Tag: இலங்கை
சீனாவிடம் இருந்து 1.5 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை
சீனாவிடம் இருந்து 1.5 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை
சீனா அரசிடம் இருந்து இலங்கை 1,5 பில்லியன் அமெரிக்கா டொலரை கடனாக பெறுகிறது
நாடு பலத்த கடன் சுமையில் சிக்கி தவிக்கும் இவ்வேளையில் மீளவும் கடனை பெற்று
வருகின்றமை குறிப்பிட தக்கது
புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு
புதுக்குடியிருப்பு நபர் வெட்டி கொலை – காயங்களுடன் சடலம் மீட்பு
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில், நேற்று (26) மாலை, வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என்பவர் ஆவார்.
குறித்த நபர், நேற்று (26) காலை 11.30 மணியளவில் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.
சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
கொரனோவால் 19 பேர் மரணம்
கொரனோவால் 19 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 19 பேர்
பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது ,உயிர் இழப்பை மேலும் அதிகரிக்கலாம் என
அஞ்ச படுகிறது .
இலங்கையில் ஆட்டோக்களுக்கு மீட்டர்
இலங்கையில் ஆட்டோக்களுக்கு மீட்டர்
எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண அறவிட்டுக்கான
மீட்டர் கட்டாயமாக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி,இதற்கான விதி முறை
அமுலாக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்குள், அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர
வண்டிகளுக்கு கட்டணங்களை அறவிடுவதற்கான மீட்டரை பொருத்துதல் கட்டாயமாக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்
அரியாலையில் போலீசார் துப்பாக்கி சூடு
அரியாலையில் போலீசார் துப்பாக்கி சூடு
இலங்கை யாழ்ப்பாணம் அரியாலை நெளுக்குளம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள்
மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்
இதில் 27 வயது வாலிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் ,வண்டியை நிறுத்த முற்பட்ட பொழுதும்
நிறுத்தாமல் சென்ற நிலையில் இந்த சூடு நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பெண்ணை திருமணம் செய்ய அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் கைது
பெண்ணை திருமணம் செய்ய அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் கைது
இலங்கை பொலனறுவை பகுதியில் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள காவல்துறை
அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்
மருத்துவ தாதியின் இடுப்பை பிடித்த நபர் கைது
மருத்துவ தாதியின் இடுப்பை பிடித்த நபர் கைது
இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் கொரானா ஊசி செலுத்த சென்ற
நபர் ஒருவர் அந்த ஊசியினை செலுத்திய தாதியின் இடுப்பை கிள்ளியுள்ளார்
மேற்படி சம்பவம் அங்கு பர பரப்பை ஏற்படுத்திய நிலையில் குறித்த நபர் கைது செய்ய
பட்டுளளார் ,ஊசிக்கு பயத்தில் இடுப்பை பிடித்தாரா அல்லது ,அந்த நினைப்பில் பிடித்தாரா என்பது உடனடியாக தெரியவரவில்லை
புத்தி கெட்ட மனிதரெல்லாம்-அருமை சிறிதரன் எம்பி உருக்கம்
புத்தி கெட்ட மனிதரெல்லாம்” எனும் மிக அருமையான திரைக்கதை மூலம் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்திய எம் ஈழத்து இளம் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
‘புத்தி கெட்ட மனிதரெல்லாம்” எனும் அற்புதமான முழு நீள திரைப்படத்தினை இயக்கிய poovan media குழும கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
கதைக்களத்தை சிறப்பான முறையில் உருவாக்கிய இயக்குனர் சிவராஜ் அவர்களுக்கு அவர்தம் குழாத்தினருக்கு மிக இளம் வயதில் சாதிக்க முடியும் என்பதை சாதித்து காட்டிய சாதனையாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
ஈழத்து திரைப்படங்கள் மேலும் வளர்ச்சி நிலையை அடையவேண்டும் இப்படியாக ஈழத்து கலைஞர்களின் படைப்புகள் மேலும் வரவேண்டும் இவர்களின் முயற்சி வெற்றியடைய என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
தமிழர்களின் கலை வரலாற்றில் விடுதலைப்புலிகளின் காலம் பொற்காலம் போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து
கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது உண்மை தான்.
எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும், கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அதனூடாக பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும் வளர்த்திருந்தார்கள்.
கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கு மகத்தானது. தங்களின் கலைப் படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சி கொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை.
ஈழத்து திரைப்படங்கள் விடுதலைப் புலிகளின் காலத்தில் உச்ச நிலை பெற்றிருந்தது எம்மவர்களின் கலை வெளிப்பாட்டின்பால் அந்நிலைக்கு ஈழத்து முழுநீள திரைப்படங்கள் வளர்ச்சி பெற வேண்டும் வாழ்த்துக்கள்
ஜப்பான் அமெரிக்கா -ரசியா எல்லையில் திடீர் போர் ஒத்திகை -அஞ்சுமா ரஷியா
ஜப்பான் அமெரிக்கா -ரசியா எல்லையில் திடீர் போர் ஒத்திகை -அஞ்சுமா ரஷியா
ஜப்பான் இராணுவமும் அமெரிக்கா இராணுவமும் இணைந்து ரசியா எல்லையில் பெரும் போர்
ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளனர் ,இதனால் ரசியா பகுதியில் பதட்டம் நிலவுகிறது
இந்த இராணுவ ஒத்திகை மூலம் ரயா மிரள வைக்கலாமா என அமெரிக்கா நினைக்கிறது ,அல்லது
இவ்வாறான முற்றுகையா இடம் பெறும் என காண்பிப்பது ரசியாவை அச்சம் கொள்ள வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
வீழ்ந்து நொறுங்கிய இந்திய இராணுவம் விமானம்
வீழ்ந்து நொறுங்கிய இந்திய இராணுவம் விமானம்
இந்திய விமான படையின் மிக் ராக போர் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன்
போது அந்த விமானத்தை ஓட்டி சென்ற விமானி சம்பவ தின வைபத்தில் பலியாகியுள்ளார்
குறித்த விபத்து எவ்விதம் இடம்பெற்றது என்பது தொடபில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
தொடராக இந்திய படையின் வானூர்திகள் வீழ்ந்து நொறுங்கி வருவது இங்கே கவனிக்க தக்கது
துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்
துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்
துருக்கியில் இருந்து பாகிஸ்தானும் நேரடியான ரயில்சேவை ஆரம்பிக்க பட்டுள்ளது ,இந்த
தொடரூந்து ஈரான் ஊடாக பாகிஸ்தான் சென்றடையும் ,இதனால் மூன்று நாடுகள் கூட்டணிவோ
டு இந்த சேவை இடம் பெறுவதால் மூன்று நாடுகளும் பயன அடைகின்றது எனலாம் .
இலங்கை வரும் 6 எண்ணெய் கப்பல்
இலங்கை வரும் 6 எண்ணெய் கப்பல்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ,180 நாட்கள் கடன் அடிப்படையில் சிங்கப்பூர் விநியோக நிறுவனம் மூலம் மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ளவுள்ளது.
இதற்மைய மசகு எண்ணெயுடனான ஆறு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளன. 30 நாள் கடன் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறவுள்ளது.
இந்த உடன்டிக்கைக்கு அமைய எரிபொருள் கப்பல் இலங்கை வரவுள்ளது. இதில் முதலாவது தொகை அடுத்த மாதம் 23ஆம் திகதி அல்லது 24ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அந்நிய செலவணி தொடர்பில் நெருக்டியை எதிர்கொண்டுள்ள வேளையில், எரிபொருள் இறக்குமதிக்கு பணத்தை தேடுவது பிரச்சனையாக உள்ளது.
ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 36 கோடி டொலர்கள் செலவாகிறது. நாட்டின் அந்நியசெலாவணி இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை
வீழ்ச்சியடைந்தள்ளது. இதற்கமைவாக அடுத்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் எரிபொருளை தொடர்ச்சியான விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன் சப்புகஸ்கந்த எரிபொருள்
சுத்திகரிப்பு நிலையம் மூடப்படாமல் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது
போலீசில் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு 4 போலீசார் மரணம்
போலீசில் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு 4 போலீசார் மரணம்
மட்டு திருக்கோவில் காவல்துறை நிலையத்திற்குள் நுழைந்த போலீசார் ஒருவர் நடத்திய திறந்த வெளி
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் பலியாகியும் இருவர் படுகாயமாய்ந்துள்ளனர்
காயமடைந்த இரு போலீசார் திருக்கோவில்,மற்றும் அக்கரைப்பற்று தீவிர சிசை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இந்த சம்பவத்திற்ககுரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பெண் போலீசை கற்பழித்த போலீஸ் அதிகாரி கைது
பெண் போலீசை கற்பழித்த போலீஸ் அதிகாரி கைது
இலங்கை Gandara காவல்த்துறை நிலையத்தில் பணியாற்றி வரும் OIC தர அதிகாரி கான்ஸடபிள் தர
பெண் போலீஸ் அதிகாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள நிலையில் தற்போது அவர் கைது
செய்ய பட்டுள்ளார்
குறித்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,குற்றம் நிரூபிக்க பட்டால்
பல்லாண்டு சிறை வசம் அனுபவிக்க நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது
சுடலைக்குள் அடித்து நொறுக்க பட்ட ஜேசு சிலை
சுடலைக்குள் அடித்து நொறுக்க பட்ட ஜேசு சிலை
கற்பிட்டி சவக்காலையில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்பிட்டி சென். மேரிஸ் வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் திருச் சிரூபம் நிலத்தில் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த சவக்காலையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் அடையாளத்திற்காக பெயருடன் புதைக்கப்பட்ட சுமார் 40 சிலுவைகள் (குருஸ்) இதன்போது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (23) இரவு தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, நேற்று (24) சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸாரும், புத்தளம் தடயவியல் பொலிஸாரும், கை ரேகை பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன், மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு சவக்காலை உள்ள பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
இன்று (25) புனித நத்தார் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாறு யோசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டு, சிலுவைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு சிலை மற்றும் சிலுவைகள் உடைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் ஆலோசனையில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.
யாழுக்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்
யாழுக்கு புதிய ரயில் சேவை ஆரம்பம்
கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எஸ்13 Engine ஜக் கொண்ட இந்த ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
New Train Jaffna, 23 ஆம் திகதி மருதானையில் இருந்து ரம்புக்கணை நோக்கி 550 பயணிகளுடன் இந்த ரயில் சென்றது.
550 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த ரயில் போக்குவரத்து பரிசோதனைக்காக மருதானை புகையிரத நிலையத்திலிருந்து ரம்புக்கணை புகையிரத நிலையம் வரை பயணித்துள்ளது.
இந்த ரயிலின் சில பெட்டிகள் குளிரூட்டப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
13 வயது சிறுமி கற்பம் – பிணம் மீட்பு
13 வயது சிறுமி கற்பம் – பிணம் மீட்பு
போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் நாம் வினவியபோது கேகாலை பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகநபர் கேகாலை நிதஹஸ் மாவத்தையில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட போது பொலிஸாரால் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வயோதிப பெண் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படும் நிலையில், ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நபரை வீதியில் போட்டு தககிய போலீஸ்
நபரை வீதியில் போட்டு தககிய போலீஸ்
போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் நாம் வினவியபோது கேகாலை பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகநபர் கேகாலை நிதஹஸ் மாவத்தையில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட போது பொலிஸாரால் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வயோதிப பெண் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படும் நிலையில், ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்
ஆட்டிலறி குண்டுகள் மீட்பு – விசாரணையில் இராணுவம்
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிகல, மீயாங்கொல்ல காட்டு பகுதியிலிருந்து
அதிசக்தி வாய்ந்த 130 மில்லி மீற்றர் பீரங்கி குண்டு மற்றும் நாட்டுத்துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்
தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து காகித ஆலை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இவை மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ளவற்றை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை குண்டு செயலிழக்கச்
செய்யும் பிரிவினர் மேற்கொண்டுள்ளதுடன், கடந்த சில தினங்களாக இவ்வாறான கைவிடப்பட்ட
வெடி பொருட்களை வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் மீட்டு செயலிழக்கச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் மகிந்த வழிபாடு
திருப்பதியில் மகிந்த வழிபாடு
இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,
வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு திருப்பதி
தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, சாமி படம் மற்றும் பிரசாதங்கள் வழங்குகின்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த
பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.






