Posted in இலங்கை செய்திகள்

தங்க நகை பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓடிய கோட்டா

தங்க நகை பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓடிய கோட்டா

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய இலங்கை கயானாவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பல மில்லியன் டொலர் பணம் என்பனவற்றை சுருட்டி கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இவர் இலங்கையின் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்க பட்டுள்ள விமானம் மூலம் தப்பித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கோட்டாவின் தங்கம் மற்றும் பணம் என்பன கடற்படை கப்பலில் ஏற்ற பட்டு கொழும்பு துறைமுகத்தில் இருந்து அவை தப்பி சென்றுள்ளது.

ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட கோட்டபாயாவின் கப்பல் ஒன்றில் இந்த தங்கம் மற்றும் பணம் என்பன இலங்கை நடுக் கடல் பகுதியில் வைத்து மாற்ற பட்டு வெளிநட்டு ஒன்றுக்கு எடுத்து செல்ல படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

லிபியாவில் கடாபி,ஈராக்கில் சதாம் உசைன், ஆப்கனிஸ்தான் அதிபர் ஆகியோர் இவ்விதம் தங்கம் பணத்துடன் இறுதியில் தப்பிக்க இருந்ததும் தப்பித்து சென்றதும் வரலாறாக உள்ளது.

அவ்விதமான வரலாற்று பட்டியலில் இலங்கை இனவாதியும் தமிழ் இனப் படு கொலையாளியுமான கோட்டபாயவும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சிங்கள மக்களின் தனித்துவ ஆதரவு பெற்று ஆட்சிக்கு எறியவர்கள் இலங்கை என்ற நாட்டைன் சூறையாடி தமது குடும்ப வியாபாரத்தை ஆரம்பித்து நாட்டை பிச்சைக்காரர்கள் ஆக்கியுள்ளனர் .

தங்க நகை பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓடிய கோட்டா

ஐம்பது ஆண்டு ஆட்சி கனவு கலைந்து போனது .

வீணாக விடுதலை புலிகளையும் அதன் மக்களையும் அழித்த பெரும் சாப கேடு இவர்களது குடும்பத்தை துரத்துகிறது .

இப்பொழுது மகிந்த ராஜபக்ச குடும்பத்தை இலங்கையை விட்டே அதே மக்களினால் விரட்டியடிக்க பட்டுள்ள செயல் இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

மக்கள் போராட்டம் வெடித்து பறக்கும் இவ்வேளையில் தங்கம் பெரும் தொகை டொலருடன் நாட்டை விட்டு தப்பி ஓடிய கேவலம் கோட்டாவுக்கு ஏற்பட்டுள்ளது .

புலிகளின் தலைவரை நாயை போல சுட்டு இழுத்து வந்தேன் என பெருமிதம் கொண்டாடிய கோட்டா அதை கேட்டு இரசித்த சிங்கள இனவாதிகள் இன்று அதே சிங்கள மக்களினால் நாயை போல விரட்டியடிக்க படும் வரலாறு இலங்கையில் எழுத பட்டுள்ளது.

தவிர பவுத்த மத சங்கத்தின் சாபக்கேடுக்கும் கோட்டா பாயாவுக்கு ஏற்பட்டுள்ளது .

இந்த நிகழ்வு இலங்கையில் ஆளும் இனி ஆளப்போகும் ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அடிக்கும் .

இவ்வேளை தமிழர்களை அணைத்து செல்ல மறுத்தால் அவர்கள் ஆட்சி அதிகாரம் இழந்து தவிக்கும் நிலைக்கு இலங்கை ஆட்சியாளர்கள் அமைச்சர்கள் செல்வார்கள்.


இவ்வாறு எதிர்வரும் காலங்களில் வரலாறு புதிய வரலாற்றை எழுதும் காலம் இடம்பெறலாம் எனவும் எதிர் பார்க்கலாம்

    Posted in இலங்கை செய்திகள்

    மகிந்தா கோட்டா ரணில் வீடுகள் முற்றுகை அமைச்சர்கள் தப்பி ஒட்டம்

    மகிந்தா கோட்டா ரணில் வீடுகள் முற்றுகை அமைச்சர்கள் தப்பி ஒட்டம்

    இலங்கையில் ஆளும் ராஜபக்ச குடும்பம் முற்றாக பதவி விலக கோரி பல்லாயிரம் மக்கள் பேர் நாடு தழுவிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

    தற்போது முன்னாள் பிரதமர் மகிந்த கோட்டபாய மற்றும் ரணில் வீடுகள் போராட்ட காரர்களினால் சுற்றிவளைக்க பட்டுள்ளது.

    பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மக்கள் முறுகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

    தற்போது முக்கிய அமைச்சர்கள்,எம்பிக்கள் யாவரும் தமது வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .

    மகிந்தா கோட்டா ரணில் வீடுகள் முற்றுகை அமைச்சர்கள் தப்பி ஒட்டம்

    எரிபொருள் மற்றும் போக்குவரத்துக்கு அமைச்சர் வீடுகள் முற்றுகையிடலாம் என்பதால் அவர்களது வீடுகளுக்கு முன்பாக இராணுவம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர்.

    அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்

    கோபத்தோடு கொதித்தெழுந்த மக்கள் ஆக்கிரோஷமாக போராட்டத்தை முன்னெடுத்த சென்ற வண்ணம் உள்ளனர் .

    வெடித்து பறக்கிறது .மக்கள் போராட்டம் மக்கள் களமுனைக்கு அதிகமாக வந்த வண்ணம் உள்ளனர் .

    இலங்கை ஆட்சிகவிழ்க்க படும் ஆட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .உலக ஊடகங்கள் சிலவற்றில் நேரலையாக இலங்கை காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    கடற்படை கப்பல்களில் இந்தியா தப்பி ஓடிய முக்கிய நபர்கள் video

    கடற்படை கப்பல்களில் இந்தியா தப்பி ஓடிய முக்கிய நபர்கள்

    இலங்கை அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற இரண்டு சிங்கள கடல் படை கப்பல்கள் மூலம் முக்கிய நபர்கள் தப்பி ஒடியுள்ளனர் .

    கயபாகு , சித்துல, என்ற சிங்கள கடல் படையின் அதிவேக கப்பல்கள் மூலம் இவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .

    இந்த முக்கிய நபர்கள் இந்தியாவின் முக்கிய பகுதிக்கு இந்த போர் கப்பல் மூலம் தப்பி சென்று கொண்டிருப்பதாக சமுக வலைதளத்தில் காட்சிகள் வெளியாகியுள்ளன .


    கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஒருவர் தனது கைபேசியில் தப்பி ஓடும் முக்கிய நபர்களை பதிவாக்கி வெளியிட்டுள்ளார் .

    இதுவே தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

    துப்பாக்கி குண்டுகளுக்கு தப்பினாலும் மக்கள் கைகளில் உள்ள கைபேசி கமராவுக்கு தப்ப முடியாது அரசியல்வாதிகள் திணறிய வண்ணம் உள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா

      மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா

      கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா தற்போது நடைபெறுகிறது

      திருவிழாத் திருப்பலி தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறது.

      திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் வெர்னாண்டோ ஆண்டகை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்

      அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் ஒப்புக்கொடுக்கிறார்கள்.

      நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றுள்ளார்கள்.

      திருவிழாத் திருப்பலியின் நிறைவில் மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்று,
      திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவடையும்.

      Posted in இலங்கை செய்திகள்

      தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பதவிக்கு திரு. ஜயந்த டி சில்வா நியமனம்

      தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பதவிக்கு திரு. ஜயந்த டி சில்வா நியமனம்

      ஜயந்த டி சில்வா அவர்கள் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

      குறித்த நியமனக் கடிதம், 30 ஆம் திகதி அன்று முற்பகல் கொழும்பு, கோட்டை

      ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்
      அவர்களினால் ஜயந்த டி சில்வா அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

        Posted in இலங்கை செய்திகள்

        ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள்

        யாழ்ப்பாணம் ; ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள்

        இலங்கை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடலில் ஆனா ஒருவர் சடலமாக மீட்க மீட்க பட்டுள்ளார் .


        கடலுக்கு சென்றவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

        குருநகர் பகுதியை சேர்ந்த ஐம்பத்தி எழுவயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்க ப்பட்டுள்ளார் .

        ஊர்காவல்துறை கடல் பகுதியில் மிதந்த இவரது சடலத்தை கண்ணுற்ற சக மீனவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தகு சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.


        இலங்கையில்நாள் தோறும் நீர் ஏரிகளில் இருந்து மிதந்த சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .

        தொடரும் இந்த மர்மம் மரணங்கள் ,கொலைகள் பின்னல் உள்ளது யார் என்பது இதுவரை கண்டு பிடிக்கவில்லை.

        இலங்கையை உலுப்பி வரும் நீர் நிலைகளில் மிதக்கும் மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


        ஜே ஆர் ஜேவர்தன காலப்பகுதியில் இடம்பெற்ற இதே போன்ற கொலைகள் ஆளும் கோட்டபாய ஆட்சியில் தொடர்கிறது.

        இவரது மர்ம மரணத்தின் பின்னர் நடந்துள்ள சம்பவம் என்ன என்பதை யார் கண்டு பிடிப்பது .

        இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கையாக தவறி வீழ்ந்து மரணித்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

        நீரில் மூழ்கி மூச்சு திணறிஇறந்தார் என்றே மருத்துவ அறிக்கைகள் வழங்க பட்டு இவ்வாறான மரணங்களுக்கு முற்று புள்ளி வைக்க பட்டு விடுகிறது.

        யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆணின் மரணத்தின் பின்னால் உள்ளது என்ன ..?
        மக்கள் அவரது குடும்பம் எழுப்பும் இந்த கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்குமா ..?

        தொடரும் இந்த மர்ம கொலைகள் மறுநாள் என்று நிறுத்த படும் ..?

          Posted in இலங்கை செய்திகள்

          முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

          முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

          முல்லைதீவு பகுதியில் பல நாட்களாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த இளம் வாலிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

          இந்த இளம் வயது திருடனினால் 15 சைக்கிள்கள் திருட பட்டுள்ளன .மிக லாவகமாக வந்து சைக்கிள் திருடி செல்லும் இவரது திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியில் பதிவாகிய நிலையில் குறித்த இளம் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுளளார்.

          முல்லைத்தீவில் பரவலாக சைக்கிள்கள் திருட்டு சம்பவம் இடம்பெற்று வந்தது .இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் பொலிசார் மிக லாவகமாக அந்த திருடனை மடக்கி பிடித்தனர்.

          முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
          முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

          திருட பட்ட சைக்கிள் அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நடவடிக்கையை முல்லைதீவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

          எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இலங்கையில் சைக்கிள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதால் சைக்கிள் விலை அதிகரித்துள்ளது.


          அதனால் சைக்கிள் திருட்டில் பல திருடர்கள் தொடராக ஈடுபட்டு அதிக விலைக்கு சைக்கிள் விற்று வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .

            Posted in இலங்கை செய்திகள்

            ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா

            ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா

            பிரித்தானியாவை நோக்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி !

            உக்ரைன் போர் தொடர்பில் ரஸ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்கள் ஐநா பாதுகாப்பு சபையில் அது நிறைவேற்றாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில்

            வெளிப்படுத்துவதே ஆகும். அதுபோலவே தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு

            கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

            பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு கிட்டாது என பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும்

            அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற துணைச் செயலாளர் விக்கி வோட் அவர்கள் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்திருந்தார்.

            பிரித்தானியா உட்பட ஐந்து கூட்டு நாடுகளே ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பிலான 46ஃ1 தீர்மானத்தினை முன்னெடுத்திருந்த

            நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் இக்கருத்து தமிழர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

            இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு புதிதல்ல. இதேநிலைப்பாட்டினை முன்னரும் ஒரு தடவை வெளிப்படுத்தியுள்ளது.

            ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா

            அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதில் முன்னிற்று உழைத்த பிரித்தானியா, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு நீதியைத் தேட,

            அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை பயன்படுத்த தயங்குவது ஏமாற்றத்தையே தருகின்றது.

            குறிப்பாக சமகாலத்தில் உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானியா உட்பட மேற்குலகம் நாடுகள் ரஸ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்றுள்ளன. பாதுகாப்பு சபையில் அது

            நிறைவேற்றப்படாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துவதே ஆகும்.

            அதுபோலவே தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன.

            உக்ரைன் மக்களுக்கு ஒரு நீதி, தமிழ்மக்களுக்கு ஒரு நீதியா என்ற கேள்வி எழுகின்றது.
            சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் கையாளப்படட்டும்.

            ஆனால் இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் போர்க் குற்றங்களுக்குமான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை என்பது ஐ.நா பாதுகாப்புச் சபையூடாகவே கையாளப்படவேண்டியுள்ளது.

            பொறுப்புகூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த, சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு

            செல்லுங்கள். அப்போது நீதிக்கு எதிரானவர்கள் யார் என்பது தெரியவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

            2021 ஜனவரி 12ம் தேதி ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரர் மிசேல்
            பசேலேற் அம்மையாரின் அறிக்கையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு விடுத்திருந்ததோடு,


            ஐநா மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் ஆணையாளர்கள், ஐ.நா.வின் நான்கு முன்னாள் உயர் அதிகாரிகள்,


            இலங்கைக்கு பயணம் செய்து அறிக்கைகளை எழுதிய ஐ.நாவின் ஒன்பது முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள், ஐ.நா.


            செயலாளர் நாயகம் குழுவின் மூன்று உறுப்பினர்கள், இலங்கை பற்றிய நிபுணர்கள் ஆகியோர் சிறிலங்காவை சர்வதேச


            குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு என்ற அழைப்பை விடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது

              தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது

              இலங்கை ; கண்டி கட்டன் பகுதியில் உள்ள நகை அடைவு பிடிக்கும் கடையொன்றுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 177பவுன் தங்க நகைகளை திருடி தப்பி சென்றனர் .

              இந்த தங்க நகை திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று ஆண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

              இந்த தங்க நகை திருட்டு தொடர்பாக ஆறு மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னர் தங்கம் திருடிய நபர்கள் அதே திருடிய தங்கத்துடன் சிக்கியுள்ளனர் .

              இந்த நகை திருடிய திருடர்கள் நால்வரும் திருடிய நகைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

              ஆறுமாதங்கள் கழித்து திருடர்கள் திருடிய நகைகளுடன் சிக்கியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்

                தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்

                திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ) இடம்பெற்றுள்ளது.

                வீட்டின் சுவாமி அறையில் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீ குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .

                தீ பிடித்து உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                பதுக்கிய பெற்றோலில் தீயில் எரிந்து இறந்த பெண் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                பைஷல் இஸ்மாயில்

                Posted in இலங்கை செய்திகள்

                எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்

                எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்

                இலங்கை மக்களுக்கு எரிபொருள் வழங்குதல் நிறுத்த பட்டு இராணுவம் மற்றும் பொலிஸ் பெற்று கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

                மக்கள் வரிசையில் காத்திருக்க பொலிசார் இராணுவம் தமது வாகனங்களில் வருகை தனது பெற்றோல் டீசல் பெற்று செல்லும் நிலை மக்கள் மத்தியில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது.

                கோட்டபாய ராஜபக்சவின் இந்த நடவடிக்கை சிங்கள மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

                அதே சிங்கள மக்களை பொலிசார் ஆடு மாடுகள் போல விரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது .


                இலங்கை காவல்துறையின் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால் பெரும் போராட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும் என எதிர் பார்க்கலாம்.

                அத்துடன் அரச உடைமைகள் சூறையாடப்பட்டு அரச சொத்துக்கள் எரிக்க படும் நிலையும் தோற்றம் பெற போகிறது .

                மாத்தளையில் இடம்பெற்ற இந்த போலீஸ் மக்கள் மோதல் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                எரிபொருள் பொலிசுக்கு மட்டும் எனும் சிங்கள ஆளும் அரசின் செயல் பாடு மக்கள் பெரும் போருக்கு தயாராகும் நிலையை உருவாக்கியுள்ளது.

                எரிபொருள் பொலிசுக்கு மட்டும் - மக்கள் பொலிஸ் மோதல்
                  Posted in இலங்கை செய்திகள்

                  பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது

                  பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது

                  இலங்கை ; ஒரு குழந்தையின் தாயாரான முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய தமிழ் பெண் விடுதலை செய்யப்பட்டார்.

                  அந்த வழக்கு ஜூலை மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

                  அந்த வழக்கு நீதிவானின் சமாதான அறையில் நேற்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இரு பெண்களின் உளநல மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

                  அதன்பின்னர், முதலாவது சந்தேக நபரான, ஒன்றரை வயது குழந்தையின் தாயான 19 வயது பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவித்து

                  பெண்கள் காப்பகமொன்றில் ஒப்படைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

                  பெண்ணை திருணம் செய்ய முயன்ற பெண்

                  அவரது குழந்தையின் எதிர்கால நலன் மற்றும் குறித்த பெண்ணின் நடத்தைகள் தொடர்பில் அறிக்கை கிடைக்கும் வரை ஒப்படைக்குமாறும்

                  உத்தரவிட்ட நீதவான் வழக்கை, எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

                  இரண்டாவது சந்தேக நபரான 24 வயது மதிக்கத்தக்க தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை.

                  அவர் சார்பில், முன்னிலையான பெண் சட்டத்தரணி , அந்தப் பெண்ணை இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் ஒப்படைத்து சொந்த இடத்திற்கு மீள அனுப்புவதற்கு விடுத்த விண்ணப்பத்தை பரீசீலனை செய்தார்.

                  பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது

                  அதன்பின்னர், இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை விடுவித்து அனுமதி வழங்கினார்.

                  அந்தப் பெண்ணை, பெண்கள் உரிமை தொடர்பான அமைப்பு, பெண் சட்டத்தரணியுடன் வருகை தந்து மட்டக்களப்பில் இருந்து வேன் ஒன்றில் அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

                  அத்துடன் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் இவ்வழக்கின், முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண்ணின் சார்பாக

                  பிரசன்னமாகி, குழந்தை​யையும் தாயையும் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியது.

                  முஸ்லிம் பெண்ணின் முறைப்பாட்டாளர்களான பெற்றோர், கணவன் சார்பாக சட்டத்தரணிகளான ஏ.எம் ஜெனீர் மற்றும் எம்.ஐ றிஸ்வான் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

                  இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணிற்கு மட்டக்களப்பில் இருந்து பெண்கள் உரிமைக்கான அமைப்பொன்றின் அணுசரனையில் பெண் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகி இருந்தார்.

                  கடந்த புதன்கிழமை (22) அன்று இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று

                  நீதிமன்றத்தினால் இரு பெண்களையும் இவ்வாறு உளநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தார்.

                  இரு பெண்களையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இதன்

                  பின்னர் மேற்படி பெண்கள் இருவரும் நீதிமன்றக் கட்டளையின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

                  கடந்த திங்கட்கிழமை (20) இந்தியாவிலிருந்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனது முஸ்லிம் நண்பியைத்தேடி தமிழ்நாட்டினை சேர்ந்த

                  தமிழ் பெண் ஒருவர் தேடி வந்துள்துள்ளதுடன் இருவரும் நண்பிகளாக தொலைபேசி மூலம் உரையாடி வந்துள்ளனர்.

                  இவ்விரு பெண்களும் தற்போது திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து அக்கரைப்பற்று முஸ்லிம் பெண்ணின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்

                  மேற்படி பெண்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் திருமணம் செய்துள்ள நண்பி ஒருவர் மூலம் தொலைபேசியூடாக

                  தொடர்பினை பேணியுள்ளதுடன் முஸ்லிம் பெண்ணுக்கு திருமணமாகி ஒன்றரை வயது மகளும் கணவரும் இருக்கின்றார்.

                  பெண்ணின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி, அவரின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில்
                  வீட்டுப் பணிப்பெண்ணாக உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது

                    அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது

                    இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று கடற்படையினரால் சிறை பிடிக்க பட்டுள்ளது

                    இந்த படகில் 47 பேர் அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் முகமாக செண்றுகொண்டிருந்த பொழுதே கடற்படையினரால் கைது

                    இதற்கு முதல் நாளும் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற பலர் கைது செய்ய பட்டனர் .கடற்படையினரால் கைதானவர்களில் 34 ஆண்கள் 6 பெண்கள் 7 சிறுவர்கள் உள்ளடங்குவர் என தெரிவிக்க பட்டுள்ளது

                    கைதானவர்கள் பொலிஸ் விசாரணிகளின் பின்னர் நீதிமன்றில்
                    முன்னிலை படுத்த படுவார் என எதிர்பார்க்க படுகிறது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பிள்ளையான் சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்திப்பு

                      பிள்ளையான் சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்திப்பு

                      மட்டக்களப்பு ; மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் பிள்ளையான மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

                      பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் நாட்டில் ஏற்பட்டுள்ள

                      பொருளாதார நெருக்கடி எரிபொருள் பிரச்சினையின் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

                      சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் கடமைக்கு தடங்கல்கள் ஏற்படாதவகையில் எரிபொருளினை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலும்
                      தீர்க்கமான முடிவுகள் இதன்போது எட்டப்பட்டுள்ளன.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்

                        இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்

                        ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2022-23 கல்வியாண்டில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு/

                        பட்டப்பின்படிப்பு/கலாநிதி ஆகிய கற்கை நெறிகளை தொடர விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது.

                        1. இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் திறமைவாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து இந்திய அரசாங்கம் இப்புலமைப்பரிசில்களை வழங்குகிறது.
                        2. இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள்
                        3. அனைத்தையும் உள்ளடக்கியதுடன், இதற்காக தங்குமிட கொடுப்பனவு, வருடாந்த உதவித்தொகை மற்றும் சுகாதார நலன்புரி சேவைகள் போன்றவையும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
                        4. இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கல்வியமைச்சின் என்ற www.mohe.gov.lk. இணையதளத்தில் காணமுடியும்.
                        5. இதற்கான விண்ணப்பங்களை
                        6. ICCR A2A தளம் ஊடாக (www.a2ascholarships.iccr.gov.in ) பதிவேற்றம் செய்வதற்கான இறுதி திகதியான 2022 ஜூலை 15ற்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.
                        7. மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு
                          கொள்ளலாம் (E-mail- eduwing.colombo@mea.gov.in /0112421605, 0112422788 ext-605).
                          Posted in இலங்கை செய்திகள்

                          முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்

                          முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்

                          இலங்கையில் இன்று இரவு முதல் நாடு முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது .எரிபொருள் கொள்வனவு செய்திட இலங்கை அரசிடம் பணம் இல்லாத காரணத்தினால் நாட்டுக்கு எரிபொருள் எடுத்து வரும் கப்பல்கள் தாமதமடைந்து வருகிறது .


                          அதனால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிபொருள் வழங்க முடியும் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து இலங்கை மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

                          இலங்கையில் அடுத்து நடக்க போவது என்ன காணொளி

                          இந்த அறிவிப்பை அடுத்து மக்கள் வீதி இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது .எரிபொருளுக்காக மக்கள் இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது அரசு.

                          முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்

                          கோட்டபாய ராஜபக்சே அரசினால் இலங்கை வறுமை கோட்டின் கீழ் இழுத்து வரப்பட்டு மக்கள் வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

                          மருத்துவம் ,மற்றும் உணவு தேவை போக்குவரத்திற்கு மட்டுமே எரிபொருள் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது.

                          அதனால் நாடு முற்றான முடக்க நிலைக்கு செல்கிறது என்ற அபாய எச்சரிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டு

                            இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டு

                            இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டுவதற்கு கலவி அமைச்சு உத்தரவிட்டுள்ளது .

                            இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மேல்மாகாணத்தில் கொழும்பு வலயத்தில் மற்றும் அண்டிய பிரதேசங்களில் உள்ள
                            அனைத்து பாடசாலைகளையும் அடித்து பூட்டு .

                            அதே போல ஏனைய மாகாணங்களில் முக்கிய நகரங்களில்
                            அமைந்துள்ள பாடசாலைகளையும் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

                            ஆசிரியர்கள் எரிபொருள் இன்றி பாடசாலை செல்ல முடியா நிலையில் தவித்து வந்தனர் ,கல்வி அமைச்சு அறிவித்துள்ள இந்த அறிவிப்பால் அவர்கள் சற்று மகிழ்வில் உறைந்துள்ளனர்

                            இதே போன்று மேலும் பல தொழில் துறைகள் அடித்து பூட்டும் ஆபாய நிலை ஏற்பட போகிறது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற 54 பேர் கைது

                              அவுஸ்ரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற 54 பேரை கைது செய்த கடற்படை

                              இலங்கை ; அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

                              கைதானவர்கள் பொலீஸ் விசாரணைக்கு உபடுத்த பட்டு நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலை படுத்தப்படவுள்ளனர் .

                              அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக பயணிப்பவர்கள் கிரிஷ்மஸ் தீவில் சிறை வைக்க பட்டு இலங்கைக்கு மீள அவுஸ்ரேலியாவால் நாடுகடத்த பட்டு வருகின்றனர் .

                              அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது

                              இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

                              அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது

                              அவ்விதமான நாடு கடத்தல் செயல்பாடுகள் தொடராக இடப்பெற்ற வண்ணம் இருக்க ,இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு மக்கள் அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர்.

                              இலங்கை கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் படகுகள் எரிக்க படும் என இலங்கை அரசு எச்சரித்துள்ள போதும் இந்த அகதிகள் பயணம் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

                              தமது நாட்டுக்குள் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவதை தடுக்க அவுஸ்ரேலியா அரசு இலங்கைக்கு கண்காணிப்பு படகுகளை இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிட தக்கது

                                Posted in இலங்கை செய்திகள்

                                தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் தம்பதிகள் மீட்பு

                                தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் தம்பதிகள் மீட்பு

                                இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற வயதான தம்பதிகள் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர் .

                                இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் தனுஷ்கோடி வழியாக சென்றுள்ளனர்.

                                இந்த நிலையில் திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதிகள் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.

                                இவர்கள் இருவரும் மயக்கமுற்ற நிலையில் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.

                                கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

                                தம்பதிகள் சடலமாக மீட்பு

                                இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு அம்பியூலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

                                இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு

                                  பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு

                                  மட்டக்களப்பு ; மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகிலுள்ள பதுக்கி வைக்க பட்ட எண்ணெய்கள் மீட்க பட்டுள்ளன .

                                  பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த கட்டிடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டனர் .

                                  இந்த எண்ணெய் திருட்டு பதுக்களில் சம்பந்த பட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

                                  பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு

                                  குறித்த எண்ணெய் பதுக்கல் தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவிற்கு அமைய நடத்த பட்ட விசேட சோதனையில் இந்த பெரும் எண்ணெய் பதுக்கல் முறியடிக்க பட்டுள்ளது .

                                  கடலில் எரியும் எண்ணெய் கப்பல்

                                  இந்த சோதனையின் போது பெரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டதுடன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார் ,