்து நிறுவனமான ரான்பாக்சியின் முன்னாள் தலைவர் ஷிவந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி மோசடி செய்ததாகக் கூறப்படும் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

                        லீனா மரியா பால்

                        நேற்று கைது செய்யப்பட்ட லீனா மரியா பாலை டெல்லி கோர்ட்டு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. 5 நாட்கள் காவல்துறை விசாரணையில் எடுத்து விசாரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

                        இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர்.

                        இவர் டெல்லியில் தொழிலதிபர்களிடம் பல ஒப்பந்தங்களை முடித்து தருவதாக 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது காதலி லீனா மரியாவை டெல்லியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                          செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                          Posted in Uncategorized

                          மனைவி இறந்து 3 நாளில் இறந்த கணவன்

                          மனைவி இறந்து 3 நாளில் இறந்த கணவன்

                          கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்து மூன்று நாள்களின் பின் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நுணாவில் பகுதியில் பதிவாகி உள்ளது.

                          சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

                          நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் கடந்த 3 ஆம் திகதி கொவிட்-19 நோயினால் உயிரிழந்தார். அவரது சடலம் இன்னும் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவில்லை.

                          இந்த நிலையில் அவரது கணவர் தனது 96 வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறையினர் அறிக்கையிட்டுள்ளனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            கொரனோ விதிகளை மீறிய 665 பேர் கைது

                            கொரனோ விதிகளை மீறிய 665 பேர் கைது

                            தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 665 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                            முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

                            இதன்போது 69 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

                            அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 66,668 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                            இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது..

                              Posted in Uncategorized

                              வெள்ளை வானில் மக்களை பிடிக்கும் இராணுவம்

                              வெள்ளை வானில் மக்களை பிடிக்கும் இராணுவம்

                              கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெள்ளைவான் கலாசாரம் தலைத்தூக்குமென கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது பிரசாரம் செய்யப்பட்டது.

                              அதற்காக முதலைக்கண்ணீர் வடித்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் படம் காட்டப்பட்டது.

                              முன்னாள் சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றிய இருவர் சிறையில் உள்ளனர்.

                              பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அவரசகாலச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                              உண்மையால், வெள்ளைவான் கலாசாரத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகிக்கின்றார். என்ன? கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியாமல் வீடுகளிலேயே

                              இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றுவதற்கு படையினர் வெள்ளை வான்களிலேயே செல்கின்றனர்.

                              அவ்வாறு வெள்ளைவான் கலாசாரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே மாற்றியுள்ளார். அவ்வாறு வெள்ளைவான்களில் சென்று தடுப்பூசியை ஏற்றாவிடின், வீடுகளுக்குள்ளே முடங்கியிருப்போரின் நிலைமை என்னவாகியிருக்கும் என்றும் வினவினார்.