Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
முள்ளி வாய்க்கால் பகுதியில் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்
முள்ளி வாய்க்கால் பகுதியில் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்
முள்ளிவாய்க்கால் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த அசிங்கள காவலதுறையினர் மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்
குறித்த நபர் ஒருவரை தேடி சென்ற போலீசார் அவரை தங்களிடம் பிடித்து
வந்து ஒப்படைக்கும் படி கூறியே அங்கிருந்த அப்பாவி நபர்கள் மூவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தி சென்றுள்ளனர்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

இவர்களின் தாக்குதலில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான இவர்கள்
தற்போது முல்லைத்தீவு மருத்துவமனையில் ஒப்படைக்க பட்டுள்ளனர்
இன்று மட்டும் நான்கு இடங்களில் இவ்வாறு மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது

யாழில் தனிமை படுத்த பட்ட 298 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
யாழில் தனிமை படுத்த பட்ட 298 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
இலங்கை தமிழர் தாயமாக யாழ்ப்பாணம் விடத்தற்பளை பகுதியில் தனிமை
படுத்தல் சிறப்பு முகாமில் தடுத்து வைக்க பட்ட மக்களில் சுமார் 298 பேர் தற் பொழுது
தமது சொந்த இடஙக்ளுக்கு ,தமது குடும்பங்களுடன் மீள் இணையும் நடவடிக்கைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

சிறப்பு பேருந்துகளில் இவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர் .
இலங்கை பாதுகாப்பான நாடு என ஆளும் அதிகாரம் தெரிவித்து வரும் நிலையில் ,
இயற்கை மரணம் என இறந்தவர்களை கொரனோ மரண விதிகளுக்கு உட்படுத்தியமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
இந்த நோயினால் இறந்தவர்களை ,மலேரியா,நிமோனியாவில் இறந்ததாகக் இலங்கை கணக்கு காண்பித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

ஊரடங்கை மீறிய 47,784 பேர் கைது – பண வசூல் வேட்டையில் பொலிஸ்
ஊரடங்கை மீறிய 47,784 பேர் கைது – பண வசூல் வேட்டையில் பொலிஸ்
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து விதிக்க பட்ட ஊரடங்கு
சட்டத்தை மதிக்காது ,வீதியில் அத்துமீறி உலாவிய 47 ஆயிரத்து 784 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
மேற்படி நபர்கள் பாவித்த வாகனங்களும் பறி முதல் செய்ய பட்டுள்ளதுடன் தண்டமும் வழங்க பட்டுள்ளது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

இவ்வாறு வழங்க பட்ட தண்டம் எதிரிவரும் 14 நாட்களுக்குள் செலுத்த
பட வேண்டும் தவறின் அதற்கு வட்டி ,குட்டி என ,அதிகரிக்கும்
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இவ்வாறு சமன் செய்யும் நிலையில் இலங்கை காவல் துறை ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

யாழில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மக்களை தாக்கிய சிங்கள பொலிஸ்
யாழில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மக்களை தாக்கிய சிங்கள பொலிஸ்
இலங்கை யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் நள்ளிரவு வீடொன்றுக்குள்
புகுந்த சிங்கள காவல்த்துறை காடையர்கள் அப்பாவி மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தியுள்ளனர்
சிங்கள காடையர் காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டதாக கூற படும் வாலிபன்
ஒருவனை கைது செய்து இழுத்து செல்லும் முகமாக அவர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள படையினர் தேடுதலி நடத்தினர்
அதன் பின்னர் அங்கிருந்த ஆண் பெண்கள் மீது வன்முறை தாக்குதலை
நடத்தியதுடன் ,குறித்த வாலிபனை காவல்துறையில் ஒப்படைக்கும் படி மிரட்டி விட்டு சென்றுள்ளனர்
நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளில் தாம் அவ்வாறு ஒருவரை தேடவில்லை என போலீசாரை தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது

விவசாய – கடற்றொழிலாளர்களுக்கு மே மாதமும் முதல் ரூபா 5000/= ஓய்வூதியம்
விவசாய – கடற்றொழிலாளர்களுக்கு மே மாதமும் முதல் ரூபா 5000/= ஓய்வூதியம்
சகல விவசாய மற்றும் கடற்றொழிலாளர்களை சார்ந்த ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கும் ரூபா 5000/= கொடுப்பனவு மே
மாதத்திலும் வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபைத் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஹெப்பா தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை
சகல விவசாயிகள் / கடற்றொழிலாளர் ஓய்வூதிய பயனாளிகளுக்காக ரூபா 5000/= கொடுப்பனவை 2020 மே மாதத்திற்காக வழங்குதல்
கொவிட் 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானத்தைக் கொண்ட பொது மக்களுக்காக அதிமேதகு
ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வழங்கப்படும் ரூபா 5000/=, கொடுப்பனவை சகல விவசாய
ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கும் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் பெரும் பயனாளிகளுக்கும் இம்முறையும் மே
மாதத்திற்காக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கமத்தொழில் மற்றும் கமநல
காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஹெப்பா அவர்கள் பத்திரிகை அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக அனைத்து விவசாய மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் பெறுவோருக்கு உரித்தான ஓவ்வூதியம் ரூபா 5000/=
என்ற ரீதியில் தமக்குரிய தபால் அலுவலகத்தின் மூலம் மே மாதம் 11, 12 , 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் பெற்றக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தற்பொழுது
மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைவாக விவசாய ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் 1,62,000 பேருக்கும் கடற்றொலாளர்
ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் 4907 பேருக்கும் சுமார் 831 மில்லியன் ரூபாவை மே மாதத்திற்காக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவசாய மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய கொடுப்பனவை நாட்டில் உள்ள 4200 தபால் அலுவலகங்கள் மூலம்
செலுத்துவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்வதற்கு தபால் மா அதிபரின் விசேட அனுசரணையின் கீழ் தபால் திணைக்களம்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏதேனும் அல்லது அவசர நிலையின் அடிப்படையில் தமது எல்லைப் பிரதேசத்திற்கான
சம்பந்தப்பட்ட தினத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டால் தமது ஓய்வூதிய கணக்குப் புத்தகத்தை அவசரகால அனுமதிப்
பத்திரமாக பயன்படுத்த முடியும் என்பதுடன் ,ஏதேனும் அல்லது போக்குவரத்து சிரமங்களினால் ஓய்வூதிய பயனாளிகளுக்குப்
பாதிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகத்தின் மூலம்
பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து பொருத்தமான வேலைத்திட்டமொன்று வகுக்கப்படும் என்றும் கமத்தொழில்
மற்றும் கமநல காப்புறுத்திச் சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேதமசந்திர ஹெப்பா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

கூலி தொழிலாளிகளை விரட்டி விரட்டி குற்றிய குளவிகள் – 15 பேர் காயம்
கூலி தொழிலாளிகளை விரட்டி விரட்டி குற்றிய குளவிகள் – 15 பேர் காயம்
இலங்கை போகவண்டலவா தொடத்தில் பணிபுரிந்த பதின் ஐந்து நபர்களை
அங்கு கூடு கட்டி வாழ்ந்த குளவிகள் ஓட ஓடி விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளன .
குழவிகளின் பலமான தாக்குதலுக்கு உள்ளான இவர்கள் அதே பகுதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இவ்வாறான குளவிகள் தாக்குதல்கள் இந்த பகுதியில் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

இலங்கைக்கு சிறப்பு விமானத்தில் மருந்துகள் அனுப்பிய இந்தியா photo
இலங்கைக்கு சிறப்பு விமானத்தில் மருந்துகள் அனுப்பிய இந்தியா photo
இலங்கைக்கு 12.5 தொன் நிறையுடைய மருந்துப் பொருட்களை இந்தியா, நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொவிட் 19 தொற்றை தடுப்பதற்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கிய இந்த பொருட்களை
இலங்கையின் புதிய இந்திய உயர்ஸ் தானிகராக நியமனம்பெற்றுள்ள கோபால் பாக்லே நேற்று இலங்கைக்கு
எடுத்துவந்தார்.இலங்கை வந்தடைந்த புதிய உயர்ஸ்தானிகர் இந்தியாவின்
சார்பில் இலங்கை மக்களுக்கு தனது வெசாக் தின
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
அவர் எடுத்துந்த இந்த நன்கொடை மருந்து பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படும் இந்தியாவின் நான்காவது நன்கொடையாகும்.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி சார்க் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற இணைய மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
சர்வதேச தொற்று நோயான கொவிட்-19க்கு எதிராக இணைந்து போராடுவோம் என்று அறிவித்திருந்தார். இதற்கமைய நான்காவது
தடவையாக மேலும் ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சிறப்பு 
கிளிநொச்சியில் ,இராணுவத்தினரால் கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சியில் ,இராணுவத்தினரால் கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் இன்று காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான டிப்போ சந்திமுதல் கரடிபோக்கு சந்தி வரையான ஏ 9 வீதியிலும் வங்கிகள் பேருந்து
நிலையம் மற்றும் தரிப்பிடங்கள் வர்த்தக நிலையங்கள் நடை பாதைகள் மக்கள் கூடும் பகுதிகளிலும் தொற்று நீக்கும்
செயற்திட்டம் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.24கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயந்த
குணரட்ணவின் ஆலோசனைக்கமைவாக கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டி சில்வாவின்
வழி நடத்தலில் காலாற்படையினரால் குறித்த தொற்று நீக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி பொது
சுகாதார பிரிவினரின் கண்காணிப்பில் தொற்று நீக்கம் கலவைகள் விசிறப்பட்டதுடன் சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் 

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும் – மும் மொழிகளிலும் வழிகாட்டல்கள்
ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும் – மும் மொழிகளிலும் வழிகாட்டல்கள்
ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழிகாட்டல்கள்
வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதற்கு அமைவாக வைரஸ் தொற்று காலத்துக்கு முன்பு போல் அல்லாமல் அதன் பின்னர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை
நாம் சிந்தித்து செயல்படுவது அவசியம் என்று தெரிவித்த அவர், குறிப்பாக அரச ,அரச சார்பற்ற மற்றும் ஏனைய நிறுவனங்கள்
கைத்தொழில் துறை நிறுவனங்கள் உட்பட அத்தியவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் இணையதளத்திலும்,
பிரதமர் அலுவலக இணைய தளத்திலும் அதனை பார்வையிட முடியும். இதனை அறியவில்லை எனக் கூறி தட்டிக்கழிக்க முடியாது
என்று தெரிவித்த பணிப்பாளர் நாயகம் இந்த விடயங்களில் தெளிவில்லை என்றால் எமது அதிகாரிகள் குழு அதனை தெளிவுபடுத்த தயாராக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு தவிர்ந்த வெளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனைகள் தரமற்றவையென
மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ,இவ்வாறு தற்போது
பிரசாரங்களை மேற்கொள்பவர்களே முன்பு அதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கற்கை பீடங்கள் உள்ளிட்ட
நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்தனர் பிசிஆர் பரிசோதனையா- அல்லது தனிமைப்படுத்தல்
செயற்பாடுகளா? எது மிக முக்கியமென பார்க்கும்போது தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மிக முக்கியமானதும்
அவசியமுமாகிறது. தனிமைப்படுத்தலுக்குப் பின்னரும் கூட பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். எனினும் கொரோனா
வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு தனிமைப்படுத்தல் மிக முக்கியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எவ்வாறெனினும் பரிசோதனைக்கூடங்கள்
தற்போது விரிவாக்கப்பட்டு பரிசோதனைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு நிறுவனங்கள்
ஏற்கனவே பரிசோதனைகளை முன்னெடுத்த போதும் கொரோனா வைரஸ் தொடர்பான பிசிஆர் பரிசோதனை தொடர்பில்
அவர்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது. அதேவேளை இத்தகைய பரிசோதனை கூடங்கள் ஆரம்பிக்கப்படும் முன்பே அது தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது.
நாம் அதற்கு மேலதிகமாக தற்போது மேற்படி பரிசோதனைக் கூடங்கள் தொடர்பில் மேலும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதனையடுத்து நாம் பேராசிரியர் மலிக்
பீரிசின் ஒத்துழைப்புடன் சகல பரிசோதனைக் கூடங்களையும் தனித் தனியாக தரப்படுத்தலுக்கு உட்படுத்த உள்ளோம். அதேபோன்று எமது நீண்ட கால
வேலைத்திட்டமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் அவற்றை தரநிர்யம் செய்வதற்கு உத்தேசித்துள்ளோம். எவ்வாறாயினும் காலத்துக் காலம் பொருத்தமான வகையில் அவற்றை
கண்காணிப்புக்கு உட்படுத்துவது இடம் பெறும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

கொரோனா – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா நோயாளிகளில் குணமடைந்து வைத்திய
சாலைகளில் இருந்து வெளியேறிய நோயாளிகளின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

இதேவேளை இன்றைய தினத்தில் (2020.05.08) இதுவரையில் கொரோனா
வைரசினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர் எவரும் பதிவாகவில்லை
என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
நேற்றைய தினத்தில் (2020.05.07) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1553 என்றும் அவர் தெரிவித்தார்.

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

கொரனோ நிதியை சுருட்டிய -யாழ் மருத்துவர்
கொரனோ நிதியை சுருட்டிய -யாழ் மருத்துவர்
தமிழர் தாயக பகுதியில் விரைவாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஆளும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,அதற்கு அமைவாக மக்களின் முதல் உயிர் நாடியாக விளங்கும்
மருத்துவ மனைகளை புனர் நிர்மாணம் செய்து தரமிக்கதாக மாற்றிட இலங்கை சுகாதார அமைச்சினால் கட்டுப்பாடு இன்றி
வடக்கு பகுதி மருத்துவ மனைகளுக்கு நிதிகள் தாராளமாக ஒதுக்க படுகின்றன
அவ்விதம் தற்போது கொரனோ நிதி என பல மில்லியன் நிதிகளை சுகாதார அமைச்சுக்கு வடக்கு சமாகாண பொறுப்பதிகாரி கேதீஸ்வரனுக்கு ஒதுக்க பட்டுள்ளது ,
ஆனால் அவர் அதனை உரிய முறையில் பயன் படுத்த விடாது ,தமது தனி நலன் சார்ந்து சுருட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்
சுகாதார அமைச்சின் தகவல் தொடர்பு வெளிப் படுத்தலில் ,
காடர் சிஸ்டெம் உள்ளது ,அதன் பொறிமுறையை பின்பற்றி இந்த மருத்துவம மனைகளை தரம் உயரத்திட இலகுவான வழிகள் உள்ளன .
ஆதார வைத்திய சாலை ஒன்றுக்கு ,இரு மகப்பேறு நிபுணர்கள் ,இரு சத்திர சிகிச்சை நிபுணர் ,இரண்டு மருத்துவ நிபுணர் ,என வழங்க பட்டுள்ளது
இவ்விதம் ,மந்திகை,சாவக்கேசரி,ஊர் காவல்துறை ,இதர வைத்தியசாலைகள் ,என்பன இவ்வாறு உள்ளடக்க பட்டுள்ளது, எனினும் அதனை உரிய முறை பயன் பாட்டிற்கு இயக்கும்
நடவடிக்கையை வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் செய்திட பின்னடித்து வருகின்றார்
சிறிய சிங்கள மருத்துவ மனைகளில் ,திறன்பட்ட தமிழ் வைத்தியர்கள் சேவை புரிகின்றனர் ,உரிய விடயங்களை அமூல் செய்து ,தரமிக்க மருத்துவமனையாக இவற்றை மாற்றிடின் தமிழர்
மருத்துவமனைகள் செழிப்புடனும் ,மக்களின் நேரான நம்பிக்கையை பெற்றதாக மாறிடும் ,ஆனால் அதனை இவர்கள் செய்திட மறுத்து வருகின்றனர்
கொரானாவுக்கு என ஒதுக்க பட்ட பல மில்லியன் நிதிகளும் ,இதுவரை உரிய முறையில் பயன் படுத்த படவில்லை ,
இதன் கால எல்லை முடியும் பொழுது வடையும் ,டீயும் வாங்கி கொடுத்து மருத்துவர்களுடன் கலந்துரையாடலை மேற் கொண்டு
அதற்கு இந்த பணம் செலவு செய்ததாக கூறி கணக்கினை முடித்து அந்த பணத்தை இவர் சுருட்டி விடுகின்றார்
ஏனைய மருத்துவர்களையும் ஊழலுக்குள் சிக்க வைத்து ,தன் மீது நேரடியாக அவர்களும் நடவடிக்கை மேற் கொள்ள முடியாத படி
பார்த்து கொண்டு, இந்த மோசடியை தொடர்ந்து நடத்தி செல்கின்றார் கேதீஸ்வரன்
அது மட்டுமல்ல ,யாழ்ப்பாண மருத்துவமனையில் தற்பொழுது நோயாளர்கள் வரவு வீழ்ச்சி அடைந்துள்ளது ,வழமையான இயல்பு
நடவடிக்கையின் பொழுது ,தனியார் மருத்துவ மனையில் மக்கள் சிகிச்சை பெறும் நோக்குடன் சத்தியமூர்த்தி அனுப்பி வருகின்றார்
இவர்கள் அரச ஊழியராக இங்கு பணிபுரிகின்ற பொழுதும் தனியார் மருத்துவ மனைகளைளிலும் பணிபுரிந்து மக்களிடம்
பணத்தை சுரண்டி ஏப்பம் இட்டு வருகின்றனர் என பாதிக்க பட்ட மக்களும் ,மருத்துவமனை உள்ளிருந்து முக்கிய தகவல்கள் கசிகின்றன
நோயாளரை பராமரிப்பதற்கு உரிய கட்டில்கள் இல்லை ,இவ்வாறான பெரும் நெருக்கடி நிறைந்த நிலையில் மருத்துவ மனைகள் உள்ளதுடன் ,அதிக தூர் நாற்றமும் வீசுகிறது ,
துர் நாற்றம் இல்லாத நிலையில் மருத்துவ மனையை வழிகாட்டி செல்ல முடியாத நிலையில் கேதீஸ்வரன் உள்ளார் .
இலங்கை சுகாதார அமைச்சு இவர்களுக்கு ஒதுக்க பட்ட நிதிகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமா ?
இதில் இவர்கள் புரிந்த கையாடல்களை அம்பலப்படுத்தி தண்டிக்குமா …?
தாரளமாக நிதிகளை ஒதுக்கிய அரசின் செயல் பாராட்டுதலுக்கு உள்ளன ஒன்றே ,ஆனால் அதனை சிறந்த முறையில் பயன்படுத்த
திட்டங்களை போட்டு உரிய பொறிமுறையில் செயலாற்றி வளமான மருத்துவ ஒன்றிணைந்த செயலாக மாற்றிட முடியாத நிலையில் கேதிஸ்தீஸ்வரன் உள்ளார்
தீவு பகுதி மருத்துவமனைகள் மற்றும் யாழ்ப்பாண மருத்துவமனைகள் உள்ளடங்கியதான ஒரு சங்கிலி தொடர் நவீன மய மாக்களுக்குள் முன் நகர்த்தி இலகு சேவையை செய்திட
கேதீஸ்வரன் தயங்குவது ஏன் என்ற கேள்வியை நாம் இங்கு முன் வைக்கிறோம் ..
தமது லஞ்ச,ஊழல் மோசடி அம்பலத்திற்கு வரும் நிலை எட்டும் நிலை ஏற்பட்டால் ,அதே விளையாட்டை முன்னர் புரிந்த
மருத்துவர்களையே சிக்க வைத்து பதவியை பிடுங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ள செயல் பாடுகளும் இடம்பெற்றுள்ளன
அவ்வாறான மருத்துவ மனையில் இடம்பெறும் அடாவடிகள்,சாவகச்சேரி மருத்துவ மனையில் இடம்பெறும் இது போன்ற செயல்கள் ,மற்றும் யாழ்ப்பாண போதான
வைத்தியசாலையின் நிலவரங்கள் தொடர்பாக வினாவிட கேதீஸ்வரனை பலமுறை தொடர்பு கொண்ட பொழுதும் எமது தொடர்புக்கு பதில் அளிக்க மறுத்து வருகிறார்
முக நூல் வாயிலாகவும் தொடர்பு கொண்டோம் அதற்கும் பதில் இல்லை ,கடவுளாக மக்கள் வணங்கும் இந்த மருத்துவர்கள் ஊழல்கள் மக்களை அதிர வைத்துள்ளது
வெறும் கட்டிடங்களை கட்டி ,அதனை பரப்புரை புரியும் இவர்கள் ,மருத்துவமனை உள்ளே நவீன வசதிகள் கொண்ட ,முறையில்
மாற்றி அமைத்து அதனை சிறந்த சேவை நிர்வாகமாக நடைமுறை படுத்த இவர்களினாலே முடியவில்லை .
மகப்பேறு சேவை என்பது பலம் குன்றிய நிலையில் ,உள்ளது ,குருதி சோதனை
வசதி கூடம் இல்லை , இவ்வாறு இந்த மருத்துவமனைகளில் குறைபாடுகள் உள்ள பொழுது அதனை நிவர்த்தி செய்திட இந்த பொறுப்புநிலை பணிப்பாளர் கேதீஸ்வரன் மறுப்பது ஏன் ..? தனது
ஊரான வரணி ஆதார வைத்திய சாலையில் இடம்பெறும் அடாவடிகளை தடுத்து நிறுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை
செய்திட மறுப்பது ஏன் …? அர்ச்சுதன் மற்றும் ,அங்கு பணிபுரியும் குடும்பனால தாதி செயலை தடுத்து நிறுத்துவது எப்போது ..?
வியாபரிகளான மருத்துவர்கள் நிலை கண்டு தமிழர் இனம் வெட்கி தலை குனிகிறது,
( இந்த செய்தியை மருத்துரைத்தால் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் நிலையை விளக்கி உங்கள் தகவலை இங்கே பதிவிட முடியும் -0044 7536707793)

யாழில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது
யாழில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது
யாழ்ப்பாணத்தின் கோப்பாய் மற்றும் இதர பகுதிகளில் ஊரடங்குந் வேளையில்
திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட ஐவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
நகைகள் ,பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை என்பனவற்றை இவர்கள் திருடி சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது
கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுப் வருகிறது

கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை
கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை
PCR பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்கள் இருவர் நேற்று (07)
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கடற்படை வீரர்கள் இருவரும், வெலிசறை கடற்படை முகாமில் கடமை புரிந்து வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் கொவிட் -19
தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து சிகிச்சைக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண
குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 07 பேர் கொழும்பு கடற்படை பொது
வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களின் பி.சி.ஆர் சோதனைகளில் இவர்களுக்கு வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி 2020 மே 06 ஆம் திகதி
அவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் மேலும், வைத்தியசாலைகளில் இருந்து
வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு
தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நபர்கள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 கடற்படை வீரர்கள் முழுமையாக
குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு விசேட வர்த்தமானி அறிவிப்பு
வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு விசேட வர்த்தமானி அறிவிப்பு
எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து பொது மக்களின் வாழ்க்கை நிலையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான
வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுதொடர்பாக விசேட பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் தினங்களில் நடத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
தனியார் நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்கப்படவேண்டும். பணியாற்ற வேண்டிய ஊழியர்களின்
எண்ணிக்கை குறித்து நிறுவன தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். இதுதொடர்பான
விடயங்கள் உரிய சட்ட கட்டமைப்புக்குள் இடம்பெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்;தார்
எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்
ரோஹண மேல் மாகாணத்தின் பங்களிப்பின்றி பொருளாதாரத்தை மேம்படுத் முடியாது இதற்காக மேல் மாகாணம் திறக்கப்பட
வேண்டும். தற்போதைய ஊரடங்கு அமுல் நடத்தப்பட்டபோதிலும் மேல் மாகாணத்தில் பணிகளை ஆரம்பிகக வேண்டும். என்றார்.
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பான புதிய சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல்
சட்டங்களை மீறுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை.மேற்கொள்ளப்படும். சட்டங்களுக்கு அமைய
செயற்படும் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நபர்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நீக்கிட அரசு நடவடிக்கை
இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நீக்கிட அரசு நடவடிக்கை
மஞ்சளுக்கு நாட்டில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க பல திட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாட்டின் தேவைக்காக, வருடத்துக்க 7 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படுவதாகவும் அனால், கடந்த வருடம் வரை இதில்
ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் மாத்திரமே இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் மிகுதி 5 ஆயிரத்து 400 மெட்ரிக் தொன்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
எனினும், கடந்த வருட இறுதியில், மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்க
ப்பட்டதையடுத்தே மஞ்சள் தூளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்தது என்றும் அவர் கூறினார்.
தட்டுப்பாட்டை நீக்குவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, சுங்கப்பிரிவால்
தடுத்து வைக்கப்பட்டிருந்த 600 மெட்ரிக் தொன் மஞ்சளை, சந்தைக்கு அனுப்பவுள்ளதாகவும் இவ்வருடம் சுமார்.
2 ஆயிரத்து 200 ஹெக்டெயாரில் புதிதாக மஞ்சள் உற்பத்தி செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆக உயர்வு
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது..
இன்றைய தினத்தில் (2020.05.07) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஏழு (07) புதிய நோயாளர்கள்
பதிவாகயிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
இவர்களில் 6 பேர் கடற்படை அங்கத்தவர்கள் ஆவதுடன் மற்ற நோயாளி; கடற்படை வீரருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 804 ஆகும்.
இதுவரையில் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறிய நோயாளர்களின் எண்ணிக்கை 232..
நேற்றைய தினத்தில் (2020.05.06) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின் எண்ணிக்கை 1147.
COVID -19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-05-07 17:57:27
804
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
563
சிகிச்சை பெறும் நோயாளிகள்
7
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
232
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
9
இறப்பு எண்ணிக்கை

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

முல்லைத்தீவு மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிய இராணுவம் – photo
முல்லைத்தீவு மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிய இராணுவம் – photo
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் தனியார் நன் கொடையாளரினால்
வழங்கப்பட்ட 150 உலர் உணவுப் பொதிகள் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
குருநாகல் பிரதேசத்தில் உள்ள பிரபல்யமான வர்தகர் திரு சுரேஷ் அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்
டீப்தி ஜயதிலக்க அவர்களை தொடர்பு கொண்டு இதற்பொழுது காணப்படும் தொற்று நோய் மற்றும் ஊரடங்குச் சட்டம் காரணமாக
பாதிக்கப்பட்டுள்ள நாயாறு பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தனது அனுசரணையினை
வழங்கினார்.20200506 முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களுடன் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, 593 ஆவது பிரிகேட் தலைமையக கட்டளைத் தளபதி கேணல் வசந்த பலகும்பர, 19
ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி , அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர் இவ்விநியோகத்தில் கலந்து கொண்டனர்

முல்லைத்தீவு மக்களுக்கு 
????????????
கிளிநொச்சி வியாபார நிலையங்களிலும் கைகளை கழுவுமாறு வலியுறுத்தல்
கிளிநொச்சி வியாபார நிலையங்களிலும் கைகளை கழுவுமாறு வலியுறுத்தல்
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச திணைக்களங்களை இயங்க வைப்பது தொடர்பில் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல்.
மாவட்ட செயலகத்தின் மா நாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூ.கேதீஸ்வரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் முக்கியமான நோக்கமாக எதிர்வரும் 11ம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டு; இயல்பு நிலை ஏற்படுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் கிளிநொச்சி மாவட்டம் கொவைட் -19
பாதிப்பு ஏற்படாத இயல்பு நிலையிலேயே காணப்பட்டாலும்; பாதிப்பு ஏற்படக்கூடியதான எதிர்பார்ப்பிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இதன் காரணமாக 11ம் திகதியிலிருந்து
திணைக்களங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்புக்களுடனான ஆலோசனைகளுடன்
முடிவுகள் எட்டப்பட்டன.IMG 0045உத்தியோகத்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணியவாறு கடமையாற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பிற
மாவட்டங்களிலிருந்து உத்தியோகத்தர்கள் வருகை தருகின்ற வேளையில் பேரூந்துகளில் குறிப்பிட்டளவு உத்தியோகத்தர்கள் பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து ஒழுங்குகளை
மேற்கொள்வதற்குமான தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து
முக்கியமானதாகும். அத்துடன் உள்ளக போக்குவரத்தும் கவனிக்கப்பட வேண்டும். எனவே பொறுப்புக்களை மறந்து செயற்படாமல் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து பாதுகாப்பான
முறையில் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மக்கள் அதிகளவில் கூடும் பொது இடமான சந்தைகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவதை தவிர்த்து வருகின்றனர்.
அதே போல் கடைகளில் சமூக இடைவெளி பேணப்படுவதுடன் கை கழுவும் நடைமுறையும் செயற்படுத்தப்பட்டு வந்தாலும் மிக முக்கியமாக உள்ளுரர் கடைகளிலும் இந்த நடைமுறையினை
செயற்படுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகள்; தொடர்பில்
ஓரிருவாரங்களுக்கு ஏற்கனவே உள்ளதான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மாவட்டவைத்தியசாலை நடவடிக்கைகளை பாதுகாப்புடன் மேற்கொள்ளவும். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு
வழமையாக செயற்படுவதற்கும். சுவாசம் சம்மந்தமான நோய் மற்றும் ஏனைய நோய்கள் என பிரிக்கப்பட்டு சிகிச்சை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது
அனைத்து விடயங்களிலும் குறைந்தளவு நபர்கள் என்பதனை கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது.
தனியார் வாகனங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள்
பயணிப்பது உறுதி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு செல்லும் போது அவ்விடங்களில் நடமாடுதல் பொருட்களை கொள்வனவு செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.
என்பதோடு முச்சக்கர வாகனத்தில் இருவர் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திணைக்களங்களில் குளோரின் தொற்று நீக்கல் செய்யப்படும் பொருட்டு ஒவ்வொரு திணைக்களங்களிலும் குளோரின் தொற்று நீக்கலுக்காக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். குளோரின் தொற்று
நீக்கலுக்காக சுத்திகரிப்பு சேவை பணியாளரை பயன்படுத்தி கொள்வதற்கும் இல்லாவிட்டால் மாற்று வழிகள் தொடர்பிலும் முடிவுகள் எட்டப்பட்டன.
அலுவலகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவதானிக்கும் வகையில் ஒவ்வொரு அலுவலகங்களிலும் இருவர் அல்லது 3 பேரைக் கொண்ட அணி உருவாக்கப்பட வேண்டும். அனைத்து
திணைக்களங்களும் குழுவினை அமைத்து மாவட்டச்செயலகத்திற்கு அறியத்தர வேண்டும் என்பதோடு கொரோனா தொற்றுடன் தொடர்ந்து யுத்தம் செய்ய
வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனினும் எமது பொருளாதார வளர்ச்சியையும் முன்னெடுக்க வேண்டும் என்பதனையும் மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி வீடுகளை உடைத்தெறிந்த புயல் – photo in
கிளிநொச்சி வீடுகளை உடைத்தெறிந்த புயல் – photo in
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் (06.05.2020) காற்றுடனான மழையின் காரணமாக வீடு ஒன்று முழுமையாகவும்
10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்ததுடன் 2 சிறிய தொழில் முயற்சி நிலையங்களும் பாதிக்கப்பட்டன.
அத்துடன் பயிர்களும் அழிவிற்குள்ளாகியுள்ளன.தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் ஊடாக
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை கிளிநொச்சி மாவட்டச்செயலகம்
முன்னெடுத்துள்ளது. தற்போதைய காலப்பகுதியில் பலத்த காற்றுடனான மழைவீழ்ச்சி மற்றும் இடி மின்னல் பாதிப்புக்கள் ஏற்பட சாத்தியங்கள் உண்டு.
இதனால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பற்ற வகையில் மரங்கள் இருக்குமாக இருந்தால்
அவற்றினை அகற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

கிளிநொச்சி வீடுகளை 
கறுப்பின மக்களே கொரனோவால் பிரிட்டனில் அதிகம் பலி
கறுப்பின மக்களே கொரனோவால் பிரிட்டனில் அதிகம் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானவர்கள் நான்கு மடங்கு அதிகமானவர்கள் கறுப்பின மக்களே என புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது
பிரிட்டன் நாட்டின் பூர்வீக குடிகளான வெள்ளை இன மக்கள் பலி எண்ணிக்கை ஆமை வேகத்தில் குறைவடைந்து ,வந்தேறு
குடிகளான கறுப்பின மக்களே எழுபது சதவீதம் பலியாகியுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
இவ்வாறு வந்தேறு குடிகளான கறுப்பினத்தவர்கள் ,கறுப்பினம் என்பது அகதிகளாக வந்து குடியேறிவர்கள் இந்தியா,இலங்கையர்கள் உள்ளிட்டவர்கள் அடக்க படுகிறது .
பொதுவாக கறுப்பு தோல் என்பதால் இவ்வாறு அடையாள படுத்த படுகின்றனர் ,
இந்து உண்மையில் கொரனோவின் பலியா அல்லது .கொரனோவின்
பெயரால் நடத்த பட்ட படுகொலையா என்ற சந்தேகத்த்தை பரவலாக எழுப்பியுள்ளது
இவ்வாறான செய்திகளின் பின்னர் ஆசிய மக்கள் சாதரண நோயினால் பாதிக்க பட்டாலும் மருத்துவ மனைக்கு செல்வதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை







