Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு உதவுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை- பொலிஸ்
தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு உதவுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை- பொலிஸ்
கொரோனா வைரஸ் தொற்றில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அல்லது சிகிச்சைக்காக உட்படுத்தப்படிருந்த நிலையில்
தப்பியோடுபவர்களுக்கு மற்றும் மறைந்திருப்பதற்கு உதவி புரிகின்ற நபர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரஸ் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் தப்பியோடிய
சப்புகஸ்கந்த பகுதியைச் சேர்ந்த நபர் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்ட இந்த நபர் சம்பந்தமாக இதுவரையிலும் ஆறு வீடுகளைச் சேர்ந்த 22 பேர்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல்
விதிகளை மீறிய மேலும் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் பரவும் கொரோனா -தென் கொரியாவையும் தாக்கியது
இங்கிலாந்தில் பரவும் கொரோனா -தென் கொரியாவையும் தாக்கியது
தென்கொரியாவில் முதலாவது புதிய வகையிலான கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர் ஒருவர் அடையாளம்
காணப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் பரவிவரும் ஒரு வகையான புது வடிவிலான கொரோனா நோய்த் தாக்கத்திற்கு இவர் உள்ளாகியிருக்கிறார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து சென்று திரும்பியதை
அடுத்து, குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக
வைத்தியசாலை நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால், தாம் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக
நிர்வாகத்தினர் அறிவித்துள்ளார்கள். இங்கிலாந்தின் அம்யூலன்ஸ் சேவை வரலாற்றில் நேற்று முன்தினம் நெரிசல் மிக்க நாளாக
வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில்
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்து வருகின்றமை இதற்கான காரணமாகும்
கிளிநொச்சி கல்மடு பகுதியில் யானை பலி – நபர் கைது
கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காட்டு யானை ஒன்று வயல் நிலத்தினை உணவாக்கி அழித்துள்ளதுடன், பின்னர் அப்பகுதியில் உயிரிழந்துள்ளது.
நேற்றுக் காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாக
வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த யானை தந்தந்துடன் காணப்படுவதுடன் குறித்த பகுதி அடர்ந்த காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த யானை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட
விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்
கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன..

இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 120 முஸ்லிம்கள் பலி
இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 120 முஸ்லிம்கள் பலி
இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 120 பேர் முஸ்லிம்கள் எனத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, அவர்களில் பெரும்பாலானவர்களின்
சடலங்கள் (ஜனாஸாக்கள்) தகனம் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, மொத்த தொற்றாளர்களில் 120 முஸ்லிம்கள் எவ்வாறு சாத்தியமாகும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள்
வீட்டுக்குள்ளேயே இருந்தவர்கள். இவர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியிருக்கும்’ எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்துரைத்துள்ள அவர், ‘சளி பழசானால் கொரோனா தொற்று
ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிப்பவர்களே, அவற்றைப் புரிந்துக்கொள்ள முடியாத மக்களே, ஜனாஸாக்களைத் தகனம் செய்யுமாறு கூக்குரலிடுகின்றனர்’ என்றார்.
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமென சகல நிபுணர்களும் தெரிவிக்கும் போது
, அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர்,
மக்களைப் பீதிக்குள்ளாக்கி, மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. எமது மக்கள் இறப்பதற்குப் பயமில்லை. ஆனால் எரிப்பதற்ப் பயப்படுகின்றனர் என்றார்.
உலகம் பூராவுமுள்ள 194 நாடுகள், சடலங்களை அடக்கம் செய்யும் போது, இலங்கை மாத்திரம் எந்த அறிவியலை அடிப்படையாக வைத்து, தகனம் செய்கிறதென கேள்வி எழுப்பிய அவர், முழு
உலகமே ஏற்றுக்கொண்ட வைத்தியர்கள் கூறுவதைக் கேளுங்கள்; அங்கே இங்கே பணத்தைக் கொடுத்து சித்தியடைந்தவர்களையும் இந்த விடயத்துடன் சம்பந்தமே இல்லாத, தகுதியற்றவர்ளையும்
குழுக்களில் இணைத்து, அவர்களின் முடிவுகளைப் பெற வேண்டாமென ஜனாதிபதியிடம் அவர், வேண்டுகோள் விடுத்துள்ளார்
திருடர்கள் கைவரிசை – பீதியில் மக்கள்
திருடர்கள் கைவரிசை – பீதியில் மக்கள்
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், வீதியில் பயணிப்போரின் தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் செல்லல் மற்றும்
மோட்டார் சைக்கிள் திருட்டுகள் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளொன்றுக்கு நான்கு சம்பவங்கள் என்ற வகையில், நாடளாவிய ரீதியில் இந்தக் குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மோட்டார் சைக்கிள் மற்றும்
சைக்கிள்களில் பயணிப்போரே இவ்வாறான கைவரிசையை காண்பிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் பெண்களை இலக்கு வைத்தே நடத்தப்படுவதால், பெண்கள் அனைவரும்
விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் ஏற்கெனவே செயற்பாட்டில் இருந்த இவ்வாறான 36 வன்முறைக் கும்பல்கள், சிலவற்றின் செயற்பாடுகள் இல்லாமல் போயுள்ளதாகவும், தற்போது அவற்றில் 24 கும்பல்களே
தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு, பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள வன்முறைக் கும்பல்களில் சில உறுப்பினர்கள், வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டு வருவதாகவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இந்தக்
கும்பல்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பொலிஸாருக்கு, தான் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் – துரத்தி பிடிப்பு
நபரின் காலை வெட்டி எடுத்து ஓடியவர் – துரத்தி பிடிப்பு
மாளிகாகந்தையில் மற்றுமொரு நபரின் பாதத்தை வெட்டி, அதனை எடுத்துகொண்டு
தப்பியோடியவர், வெயாங்கொடையில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு சுட்டுப்படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை நடவடிக்கைகளுக்காக குறித்த சந்தேக நபரை வெயங்கொடை ஹல்கம்பிடிய பகுதிக்கு பொலிஸார்
அழைத்துச்சென்றிருந்த நிலையில், சந்தே நபர் மற்றும் பொலிஸாருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
O/L பரீட்சை 9 ஆம் திகதி ஆரம்பம்
O/L பரீட்சை 9 ஆம் திகதி ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான
முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 11 பாடவிதானங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைகளை
மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த பணிகள் ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
கொரனோ பரவல் எதிரொலி – முடங்கிய கொழும்பின் சில பகுதி
கொரனோ பரவல் எதிரொலி – முடங்கிய கொழும்பின் சில பகுதி
கொழும்பு 09- வேலுவனாராம வீதி பகுதியானது, நேற்று(26)
நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக
அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இப்பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான பலர் அடையாளம்
காணப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரனோ நோயுடன் தப்பி ஓடிய வாலிபன் – தேடும் பொலிஸ்
கொரனோ நோயுடன் தப்பி ஓடிய வாலிபன் – தேடும் பொலிஸ்
சப்புகஸ்கந்த- மாகொல வடக்கு, தேவாலய வீதியில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்றாளராக
அடையாளம் காணப்பட்ட நபரொருவர் வீட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அறிக்கை கிடைக்கும் வரை வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த மேற்படி நபர்,
அறிக்கையின் பிரகாரம் தொற்று உறுதியாகியுள்ளதை அறிந்தவுடன் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
22 வயதுடைய நிமேஸ் மதுசங்க என்ற இளைஞனே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்: 071-8591599, 011-2400315, 011-2433333, 119
குமரி பொண்ணுக்கு கொரனோ – வீடு வந்து பரப்பி சென்ற உறவு பெண்
குமரி பொண்ணுக்கு கொரனோ – வீடு வந்து பரப்பி சென்ற உறவு பெண்
பருவமடைந்து வீட்டுக்குள்ளே தனிக்கூடாரத்துக்கு வைக்கப்பட்டிருந்த மங்கைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அந்த யுவதியை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் புஸ்ஸலாவ பகுதியிலுள்ள தோட்டமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருவமடைந்ததன் பின்னர் அந்த யுவதி, வீட்டுக்குள்ளே, கூடாரம் அமைத்து தனிமையில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அந்த யுவதிக்கு உணவு சமைத்து கொடுப்பதற்காக, கொழும்பிலிருந்து அவருடைய உறவுப் பெண்ணொருவர் சென்றுள்ளார்.
அப்பெண், சமைத்து கொடுத்துவிட்டு, கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அதனையடுத்து, பருவமடைந்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற பொது சுகாதார அதிகாரிகள் சுமார் 13 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதில், பருவமடைந்து, கூடாரத்துக்குள் தனிமையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
காணாமல் போன மனைவி பிள்ளை – தேடும் குடும்பம்
காணாமல் போன மனைவி பிள்ளை – தேடும் குடும்பம்
உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுசென்ற மனைவியையும் பிள்ளையையும்
காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, வெளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ராஜா வினிதா என்ற தனது மனைவி இம்மாதம் 13ஆம் திகதியிலிருந்துக்
காணவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பில தெரிவித்துள்ள அவரதுக் கணவர், ”13ஆம் திகதி மாலை அம்மாவின் வீட்டுக்குச் சென்று வருவதாகத் தெரிவித்துவிட்டு சென்றிருந்தார். எனினும் நீண்ட நேரமாகியும்
அவர் வீடு திரும்பியிருக்கவில்லை என்பதால், அவர் செல்வதாகக் கூறிய இடத்துக்குச் சென்று பார்த்தோம். அங்கு அவர் வரவில்லை
எனக் கூறினார்கள். அன்றையத் தினத்திலிருந்து அவரதுத் தொலைப்பேசி இலக்கமும் இயங்கவில்லை.” எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அப்பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், 0769080042
என்கிற அவரின் கணவரது தொலைபேசி இலக்கத்துக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
விவசாயியாக மாறிய கோட்டா
விவசாயியாக மாறிய கோட்டா
அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சேனா படைப்புழு தாக்கத்தினால்
சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழு தாக்கத்தினால் பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கை
பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் விளைச்சல் அதிகளவு குறைந்துள்ளது என்று விவசாயிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.
காட்டு யானைகளினால் தோட்டங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் விவசாயிகள் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்தனர்.
விவசாய நிலங்களுக்கு வந்து தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்ததற்காக விவசாயிகள் ஜனாதிபதி அவர்களை பாராட்டினர்.
இதன்போது ஜனாதிபதி அவர்களுடன் மிரிசவெட்டிய விஹாராதிபதி சங்கைக்குரிய ஈதலவெட்டுனுவெவே ஞானதிலக தேரரும் வருகைதந்திருந்தார்.

பிரபல ஆடைத்தொழிற்சாலையில் 28 பேருக்கு கொரனோ
பிரபல ஆடைத்தொழிற்சாலையில் 28 பேருக்கு கொரனோ
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் (24) 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் நேற்று (25) கிடைக்கப்பெற்ற அறிக்கையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 21 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதுடன் அம்பகமுவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பதாக தெரிய வருகிறது.
கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு
தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 39 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 11 கோடி நிதியுதவி.
நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 11 கோடி நிதியுதவி.
வடமாகாணத்தில் மனித நேய நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் 11 கோடி ரூபாவுக்கு மேலான தொகைகை வழங்கியுள்ளது.
இந்தத் தொகை ‘மெக்’ என்றழைக்கப்படும் நிலக்கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கு வழங்கப்படுகிறது. இது தொடர்பான
உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவரும், மெக் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் கடந்த புதன்கிழமை கைச்சாத்திட்டார்கள்.
நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த காணிகளின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்து, மக்களை மீளக்குடியமர்த்த இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு
உதவியளிப்பது திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் மன்னார், வவுனியா மாவட்டங்களில் எண்ணாயிரத்திற்கு மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மெக் நிறுவனம் 2002ம் ஆண்டிலிருந்து இலங்கையில் நிலக்கண்ணி அகற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 92 சதுர
கிலோ மீற்றர் சதுர பரப்பில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 551 பேருக்கு கொரோனா
இலங்கையில் 551 பேருக்கு கொரோனா
இலங்கையில் இன்றைய (25) தினம் 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 90 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர். இதற்கமைவாக பேலியகொடை மீன் சந்தை திவுலப்பிட்டிய
சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 099 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 771 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 31 ஆயிரத்து 339 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்னும் எட்டாயிரத்து 251 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் (25) இடம்பெற்ற ஒருவரின் உயிரிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கை:
ஊடக அறிக்கை
கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவர் (01) உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளதுடன் இ இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 186 ஆகும்.
- அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது ஆண் நபர். அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர்
- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 2020 டிசம்பர் 24ஆம் திகதி அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
- காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட கடுமையான இதய நோய்த்தொற்று நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது
21 லட்சத்தை சுருட்டிய கும்பல் – நடந்தது எப்படி தெரியுமா ..?
21 லட்சத்தை சுருட்டிய கும்பல் – நடந்தது எப்படி தெரியுமா ..?
கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்காகத் தாங்கள் வந்திருக்கின்றோம் என, தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அறுவர் அடங்கிய குழுவொன்று, வீட்டில் இருந்தவர்களுக்குப்
போதை மாத்திரைகளை வழங்கி, அவர்கள் அனைவரும் மயக்கம் அடைந்ததன் பின்னர், வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும்
பெறுமதியான பொருட்களைச் சுருட்டிக்கொண்டோடிய சம்பவமொன்று, குருநாகல், மாஹோ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அறுவர் அடங்கிய அந்தக் குழுவில், நான்கு பெண்களும் ஆண்கள் இருவரும் அடங்கியிருந்துள்ளனர். அவர்கள், பொதுச் சுகாதார
பரிசோதகர்கள் அணியும் ஆடைகளை அணிந்து, வேடமிட்டுச் சென்று, இந்தக் கைவரிசையைக் காண்பித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அறுவரையும், குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த பிரபல்யமான நடனக் கலைஞரை, குருநாகல் நகருக்கு நவம்பர் 26ஆம் திகதி இரவு வேளையில் வரவழைத்து, மயக்க நிலை அடைவதற்கான
மாத்திரைகளை அவருக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு, அவரிடமிருந்த 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை, இந்தக் குழுவினரே
அபகரித்திருந்தனர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள், தங்களுடைய அலைபேசிகளை, இவ்வாறான குற்றச்செயல்களை மேற்கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தி
உள்ளனர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அந்தக் குழுவைச் சேர்ந்த நான்கு பெண்களில், இருவர் தாயும் மகளும் ஆவர்.
அந்தக் குழு, வெலிவேரிய பிரதேசத்தில் பெண்ணொருவரிடம் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள், மினுவன்கொடையில் வர்த்தகர்கள் இருவரிடம், 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான
நகைகள், அநுராதபுர பிரதேசத்தில் 60 வயது பெண்ணொருவரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையிட்ட தங்க நகைகளை, நீர்கொழும்பு, கொழும்பு –11, செட்டித்தெரு, குருநாகல், கேகாலை ஆகிய பிரதேசங்களிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் கடைகளில், அடகு வைத்துள்ளமையும்
விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
நடனக் கலைஞரின் கைப்பை, அவரது ஒரு ஜோடி செருப்பு, 3 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய், அலைபேசிகள் 21, வாடகைக்கு
அமர்த்தப்பட்ட கார், போதை மாத்திரைப் பக்கற்றுகள் ஆகியன இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
துரத்தி குத்திய குளவிகள் – பலர் காயம்
துரத்தி குத்திய குளவிகள் – பலர் காயம்
பசறை – வெல்கொல்ல பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான
அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்கொல்ல பகுதியிலிருந்த கெந்தகொல்லவுக்கு உரம்
ஏற்றுவதற்கு சென்றவர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
54 பேர் காவல்துறையால் திடீர் கைது
54 பேர் காவல்துறையால் திடீர் கைது
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில்
54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை
உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமையாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம்
இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,794 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பிளாஸ்டிக் பொலித்தின் உற்பத்திக்கு தடை – கோட்டா வேட்டை
இலங்கையில் பிளாஸ்டிக் பொலித்தின் உற்பத்திக்கு தடை – கோட்டா வேட்டை
ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி
அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த அறிவித்தலின் நகல் மேலதிக
ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், காதை குடைய பயன்படுத்தும் குச்சிகள், மிதக்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், 20 மில்லிலீற்றரை விட குறைந்த
கொள்ளளவுடைய ஸஷே பக்கட்டுக்கள் முதலான ஆறு உற்பத்திகள் தடை செய்யப்படவுள்ளன.
இந்தத் தடையை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தக்கோரி தாம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ததாக அமைச்சர் கூறினார். இதற்காக குறித்த
பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு நிவாரண காலம் ஒன்றை வழங்க அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.
அதேவேளை, அரசியல்வாதிகளுக்கு மண், மணல், கருங்கல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில்லை என சுற்றாடல்
அமைச்சு மேற்கொண்ட தீர்மானம் பற்றிய கேள்விக்கு, மக்கள் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறும் அரசியல்வாதிகளுக்கு அத்தகைய
காரியங்களுக்காக விண்ணப்பிக்கக்கூடிய தார்மீக உரிமை கிடையாதென அமைச்சர் பதிலளித்தார்.
திருடர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்- போலீஸ் எச்சரிக்கை
திருடர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்- போலீஸ் எச்சரிக்கை
பண்டிகைக்காலம் ஆரம்பமானதைத்தொடரந்து குற்றவாளிகள் மற்றும்
திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதனால் இந்த பண்டிகை காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும்போது
குற்றவாளிகள் மற்றும் திருடர்களிடமிருந்து விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பணம் மற்றும் நகைக்கொள்ளை
போன்ற சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே பயணங்களில் ஈடுபடுகின்ற
சந்தர்ப்பங்களில் தமது பணம் மற்றும் நகைகள் சம்பந்தமாக மிக அவதானமாக
இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்






