Posted in இலங்கை செய்திகள்

40 பேரூந்துகள் லைசன்ஸ் இரத்து – அமைச்சர் அதிரடி நடவடிக்கை

40 பேரூந்துகள் லைசன்ஸ் இரத்து – அமைச்சர் அதிரடி நடவடிக்கை

இளங்காலையில் ஆளும் கோத்தபாயவின் அரசில் பரவி வரும்

வைரஸ் நோயினை தடுக்கும் முகமாக பல கட்ட நடவடிக்கை

மேற்கொள்ள பட்டு வருகிறது

இதன் பிரகாரம் தனியார் பேருந்துகளில் சமூக இடைவெளி கடை

பிடிக்காது மக்களை ஏற்றி பயணித்த பேரூந்துகள் சுமார் நாற்பதின் போக்குவரத்து

உரிமங்கள் இரத்து செய்துள்ளதாக போக்குவற்துறை அமைச்சர் தடலடியாக அறிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இன்றும் கொரனோவால் ஒருவர் பலி

இலங்கையில் இன்றும் கொரனோவால் ஒருவர் பலி

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் ஒருவர் பலியாகியுள்ளதாக சுகாதாரா அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் பல பகுதிகள் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டு

இராணுவம் காவல்துறையினர் சுற்று காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

எமது நாட்டில் இந்த நோயின் தாக்கம் அறவே இல்லை என தேர்தலின்

பொழுது தெரிவித்த கோட்டா அரசு இன்று பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளதும்

சொற்ப மக்களே பலியாகி வருகின்றனர் என தெரிவித்து வருவது நகைப்பிற்கு இடமாக மாறியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கொட்டி தீர்த்த மழை – நிரம்பி வழியும் குளங்கள்

கொட்டி தீர்த்த மழை – நிரம்பி வழியும் குளங்கள்

இலங்கையில் பருவகால மாற்றம் நிகழ்ந்து வருவதால் மழை

கொட்டி தீர்த்துள்ளது ,இதனால் முக்கிய குளங்கள் உள்ளிட்டவை நிரம்பி வழிகின்றன ,

வான் கதவுகள் திறக்க பட்ட நிலையில் கீழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன

இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன ,கடந்த நாளில்

மட்டும் நூறு மீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

பாதிக்க பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாயம் – 33 பேர் இடம்பெயர்வு

மண்சரிவு அபாயம் – 33 பேர் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்ட நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையினால் கந்தபளை தோட்டம்

கொன்கோடியா மத்திய பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த 33 பேர் வெளியேற்றப்பட்டு, கொன்கோடியா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று, இந்த பகுதி மக்கள் கடந்த 10 வருட காலங்களாக மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாக்கியிருந்த போதிலும், மழை

காலங்களில் மாத்திரம் முகாம்களுக்கு செல்வதும், பின்பு காலநிலை வழமைக்கு திரும்பிய பின் வீடுகளுக்கு செல்வதுமாகவே வழமையாக கொண்டு வந்துள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட தங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பாதிக்கப்பட்ட இவர்கள் சம்மந்தப்பட்ட

அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு – மக்கள் அவதி

வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு – மக்கள் அவதி

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 10,840 குடும்பங்களைச் சேர்ந்த 36,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு தினங்களாகப் பெய்து வந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10,716 குடும்பங்களைச் சேர்ந்த 35,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளன் என்பதுடன், 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக மாவட்டச் செயலகம், இன்று (23) தெரிவித்துள்ளது.

இம்மாதம் 21, 22ஆம் திகதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 6,680 குடும்பங்களைச் சேர்ந்த 22,496 பேரும், கோறளைப்பற்று வாகரைப் பிரதேசத்தில் 5,689 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,561 குடும்பங்களைச் சேர்ந்த 5,037 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 402 குடும்பங்களைச் சேர்ந்த 1,285 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேரும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 359 பேரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேரும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேரும், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், போரதீவுப்பற்று வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர கிரான், செங்கலடி, வவுணதீவு பிரதேசங்களில் தலா இரண்டு வீடுகளும், வாகரை, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, மண்முனை வடக்கு, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒரு வீடுமாக மொத்தம் 10 வீடுகள் பகுதிளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையால் 124 குடும்பங்களைச் சேர்ந்த 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரிவித்தார்.

இதன்படி, காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேரும், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரும், உகன பிரதேச செயலாளர் பிரிவில் 01 குடும்பங்களைச் சேர்ந்த 03 பேரும், இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு - மக்கள் அவதி
வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு – மக்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா, கோட்டாவிற்கு தூக்கு – ஐநா பறக்கும் சம்பந்தர்

மகிந்தா ,கோட்டாவிற்கு தூக்கு – ஐநா பறக்கும் சம்பந்தர்

இலங்கையின் ஹிட்லரும் ,தமிழ் இன படுகொலையாழியுமான மகிந்தவுடன் கைகோர்த்து , புலிகளை கொச்சை படுத்திய சம்பந்தர்

, அவர் கைக்கூலி சுமந்திரன் உள்ளிட்ட குழு எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவையில் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்

தமிழ் மக்களின் அரசியல்,அபிலாஷைகளை தீர்த்து வைப்போம் என கோரி அரியணையில் ஏறிய சம்பந்தர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மயிரிழையில் தப்பினார்

அதனை மறந்து மீளவும் தமிழ் இன கொலையாளிகளுடன் உள்ளக ரீதியாக குளவி மகிழும் சம்பந்தர் ,எட்டப்பன் சுமந்திரன் ஆகியோர்

ஐநா செல்வது உலக தமிழர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற போர்வையை போர்த்தவாறு தமிழ் இனத்தை விற்று பிழைக்கும் நகர்வில் இந்த் வெள்ளை வேட்டிகள் செயல் பட்டு வருகின்றனர்

எதிர் வரும் பத்து ஆண்டுகளுக்குள் இலங்கை சுடு காடாகும் என்பதுடன் ,புதிய பூகோள அரசியல் மாற்றத்தின் எதிரொலியாக

மீளவும் புலிகள் எழுச்சி கொள்வார்கள் என்பதனை இவர்கள் மறக்காமல் இருப்பது சாலை சிறந்தது என்பது முக்கிய இராய தந்திரிகள் கருத்தாக உள்ளது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் இறந்தவர்களை எரிப்பதா ..? புதைப்பதா – றூம் போட்டு யோசிக்கும் மகிந்தா

கொரனோவால் இறந்தவர்களை எரிப்பதா ..? புதைப்பதா – றூம் போட்டு யோசிக்கும் மகிந்தா

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்தாக்குதலில் சிக்கி

பலியாகும் மக்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற வாத பிரதிவாதங்கள் வலுப்பெற்றன

அதனை அடுத்து இன்று தமிழ் இன கொலையாளியும் ,ஆளும் இலங்கையின்

பிரதமருமான மகிந்தாவின் தலைமையில் மந்திரிகள் கூடி ஆலோசனை செய்கின்றனர்

இந்த கூட்ட தொடரில் முடிவு அறிவிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் 182 பேர் மரணம் – உலக சாதனை

இலங்கையில் கொரனோவால் 182 பேர் மரணம் – உலக சாதனை

இலங்கையில் பரவி வரும் கோவிட் 19 நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 182 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாக இலங்கை

தெரிவித்துள்ளது ,இது உலக சாதனையாக பதிய பெற்றுள்ளது ,நாம் செல்வது எல்லாம் உண்மை என்ற நிலையில் இலங்கை சுகாதார பிரிவு செயல் பட்டு வருகிறது

கொரனோ நோயால் மரணமாணவர்களை மஞ்சள் காமாலை ,மற்றும்

எலி காய்ச்சல் கணக்கில் போட்டு
மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வருகின்றன .

இவ்விதம் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் நாற்பது பேர்

பலியாகியுள்ளதாகவும் அதில் இவ்விதம் கூறி மூடி மறைக்க பட்டுள்ளதாக சில கசிவுகள் தெரிவிக்கின்றன

Posted in இலங்கை செய்திகள்

95 கடைகளை உடைத்தெறிந்த அரச அதிகாரிகள் – அதிர்ச்சியில் முதலாளிகள்

95 கடைகளை உடைத்தெறிந்த அரச அதிகாரிகள் – அதிர்ச்சியில் முதலாளிகள்

இலங்கையில் ஆளும் கோட்டா அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு விசனத்தய் ஏற் படுத்தியுள்ளது


கொலும்பை அழகூட்டும் நகர்வின் முக்கிய நிகழ்வாக புறக்கோட்டை

– பெஸ்டியன் மாவத்தையில் அமைக்க பட்டிருந்த சட்டவிரோத கடைகள் 95 இரவோடு இரவாக அகற்ற பட்டுள்ளது

கனரக இயந்திரங்களை கொண்டு இந்த கடைகள் உடைத்தெறிய பட்டுள்ளது

அதிகாலை கடைக்கு வந்த உரிமையாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

இது தான் இன்றைய நல்லாட்சி தத்துவம்

Posted in இலங்கை செய்திகள்

இரணைமடு மடு குளம் நீர் நிரம்பல் – மக்களுக்கு எச்சரிக்கை

இரணைமடு மடு குளம் நீர் நிரம்பல் – மக்களுக்கு எச்சரிக்கை

ஈரானை மடு குளத்தில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் ,வான்

கதவுகள் திறக்கும் அபாயம் எழுந்துள்ளது ,இதனால் கீழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மீளவும் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது

வட்டக்கச்சி முதல் ஊரியான் ,முரசுமோட்டை வரையிலான மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

லண்டன் விமானங்கள் இலங்கைக்குள் நுழைய அதிரடி தடை

லண்டன் விமானங்கள் இலங்கைக்குள் நுழைய அதிரடி தடை

பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து

அந்த நாட்டு பயணிகள் விமானங்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு இலங்கை

அரசு தடை விதித்துள்ளது ,எனினும் சரக்கு விமான சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

30 குழந்தைகளை விற்ற நபர் மடக்கி பிடிப்பு

30 குழந்தைகளை விற்ற நபர் மடக்கி பிடிப்பு

பிறக்காத சிசுக்கள் சார்பாக கர்ப்பிணித் தாய்மார்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், சிசுக்கள் பிறந்ததும்

அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு விற்கும் மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களின் ஊடாக பிரசாரத்தை முன்னெடுத்து தெஹிவளை பிரதேசத்தில் இந்த மோசடி

முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் மாத்தளை பகுதியை சேர்ந்தவர் என்றும் கொழும்பில் தங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பல்வேறு வழிகளில் உதவியற்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்த

மோசடி தொடர்பில் சமூக ஊடகங்களில் அண்மையில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆவணங்களின் அடிப்படையில் 30 சிசுக்களை குறித்த நபர் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை

செய்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வேறு நபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய

சகலருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நோயால் இன்று மூவர் மரணம்

கொரனோ நோயால் இன்று மூவர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று

மட்டும் மூவர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இலங்கையில் நோயாளர்கள் இறப்பு அதிகரித்து காணப்படுகின்ற பொழுதும்

அதனை மறைத்து ஆளும் அரசு கூறி வருவதான குற்ற சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சுகாதார விதிகளை மீறிய 41 பேர் கைது

சுகாதார விதிகளை மீறிய 41 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை

உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமையாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான

காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,652 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

சிங்கள கடற்படை அராயகம் -04 இந்திய மீனவர்கள் கைது

சிங்கள கடற்படை அராயகம் -04 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்படை நேற்று (20) வடக்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட

பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் கொவிட் -19 தொற்றுநோய்

காரணத்தினால் குறைக்கப்பட்டிருந்தாலும் கடந்த வாரம் முதல் கடற்படை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கைகள்

தொடங்கியுள்ளதுடன் ஐந்து இந்திய மீன்பிடிக் படகுகளுடன், 36 இந்திய மீனவர்களை டிசம்பர் 15 ம் திகதி கைது செய்தனர்.

அதன்படி, இன்று எலுவதீவு கடல் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு

நடவடிக்கையின் போது, ஒரு இந்திய மீன்பிடி படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கைது

செய்யப்பட்ட, இந்திய மீன்பிடிப் படகு மற்றும் இந்திய மீனவர்கள் 04 பேரை குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன

Posted in இலங்கை செய்திகள்

இருவர் கோரமாக வெட்டி கொலை

இருவர் கோரமாக வெட்டி கொலை!

பொரளை, வனாதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (20) தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை, சரணபால மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை கொன்னோருவ பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

நேற்றிரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகள் ஆரம்பிக்கும் தினம் தொடர்பான விஷேட அறிவிப்பு

பாடசாலைகள் ஆரம்பிக்கும் தினம் தொடர்பான விஷேட அறிவிப்பு

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள்

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாலர் பாடசாலைகள் மற்றும் 1 முதல் 5 தரம் வரையான வகுப்புக்கள்

தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்காகவே இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

பேக்கரியில் 23 பேருக்கு கொரோனா

பேக்கரியில் 23 பேருக்கு கொரோனா

இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள பிரபல பேக்கரி உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய 23 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு பணியாற்றிய சகலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு

ஹட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு

ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (19) மாலை மூடப்பட்டன.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் நபர்களிடம் எழுமாறாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த

தொழிற்சாலையில் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து குறித்த நபர் ஹட்டன் நகரில் இரண்டு புடவை கடைகளுக்கும் ஒரு செருப்பு விற்பனை நிலையத்திற்கும் சென்றுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்தே குறித்த

கடைகள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டதுடன் அதில் கடமை புரிந்த 33 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு புடைவை கடையில் சுகாதார அறுவுறுத்தல்கள் பின்பற்றாததன் காரணமாக வழக்கு தாக்கல் செய்யவும்

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்..

இதே வேளை கடைகள் மூடப்பட்டாலும் கூட வேறு நபர்களை கொண்ட தமது வர்த்தக நடவடிக்கையில் நாளை முதல் ஈடுபடலாம் என சுகாதார உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதே வேளை, குறித்த நபர் ஹட்டன் நகரில் உள்ள இலங்கை வங்கிக்கும் சென்றுள்ளார். எனினும் குறித்த வங்கியில் முறையாக

சுகாதார வழிமுறைகள் பின்பற்றியதன் காரணமாக அவருடன் தொடர்பு கொண்ட இரண்டு ஊழியர்கள் மாத்திரம் சிசிஎவி

கெமராவின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த பெண் கொலை!

கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த பெண் கொலை!

அம்பலாந்தோட்டை, கொடவாய சந்தி பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வீட்டில் விழுந்து கிடந்த குறித்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

44 வயதுடைய குறித்த பெண் அவரது கள்ளக்காதலருடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் கள்ளக்காதலன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள

நிலையில் அவரை கைது செய்வதற்காக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.