Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்
10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்
அபு அலா –
கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அபிவிருத்தி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் தேவைகளையறிந்து பல்வேறுபட்ட உதவிகளை இலங்கை காப்போம் நிறுவனம் வழங்கி வருகின்றது.
அதற்கமைவாக, திருகோணமலை – வரோதயநகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வாழ்ந்து வருகின்ற 235 குடும்பங்களில் 25 குடும்பங்கள், சுமார் 10 வருங்களாக பாலமின்றி பல கஷ்டங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
இவ்விடயத்தை இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரனின் (திலீப்) கவனத்திற்கு கொண்டு
வரப்பட்டதையடுத்து உப்புவெளி பிரதேச சபையும், இலங்கை காப்போம் நிறுவனமும் இணைந்து பல இலட்சம் ரூபா நிதியில் நிர்மானிக்கப்பட்ட பாலம்
(23) திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.
10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்
இலங்கை காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.ஆர்.பிரவினா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.எ.எஸ்.ரீ.ரத்நாயக்க மற்றும் காப்போம் நிறுவனத்தின்
நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின்
பாவனைக்கும் கையளித்து வைத்த அதேவேளை அக்குடும்பங்களுக்கு பயன்தரும் மரக்கன்றுகளையும் வழங்கி வைத்தனர்.
கடந்த 10 வருங்களாக பாலம் ஒன்று இல்லாமல் இங்குள்ள 25 குடும்பங்களும், பாடசாலைக்குச் செல்லும் எங்களது பிள்ளைகளும் பல கஷ்டங்களை அன்றாடம் எதிர்கொண்டு வந்தோம். குறிப்பாக, மழை காலங்களில் சொல்ல முடியாதளவு பாரிய சிரமங்களை அன்றாடம் எதிர்கொண்டு வந்துள்ளோம் என்று அங்கு வாழ்கின்ற குடும்பங்கள் தெரிவித்தனர்.
நாங்கள் அன்றாடம் கூலித்தொழில் செய்து எங்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றவர்களாகவும், இருப்பதற்கு ஒழுங்கான வீடுகளும் இல்லாத நிலைமையில்தான் வாழ்ந்து வருகின்றோம்.
எங்களின் நிலைமையை இலங்கை காப்போம் நிறுவனத்திடம் எடுத்துச் சொன்னபோது, அதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்து இப்பாலத்தை நிர்மானித்து இன்று எங்களின் பாவனைக்கு கையளித்து வைத்துள்ளனர்.
இப்பாலத்தை நிர்மானித்துத்தர உதவி புரிந்த அனைத்து உங்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.
இலங்கை காப்போம் நிறுவனம் இனமத மொழி வேறுபாடுகளுக்கப்பால் மக்களின் தேவைகளையறிந்து அவர்களால் இயன்றளவு உதவிகளை உடனடியாக வழங்கி வருகின்றதொரு நிறுவனமாக கடந்த சுனாமி அனர்த்தத்தின் பிற்பட்ட காலங்களில் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.விபுசன், வி.பாபுகாந், கிராம சேவகர் எம்.பிரசாந்தினி, உப்புவெளி பிரதேச சபையின்
தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் காப்போம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர், நிருவாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்
வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க இருந்தது.
இருப்பினும் ஜனாதிபதி வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை பெற்று தருவதற்காக அழைப்பு விடுத்துள்ளதினால், வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானம் மேற்கொண்டதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது சிறப்பானது அல்ல என்று சிந்தித்தே வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காத காரணம் என்ன? சுமந்திரன் விளக்கம்
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி கடந்த பத்து நாட்களில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார். கலந்துரையாடுவதற்காக அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஜனாதிபதிக்கு மதிப்பளித்து, அவருக்கு எமது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காகவே, நாம் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்தோம்.வாக்குறுதிகள் உறுதிப்படுத்தும் போதே நல்லிணக்கம் ஏற்படும். உண்மைகளை மூடி மறைத்தால் நல்லிணக்கம் ஏற்படாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் கூறினார்.
வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டபோதே இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு படையெடுக்கும் லண்டன் தமிழர்கள்
இலங்கைக்கு படையெடுக்கும் லண்டன் தமிழர்கள்
இலங்கைக்கு லண்டனில் இருந்து பெருமளவான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர் .
கடந்த தினம் கீத்திரோ வான் தளத்தில் தரித்து நின்று அவதானித்த பொழுது பல தரப்பட்ட வயதை சேர்ந்த மக்கள் செல்வதை அவதானிக்க முடிகிறது .
மிக சாதாரண உடைகளில் மக்கள் பயணம் செய்கின்றனர் .
சில வயதனவர்கள் வெள்ளை வேட்டியை அணிந்த வண்ணம் .தமது கலாச்சார பண்பாடுகளை கட்டி காத்த படி பயணிக்கின்றனர் .
இவை எமக்கு மிக வியப்பை ஏற்படுத்தியது .அதிக குளிர் நிலவும் இவ்வேளையில் வயதான பெரியவர்கள் சிலர் .இவ்விதம் வேட்டியுடன் செல்கின்றனர் .
இலங்கையின் பொருளாதாரத்தை , இவ்வாறான உல்லாச பயணிகள் வருகையின் மூலமே நிமிர்த்த முடியும் என, தொடர்ந்து கூறி வரும் இலங்கையின், கூற்று மெத்த சரிதான் போலும் .
மனைவியை மீட்டு தருக கணவர் யாழில் போராட்டம்
மனைவியை மீட்டு தருக கணவர் யாழில் போராட்டம்
சவூதி நாட்டுக்கு வேலைக்கு கு சென்ற தனது மனைவியை மீட்டு தரும்படி கோரி ,கணவர் யாழ்ப்பாண கன்சீயூலர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .
இவரது முறைப் பாட்டில் தனது மனைவி ஒழுங்கான சாப்பாடு இல்லாமலும் ,பலத்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்க பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .
கொடுமைகள் தங்கா முடியா நிலையில் ,பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள மனைவியை மீட்டு தரும் படி கோரி இந்த போராட்டத்தை கணவர் முன்னெடுத்துள்ளனர்
வெளிநாட்டு மோகத்தில் முஸ்லீம் நாடுகள்;க்கு செல்லும் நம்ம தமிழர்கள் ,மற்றும் இலங்கையர்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண சகலரையும் அழைத்தார் ஜனாதிபதி
இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண சகலரையும் அழைத்தார் ஜனாதிபதி
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவு-செலவுத் திட்டம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.
“அரசாங்கத்தைத் துரத்த இன்னோர் ‘அரகலயா’ ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு நான் வாய்ப்பளிக்க மாட்டேன்.
இராணுவத்தையும் படைகளையும் பெற்றுக்கொண்டு அவசரச் சட்டம் போடுவேன்..
பொருளாதார நெருக்கடி தீரும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன் என்றார்.
தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை-மனோ
தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை
கொழும்பில் பொலிஸ் பதிவு தொடர்பில் அமைச்சர் டிரான் அலசுடன் மனோ கணேசன் சபையில் வாக்குவாதம்
கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி
தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் துறை அமைச்சர் டிரன் அலசுக்கும் இடையில் சபையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்போது, “..எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பியது, தேங்காய் திருவ அல்ல!
பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள்..” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் உரத்த குரலில் தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், போலிஸ் ஆணைக்குழு உட்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றிய வரவு செலவு திட்ட விவாதத்தின் போது மேலும் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி கூறியதாவது,
கொழும்பு நகரில் வீடு வீடாக சென்று, போலீசார் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்கிறார்கள். இதுபற்றி ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன். துறைசார் அமைச்சர் உங்களுக்கு கூறியுள்ளேன். பொலிஸ் மாஅதிபருக்கு கூறியுள்ளேன்.
தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை-மனோ
பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு கூறியுள்ளேன். அவர் இன்று இருக்கிறாரோ தெரியவில்லை அல்லது யாரையாவது வரவேற்க விமான நிலையத்துக்கு சென்று விட்டாரோ தெரியவில்லை.
கீழ்மட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டால், “மேலிடம் கூறிதான் செய்கிறோம் சார்”, என்று அவர்கள் எனக்கு கூறுகிறார்கள். யார் அந்த மேலிடம்? யுத்த காலத்தில் ஏதோ ஒரு நியாயம் இருந்தது.
இன்று சமாதான காலம். இயல்புநிலை காலம் . இன்று யுத்தம் இல்லை. பயங்கரவாதம் இல்லை. அரச பயங்கரவாதம் இல்லை. ஆகவே எதற்காக வீடு வீடாக போகிறீர்கள்? கதவு கதவாக போகிறீர்கள்?
கிரிமினல்கள் எங்கேயும் உள்ளார்கள். இங்கே இந்த பாராளுமன்றத்தில் இல்லையா? கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு உள்ளவர்கள் இங்கே இல்லையா? இருக்கிறார்கள்.
அதுபோல் பொலிசிலும் உள்ளார்கள். பொலிசுக்கு தரும் தகவல்கள் கிரிமினல்கள், பாதாள உலகத்தினர் கைகளுக்கு போயுள்ளன. கடந்த காலங்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆகவே அது வேண்டாம். எனது மாவட்ட மக்களின் தனிப்பட்ட தகவல்களை வீடு வீடாக சென்று சேகரிக்கும் நடவடிக்கைக்கு இடம் தர எனக்கு முடியாது.
எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி.
எனது மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பியது, தேங்காய் திருவ அல்ல! பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள்
குற்றம் செய்தவர்கள் இருப்பார்களானால், அவர்களை விசாரியுங்கள். கைது செய்யுங்கள். அதில் பிரச்சினை இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் எம்பி. சட்டத்தின் ஆட்சியை விரும்பும் மனிதன்.
இங்கே, வீடு வீடாக பொதுவாக போக வேண்டாம் என்பதைதான் நான் கூறுகிறேன். இங்கே குறிப்பாக கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இவை நடைபெறுகின்றன. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.
(இவ்விடத்தில் இடைமறித்த அமைச்சர் டிரான் அலஸ்)
எம்பி அவர்களே, இது எப்போதும் நடக்கும் ஒரு கைங்கரியம். வெளியூரில் இருந்து ஒருவர் கொழும்புக்கு வருவார் என்றால் அது அறிய போலிஸ் தகவல் சேகரிக்கிறார்கள்.
இது இங்கே மட்டுமல்ல, நாடு முழுக்க நடக்கிறது. தமிழர்களை மட்டுமல்ல, சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எல்லோர் வீடுகளுக்கும் பொலிஸ் போகிறது.
(மனோ கணேசன் எம்பி)
இல்லை, இல்லை. தமிழர்களையே இது அதிகம் குறி வைக்கிறது. சும்மா இங்கே வந்து கூறுவதற்கு எனக்கு என்ன பைத்தியமா? நீங்கள் சொல்வது போல், இது நாடு முழுக்க நடக்கவில்லை. சும்மா சொல்ல வேண்டாம். இங்கே உள்ள ஏனைய 225 எம்பிகளிடம் கேட்டு பாருங்கள்.
நாடு முழுக்க இது நடக்கவில்லை. கொழும்பில் நடக்கிறது. இது நியாயப்படுத்த முயல வேண்டாம். உண்மையில் இங்கே மக்கள் மட்டத்தில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.
தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை-மனோ
ஆனால், எனக்கு தெரிகிறது. ஏனெனில் நான் மக்கள் மட்டத்தில், மத்தியில் இருப்பவன். இதை நீங்கள் நியாயப்படுத்த முயல வேண்டாம்.
சரி, “செக்” செய்து பார்ப்பதாக, பரிசோதனை செய்து பார்ப்பதாக இப்போது கூறுகிறீர்கள்.
ஒலிவாங்கியை அணைத்து விட்டு கூறுகிறீர்கள். பாருங்கள். குற்றவாளியை தேடி சென்று கைது செய்யுங்கள். விசாரியுங்கள்.
ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீடு வீடாக பொதுவாக போவதற்கு இடம் கொடுக்க முடியாது.
10 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்
10 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் 10 பேர், தனுஷ்கோடி வந்து இறங்கினர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக
தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
ஓமானில் உள்ள இலங்கை பெண்கள் குறித்த அறிவிப்பு
ஓமானில் உள்ள இலங்கை பெண்கள் குறித்த அறிவிப்பு
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தற்போது தங்கியுள்ள இலங்கைப் பெண்கள் தொடர்பிலான அறிவிப்பை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 77 இலங்கைப் பெண்களில் 12 பேர் மாத்திரமே வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாடசாலைகளை சுற்றி பொலிஸார்
பாடசாலைகளை சுற்றி பொலிஸார்
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அந்த போதைப்பொருட்களை விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, பாடசாலைகளைச் சுற்றி புலனாய்வுப் பிரிவினர் வழமையாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, போதைப் பொருள் வர்த்தகர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம், வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் இன்று (23) காலை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தூர், கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதான பாஸ்கரன் திலக்சன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கைகள் தங்கூசி வலையினால் பின்னப்பட்டிருப்பாதலும் முகத்தில் காயங்கள் இருப்பதாலும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தவறி விழுந்து காணாமல் போன நிலையில் நேற்று மாலை முதல் அவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றன.
காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
இந்நிலையில் தவறிவிழுந்த இளைஞனை தேடும் பணியில் இரவு முழுவதும் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் முயற்சி பலனளிக்காத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு இளைஞன் தவறி விழவே ஏனையவர்கள் அச்சத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பி சென்ற இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் பதற்றம் – சபாநாயகரின் அறிவிப்பு
பாராளுமன்றத்தில் பதற்றம் – சபாநாயகரின் அறிவிப்பு
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இன்று காலை பாராளுமன்றம் ஆரம்பமானதும் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உரையாற்றினார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நிமல் லான்சாவை தாக்க முயற்சித்ததன் காரணமாக சபாநாயகர்
சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளார்.
போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது
போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பொலிஸாரினால் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது , 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் 8 மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , தமக்கு, மல்லாகம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் என தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மல்லாகம் பகுதிக்கு விரைந்த பொலிஸார் , போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 36 வயதுடைய பெண்ணொருவரை 40 போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் மரணம்
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் மரணம்
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் ஒருவர் மரணமான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
முரசுமோட்டை மூன்றாம் யூனிட் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு பலியாகியுள்ளார் .
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் பொழுது அங்கு பலியாகியுள்ளார் .
வாழ் நாளில் பிற் பகுதிகளில் தன்னை முழுமையாக சிவ தொண்டு பணிகளில் ஈடுபடுத்தி வந்த ,இவரே இவ்வாறு மரணித்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கடவுள் பணி செய்து வந்த சிவ தொண்டர் அவர் பாதத்தில் வீழ்ந்து மரணித்துள்ள சம்பவம் ,மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது .
விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில்
விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில்
ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பசில் அமைச்சராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், விமான நிலையத்தில் பிரமுகர் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை.
விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில்
பசில் ராஜபக்சவின் பிரமாண்ட வருகைக்காக விமான நிலையத்தில் விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான கட்டணமும் செலுத்தப்படவில்லை.
மேலும், பசில் விமான நிலையத்தில் Gold Route சேவையை பெற்றிருந்தார். இதற்காக ஒரு நபருக்கு 200 அமெரிக்க டொலர் அறவிடப்படும். எனினும் இதையும் அவர் செலுத்தவில்லை.
இன்றுவரை பணம் செலுத்தாமல் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் VIP ஓய்வறையை பயன்படுத்தியதை
விமான நிலையத்தின் உள் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்
ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்
யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரி ஒன்றின் ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த ஆசிரியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்
அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று , தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்தபோது, அந்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர் அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு
அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரே இரவில் 5 வீடுகளில் திருட்டு
ஒரே இரவில் 5 வீடுகளில் திருட்டு
இலங்கை பயாகல காவல்துறை பகுதியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் திருட்டு இடம்பெற்றுள்ளது .
இந்த திருட்டு அங்குள்ள கமராவில் பதிவான நிலையில் திருடனை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது
பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது
வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26
வயதுடைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
18 வயது பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு
18 வயது பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீரில் மூழ்கி கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜா அலன்மேரி (வயது 18) எனும் யுவதியே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்த யுவதி, மேலும் நால்வருடன் கடலில் நீராடியுள்ளார்.
பின்னர் கற்கோவளம் பகுதியில் உள்ள நீர் நிலை ஒன்றிலும் இறங்கி நீராடியுள்ளனர். அதன் போது, குறித்த யுவதி நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், யுவதியுடன் கூட சென்றவர்கள் அவல குரல் எழுப்பியதை அடுத்து
அருகில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் அங்கு விரைந்து யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குப் பிராந்திய மற்றும் தென்மேற்குப் பிராந்திய
மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு நிகழ்வு
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குப் பிராந்திய மற்றும் தென்மேற்குப் பிராந்திய
மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு நிகழ்வு
வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தென்மேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை மாவீரர் கதிரவன் மற்றும் மாவீரர் ஜெயந்தி அவர்களின் தாயார் திருமதி கந்தசாமி கமலாவதி அவர்கள் ஏற்றி வைத்தார்தார்கள்.
தமிழீழ தேசியக்கொடியினை வடமேற்குப் பிராந்தியத்தில் லெப் கேணல் மனோஜ் அவர்களின் சகோதரரும் வடமேற்கு பிராந்திய மாவீரர் பணிமனை பொறுப்பாளருமான திரு கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
வடமேற்குப் பிராந்தியத்தில் ஈகை சுடரினை லெப் கேணல் அவர்களின் சகோதரர் ராஜலிங்கம் மற்றும் வீரவேங்கை தொழில் நாயகனின் சகோதரர் மோகனதாஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
வடமேற்குப் பிராந்தியத்தில் மாவீரர் மரியதாஷின் தங்கை வியஜலட்ஷ்மி சதீஷ்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்மாலையினை மேயர் பாப்பா லெப் நாமகள் அவர்களின் சகோதரன் தங்கேஷ்வரன் மற்றும் கப்டன் நகுபனின் சகோதரன் தயானந்தன்
அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து மாவீரர் குடும்பங்களுக்கான கௌரவிப்பினை முன்னெடுத்திருந்தார்கள்.
பெண்கள் வௌிநாடு செல்வதற்கான பதிவு இடைநிறுத்தம்
பெண்கள் வௌிநாடு செல்வதற்கான பதிவு இடைநிறுத்தம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு தொழில் பிரிவுகளுக்கு தொழிலாளர்களாக இலங்கைப் பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வீட்டு பணிப்பெண்கள் மற்றும் துப்புரவு சேவைகள் தொடர்பான பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.




































