Posted in இலங்கை செய்திகள்

தொடரும் அத்துமீறல் – 207 பேர் கைது

தொடரும் அத்துமீறல் – 207 பேர் கைது

இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட காரணத்தினால் கடந்த தினம்

மட்டும் 207 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை, மற்றும் மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வியட்நாமின் புதிய தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

வியட்நாமின் புதிய தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரக் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை 2021 ஜூலை 15ஆந் திகதி சந்தித்தார்.

இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

ஊடக வெளியீடு

வியட்நாமின் புதிய தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரக் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை 2021 ஜூலை 15ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் சந்தித்தார்.

இலங்கைக்கான வியட்நாம் தூதுவரை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, அனைத்து பன்முக அரங்குகளிலும் இலங்கைக்கு தொடர்ச்சியாக வியட்நாம் நல்கிய ஆதரவுகளுக்காக நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக விவசாயம், மீன்பிடி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இலங்கை –

வியட்நாம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் திட்டங்களுக்கு அமைச்சர் அவதானம் செலுத்தினார். அரசியல், பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், விவசாயம்,

தேசிய பாதுகாப்பு, விஞ்ஞானம் – தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் காணப்படுகின்ற பொறிமுறைகளின் மூலம் ஒத்துழைப்பை உயர்த்துவதற்கும்

மேம்படுத்துவதற்குமான அதிகரித்த ஆற்றல் இரு நாடுகளுக்கும் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை – வியட்நாம் உறவுகள் தாபிக்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடையும் விழா இந்த ஆண்டு அனுஷ்டிக்கப்படவிருக்கும் முக்கியமான மைல்கல்லை கவனத்தில் கொண்ட தூதுவர் ட்ரக்,

நிறுவப்பட்ட பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் மூலம் அரசியல் உறவுகளை புத்துயிர் பெறச் செய்வதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்குமிடையேயான

நட்புறவின் வலுவான பிணைப்புக்களையும் வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார். அணிசேராக் கொள்கையின் அடிப்படையில் வியட்நாமுக்கு இலங்கை

அளித்துள்ள ஆதரவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சாத்தியமான பகுதிகளில் இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையில் சிறந்த ஒத்துழைப்பை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் 2021 ஜூன் 14ஆந் திகதி தொலைபேசி வாயிலான உரையாடலொன்றை வெற்றிகரமாக

முன்னெடுத்தனர். இந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பயனுள்ள ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான பாரம்பரிய நட்பு குறித்து இரு தலைவர்களும் இந்த உரையாடலின் போது கருத்து தெரிவித்தனர்.

2020ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதன் மூலம், பல நூற்றாண்டுகள் பழமையான வியட்நாம் இலங்கை உறவுகள் முக்கியமானதொரு மைல்கல்லைக் குறித்து நிற்கின்றது. இந்த ஆழமாக வேரூன்றிய

நட்புறவானது, கலாச்சாரம், வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் மிக முக்கியமாக, இரு நாடுகளினதும் மக்களிடையேயான வலுவானதொரு பிணைப்பு நூலாக பௌத்த மதத்தின் பொதுவான பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. 17ஆம் நூற்றாண்டில் தென் வியட்நாமில்

பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் எமக்குக் கூறுகின்ற அதே வேளை, தென் வியட்நாமில் தேரவாத பௌத்த மதத்தை ஸ்தாபிப்பதற்காக இலங்கை மதகுருமார்கள் பங்களிப்புச் செய்ததாகவும் நம்பப்படுகின்றது.

2013 நவம்பர் 23ஆந் திகதி கொழும்பு பொது நூலகத்தில் மறைந்த ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் மார்பிளவு சிலை இலங்கையினால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், மறைந்த

ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் 124வது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில், 2014ஆம் ஆண்டில் நினைவு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது. மேற்கண்ட திட்டங்கள்

வியட்நாமுடனான இலங்கையின் நட்புறவை விளக்குவதுடன், ஒரு காலத்தில் தேசிய இயக்கத்தின் போது வியட்நாமுடனான இலங்கையின் ஒத்துழைப்பின் ஒரு முக்கியமான மைல்கல்லையும் குறித்து நிற்கின்றது.

வெளிநாட்டு அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள வியட்நாம் தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அமைச்சு

    Posted in இலங்கை செய்திகள்

    சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

    சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

    கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றும்

    பிரதேசமொன்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத்

    தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கை வந்தடைந்த 70,200 பைசர் தடுப்பூசிகள்

      இலங்கை வந்தடைந்த 70,200 பைசர் தடுப்பூசிகள்

      இன்று அமெரிக்காவில் இருந்து இளங்க்கு சுமார் 70,200 பைசர் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன

      இவ்வாறு வந்தடைந்த ஊசிகள் விரைவில் மக்களுக்கு செலுத்த படும் என சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவகையில் கண்டி

        சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவகையில் கண்டி

        கலாச்சாரத்தை பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவகையில் கண்டி, போகம்பறை

        சிறைச்சாலை வளாகம் புனரமைக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

        கண்டி, போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலுக்குப்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,


        மிக பழமைவாய்ந்த போகம்பறை சிறைச்சாலையின் புனரமைப்பு பணிகள் குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.


        சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம்; கண்டியில் தங்கியிருக்கக்கூடியவகையில் சுற்றுலா அபிவிருத்திட்டங்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம் பெற்றதாக குறிப்பிட்ட அமைச்சர்


        கண்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஓரிரு தினங்கள் மட்டுமே கண்டி விடுதிகளில் தங்கி வெளியேறுகின்றனர் இந்த நிலையை மாற்றி கண்டி கிராமங்களில் உள்ள சுற்றுலா

        இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்குமிடையில் நீண்ட காலதொடர்புகள் இருக்கக்கூடிய பரிவர்த்தனை இடமாக போகம்பறை சிறைச்சாலை புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார

          Posted in இலங்கை செய்திகள்

          வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட பணம்- தோண்டி எடுத்த பொலிஸ்

          வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட பணம்- தோண்டி எடுத்த பொலிஸ்

          தற்போது டுபாயில் உள்ளதாக கூறப்படும் போதைப்பொருள் வர்த்தகரான சரித் சந்தகெலும் எனும் ரன்மல்லி என்பவரின் உறுவு முறை சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

          பன்னிபிட்டிய பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          ரன்மல்லி என்பவரின் மனைவியின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

          கைது செய்யப்பட்ட நபர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 13.9 மில்லியன் ரூபா பணத்தை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            கடலுக்கு சென்ற மூவரை காணவில்லை

            புத்தளம் கற்பிட்டி பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

            கடந்த வெள்ளிக்கிழமை (09) கற்பிட்டியிலிருந்து குறித்த படகில் சென்ற நிலையில் 10 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

            கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மட் அலிகான் (வயது 26), முஹம்மட் நபீல் (வயது 45) மற்றும் கற்பிட்டி மணல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நிசங்க (வயது 21)

            திருமணமான மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அந்த மீனவர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

            இவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரும் இதுவரை கரைதிரும்பவில்லை என கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும், கற்பிட்டி கடற்படை முகாமிலும் மூன்று மீனவர்களின் குடும்பத்தினர்களும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறினர்.

            அத்துடன் கற்பிட்டி மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியில் காணாமல் போன மூன்று மீனவர்களையும் தேடி வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

            இதேவேளை, குறித்த மீனவர்கள் பயணித்ததாக கூறப்படும் 7088 இலக்கமுடைய இயந்திப்படகு ஒன்று மன்னார் மாவட்டத்தின் பியர் பிரதேசத்திலுள்ள தீட தீவு பகுதியில் ஒதுங்கியுள்ளதாக

            மன்னார் பொலிஸ் ஊடாக நேற்று (17) இரவு தகவல் கிடைத்துள்ளது என மீனவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.

            எனினும் படகு மாத்திரமே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது எனவும் மீனவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

            இவ்வாறு மூன்று மீனவர்களும் காணாமல் போயுள்ளமை கற்பிட்டி பிரதேசத்தில் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது

              நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது

              நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது

              அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. பி.பி. ஜயசுந்தரவின் தலைமையில் 2021 ஜூலை 15ஆந் திகதி நடைபெற்ற பங்குதாரர் சந்திப்பொன்றில், நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்தியது.

              ஆசியாவில் இதுபோன்ற ஒரு கட்டமைப்பைக் கொண்டுவந்த முதல் நாடாக இலங்கை அமைவதுடன், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் – உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் மூலம் ஜப்பான் அரசாங்கத்தின் தாராள ஆதரவைப் பெறாவிட்டால் அது சாத்தியமானதாக அமைந்திருக்க முடியாது.

              முடக்கநிலை, தொலைநிலை வேலை மற்றும் மெய்நிகர் மாநாடுகளின் மயமான இந்த புதிய யுகத்தில், உலகளாவிய டிஜிட்டல் தகவல் தொடர்புகளை நம்பியிருக்கின்றமை வியத்தகு வகையில் வளர்ந்துள்ளது, எனினும் அந்தத் தரவுகளை அனுப்புவதற்கு செயற்கைக்கோள்கள் தான் காரணம் என பெரும்பாலான மக்கள் இன்னும் தவறாகக் கருதுகின்றனர். உண்மையில், அனைத்து சர்வதேச டிஜிட்டல் தரவு மற்றும் தகவல் தொடர்புகளில் 99% க்கும் மேற்பட்டவை உலக சமுத்திரங்களில் 1.8 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கொண்டுள்ள 400 க்கும் மேற்பட்ட கேபிள்களின் வலையமைப்பினுடாக பரிமாற்றப்படுகின்றன.

              2019 நவம்பர் மற்றும் 2020 ஏப்ரல் மாதத்தில் முடக்கநிலை ஆரம்பமான காலப்பகுதிக்கு இடையில் இணையப் பாவனை நெரிசல் 25% முதல் 50% வரை அதிகரித்துள்ளதுடன், இது ‘புதிய இயல்பு’ நிலைக்கு ஏற்ப மேலும் தொடரும் என சர்வதேச கேபிள் பாதுகாப்புக் குழு மதிப்பிடுகின்றது. 2020 ஜூலை 31 உடன் நிறைவடைந்த காலாண்டில் ஸூம் வீடியோ தொடர்பாடல் மூலமான வருமானம் முந்தைய ஆண்டை விடவும் 355% ஆல் அதிகரித்துள்ளது. பரவலான தொலைநிலை வேலை, தொலைநிலைக் கல்வி மற்றும் தொலைநிலை தனிப்பட்ட வீடியோ தகவல் தொடர்புகளின் விளைவாக அதிகரித்துள்ள வீடியோ மாநாட்டு நிலையின் அறிகுறியொன்றே இதுவாகும்.

              இந்த உலகளாவிய வலையமைப்பில் எமது நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை, அது முடிந்தவரை நெகிழ்ச்சியுடன் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

              தொடக்கக் கருத்துக்களை வழங்கிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இலங்கையின் நியாயாதிக்கத்தில் பல கேபிள்களைக் கொண்டிருப்பதன் அச்சுறுத்தல்கள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்து கொண்டதன் மூலம், இலங்கைக்கு பாதுகாப்பு மற்றும் விரிதிறனை வழங்குவதற்காக நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் குறித்த தேசிய திட்டத்தை உருவாக்குவதற்காக, போதைப்பொருள் மற்றும் குற்றவியல் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டம் மற்றும் குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையம் போன்ற சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து இலங்கை பணியாற்றி வருவதாக எடுத்துரைத்தார்.

              சர்வதேச சட்டத்தின் கீழ், கேபிள்களின் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்காக பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு இந்த கேபிள்களால் சேவை செய்வதற்கான அரசுகளின் பொறுப்பை எடுத்துக்காட்டும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்தை (A/RES/73/124, 2018 டிசம்பர் 13) போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை – உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. கைட்லின் மெரிடித் குறிப்பிட்டார். ‘இலங்கையின் தேசியக் கட்டமைப்பின் அபிவிருத்தியிலும், கடல்சார் பாதுகாப்புத் துறையிலும் இன்னும் விரிவாக இலங்கையின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மதிப்பிடுவதுடன், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் இலங்கையுடனான தொடர்ச்சியான கூட்டாட்சியை எதிர்நோக்கியுள்ளதுடன், சிறந்த சில நடைமுறைகள் மற்றும் பாடங்களை பரந்த பிராந்தியத்திற்கு பரப்புவதற்குத் தொடங்குகின்றது’ என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

              இலங்கையில் குறித்த கட்டமைப்பை உருவாக்கும் பணிகள், குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்பட்டது.

              தொடர்ச்சியான மெய்நிகர் ஆலோசனைகளினாலான பங்குதாரர்களின் ஈடுபாட்டைத் தொடர்ந்து, இந்த செயன்முறை 2020 செப்டம்பரில் தொடங்கியது. குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையத்தால் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச சிறந்த நடைமுறைகளை இந்தக் கட்டமைப்பு உள்ளடக்கியுள்ளது.

              கட்டமைப்பின் தொடக்கத்தில், கொழும்பில் உள்ள ஜப்பானியத் தூதரகத்தின் தூதரகப் பொறுப்பாளரும், பிரதி தூதரகத் தலைவருமான திரு. கிடமுரா தோஷிஹிரோ, ‘வணிக மற்றும் நிதி மையமாக அபிவிருத்தியடைவதற்கான இலங்கையின் அபிலாஷைகளை தேசிய் கட்டமைப்பானது நிச்சயமாக ஒருங்கிணைக்கும் அதே வேளை, ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ இல் திட்டமிடப்பட்டுள்ள உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாகவும் இருக்கும்’ எனக் குறிப்பிட்டார். ‘போதைப்பொருள் மற்றும் குற்றவியல் உலகளாவிய கடல்சார் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்துடன் நெருங்கிய கூட்டுறவில், தேசியக் கட்டமைப்பை உருவாக்குவது இலங்கைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுவதுடன், இந்து சமுத்திரத்தில் இது ஒரு பிரகாசமான கலங்கரை விளக்கமாக அமைகின்றது’ என மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.

              ஃபைபர்-ஒப்டிக் நீர்மூழ்கிக் கப்பலைப் பாதுகாப்பதற்காக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானத்திற்கு இணங்க இலங்கையில் ஒரு வலுவான மற்றும் நெகிழக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல் கேபிள் சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனநாயக்க மீண்டும் வலியுறுத்தினார். ‘முற்போக்கான தேசிய நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பொன்றை செயற்படுத்துவதற்காக இந்த முயற்சி இப்போது உதவும் அதே வேளை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்த பார்வையை மேலும் வலுப்படுத்துவதோடு, தொழில்நுட்ப சேவைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இலங்கையை நிலைநிறுத்தும்’ என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

              இந்து சமுத்திரத்தில் ஒரு கடல் மற்றும் கப்பல் பரிமாற்ற மையமாக இலங்கையைக் காட்டும் வகையில், கட்டமைப்பில் மற்றும் செயற்பாட்டில் உள்ள சட்டங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த உருவத்திற்கு மேலும் பங்களிக்கும்.

              இந்த செயற்பாட்டில் வெளிநாட்டு அமைச்சின் வகிபாகம் அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதும், சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புக்களை இலங்கை நிறுவனங்களுடன் இணைப்பதும் இலங்கை கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும் என வெளிநாட்டு அமைச்சின் சமுத்திரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க விளக்கினார். நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை ‘சிக்கலான உட்கட்டமைப்பாக’ அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார்.

              இந்த செயற்பாட்டில் இலங்கை பெற்ற அனுபவம் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதுடன், அதில் இலங்கை இந்த ஆண்டின் துணைத் தலைமையாக பொறுப்பேற்பதுடன், பின்னர் 2023 முதல் 2025 வரை தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றது.

              அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. பி.பி. ஜயசுந்தரவின் பரிந்துரைகளுடன் வெளியீடு நிறைவடைந்தது.

              Posted in இலங்கை செய்திகள்

              வட்டக்கச்சி கட்சன் வீதி தனிமைப்படுத்தல்

              வட்டக்கச்சி கட்சன் வீதி தனிமைப்படுத்தல்

              கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

              வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,

              நேற்றைய தினம் மேலும் 10 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்டள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

              இந்நிலையில் குறித்த பகுதி நேற்று (16) இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

              தனிமைப்படுத்தல் 14 நாட்களுக்கு இருக்கும் எனவும், மக்கள் நடமாடுவதை தவிர்க்குமாறும்,

              வர்த்தக செயற்பாடுகளை நிறுத்துமாறும் சுகாதார தரப்பினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்

                கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்

                வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                நேற்று (16) இரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரெிவிக்கப்படுகின்றது.

                50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

                காயங்களுக்கு உள்ளான நபர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

                சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                  Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                  வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்

                  வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்

                  வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட

                  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

                  வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் கௌரவ

                  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

                  அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்

                  எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

                    இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

                    இலங்கையில் நேற்றைய தினம் (15) மேலும் 41 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

                    சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்

                    திணைக்களம் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

                      மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

                      மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஆகஸ்ட் மாதம்

                      முதலாம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.

                      இன்று(16) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,


                      இதனடிப்படையில், நாளை (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும்.

                      இருப்பினும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட வகையில் பஸ் மற்றும்

                      ரயில் களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கi மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம மேலும் தெரிவித்தார்

                        Posted in இலங்கை செய்திகள்

                        புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி

                        புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி

                        முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, பாரதி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்க சென்ற மாணவர்கள் 24 பேரை குளவி துரத்தி குற்றியுள்ளது

                        இதில் பாதிக்க பட்ட மாணவர்களை மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                        சிலர் மேலதிக சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற பட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

                        Posted in இலங்கை செய்திகள்

                        பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

                        பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

                        மருதானை பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                        தீயணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் கூறியுள்ளது.

                        தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

                        தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        கொரனோ தாக்குதல் 10 குழந்தைகள் மரணம்

                        கொரனோ தாக்குதல் 10 குழந்தைகள் மரணம்

                        இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி


                        பத்து சிறுவர்கள் பலியாகியுள்ளனர்


                        மேலும் 490 சிறுவர்கள் பாதிக்க பட்டுள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

                        உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

                        இலங்கை குற்ற புலனாய்வு துறையினர் என தம்மை கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

                        பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

                        ,கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          யாழ்ப்பாணம் மாவட்டத்தில் -சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

                          யாழ்ப்பாணம் மாவட்டத்தில் -சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

                          யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றும் புத்தளம் மாவட்டத்தில்

                          பிரதேசமொன்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத்

                          தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக

                          ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

                            1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

                            அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மொடர்னா தடுப்பூசி 1.5 மில்லியன் டோஸ்கள் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளன.

                            கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

                            இதேவேளை, நாட்டிற்கு இதுவரை 71 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

                            அதேபோல், இந்நாட்டில் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 13.5 சதவீதமானவர்களுக்கு தற்போதைய நிலையில் தடுப்பூசி டோஸ்கள் இரண்டும் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

                            இலங்கையில் தற்போது 4 விதமான கொவிட் 19 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் 16 வயது முதல் திருமண செய்து கொள்ள சட்டம் அமூல்

                            இலங்கையில் 16 வயது முதல் திருமண செய்து கொள்ள சட்டம் அமூல்

                            இலங்கையில் விசேட சந்தர்ப்பங்களில் 16 முதல் 18 வயதினர் திருமணம் செய்து கொள்ள சட்ட

                            திருத்தத்தில் மாற்றங்கள் மேற்கொள்ள பட்டுள்ளன

                            இதனால் 16 வயது முதலானவர்கள் வாலிபர்கள் என்ற அடெல் என்ற பிரிவுக்குள் அடக்க படுகின்றனர் என தெரிவிக்க படுகிறது