கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்

Spread the love

கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்

வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (16) இரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரெிவிக்கப்படுகின்றது.

50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காயங்களுக்கு உள்ளான நபர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Leave a Reply