Tag: ஒருவர் பலி
பதுளை விபத்தில் ஒருவர் பலி
பதுளை விபத்தில் ஒருவர் பலி
பதுளை விபத்தில் ஒருவர் பலி ,பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள்ளார் .
மேலும் இந்த விபத்தில் சிக்கி நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் ஆட்டோ விபத்து
தெஹியத்தகண்டிய டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்று தெஹியத்தகண்டிய சிறிபுரவிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதற்கு முன்னால் பதுளையிலிருந்து ரிதிபன நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம்
விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் அடிப்பகுதியும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Featured
மேஜர் ஜெனரலின் வாகனம் மோதி ஒருவர் பலி
மேஜர் ஜெனரலின் வாகனம் மோதி ஒருவர் பலி
மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றில் மோதிய விபத்தில் அங்கு பணிபுரிந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (01) மாலை மாவனல்லை ஹிங்குல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகனத்தை ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரே செலுத்தியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமானவர்.
மேஜர் ஜெனரலின் வாகனம் மோதி ஒருவர் பலி
குறித்த வாகனம் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாரதியினால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்
வீதியை விட்டு விலகி காய்கறி கடையை மோதி பலத்த சேதம் விளைவித்ததுடன் அருகிலிருந்த தொலைபேசி கம்பத்திலும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை செலுத்திய மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
வீடொன்றுக்கான மதிலை கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டிக்கொண்டிருந்த போது மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி ஷொருகசின்ன பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விமல் ஜயசிறி (62) என்பவரே மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
உயிரிழந்தவர் கூலித் தொழிலாளி என்றும், (02) நாவலப்பிட்டி உயர் நீர்ப் பகுதியில் வீடொன்றுக்கு மதிலை கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டிக் கொண்டிருந்த போது, மோசமான காலநிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
மண்மேட்டின் கீழ் விழுந்த நபரை பிரதேசவாசிகள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசாby நிருபர் காவலன்
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்by நிருபர் காவலன்
- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைதுby நிருபர் காவலன்
- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்by நிருபர் காவலன்
- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்by நிருபர் காவலன்
பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்
பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்
ஹோமாகம, பிடிபன பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன், மேலும் 13 பேர் படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹோமாகம பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொத்துஹெர, கந்தேவத்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (19) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர் 35 வயதுடைய கஹவத்த, பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட முள்ளம்பன்றி ஒன்றின் சடலம், மின்விளக்கு மற்றும் அலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவராவார்.
மேற்படி நபர் பாதுகாப்பற்ற வயல் கிணற்றில் சடலமாக காணப்பட்டமை தொடர்பில் நெல்லியடி பொலிசருக்கு தெரிவிக்கப்பட்டது.
தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
சம்பவ இடத்திற்கு இன்று (27) மாலை சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அப்பகுதியில் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுவதாகவும் அவற்றை காணி உரிமையாளர்கள்
பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாப்பானதாக செய்ய வேண்டும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | மினுவாங்கொடை பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் .
இருவர் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டின் பொழுதே ஒருவர் சூட்டுக்கு
இலக்காகி பலியாகியுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஒருவர் பலி
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஒருவர் பலி
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் ஒருவர் பலியாகியுள்ளார் .
நீண்ட இடைவெளியின் பின்னர் தற்போது கொரனோ மரணங்கள் இறப்பு விகிதம் அதிகரித்து செல்கிறது .
இலங்கையில் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,தற்போது கொரனோ ,
இறப்புக்களை அதிகப்படுத்தி ,அரசு கூறி வருகிறது குறிப்பிட தக்கது .
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் ,இலங்கை மித்தெனிய பகுதியில் மர்ம நபர்கள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் .ஒருவர் பலியாகியுள்ளார் .
தமது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவரை, பின்தொடர்ந்த மர்ம குழு ஒன்று ,அந்த நபர் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை ,நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
மர்ம நபர்கள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் ,சம்பவ இடத்திலேயே நபர் பலியாகியுள்ளார் .
சடலம் மீட்க பட்டு ,சடல உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

























